Monday, August 27, 2012

காளமேகப்புலவர் பண்டைக்கால சாருவா?- இதென்ன கலாட்டா?

மதுபானக் கடையா அல்லது மதுபான கடையா என ஓர் இடுகை இட்டு இருந்தேன். அது தொடர்பாக ,  நண்பர் நிர்மலின் நண்பரான் சங்கர் கால் செய்து இருந்தார்.

” அந்த பெயரில் ஒற்று வருமா வராதா என்பது அடுத்த பிரச்சினை..இது தொடர்பான கட்டுரையில் ,  நீங்களே பல இடங்களில், பல வார்த்தைகளில்  தவறு செய்து இருக்கிறீர்களே.” என உரிமையுடன் ஒரு குட்டு வைத்தார்.  என் அதிர்ச்சி நீங்குவதற்குள் , எந்த கட்டுரை சம்பந்தமாக வேறு சில ஆதாரங்களை சொல்லி விட்டு போனை வைத்து விட்டார். ப்ரூஃப் பார்க்காததால் ஏற்பட்ட பிழை என அவரிடம் சொல்ல வாய்ப்பு இல்லாமல் போட் விட்டது.

அவர் தமிழ் ஆர்வம் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. அவரைப் பற்றி நிர்மலிடம் பேசியபோது , சங்கரைப் பற்றி உயர்வாக சொன்னார். இலக்கியம், சினிமா என பேச்சு பல திசைகளில் சென்று, காள மேக புலவரை சென்று அடைந்தது.

     காள மேக புலவரை பண்டைக்கால சாரு நிவேதிதா என கருதுகிறேன் என நிர்மல் பேச்சு வாக்கில் சொன்னார். “ அட ,, சுவையான பார்வையாக இருக்கிறதே.. எப்படி இதை சொல்கிறீர்கள் “ என்றேன்.

விளக்கினார்..

அவருடன் பேசியதில் இருந்து..

**************************************************



 me:  பாஸ்.. என்ன செய்றீங்க? 

 Nirmal:   sunday enjoying

 me:  how u spend sundays?
 Nirmal:  actually today is my night shift, whole family is sleeping I woke up went for outside for a Tea, walking and now in home
 me:  superb
 Nirmal:   நீங்க என்ன செய்வீங்க
 me: சீக்கிரமே எழுந்து ஞாயிற்று கிழமையை முழுதாக அனுபவிக்க எனக்கு பிடிக்கும். இன்றும் அப்படித்தான். சீக்கிரமே எழுந்து , ஒரு படம் பார்த்தேன் ( inglorious basterds) . இப்ப படிச்சிக்கிட்டு இருக்கேன் 
 Nirmal:  oh good boss have u hear abt காளமேக புலவர்
 me:   ஓரளவு அவர் பாடல்கள் படிச்சு இருக்கேன்  பாஸ். 

 தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி


இதை மறக்க முடியுமா? 

 Nirmal:  சூப்பர் பாஸ்

 me:  ஃபேஸ்புக்ல அவரைப்பற்றி சொல்லி இருந்தீங்க... நல்லா இருந்துச்சு

 Nirmal:  அவர்தான் பண்டைய சாருன்னு நினைக்கிறேன்.கலக்கல் பாஸ்.பயங்கரமான வித்தியாசமான் ஆள் போல

 me:  பண்டைய சாருவா ? சாருவையும் அவரையும் எப்படி ஒப்பிடுறீங்க? 


 Nirmal:  not like other poems, his is very postmodern in approach a kind of satire, black humor and all kinds


 me:  ஓலை சுவடி கவிஞன் , கணினி யுகத்திலும் பேசப்படுவது சூப்பர். அதே போல சாருவும் காலம் கடந்து பேசப்படுவார்

 Nirmal:  yes

 me:  சீரோ டிகிரி வந்த போது , யாருக்கும் புரியவில்லை... இன்றுதான் அதிகம் பேச படுகிறது

 Nirmal:  he had sang many poem abt prostitute equal to he wrote poem abt GOd
 me:   அவர் மேல் உங்களுக்கு எப்படி ஆர்வம் ? 


Nirmal:  I could not understand but trying to understand .shankar only told me abt this he knows many song by heart boss
 me:  சங்கரின் தமிழ் ஆர்வததை நான் ஒரு முறை உணர்ந்து இருக்கிறேன்.

 Nirmal:  so for he is one having Pleasure of text in old tamil செய்யுள்


 me:  பாஸ்.. நீங்க இந்த பாட்டை சொல்றீங்கணு நினைக்கிறேன். 


கட்டி தளுவுவதால் கால் சேர ஏறுவதால்
எட்டி பன்னாடை இழுத்ததால் -முட்ட போய்
ஆசைவாய் கள்ளை அருந்துதலால்  அப்பனையும்
வேசையென விரைந்து


 Nirmal:  இதையெல்லாம் நம்ம பாடத்தில சேர்க்கவில்லை
பனையும் - வேசியும் - சூப்பர். 

me hmmmmm
தமிழ் ஓர் அழகான மொழி
 Nirmal:  யெஸ் அதை பரீட்சித்து பார்க்காது ,  அதிகம் புனித படுத்தி, ஒதுக்கி வைத்து விட்டோம். 

 me:  ஆமா . பல்வேறு சாத்தியங்களை முயற்சித்து பார்க்க வேண்டும்
 Nirmal:  ஆமா . மொழி ஒரு கருவி அதனுள் உணர்வை கலந்து வைத்து விட்டோம், இப்போது கருவியை சுழற்றவும் பயம், உறையில் வைக்கவும் பயம், எங்கோ ஒரு இடத்தில் வைத்துவிட்டு அதை பற்றி பேச ஆசை.
பேச மட்டும்தான் ஆசை

 me:  ஆமா. 
கொஞ்சம் கொஞ்சமாக சம்ஸ்கிருதம் போல , மக்களை விட்டு விலகி விடும் போல.



Nirmal:  ஆமாம் . 98% பேர் கலைஞர்தான் தமிழை வாழ வைக்கிறார்னு நம்புகிறார்கள்
 me:  ஹா ஹா. சினிமாவை கமல்தான் வாழ வைப்பதாக சிலர் நினைப்பது போல. சரி பாஸ். சாருவையும் , காளமேக புலவரையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள் ? 

Nirmal:  வாசகனுக்கு சவால் பாணியிலான எழுத்து , கிண்டல் , நகைச்சுவை, ஆழமான கருத்துகளை எளிதான வாக்கியங்களில் ஒளித்து வைக்கும் குறும்பு , காமத்தையும் கடவுளையும் உணர்ந்து எழுதுதல் என பல ஒற்றுமைகளை சொல்லலாம்.

ஒரு நகைச்சுவை பாடலை பாருங்கள்.

காளமேகம் ஒரு முறை மோர் கேட்டார். அவருக்கு கிடைத்ததோ , கலப்பட மோர். ஒரே தண்ணியாக இருந்தது. அதை கிண்டல் செய்து இப்படி பாடினார். 

கார்' என்று பேர் படைத்தாய்
ககனத்து உறும்போது
'
நீர்' என்று பேர் படைத்தாய்
கொடுந்தரையில் வந்ததற்பின்
வார் சடை மென்கூந்தல் 
பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய்
 முப்பேரும் பெற்றாயே!!!

இது எப்படி இருக்கு ? 
 S

  me:  சூப்பர்
கார் - நீர் - மோர்
ஆயச்சி முலம் தண்ணீர் முப்பேரு பெறுகிறது
   வானத்தில் இருந்தால் மேகம். தரையில் விழுந்தால் நீர்.. உன் பானைக்கு வது விட்டால் மோர்
ஆஹா
செம கிண்டல்

 Nirmal:  கலப்படம் அப்பேவே இருந்திருக்கு
 me:  இப்படி எல்லாம் அந்த பாடல் யோசிக்க வைக்கிறதே. 
 Nirmal:  யெஸ்
 me:  pleasure of text என்பது இதுதானா? 
 Nirmal:  யெஸ்
 me:  wat people like கமல் ஹாசன்  doing is , text for pleasure

 Nirmal:  இப்படி தமிழ் சொல்லிகொடுத்தால்தான் இனி பிள்ளைகள் படிப்பார்கள். இல்லை தமிழ் ஒரு சீரியஸான் மேட்டர்னு அவன் அவன் ஜகா வாங்கிறுவான்

me : இந்த இனிமையான தமிழுக்காகத்தான் அவரை சாருவுடன் ஒப்பிடுகிறீர்களா? 


 Nirmal:  அது மட்டும் இல்லை . எக்சைல் நாவலில் ஐயப்பன் பாட்டு போன்ற சில விஷயங்களை புரிந்து கொள்ளாமல் , சிலர் கிண்டல் அடித்தார்கள். புரிந்து கொண்டவர்கள் மட்டுமே அதன் ஆழத்தை உணர முடிந்தது. அதே போல , காள மேகத்தையும் மேலோட்டமாக பார்த்தால் புரியாது. ஆழ்ந்த வாசிப்பை கோருபவை அவர் எழுத்துகள்.

இதை பாருங்கள் . 


 பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!

பூனைக்கு ஆறு கால் என்கிறார் -- எப்படி?

me interesting boss. எப்படி?
 Nirmal:   கொஞ்சம் ஆழ்ந்து பாருங்க. அது பூனைக்கு அல்ல,,, பூ நக்கி- அதாவது தேனி
  me  oh super
  Nirmal:  தேனிக்கு ஆறு கால். கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வருதா? 
புள் இனம் - பறவைகள்

 me:  9 கால் என்கிறார்..எப்படி?
பறவைகளுக்கு 9கால்... எப்படி ?
 Nirmal:  ஆமாம். 9 x 1/4

 =2 1/4
இரண்டே கால்


me ஒக்கமக்கா
  நிர்மல்  ஹா ஹா
he has written poems for current age not for ancient age

me  யானை , 1/4*17= 41/4 நாலே கால்.   wow

 நிர்மல் : அடுத்த வரிகளை பாருங்க . 


me : முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
        கண்டதுண்டுகேட்டதில்லை காண்

 முண்டகம் : கண்டங்கத்திரி செடி. அது நீல கலரில் பூக்கும். இது சாதாரணமான விஷ்யம் . இதை ஏன் பாடி இருக்கிறார். 


  நிர்மல்  சிவனின் தாமரை போன்ற முகத்தில், நீலம் போல சக்தி கல்ந்து , நீலமாக முகம் காட்சி அளிக்கிறது.இந்த காட்சியை அனுபவத்துதான் உணர முடியும். என சிலர் அர்ததம் சொல்கிறார்கள்.
ஆனால் வேறு அர்ததமும் இருக்க கூடும்
யோசியுங்க. 


me:  பூமியில் பூக்கும் தாமரை- வானின் நீலம்
இரண்டையும் இணைத்து ஏதோ சொல்கிறார்
இதை அனுபவிக்கத்தான் முடியும் , யார் சொல்லியும் தெரிந்து கொள்ள முடியாது என்கிறார்

 Nirmal:  mmmmmm

 me:  முண்டகம் நீல கலரில் பூப்பதை பார்த்து இருக்கிறேன். கேட்டதில்லை- இப்படியா பாடி இருப்பார்?
 Nirmal:  நோ


 me: முண்டகம்.  இதை முகம் என கொள்ளலாம் ..அல்லது 

தாமரை பூக்க்கூடிய நீர் என கருதலாம்... பூமியில் இருக்கும் நீரில் , வானின் நீலம் தெரிவது போல, எனக்குள் இறை காட்சியை காண்டேன். இந்த அனுபவத்தை சொல்லி புரிய வைக்க முடியாது என்பது ஓர் அர்த்தம்
 Nirmal:  இறை?

 me:  என் இருப்பை சார்ந்துதானே , பிரபஞ்சம் , இறை எல்லாம்... என் இருப்பு இல்லாத நிலையில் பிரபஞ்சம் என்னை பொருத்தவரை இல்லைதானே

எனவே இது எல்லாவற்றையும் என்னில்தானே உணர முடியும்
வானம் பெரிதுதான்.ஆனால் அதை ஒரு சிறு தேக்கத்தில் பார்க்க முட்யுமே.

அதே போல பிரபஞ்சம் , இறை என்பதெல்லாம் பெரிதுதான்... ஆனால் இதை எல்லாம் எனது existence வைத்தே புரிந்து கொள்ள முடியும்

 Nirmal:  or I dont need to read or hear from some one abt this, It is experience which I like

 me:  ஹ்ம்ம்ம்
ஆமா



 Nirmal:  பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே;  - இவைகளை பற்றி கேட்டதுண்டு


மானே! கேள்!
 
தாமரை நீரில் விழும் வானத்தின் பிம்பத்தை  நான் பார்த்து ரசிக்கிறேன்  யாரோ சொல்ல்க் கேட்டு அல்ல.
 me:  hmmm
how it relate to first lines

 Nirmal:  yes how ?

பாஸ்
I got it
the second line ends with கேள்
last line ends with கான்
கேள் = படி
காண் - அனுபவி
 me:  wow

 Nirmal:  சூத்திரம் படி இயற்க்கையை வாழ்வை அனுபவி

me:  superb

 Nirmal:  கலக்கல் பாஸ் எனக்கு புல்லரிக்குது
ஓஓஓஓஓஓஓ ந்னு கத்தனுப்போல் இருல்க்கு
அய்யோ சுப்பர்
 me:  exclent deconstruction boss
 S
 Nirmal:  சூரியன் கிழேக்கே உதிக்கும் என பாடமாக்கலாம். ஆனால் அதை கண்டிப்பா 

ரசிக்கவும் செய்யனும்


**************************************************************
  

5 comments:

  1. காளமேகத்தை ரசித்தேன்

    ReplyDelete
  2. mundaham - thaamarai malar
    neelam - neelothpava malar
    sila samayangalil thaamarai malar meedhu neelam padarnthu pookum...silar adhai kandadum undu.aanal eppodhum appadithaan enru yarum kooruvadhillai.(thaamarai, neelam irandum ore idathil valarum thanmayana.)
    theani,paravai,yanai -vidhivilakkumundu

    ReplyDelete
  3. மிகவும் ரசித்துப்படித்தேன்.
    மிக அருமை.
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete
  4. ரசித்துப்படித்தேன்.அருமை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா