Monday, March 4, 2013

சாரு மீது தனி மனித தாக்குதல் - காந்தியர்களை தலை குனிய வைத்த தமிழருவி மணியன்


ஒரு சாமியார் ஒரு கிளி வளர்த்து வந்தார். அதற்கு பகவத் கீதை கற்றுக்கொடுத்தார். தினமும் காலை எழுந்தவுடன் ஒரு சுலோகம் சொல்லும்படி பயிற்சி கொடுத்து இருந்தார்.

பார்ப்பவர்கள் கிளியின் பக்தியை பார்த்து பரவசமடைந்து பாராட்டுவது வழக்கமாகி விட்டது.



ஆனாலும் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தார் சாமியார்.  இன்னொரு புத்திசாலி கிளியை தேடி பிடித்தார். ஏகப்பட்ட பணம் செல்வழித்து வாங்கிய அந்த கிளிக்கு சிவபுராணம் கற்று கொடுத்தார். அந்த கிளியும் நன்றாக கற்றுக்கொண்டு தினமும் காலையில் சொல்ல ஆரம்பித்தது. சாமியாருக்கு ஏக சந்தோஷம்.

 ஆனால் சிறைய மனக்குறை. இரண்டும் ஆண் கிளிகள். ஒரு பெண் கிளியும் வளர்க்க நினைத்தார். கஷ்டப்பட்டு பெண் கிளியை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தார்.

 வீடு திரும்ப அதிகாலை ஆகி விட்டது. அவரது கிளிகள் கீதை , சிவபுராணம் சொல்லும் நேரம் என்பதால் , வழக்கம் போல மக்கள் கூடி இருந்தனர்.

   கிளிகள் புத்தகங்களை புரட்ட ஆரம்பிக்கையில் சாமியார் பெண் கிளியுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.
   
   பெண் கிளியை பார்த்ததும் , அந்த கிளிகள் ஸ்லோகங்களை நிறுத்தி விட்டு , விசில் அடித்தன. சாமியார் திகைத்தார். ” என்ன இது ” அலறினார்.

  ” தினம்தோறும் நாங்கள் செய்த பிரார்த்தனை நிறைவேறி விட்டதே... இனி எதற்கு ஸ்லோகங்கள்..சீக்கிரம் பெண் கிளியை உள்ளே அனுப்புங்கள் . “ என்றன.

அத்தனை நாள் , எந்த மன நிலையில் கிளிகள் ஸ்லோகங்கள் சொல்லி வந்தன என அப்போதுதான் மக்களுக்கு புரிந்தது.

*******************************************
  ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவரது உண்மையான சுயரூபம் என்றாவது ஒரு நாள் வெளிவராமால் போகாது.

அப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது.

சன் டீவியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மது விலக்கு சாத்தியமா இல்லையா என்பது தலைப்பு.

ஒவ்வொருவரும் தம் கருத்தை எடுத்து வைத்தனர்.

  “ மதுவால் நாட்டில் குற்றங்கள் நடக்கின்றன. குறிப்பாக சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. எனவே மது விலக்கு கொண்டு வர வேண்டும் “ என்பது ஒரு தரப்பு.

 “  மது அருந்தி விட்டு , வாகனம் ஓட்டுவது அயோக்கியத்தனம். டாஸ்மாக் வாசலில் நின்று பார்த்தால் , எத்தனையோ பேர் மது அருந்தி விட்டு கிளம்பி செல்வதை பார்க்கலாம். அவர்களை அங்கேயே கைது செய்யலாமே...

மது அருந்தி விட்டு சச்சரவு செய்பவர்கள் , வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம். மற்றபடி மதுவை வாங்கி வீட்டில் அமைதியாக அருந்துவது , ஒருவரது தனி உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை . கள் என்பது போதைப்பொருள் அன்று. அது ஓர் உணவு வகை. பண்டை தமிழகத்தில் கள் எனபது தவறாக கருதப்படவில்லை “ என மறு தரப்பு தன் கருத்தை எடுத்து வைத்தது.

 இதில் சாரு நிவேதிதா பேசுகையில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்றார். மது விலக்கு என்பது கள்ள சாராயத்துக்கு வழி வகுக்கும் என்றார். தற்போது கடைகளில் கிடைப்பது தரம் குறைந்த மது. இதை அருந்தினால் தீமைதான். இதை ஒழுங்கு செய்ய வேண்டும் . விற்பனையிலும் ஒழுங்கு முறைகள் தேவை. மற்றபடி அனைவரும் மது அருந்த வேண்டும் அல்லது அருந்த கூடாது  என தான் சொல்லவில்லை. அது அவரவர் சுதந்திரம் . ஆனால் மது அருந்தி விட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது அயோக்கித்தனம் என்று தன் கருத்தை சொன்னார்.

      மது அருந்துபவர்கள்  அநாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று வாதிட்ட தரப்பு, சாருவின் இந்த வாதத்தால் சற்று திணறியது.

இந்த நிலையில் “ காந்தியவாதி”யான தமிழருவி மணியன் பேச அழைக்கப்பட்டார்.

அவர் மதுவுக்கு எதிரானவர். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர். எனவே அந்த விவாதத்தில் கலந்து கொண்ட மது எதிர்ப்பாளர்களின் லாஜிக்படி , அவர் நாகரிகமாக தன் கருத்துகளை எடுத்து வைக்க வேண்டும்.

ஆனால் அவரோ அதிரடியாக நாகரிமற்ற வகையில் பேச ஆரம்பித்தார். சாருவை அவன் இவன் என ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்தார்.  அந்த விவாதத்தில் சாருவை விமர்சித்த அரசியல் கட்சிகள் , இயக்கங்களை சேர்ந்தவர்கள் காந்தியவாதிகள் அல்லர். ஆனால் அவர்கள் நாகரிமான வார்த்தைகளில்தான் வாதம் செய்தனர்.

ஆனால் காந்தியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழருவி மணியன் இப்படி பேசியதைக்கேட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் தமிழருவி மணியனின் பேச்சை துண்டித்தார்.

     தமிழருவி மணியன் வெகு காலமாகவே காந்தியத்தை பற்றி பேசி வருகிறார். அந்த காந்தியம் அவருள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் , காந்தியம் என்பதே உள்ளீடற்ற ஒன்றா அல்லது தமிழருவி மணியன் சரியாக காந்தியத்தை புரிந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி  அந்த நிகழ்ச்சியைப்பார்த்த லட்சக்கணக்கான மக்கள் மனதில் எழுந்தது.

   ஒழுக்கவாதிகளாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் , உள்ளூர ஒழுக்கமின்றி இருப்பதை பல இடங்களில் பார்க்கிறோம். மாமிசம் சாப்பிடாத ஆச்சார சீலரான ஹிட்லர்தான் , பேரழிவுக்கு காரணமாக இருந்தார்.

  அதே நேரத்தில் எந்த இசத்திலும் சேராமால் , வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள் யாரையும் எந்த நிலையிலும் காயப்படுத்துவதில்லை.

  மரியாதைக்குறைவாக பேசியபோது , அதை ஒரு பிரச்சினையாக்கி , அனுதாபம் தேடி, விவாதத்தை சாரு திசை திருப்பவில்லை. ஒரு ஜென் குரு போல அதை புறக்கணித்து விட்டு மேலே தொடர்ந்தார்.


கடல் படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு சிறுவனை டேப் ரிக்கார்டர் முன் ஏதாவது சொல்லுமாறு அரவிந்த் சாமி சொல்வார். அவன் ஏதேதோ ஆபாசமாக பேசுவான். கடைசியில் அவன் ஆழ் மன ஏக்கத்தை , தாய்ப்பாசத்துக்கு ஏங்குவதை சொல்வான்.

 இன்று இண்டர்னெட்டில்யே எத்தனையோ பேர் பார்க்கிறோம். ஆபாச அர்ச்சனைகள் , வசவுகள் என்பதற்காகவே இணையத்தை பயன் படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஏதோ உளவியல் சிக்கல் என கடந்து போய் விடுகிறோம்.
ஆனால் தமிழருவி மணியன் போன்றவர்களும் , இது போன்ற உளவியல் சிக்கலில் இருப்பதை அறிகையில் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த உளவியல் பிரச்சினைகளை மறைக்கும் முக மூடிதான் காந்தியமா அல்லது காந்தியம்தான் இந்த உளவியல் சிக்கலுக்கு காரணமா என புரியவில்லை.

மது அருந்திய பின் , சாரு மதுக்குப்பியை எறிந்து விடுகிறார். தமிழருவி மணியன் போன்றவர்கள் மதுக்குப்பியை மனதில் சுமந்து கொண்டே திரிகிறார்கள் போல.

  நான் எத்தனையோ முறை சாருவை சந்தித்து இருக்கிறேன். கூட்டங்களில் அவருடன் கலந்து கொண்டு இருக்கிறேன் . தனிப்பட்ட முறையில் யாருடனும் அவர் வன்மத்துடனோ மரியாதை குறைவாகவோ பேசியதில்லை.
அவ்வளவு ஏன் , மற்றவர்களும் மரியாதை குறைவாக பேச அனுமதிப்பதில்லை.

ஒரு முறை ஜெயமோகனை மரியாதை குறைவாக பேசிய ஒரு நண்பரை கடுமையாக எச்சரித்தார். “ இலக்கியம் என்ற தளத்தில் நான் விமர்சிப்பது வேறு. ஆனால் நீங்கள் அவரை உரிய மரியாதையுடன் பேச வேண்டும். அவர் உழைப்புக்கு, அறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் “ என கண்டிப்புடன் சொன்னார்.

அதே போல , வாசகர் வட்ட சந்திப்புகளில் கல்லூரி மாணவர்களை மது அருந்த அனுமதிக்க மாட்டார் .  குடிப்பழக்கம் இல்லாதவர்கள் , முதல் முறையாக சந்திப்புகளில் குடிக்க விரும்பினாலும் அனுமதிக்க காட்டார். குடிக்க யாரையும் வற்புறுத்தவும் மாட்டார்.

அவரது இப்படிப்பட்ட நயத்தகு நாகரிகத்தை பார்க்கும் நமக்கு அவர் படித்த நூல்கள்தான் அவரை இந்த அளவுக்கு பண்படுத்தி இருக்கின்றன என நினைத்து அவற்றை நாமும் படிக்க விழைகிறோம் .



ஆனால் ஒழுக்கவாதிகளின் செயலை பார்க்கையில் , அவர்கள் சார்ந்த கொள்கை மீதும் , அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் மீதும் வெறுப்புதானே ஏற்படுத்துகிறது.

தமிழருவி மணியனின் செயல் ஒட்டுமொத்த காந்தியர்களை தலைகுனிய வைத்து விட்டது என்றால் மிகையில்லை.


தமிழருவி மணியனுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


பழைய தமிழ் பாடல் ஒன்று,,,



சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

இதை தமிழருவி மணியன் இப்படி புரிந்து கொண்டு இருப்பார்.


 வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

ஆனால் இதல்ல அர்த்தம். 


மனிதனுக்கு இரண்டு இயல்புகள் உண்டு.

உண்மையான இயல்புகள் , கற்றுகொண்டு வரும் பண்புகள்.

ஓவியம் ,. மொழி , கல்வி போன்றவை எல்லாம் நம் இயல்பான பண்புகள் அல்ல. கற்றுக்கொண்டு வருபவை. 

ஆனால் அன்பு, இரக்கம் , ஈகை போன்றவை மனிதனின் இயல்பான குணங்கள். 


 பல நேரங்களில்  நமது படிப்பும் , சூழ் நிலைகளும் நம் இயல்பான இந்த குணங்களை சிதைத்து விடுகின்றன.

எனவே காந்தியம் ,  மது அருந்தாமை போன்றவற்றை வெறும் தத்துவரீதியாக பின்பற்றுவதை விட , அதையெல்லாம் விட்டு விட்டு இயல்பாக வாழ்ந்தால் போதும் . மது என்பது ஒரு பொருட்டு அல்ல என்ற மன நிலை தானாகவே வந்து விடும், காந்தி போதித்த நற்குணங்கள் வெறும் பேச்சாக இல்லாமல்  , உண்மை இயல்பாக மாறி விடும்.



********************************************************************************************






_-


























20 comments:

  1. அது நாகரீகம் தெரிந்த உங்க ஜென் குரு எதற்க்கு தமிழருவி மணியன் பேசும் போது இடையில் குழப்ப முயற்சித்தார். அதற்க்கு விளக்கம் என்ன

    ReplyDelete
  2. மது இஸ்லாமில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. தாங்கள் பரிந்துரைக்கும் இஸ்லாமிய ஆட்சியில் மதுவை அனுமதிக்கலாமா ? தடை செய்யலாமா

    ReplyDelete

  3. நம் ஊரில் இருக்கும் அமைப்பை வைத்துக் கொண்டு மது விலக்கு கொண்டு வர முடியாது. அது கள்ள சாராயத்துக்கு வழி வகுக்கும். பெங்களூர் , கேரளா , பாண்டிச்சேரி என நம் மக்கள் புறப்பட்டு செல்வார்கள்...

    ReplyDelete
  4. "நம் ஊரில் இருக்கும் அமைப்பை வைத்துக் கொண்டு மது விலக்கு கொண்டு வர முடியாது."

    இந்த சப்பை கட்டு பதில் எல்லாம் வேண்டாம். நீங்கள் விரும்புவது போல் ஒரு அமைப்பை கொண்டு வருவோம்.

    எனது கேள்வி ஒன்றுதான் மதுவை தடை செய்ய வேண்டுமா ? வேண்டாமா ?

    தற்போது உள்ள அமைப்பால் தடை செய்ய முடியுமா , முடியாதா என்பது இரண்டாவது கட்ட பிரச்சினை .

    தடை செய்ய வேண்டுமா ? வேண்டாமா ?

    இதற்க்கு பதில் தர முடியுமா ???

    (பதில் தருவீர்கள் என்று நினைக்கின்றேன்)

    ReplyDelete
  5. ஜலீலா கமல்March 4, 2013 at 8:41 PM

    சலாம் சகோ ஆனந்த்,

    தங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்ப்பார்க்கவில்லை. மது பாவனையை ஆதரிக்கின்றவரா நீங்கள் !! நம்ப முடியவில்லை.

    எம்மவர் மத்தியில் உங்கள் தொடர்பாக எமக்கு ஒரு நல்ல எண்ணம் இருந்தது.
    ஆனால் நீங்கள் அதை ................................................

    ஜலீலா

    ReplyDelete
  6. மது உடலுக்கு தீங்கானதா இல்லையா. நல்ல மது அருந்தினால் உடலுக்கு எந்த தீங்கும் இல்லையா.. straight answer pls

    ReplyDelete
  7. சும்மா சப்பை கட்டு கட்டாதிங்க . டாஸ்மாக்ல குடிக்கிற எல்லாருமா அடுத்த மாநிலம் போகபோறாங்க, இல்ல அரசு நினைத்தால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதா?.... கருணாநிதி வரும் வரை நம்ம மாநிலத்திலையும் மதுவிலக்கு அமலில் தான் இருந்தது. குடிப்பவரை நினத்து வரும் கோபத்தில் வேனா தமிழருவி சாருவை ஒருமையில் பேசிருப்பார். அது தவறு தான். மத்த படி அவரை குற்றம் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.......

    ReplyDelete
  8. //நம் ஊரில் இருக்கும் அமைப்பை வைத்துக் கொண்டு மது விலக்கு கொண்டு வர முடியாது. அது கள்ள சாராயத்துக்கு வழி வகுக்கும். //

    பெருக்கெடுத்து ஓடும் டாஸ்மாக் காட்டாற்று வெள்ளம் ஒரு சிறு வாய்க்கால் அளவுக்கேனும் குறையுமல்லவா?

    //பெங்களூர் , கேரளா , பாண்டிச்சேரி என நம் மக்கள் புறப்பட்டு செல்வார்கள்...//

    இந்த வாய்ப்பு, அன்றாடம் 150 ரூபாய் சம்பாதித்து அதில் 100ஐ டாஸ்மாக்கில் செலவிடும் ஒருவருக்கு கிடைக்குமா? எத்தனை பேரால் தினமும் வெளிமாநிலம் சென்று மது அருந்துவதற்கு முடியும்?

    முதலில் விற்பனையின் அளவைக்குறைக்கலாம், பின்பு அந்த போதையின் அளவைக்குறைக்கலாம், படிப்படியாக டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைத்து, நாட்களை குறைத்து , பின்பு முற்றிலும் தடை செய்யலாம். இதற்கு ஓரிரண்டு வருடங்கள் ஆகலாம், ஆனால் அரசு மனது வைத்தால் நிச்சயம் முடியும்.

    ReplyDelete
  9. நான் அந்த டீ.வி. நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. தமிழருவி மணியன் சாருவை அவன் இவன் என்று பேசி இருந்தால் அது கண்டிப்பாக கண்டனத்துக்கு உரியது தான். வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    சாருவை மிக நாகரிகமானவராக ஸ்தாபிக்க முயலாதீர்கள். அவரும் பல சமயங்களில் ஜெயமோகன் போன்றவர்களைக் கீழ்த்தரமாக பேசியவர் தான். ஒரு சமயம் உயிர்மை மேடையில் ஜெயமோகன் எழுதிய புத்தகத்தைக் கிழித்துப் போட்டு அதன் மீது எச்சில் துப்பி எல்லோரையும் அதே போலச் செய்யச் சொல்லி அசிங்கமாகவும் அருவருப்பாகவும் நடந்து கொண்டவர் தான். அதனால் அவரின் நாகரிகம் பற்றி யெல்லாம் கடைவிரிக்க வேண்டாம்.

    எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. டீ.விக்காரர்கள் யாரும் எழுத்தாளனை மதிப்பதில்லை; அவனின் உழைப்பிற்கான சன்மானமும் தருவதில்லை என்று எப்போதும் தன் பிளாக்கில் வெளிப்படையாய் புலம்பும் சாரு ஏன் மறுபடியும் மறுபடியும் டீ.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவமானப் பட வேண்டும்?

    ReplyDelete
  10. Thamizharuvi Manian is a pseudo Gandhian,,,

    ReplyDelete
  11. இப்போது புரிகிறதா? இலக்கியம் தெரிந்தவர்கள் பண்பட்டிருப்பார்கள் என்று.

    ReplyDelete
  12. நல்ல சுவாரசியமான நியாயமான பதிவுதான்.
    வாழ்த்துக்கள்.
    ஆனால் சோ.சுப்புராஜ், Anonymous ஆகியோரின் கேள்விகளுக்கு என்ன பதில்?

    ReplyDelete
  13. @ ஜலீலா ... சகோதரரே... அனைஅவரும் குடிக்க வேண்டும் என நான் சொல்லவில்லை... நான் சொல்வது வேறு.

    கொள்கை அடிப்படையிலான தலைமை , நிர்வாக அமைப்பு இல்லாத நிலையில் , மது விலக்கு கொண்டு வந்தால் , கள்ள சாராயம் பெருகி விடும் என அஞ்சுகிறேன். இந்த முறையில் மதுவை ஒழிக்க முடியாது...

    ReplyDelete

  14. மது குடிப்பது தீங்கானதா இல்லையா என அனானி நண்பர் கேட்கிறார்...

    இது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த விஷயம்.. சிலருக்கு சர்க்கரை சாப்பிடுவது கூட தீங்கானது ... சிகரட் தீங்கானது... சொல்ல்க்கொண்டே போகலாம்... அதே நேரத்தில் தமக்கு தேவையான அளவு மட்டும் மது அருந்தி ஆரோக்கியாமாக இருப்பவர்களும் உண்டு... ஆனால் மது அருந்தி விட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது தவறு.. கண்டிக்கத்தக்கது... மது அருந்தாதமலும் சிலர் மற்றவர்களுக்கு இடஞ்சல் செய்கிறார்கள்...அதுவும் தவறுதான்

    ReplyDelete
  15. சரி காமெடி பதிவு,

    சாருவை யார் கூப்பிட்டது விவாதம் செய்ய?சரக்கு கொடுப்பார்கள் என் சென்று இருப்பாரோ???

    ஷரியா ஆதர்வாளர்களுக்கு, பரிசோதிக்க ஷரியா படி தண்டனை என்பதால், ஷரியாவின் படி சாரு'வுக்கு பிரம்படி கொடுக்க வேண்டும். ஏதோ தமிழருவி மணியன் பேச்சோடு நிறுத்தி விட்டார்.

    http://www.theaustralian.com.au/news/nation/sharia-lashing-a-punishment-for-alcohol-court-hears/story-e6frg6nf-1226500746356

    Sharia lashing 'a punishment for alcohol', court hears


    A MUSLIM man who was whipped 40 times for drinking alcohol was told to remember the pain next time he thought of picking up a drink, a Sydney magistrate has been told.

    Zakaryah Raad, 21, Tolga Cifci, 21, Wassim Fayad, 44, and Cengiz Coskun, 22, faced Burwood Local Court today charged with lashing Christian Martinez, 31, with an electric cable as punishment under sharia law for drinking alcohol.
    நன்றி!!

    ReplyDelete
  16. சாரு தமிழருவி மணியனப் பத்தி என்ன சொன்னார்னு தெரியுமா? "அவரோட (தமிழருவி மணியனோட) விவாதமே சாத்தியமான்னு எனக்கு தெரியல, ஏன்னா நான் என்ன சொல்ல வர்றன்னு புரிஞ்சுக்காம தாறுமாறா இந்த ப்ரேக் இல்லாம போற வண்டி மாதிரி போனதுனாலதான் நான் பதறி துடிச்சு போய் சொன்னேன்" - எதுக்கு தமிழருவி மணியன் பேசும் போது குறுக்கிட்டேன்னு இப்படி வெளக்கம் சொன்னார்

    தமிழருவி மணியன் மாதிரி ஒருவர, செக்ஸ மட்டும் பிரதானமா வெச்சு எழுதற (அதோட ஆபாச சேட் செஞ்சு மாட்டிக்கிட்டு அசிங்கப்பட்ட) ஒருவர் இப்படி சொன்னா அவருக்கு கோபம் வராதா?

    (உதா: நாளைக்கு பவர் ஸ்டார் இதுமாதிரி ஒரு நிகழ்ச்சில கலந்துக்கறார்னு வெச்சுக்குவோம்..அதுல பாரதிராஜாவும் பங்கேற்கிறார்.. பவர் ஸ்டார் சொல்ல வர்ற கருத்த பாரதி ராஜா தப்பா புரிஞ்சுகிட்டார். உடனே பவர், இவர் கூட என்னால விவாதம் பண்ணமுடியாது. இவர் லூசு மாதிரி உளறறார்னு சொன்னா, பராதி ராஜா எப்படி ரியாக்ட் பண்ணுவார்?)

    ReplyDelete
  17. unakku sonthama yosikka theriyuma theriyatha? eppavum charu solrathaye vazhi mozhinchitu..kudiyala ethana kudumbam seerazhinjirkunu unaku theriyuma..charu solrarnu neeyum solriye...kudikku adimaiyaagi meendu varathu evalavu kashtamnu unakku theriyuma?naalu vishayatha arainchu pathivu podu...

    ReplyDelete
  18. வசைக்கும் விமர்ச்சனத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிறீங்களே.... Mr.chori nai idha

    ReplyDelete
  19. பிரவீன்March 7, 2013 at 10:13 PM

    தமிழருவி மணியன் மாதிரி ஒருவர, செக்ஸ மட்டும் பிரதானமா வெச்சு எழுதற (அதோட ஆபாச சேட் செஞ்சு மாட்டிக்கிட்டு அசிங்கப்பட்ட) ஒருவர் இப்படி சொன்னா அவருக்கு கோபம் வராதா?////.
    .
    .
    சாருவை ஒழுங்காக படிக்காமல் வரும் உங்களை போன்றவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை.
    *
    *
    *
    எதுக்கு தமிழருவி மணியன் பேசும் போது குறுக்கிட்டேன்னு இப்படி வெளக்கம் சொன்னார்///..
    .
    .
    ஒ அப்படி ஒருவர் குறுக்கிட்டால் அவன் இவன் என சொல்லும் தகுதி எதிராளிக்கு வழங்கப்பட்டதாக அர்த்தமாகி விடுமா?தமிழருவி மணியன் காலம் காலமாக செய்து வந்தது என்ன?பக்கம் பக்கமாக எழுதினர்..அரசியல் நாகரீகம் இல்லை விவாதங்களில் மரியாதை இல்லை எல்லாவற்றயுக்கும் திராவிட அரசியல் காரணம் என்று..இன்று காந்திய அரசியல் நடத்தும் அவர் நடந்து கொண்ட விதம் எத்தகையது?
    சாரு என்றுமே தான் ஒரு காந்தியவாதி என்றோ ஆகச்சிறந்த ஒழுக்கசீலர் என்றோ சொல்லி மக்களை ஏமாற்றியதில்லை.ஆனால் மணியன் அப்படியா?ஆகச்சிறந்த ஒழுக்கசீலர் போல இவ்வளவு நாளாக அவர் போட்டதெல்லாம் வெளிவேடமா?இவரை நம்பி ஏமாறும் மக்களுக்கு நீங்கள் என்ன பதில் வைத்துள்ளீர்கள்?

    ReplyDelete
  20. மதுவிலக்கு வேணும்னு சவுண்ட் வுடுற ஆட்கள் ஆறுமணி ஆனா டாஸ்மாக் போய்டுறாங்கலாம்.முதலில் குடிக்கும் மூதேவிகள் மதுவை விலக்க முன் வருமா??? அதையே மூத்திர தண்ணி போல குடித்து விட்டு மது விலக்கு வேணும்னு போராட்டம் பண்றாங்க.. நீங்க குடிக்காம இருந்தா எவன்டா விப்பான்.. அவ விக்குறதாலதான் குடிப்போம்னு வேற சொல்லிக்குறானுங்க.. அமைப்ப விடுங்க, குடிகாரனுங்க இருக்ற வரைமதுவிலக்கு இருக்காது...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா