Thursday, April 11, 2013

லேசாக கருத முடியாத லோசாவின் “துப்பறியும் நாவல் “ - நிர்மலுடன் ஒரு விவாதம்

இலக்கிய உலக சூப்பர் ஸ்டார் மரியோ வர்கஸ் லோசா எழுதிய WHO KILLED PALOMINO MOLERO? நாவலை படித்து வைக்குமாறு நண்பர் என்னிடம் சொல்லி இருந்தார். அவரும் படிக்க இருப்பதாகவும், இருவரும் படித்து விட்டு விவாதிக்கலாம் என சொல்லி இருந்தார்.

துப்பறியும் நாவல் பாணியில் பயங்கர விறுவிறுப்பாக நாவல் இருந்தது. ஒருவன் கொல்லப்படுகிறான். அவனை கொன்றது யார் என்பது கதையின் தலைப்பு.

அந்த கொலையை துப்பறிதல் மட்டும் இன்றி , உண்மையை கண்டு பிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் , உண்மை என்றால் என்ன என்ற ஆதார கேள்வி. கொலையை சாத்தியம் ஆக்கிய பல்வேறு அம்சங்கள், கொலையை விட மோசமான செயல்கள் , அதற்கு பின் இருக்கும் காரணங்கள் என நாவல் பல்வேறு தளங்களை தொட்டு இருந்தது.

படித்து முடித்ததும் , நிர்மலுடன் இதைப்பற்றி பேச ஆர்வமாக இருந்தேன். ஆனால் அவர் வேறு ஏதோ படித்து கொண்டு இருந்ததால் , இதை உடனடியாக படிக்கவில்லை. 

எனக்கோ இதைப்பற்றி யாரிடமாவது பேசா விட்டால் தலை வெடித்து விடும் என்ற நிலை.எனவெ தினமும் அவருக்கு நினைவு படுத்தி வந்தேன் .

கடைசியில் ஒரு நாள் படித்து விட்டார்.

அவருடன் விவாதித்ததில் இருந்து......


****************************************************

 நிர்மல்

படிச்சுட்டேன்யா..படிச்சுட்டேன்

பிச்சை 

வாவ்..எப்படி இருக்கு


 நிர்மல்

சூப்பரா இருக்கு 

பிச்சை
கிரைம் நாவலில் இலக்கிய அனுபவம்


 நிர்மல்
ஆமா


pleasent reading

பிச்சை
pleasure of the text

 நிர்மல்
வசனங்கள் மூலம் கதையை நகர்த்தி இருக்கிறார்


க்ரைம் நாவலில் இதுதான் உண்மை என சொல்லிவிடுவார்கள், ஆனால் இது அந்த உண்மையை அலச சொல்கிறது, அந்த உண்மைக்குள் இருக்கும் பொய் / அறியாத எல்லோராலும் தெரிந்து கொள்ள முடியாதவைகளை பற்றி யோசிக்க செய்கிறது.


பிச்சை
உண்மையை அலசி ஆராய்ந்தால் , அது அரைகுறை உண்மை அல்லது பொய் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கும்


 நிர்மல்
ஆமாம், அந்த் பெண்ணுக்கு அப்படிப்பட்ட மன நோய் இருப்பது யாருக்கும் தெரியாது, நமக்கும் அது உண்மையா/ பொய்யான்னு குழப்பம் வருது. நாலு புரத்திலிருந்து பார்த்தால் உண்மையாக இருப்பது அருகில் இருந்து பார்த்தால் இல்லையென ஆகி விடுகிறது.


பிச்சை
ஆமா


 நிர்மல்
எது உண்மை / எது பொய் எது சரி எது தவறு - தெரியலை.


பிச்சை
உண்மை என்பது ஆளாளுக்கு மாறும் தன்மை கொண்டது... முழு உண்மை என ஏதும் இல்லை.. அந்த ஊர் மக்க்ளை பொறுத்தவரை, அந்த கொலை என்பது பெரிய சதியின் ஒரு சிறு பகுதிதான்,,, அவர்களை பொறுத்தவரை அது உண்மை


 நிர்மல்
ஆமாம் - சரியா சொன்னிங்க

அது அவர்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கிறது அதுவே உண்மையாக கருதப்படுகிறது 


பிச்சை
ஆமா..அவர்கள் அந்த ”உண்மைக்கு ” ஆதாரங்கள் வைத்து இருக்கிறார்கள்


 நிர்மல்
ஆதாரங்கள் - அவர்க்ளே உருவாக்கிகொளவதுதானே


பிச்சை
ஆமா


 நிர்மல்
இது தவிர அந்த போலிஸ் தலமை அதிகாரி சில்வாவின் காமம் எப்படி முடிவுக்கு வருகிறது என்பது யோசிக்க வைக்கிறது


பிச்சை
அந்த பெண்ணுக்கு மன நோய் , அவள்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதற்கும் ஆதாரங்கள் காட்ட முடியும்.. அவள் அப்பா , தன் பாலியல் அத்துமீறல்களை மறைக்க மன நோய் என்ப்தை பயன்படுத்துகிறார் என்பதற்கும் ஆதாரங்கள் காட்ட இயலும்...


லாஜிக் என்பதை வைத்து உண்மையை ஒரு போதும் அறிய முடியாது.

எனவேதான் கேள்வியெயே டைட்டில் ஆக்கி இருக்கிறார்


 நிர்மல்
யெஸ்


பிச்சை
சில்வாவின் காமம் லாஜிக் அடிப்படையில் முடிவுக்கு வரவில்லை... ஒரு spontaneous act

ஜென் கதை போல இருந்தது 


 நிர்மல்
 அந்த பெண் வா என்னை பண்ணு என சவால் விட்டவுடன் அவனால் இயங்க முடியாமல் போய்விட்டதே. அந்த பெண்ணின் இயலாமைதான் இவருக்கு கிக்கு.


பிச்சை
ஆமா...


பிறன் மனை நாடாமை . ஒழுக்கம் என்றெல்லாம் பாடம் நடத்தினால் , அவன் காமம் அடங்கி இருக்காது.. அவள் சவால் விட்டதும் இயல்பாகவே காமம் நீங்கி விட்டது



 நிர்மல்
இப்படியும் சொல்லலாம் அந்த பெண்ணின் கணவனின் இயலாமை அவருக்கு கிக்கு




பிச்சை
யெஸ் - அவளது கணவனை விடவும் உன்னால் முடியுமா என சவால் அந்த காமத்தை அடக்கிவிட்டதே? 


 நிர்மல்
ம்ம்ம் 


பிச்சை
உண்மையை எதிர்கொள்வதில் இருக்கும் தயக்கம். கற்பனையில் வாழும் சுகம்... இதைத்தானே illusuion , delusion என தன் மகளைப்பற்றி ராணுவ அதிகாரி சொல்கிறார் 


 நிர்மல்
ஆமாம், சில்வா அவளது கணவனால் எதுவும் முடியாது எனும் கற்பனையில் இருக்கிறான் - அந்த க்ற்பனை  நொறுக்கப்படுகிறது 

பிச்சை
அவள் குளிப்பதை ரகசியமாக பார்த்து ரசித்ததில் இருந்த கிக் , நேரில் இல்லையே


 நிர்மல்
வெளிப்படையாக சில்வாவின் காமம் காட்டபடிகிறது, மறைவாக ரானுவ அதிகாரியில் இன்சஸ்ட் காட்டபடிகிறது - இதில் இருக்கும் ஒற்றுமை ஏதேனும் இருக்கிறதா?



பிச்சை

நீங்கள் சொன்னது போல , சில்வாவுக்க்கும் , ராணுவ அதிகாரிக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கு... ஒருவர் வேட்டைக்காரர் ஒருவர் வேட்டையாடப்படுபவர் என்ற போதும் , ஒருவரும் ஒரு நாண்யத்தின் வெவெறு பகுதிகளே



 நிர்மல்
இன்னும் விரிவா சொல்லுங்களேன்


பிச்சை
silva வெளிபப்டையா காமத்தை பற்றி பேசி தன்னை ப்லே பாயாக காட்டி கொள்கிரான்... ராணுவ அதிகாரி , ஒழுக்கவாதியாக தன்னை காட்டிகொண்டு , காமத்தை சப்ரஸ் செய்கிறான்.. ஆனால் இரண்டுமே போலியானது..


 நிர்மல்
ம்ம்,

இந்த சப்ரஸ் காமத்தின் விழைவு பொறாமை, கொலை, சித்திரவதை


பிச்சை 
அடக்க நினைத்தால் பலி வாங்கி விடும் ( உதாரணம் தமிழருவி மணியன் போன்ற ஒழுக்க வாதிகள் ) ... ஓவராக சீன் போட்டால் , அனுபவிக்க முடியாமல் போய் விடும்

 நிர்மல்
sss boss 

கரக்டா சொன்னீங்க
சில்வாவுக்கு அவனது கற்ப்பனையை உடைத்து போட்டால் முடிந்துவிடும். 


பிச்சை
அதானால் அதிக பாதிப்பு இல்லை. 

 நிர்மல்
ஆமா


சில்வா : ஒரு அதிகாரிதான், லாஜிக்காக், லாவக்மாக, எதிராளியை கணித்து எடை போட்டு சூதானாமாக பேசி விபரத்தை கறக்க கூடியவன். 



பிச்சை
புத்திசாலி



 நிர்மல்
கர்னல் . அவரும் அப்படிதான ஒரே ஒரு விசயம்தான் வேறுபாடு


பிச்சை
அதாவது புத்திசாலி சில்வா ஒழுக்கவாதி கர்னல். 

 நிர்மல்
ம்ம்ம் 

பிச்சை
இரு துருவங்கள்

 நிர்மல்

சில்வாவும் அவளை ரேப் செய்தான் போகிறான் ஆனால் முடியவில்லை


பிச்சை
mm

 நிர்மல்

அதிகாரி ரேப் செய்து விட்டதாக கடிதத்தில் எழுதுகிறான் - அது உண்மையா?



பிச்சை
உண்மையாக இருக்காது.. அவன் மனதளவில்தான் அது உண்மை.... குளியல் காட்சியில் ரசிப்ப்பானே...ஆனால் உண்மையில் பார்த்து ரசிக்கவில்லை , அது ஒரு போலி தோற்றம்தான் என சூசகமாக சொல்லப்பட்டு இருக்கும்,


 நிர்மல்
ஆமாம்


பிச்சை
அந்த கர்னல் உடல் ரீதியாக காமத்தை அணுகுகிறார்.. மனம் ஒத்து அல்ல.... சில்வாவோ மன ரீதியாக அணுகிறான்.. உடல் ரீதியாக் அல்ல


 நிர்மல்
எப்படி?

பிச்சை
அந்த கர்னல் காதல் என்பதயோ, அன்பு என்பதையோ உணரவேயில்லை


 நிர்மல்
அவர் அவரது மகளை காதலிக்கிறார் இல்லியா, அதாவது அவளை கடைசி வரை அவர் மட்டும்தான் பார்த்துகொள்ள வேண்டும், வேறு யாரும் வந்துவிடக்கூடாது என பொஸஸிவா இருக்கிறார். அது காமம் சப்ர்ஸ் செய்யப்பட்ட விளைவோ.


பிச்சை 
காமம் சப்ரஸ் செய்யப்பட்டதால் , பொசசிவ்னஸ் வந்து விடுகிறது... ( ஆசிட் ஊற்றும் மன நிலை ) பலர் பொசசிவ்னஸ்ஸைத்தான் காதல் என நினைக்கிறார்கள்

 நிர்மல்
ஆமாம்


பிச்சை
ஆனால் முறை தவறியதாக இருந்தாலும் , சில்வாவின் நேசிப்பில் உண்மை இருப்பதாக தோன்றுகிறது... அவனால் அந்த பெண்ணுக்கு ஒரு போதும் தீங்கு செய்ய இயலாது

 நிர்மல்
கரெக்ட்

கையில் துப்பாக்கி இருந்தால் கூட அவன் அவளை ஒன்றும் செய்யவில்லை



பிச்சை 
இந்த அன்பை காதல்/ காமம் என தவறாக நினைத்து கொண்டு இருந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த கற்பனை கலைகிறது

 நிர்மல்
யெஸ் -


பிச்சை
இவன் காதலை காமம் என நினைக்கிறான். கர்னல் காமத்தை காதல் என நினைக்கிறார்


 நிர்மல்
a brief crossing அப்படின்னு ஒரு படம் இருக்கு காத்தரனின் ப்ர்லட் படம். அது நினைவுக்கு வருகிறது.


பிச்சை
ம்ம் 

நிர்மல்
middle aged women meets a teen age boy, she tells how she is alone and seperated from her useless husband, this and that, the teen age boyz get his feeling and had sex with her. 


பிச்சை
ம்ம்


 நிர்மல்
this happenes in a ship, next day when ship comes to shore, she meets her husband and she was happy to go with her, even not noticing the boy. 


பிச்சை
mmm

 நிர்மல்
அந்த பௌயனின் முந்திய இரவு புணர்ச்சி அவள் அவனுக்கு சொன்ன கதையை மையாமாக கொண்டது.
 அந்த நேரத்தில் ஒரு வேளை எனது கணவனை போல உண்ணால் முடியுமா என அவளது கண்வனின் திற்மை பற்றி சொல்லிருந்தால் ? 

பிச்சை
mmm

 நிர்மல்
இதில் கதை சொல்லும் சோலா இன போலிஸ்க்காரர்- வெகுளி



பிச்சை
அவனை கொன்றது யார் என்ற தலைப்பு , குறிப்பிட்ட நபர் யார் என ஆராய நம்மை கேட்கவில்லை... எந்த அம்சம் அவனை கொன்றது


 நிர்மல்
ஆமாம் அதுதான் கிரைம் நாவலை இலக்கிய அனுபவத்திற்க்கு கொண்டு செல்கிறது


பிச்சை
காதலற்ற காமமா அல்லது காமமற்ற காதலா.. அல்லது பெரு நாட்டின் சமூக சிக்கல்களா..

 நிர்மல்
முக்கியமா நாம தெரிந்து கொள்ள வேண்டியது சில்வா சோலா எனும் தாழ்த்தப்பட்ட செவ்விந்தியர் இனம்
கர்ணல் - வெள்ளைக்காரன் 


பிச்சை
ஆமா


 நிர்மல்
காதலற்ர காமமா அல்லது காமமற்ற காதலா.. அல்லது பெரு நாட்டின் சமூக சிக்கல்களா.. - சரியா சொன்னிங்க

அவர் காதலை சொல்லும் போதெல்லாம் விட்டி பூச்சிகள் எப்படி த்ன்னை மாய்த்து கொள்கிறது என்பதை சொல்கிறார்.



பிச்சை

ஹ்ம்ம்ம்ம்


 நிர்மல்
பாஸ்- காதலற்ற காமம் - யார்?


பிச்சை

அந்த கர்னல் த்ன மகள் மேல் கொண்ட உறவு

அந்த பெண் பலமினோ மீது கொண்டதும் காதல் அல்ல என்றே நினைக்கிறேன்


 நிர்மல்

அவனுக்கு இருப்பது உண்மையான காதல்

இலக்கியத்தில் புதிர்தான் முக்கியம் அதுவே உண்மைக்கான தேடலை உருவாக்குகிறது, உரையாடலை கொண்டு வருகிறது, அதற்க்கு உண்மை தேவையில்லை ஏனென்றால் உண்மை தேடலை முடிக்கிறது உரையாடலை முற்று பெற வைக்கிறது 


பிச்சை
ஆமா


 நிர்மல்
அதை சாத்தியமாக்குகிறது இந்த நாவல் அத்னாலே இது இலக்கியம்.



பிச்சை
ம்ம்ம்


 நிர்மல்
ராணுவ அதிகாரியின் மகள் மீது அவரின் பொஸசிவ்னசும் காரனமாக இருக்கலாம்.

அந்த பெண்ணை காதலிக்கும் கிட்டார் வாசிக்கும் பெலிமெரோவின் காதல் கூட காரணமாக இருக்கலாம்.

பெண்ணை காதலிக்கும் இன்னுமொரு பைலட்டின் பொறாமை காரணமாக இருக்கலாம்.


அப்புறம் அடுத்து சாகும் ராணுவ அதிகாரியும் அவரது மகளின் சாவுக்கு யார் காரணம், அந்த பொலிமெரோவின் கொலைக்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்ச்சி செய்ய்யும் விளைவுதானே.

உண்மையை கண்டுபிடிப்பதில் விளைவாக இன்னும் இரண்டு கொலைகள் முதல் கொலையின் உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் செய்துவிடுகிறது.

அக்ஸுவலா உண்மையை சில்வாவில் கதையில் இருக்கிறது, கற்ப்பனையில் தோன்றிய அல்லது நமது மன பிம்மங்கள் உடைபடும்போது வன்முறை நிக்ழ்தேருகிறது. இந்த பிம்மங்கள் எப்படியாக உருவாகிறது உருவாக்கபடுகிறது அது எந்த அளவுக்கு நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தொக்கி நிற்க்கும் கேள்வி எனலாம்.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா