Sunday, December 2, 2018

மண்டூகங்கள் - மதியிலிகள் - சிட்டுக்குருவிகள் - செல்போன்கள்


 ஒரு புளிய மரத்தின் கதை நூலைப் படித்து விட்டு , புளிய மரத்தைப் பற்றி நூல் சரியாக விளக்கவில்லையே என கேட்கும் மக்கள் நிரம்பிய தேசம் இது

புளிய மரம் என எதை குறிப்பால் உணர்த்துகிறார் என நூலாசிரியர் விளக்கினால்தான் புரியும்.. 

நூல்களுக்கு விளக்கவுரை எழுதுவது போல இப்போது சினிமாவுக்கும் விளக்கவுரை தேவைப்படும் காலம் வந்து விட்டது...  ஒரு சராசரி ரசிகனுக்கு எந்த சிக்கல்களும் இல்லை.. உற்சாகமாக படத்தை ரசிக்கிறான்

ஆனால் சில இலக்கிய  பத்திரிக்கைகளுக்குத்தான் விளக்கம் தேவைப்படுகிறது

2.0 படத்தில் , பறவை ஆர்வலர் ஒருவர் இருக்கிறார்..செல்போன்களால் பறவை அழிகிறது என நினைத்து அதே செல்போன்களை ஆயுதமாக்கி பழி வாங்குகிறார் என்பது கதை..   செல்போன்களால் குருவி அழிகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது இந்த ஆர்வலரின் எதிர் தரப்பின் கருத்து... இந்த இருவரும் மோதுகின்றனர் என்பதுதான் கதை

செல்போன்களால் குருவி அழிவதாக படம் சொல்கிறது என பலர் ஆய்வுக்கட்டுரை எழுகின்றனர்... உண்மையில் படம் அப்படி சொல்லவில்லை.. அதில் வரும் ஒரு கேரக்டர் சொல்கிறது.. அவ்வளவுதான்


 நுகர்வு வெறி தவறு என அந்த கேரக்டர் நினைக்கிறது..அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை

   ஒரு சாதாரண விஷ்யத்தை புரிந்து கொள்ள இவர்கள் எல்லாம் பத்திரிக்கை ஆசியர்களாக இருப்பது விந்தைதான்

  தினமலர் , இந்து போன்ற பல இதழ்கள் நடு நிலைமையாக அழகாக எழுதியுள்ளர்.. ஒரு சில இலக்கிய இதழாசிரியர்கள்தான் விபரமின்றி குப்பையாக எழுதுகின்றனர்






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா