Sunday, December 23, 2018

ராயல்ட்டி யாருக்கு... வைரமுத்து காமெடி

இப்போதெல்லாம் அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை.. பிரியாணி கொடுத்தும் காசு கொடுத்தும்தான் கூட்டம் திரட்டுகின்றனர்.

இதற்கு மாறாக இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது...

இது ஆரோக்கியமான போக்காகும்

இலக்கிய முன்னோடிகளை அறிமுகம் செய்யும் தமிழாற்றுப்படை எனும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கபிலர் குறித்து வைரமுத்து பேசினார்.

நல்ல கூட்டம்.. குடும்ப தலைவிகள் பலரும்கூட , தனியாகவும் குடும்பத்துடனும் வந்திருந்தனர்... மகிழ்ச்சி..

வைரமுத்துவுக்கு பேசியவர்கள் சிறப்பான ஆழமான உரை வழங்கினர்..
(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமை உரை. முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை)

வைரமுத்து மிக உன்னிப்பாக இந்த உரைகளை கவனித்து தன் பேச்சில் மேற்கோள் காட்டினார்... இது நல்லதொரு பண்பாகும்.. பலர் மற்றவர் உரைகளை கவனிப்பதில்லை


இருவர் படத்தில் தான் எழுதிய நறுமுகையே பாடலில் வரும் அற்றைத்திங்கள் என்ற வரிக்கு ராயல்ட்டி கொடுப்பதென்றால் , கபிலருக்குதான் கொடுக்க வேண்டும் என யாரையோ மறைமுகமாக கேலி செய்து நகைச்சுவையாக பேசினார்


புலிக்கும் யானைக்கும் சண்டை வந்தால் புலிதான் வெல்லும் என்கிறார் வள்ளுவர்... புலி தற்காலிகமாக தோற்றிருக்கலாம்.. யானையின் சூழ்ச்சியால் தோல்வி.. ஆனால் புலிதான் வெல்லும் என்று வைரமுத்து பஞ்ச் ஆக பேசினார்... ஆனால் சூழ்ச்சியால் புலியை வீழ்த்திய யானையுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த பஞ்ச் வசனம் சரியாக எடுபடவில்லை


அவரது பேச்சு முன்பு தினமணியில் வந்தது... பிறகு தமிழ் ஹிந்துவில் வந்தது... இந்த பேச்சு நக்கீரனில் வருகிறது..

இது வளர்ச்சியா வீழ்ச்சியா என தெரியவில்லை

ஆனால் ஒரு நல்ல தமிழ் விருந்து... எந்த பந்தியில் பரிமாறப்பட்டாலும் நல்லதுதான்..


 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா