Thursday, May 9, 2013

சிந்துபைரவி பட பாணியில் ஹிட்ச்காக் படம்- சைக்கோ உருவான நாட்களுக்கு ஒரு பயணம்


ரியர் விண்டோ..

இதுதான் நான் முதன் முதலாக பார்த்த ஹிட்ச்காக் படம். ஓர் விழாவில் பிரத்தியமாக திரை இட்டு இருந்தார்கள்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க ஆரம்பித்தேன். இயல்பான கதை சொல்லல் , கதை எதை நோக்கு செல்கிறது என்ற சஸ்பென்ஸ்., எப்படி முடியப்போகிறது என்ற சுவாரஸ்யம் , மெல்லிய நகைச்சுவை என படம் கொஞ்ச நேரத்திலே பிடித்து போய் விட்டது.

அதுவும் க்ளைமேக்ஸ் சீன் செமையாக இருந்தது. பிராமாண்டமான சண்டை காட்சிகள், கார் சேசிங் என்று இல்லாமல் , மறக்க முடியாத ஒரு க்ளேமேக்சாக இருந்தது.

அதன் பின் அவர் படங்களை தேடி தேடி பார்க்க ஆரம்பித்தேன்,  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் தவற விடுவதில்லை.

அவரது ரோப், சைக்கோ என எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக சைக்கோ படம்.

புகழ் பெற்ற பாத்ரூம் சீன் மட்டும் அல்ல, மற்ற காட்சிகளும் மிக பிடிக்கும்.

தனது காரை எக்சேஞ்ச் செய்து விட்டு புதிய காரை வாங்கி செல்லும் அவரசத்தில் இருக்கும் கதானாயாகிப்பார்த்து கார் சேல்ஸ்மேன் ஆச்சர்யப்படுவான், வழக்கமாக சேல்ஸ் மேன்கள்தான் வாடிக்கையாரை வற்புறுத்துவார்கள், முதல் முறையாக ஒரு வாடிக்கையாளர் சேல்ஸ் மேனை வற்புறுத்துவதை இப்போதுதான் பார்க்கிறேன் என கிண்டலாக சொல்வான்.

அவள் தங்க செல்லும் விடுதியின் அமானுஷ்ய தன்மை , சிறிய குன்றின் மேல் அமைத்து இருக்கும் வீடு கொடுக்கும் நடுக்கம் என பல காட்சிகளை ரசிக்கலாம்.

காதல் காட்சி ஒன்று ஆரம்பத்தில் வரும், பிறகு பணம் கையாடல், கார் எக்சேஞ்ச் என கதை விறுவிறுப்பாக சென்று , விடுதியில் உச்சம் பெறும். அந்த கதையோட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்

இந்த படத்தை எடுக்கையில் ஹிட்ச்காக் பெற்ற அனுபவங்களை வைத்து சென்ற ஆண்டு ஹிட்ச்காக் என்ற படம் வெளியானதுமே அதை பார்க்க ஆவல் ஏற்பட்டது. காரணம் சைக்கோ என்னை கவர்ந்த படம். அதைப்பற்றி ஒரு படம் என்பது எனக்கு ஆர்வம் ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.

ஹிட்ச்காக் குறித்து எத்தனையோ புத்தகங்கள் , தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வந்து விட்டன. இனி அவரைப்பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருந்தது.

சினிமாவைப்பற்றி எடுக்கப்படும் படங்கள் நமக்கு பெரும்பாலும் ஆர்வமளிப்பதில்லை. சினிமா எடுக்க எவ்வளவு கஷ்டப்படுகிறர்கள் என்பதில் சாதாரண ரசிகனுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. எந்தளவுக்கு அதை சினிமா என மறந்து விட்டு பார்க்க முடிகிறதோ அந்த அளவுக்குத்தான் அது வெற்றிப்படமாக அமையும், இது சினிமாதான் என நினைவு படுத்தும் படம் தோல்வியாக அமையும்.

இந்த ஹிட்ச்காக் படம் , அந்த வகையில் ஜாக்கிரதையாக எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவைப்பற்றி டெக்னிக்கல் விஷ்யங்களுக்கு போய் அன்னியமாக நிற்காமல், எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடியும் கணவன் மனைவி உறவு சிக்கலை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.


ஆரண்ய காண்டம் படத்தில், ஒரு தாதாவுக்கு வயதாகி விட்டதாக சொல்வது அவனை புண்படுத்தி , பலர் வாழ்க்கைய பாதிப்பதில் முடியும்.

இதுவும் அந்த பாணி சிக்கல்தான்.

ஹிட்ச்காக்குக்கு வயதாகி விட்டது. அவர் தன் நல்ல பெயருடன் ஓய்வு பெறுவது நல்லது என்ற பேச்சு மெல்ல பரவ தொடங்குகிறது. தன்னால் இப்போதும் வெற்றி படங்கள் எடுக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு.

சைக்கோ கதையை தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அந்த கதை பலருக்கு பிடிக்கவில்லை.படம் தயாரிக்க யாரும் முன் வரவில்லை.

சொந்தமாக எடுக்க தீர்மானிக்கிறார். அதற்காக வீட்டை அடமானம் வைத்து அதை இழந்தாலும் பரவாயில்லை என நினைக்கிறார்.

அவர் தொழிலில் அவர் மனைவி பக்கபலமாக இருக்கிறாள், ஆனால் அதற்கான க்ரெடிட்டை அவள் பெறவில்லை என்ற ஏக்கம் அவளுக்கு உண்டு.

வீட்டை அடமானம் வைக்க அவளும் ஒப்புக்கொள்கொள்கிறாள்.

ஆனால் இந்த படத்துக்கு அவள் முன்புபோல உதவவில்லை என ஹிட்ச் நினைக்கிறார்/

அவளுக்க்கு இன்னொருவனும் தொடர்பு இருப்பதாக சந்தெகிக்கிறார். இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது.

படம் அவர் எதிர்பார்த்தபடி வரவில்லை. நொந்து விடுகிறார். கிடைத்த விலைக்கு தொலைக்காட்சிக்கு விற்று விடுங்கள் என ஆலோசனை சொல்கிறார்க்ள்.

அப்போதுதான் மனைவியின் அருமையை உணர்கிறார்.

அவர்களுக்கிடையே பிரச்சினை தீர்கிறது. மனைவி பக்க துணையாக இருக்க , அவர் திறன் பளிச்சிடுகிறது.  திறமையான எடிட்டிங், பொருத்தமான இசை என படம் மெருகேற்றப்பட்டு ரிலீஸ் ஆகிறது , வரலாறு படைக்கிறது.

 நீ இல்லாமல் என் வெற்றிகள் இல்லை என மனைவியை புகழ்கிறார். இதை கேட்க இத்தனை ஆண்டுகள் காத்து இருந்தேன் என்கிறார் மனைவி..அதனால்தான் என்னை சஸ்பென்ஸ் கிங் என்கிறார்கள் என ஃபினிஷிங் டயலாக் சொல்லி படத்தை சுபமாக முடிக்கிறார் ஹிட்ச்.

   சிந்து பைரவி படம் பார்த்து இருப்பீர்கள். தன் மனைவி தன் இசை திறமையை புரிந்து கொள்ளவில்லை  என நினைத்து இசை தெரிந்த வேறொருபெண்ணை நாடி செல்வார் கதானாயகன். அவன் உணர்வுகளை நாமும் மதித்ததால் படம் ஹிட் ஆனது.

தன் சமையல் திறனை தன் கணவன் புரிந்து கொள்ளவில்லை என அந்த மனைவி நினைத்து , ஒரு சமையல் காரனை நேசிக்க தொடங்குவதாக அதே படத்தை எடுத்து இருக்க முடியுமா? நம் கலாச்சாரத்தில் முடியாது,

ஹிட்ச்காக் படத்தில் இந்த கோணத்தில்தான் கதை அமைந்துள்ளது.

ஒரு டாக்குமெண்ட்ரி போல ஆகி இருக்க வேண்டிய படத்தை , இப்படி ஒரு கான்செப்ட் அமைத்து விறுவிறுப்பை ஏற்றி இருக்கிறார்கள்.

பணம் புரட்ட ஹிட்ச் பாடுபடுவது , சென்சார் போர்டுடன் வாதிடுவது , வீட்டை விற்றாவது படம் எடுக்க உறுதியாக இருப்ப்பது, படத்தை மார்க்கெட்டிங் செய்ய பயன்படுத்தும் யுக்திகள், பாத்ரூம் காட்சிக்கு ரசிகர்களின் ரெஸ்பான்சை வைத்து , ஜெயித்து விட்டதை உணர்வது என சினிமா சார்ந்த காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது.

மெல்லிய நகைச்சுவை, ஹிட்ச்காக் மற்றும் மனைவியின் நடிப்பு, சைக்கோ படத்தின் ஹீரோயினாக வருபவரின் தோற்றம் போன்றவைதான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

மற்ற பாத்திரங்கள் சரி வர செதுக்கப்படவில்லை. சைக்கோ படத்தின் காட்சிகளை பயன்படுத்த முடியாமையும் மைனஸ்தான்.

தேவையற்ற காட்சிகள் பல இருக்கின்றன.

எனவே ஒரு சிறந்த படம் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. மோசமான படம் பார்த்த உணர்வும் இல்லை.

ஹிட்ச்காக்- பார்த்தே ஆக வேண்டிய படமும் அல்ல..தவிர்க்க வேண்டிய படமும் அல்ல.

வெர்டிக்ட் - Hitchcock  - Half boiled food 



2 comments:

  1. பாத் ரூம் சீன லிங்க் கொடுங்க பாஸ் ஹஹா

    ReplyDelete
  2. இந்த படத்தில் அந்த சீன் இல்ல தலைவரே... காத்திருந்து ஏமாந்து போனேன்..

    ஆனால் அந்த சீனை எடிட்டிங் செய்யும் காட்சி உண்டு..என்ன பார்க்கிறார்கள் என நமக்கு தெரியாது,,, ஹிட்ச்காக் மனைவி அந்த சீனை பார்த்து பதறுவார்... நிர்வாணமாக் ஒரு காட்சி வந்து விட்டது ..கட் செய்யுங்கள் என்பார்...கேட்கும் நமக்கு வயிறு எரியும் :) அதற்கு கிட்ச்காக் ஒரு பதில் கொடுப்பார் பாருங்கள்...ச்சீ...அதை சொல்ல வெட்கமா இருக்கு

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா