Wednesday, October 31, 2018

படித்தவை சில


எம் ஜி ஆர் போன்றவர்களுடன் பழகிய , கவிஞர் முத்துலிங்கம் வாழும் வரலாறாக நம்மிடையே இருக்கிறார்... பல இலக்கிய நிகழ்ச்சிகளில் இவரைக் காண முடியும்..

அவ்வளவு அறிவும் அனுபவமும் பெரியோர்களுடன் பழக்கமும் இருந்தாலும் வெகு எளிமையாக காட்சி அளிப்பார்

ஒரு வருடங்களுக்கு மேல் தினமணி இதழ் ஞாயிறு இணைப்பிதழில் அவர் எழுதி வந்த ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே என்ற தொடர் சென்ற ஞாயிறு ( 28 10 2018 ) நிறைவுற்றது

பொதுவாக நாளிதழ்களுடன் வரும் இணைப்புகள் அவ்வளவு தரமாக இராது என்ற கருத்து பலருக்கு உண்டு.. ஆனால் தினமணி இணைப்பிதழ்கள் , சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்த தொடர் ஒரு சான்று..

எத்தனையோ அனுபவங்கள் , பல்வேறு கவிஞர்கள் என வரலாற்று பொக்கிஷமாக அந்த தொடர் இருந்தது... நூலாக வர வேண்டும்

அவற்றில் சில முக்கிய பகுதிகளை அவ்வப்போது எழுதுவேன்

-----------------

திராவிட இயக்க சிந்தனையாளர் பேரறிஞர் குத்தூசி குருசாமியின் சிறு நூல் ஒன்றை படித்தேன்...   பட்டுக்கோட்டை மா நாட்டில் அவரது தலைமை சொற்பொழிவின் நூலாக்கம்..  வெகு சிறப்பு... இன்றைய மேடைகள் இந்த தரத்தை இழந்து விட்டது வருத்தம்தான்




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா