Sunday, October 28, 2018

கலைஞர் vs புரட்சித் தலைவர் எலுமிச்சம்பழ யுத்தம் - சுவராஸ்ய ஃபிளாஷ்பேக்


 அண்ணா மறைவுக்குப் பின் யார் முதல்வர் என்ற குழப்பம் ஏற்பட்டது...   திமுகவின் முன்னணி தலைவராக விளங்கிய நாவலரை ஓரம் கட்டி தான் முதல்வராக கலைஞர் முயற்சி செய்து கொண்டிருந்தார்,., பலர் மக்கள் திலகத்தையே முதல்வராக்க விரும்பினர்

இந்த சூழலில் அடிமைப் பெண் படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆரை , கலைஞர் சந்தித்துப் பேசினார்... பேச்சின் முடிவில் கலைஞரை முதல்வராக்க எம் ஜி ஆர் ஒப்புக்கொண்டார்...

சினிமா புகழ் போதும் என நினைத்ததும் ,  நல்லாட்சி தருவதாக கலைஞர் அளித்த உறுதி மொழியும் எம் ஜி ஆரை இந்த முடிவுக்கு வர வைத்தன

ஆனால் எம் ஜி ஆர் எதிர்பார்த்த நல்லாட்சியாக அந்த ஆட்சி அமையவில்லை... கட்சியினர் எம்ஜி ஆரிடம் முறையிட்டனர்,...     குறிப்பாக எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தினர் கொந்தளிப்பில் இருந்தனர்

  கலைஞர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி , இனி தவறுகள் நடக்காது என் உறுதி அளித்தார்...  திமுகவில் பிரச்சனைகள் வேண்டாம் என எம் ஜி ஆர் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார்

சைதை துரைசாமி போன்றோர் , காரில் ஏற இருந்த எம் ஜி ஆரை தடுத்து நிறுத்தி , எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு முக முத்து ரசிகர் மன்றம் அமைக்க தலைமை தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டினர்...  எம் ஜி  ஆர் , பொறுமையாக இருங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்

இது நடந்து சில நாட்களிலேயே எம் ஜி ஆர் கணக்கு கேட்டார்... பெரியார் , அண்ணா போன்றோர் கட்டிக்காத்த திராவிட பாரம்பரியத்துக்கு எதிராக ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்

இதனால் எம் ஜி ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்... தமிழ் நாடே கொந்தளித்தது... எம் ஜி ஆர் படம் ஒட்டப்படாத வாகனங்கள் சாலையில் ஓட முடியாத நிலை ஏற்பட்டது


மக்கள் விரோத எம் எல் ஏக்கள் தம் பதவிகளை ராஜினாமா செய்யக்க்கோரி அந்தந்த பகுதி மக்கள் அவர்களிடம் மனு அளிக்க வேண்டும் என எம் ஜி ஆர் கோரினார்

அதன்படி கலைஞரை சந்திந்த சைதை துரைசாமி மனு அளித்தார். அதை வாங்கிய கலைஞர் , சைதை துரைசாமிக்கு எலுமிச்சம் பழம் அளித்தார்... ஏதோ நினைவுப் பரிசு போல என நினைத்து அவர் வாங்கிக்கொண்டார்

பிறகு பேட்டி அளித்த கலைஞர், எம் ஜி ஆர் ஆதரவாளர்களுக்கு மூளை குழம்பி இருக்கிறது.. அதனால்தான் தலையில் தேய்த்து குளிக்க எலுமிச்சை அளித்தேன் என்றார்... இது தலைப்பு செய்தி ஆனது... எம் ஜி ஆருக்கு இதில் வருத்தம்’

சில நாட்கள் கழித்து , திமுக கூட்டம் ஒன்று சைதையில் நடந்தது

கலைஞர் பேசி முடித்ததும் ஒவ்வொருவராக வரிசையில் நின்று அவருக்கு மாலை அளித்தனர்

சைதை துரைசாமியும் மேடை ஏறினார்.. கலைஞருக்கு எலுமிச்சம்பழ மாலை ஒன்றை அணிவித்தார்...  எம் ஜி ஆரை நீக்கிய உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்களுக்கும்தான் எலுமிச்சம்பழ சிகிச்சை தேவை என்றார்..

மக்கள் ஆதரவை இழந்த கருணா நிதியே ...ராஜினாமா செய் என கோஷம் எழுப்பி விட்டு கிளம்பினார்


அவனை பிடிங்கடா...என கலைஞர் உத்தரவிடவே கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்... உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அதன் பின் எம் ஜி ஆர் தன் நேரடி கவனிப்பில் சைதை துரைசாமியை வைத்துக்கொண்டார்

அதன் பின் , அதிமுக வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததும் , சைதை துரைசாமிக்கு மிரட்டல்கள் குறைந்தன







No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா