Wednesday, February 26, 2020

பிரசாந்த்.. திறமையை நம்பிய கலைஞன்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் ஒன்று.

பிரபுதேவா உட்பட பலரை இந்த பதவியில் வைத்து விவாதித்துள்ளனர்


இவற்றில் பிரசாந்த் சற்று வித்தியாசமானவர்

ரஜினி , கமல் , விஜய்காந்த், சத்யராஜ் , பிரபு , கார்த்திக் ஆகியோரின் ஆதிக்கம் நிலவிய அந்த காலகட்டத்திலேயே தனது பயணத்தை துவக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு

ஆனால் இவருக்குப் பின் வந்த விஜய் அஜித் ஆகியோர் இவரை ஓவர்டேக் செய்து விட்டனர்

அடுத்த நம்பர் ஒன் என கருதப்பட்டு அதன் பின் , விஜய் அஜித்துக்கு போட்டியாளராக நினைக்கப்பட்டு அதன் பின் சூர்யா , ஆர்யா , ஜெயம் ரவி , விஷால் , சிம்பு , தனுஷ் போன்றோர்கள் தமக்கென இடம் பிடித்தபின்கூட புதுமுக நடிகர் போல ஒரு திருப்பு முனைக்காக நிரந்தரமாக காத்திருக்க நேர்ந்தது பெரும் சோகம்

உரிய வழிகாட்டுதல் இல்லாதது பலரது தோல்விகளுக்கு காரணமாய் இருக்கும்

இவரது தோல்விக்கு காரணம் இவரது தந்தையின் அளவுக்கு மீறிய வழிகாட்டுதல் என்பார்கள் சிலர்

மலையூர் மம்பட்டியான் போன்ற படங்களில் கிடைத்த நட்சத்திர அந்தஸ்தைக்கூட தன் பையனுக்காக தியாகம் செய்தவர் தியாகராஜன்;

அவரது தியாகம் வீணாய் போய் விட்டது

ஆரம்பத்தில் பிரசாந்தே தனியாக செயல்பட்டு தப்பான படங்களில் நடித்து தோல்விகளில் பாடம் கற்று பிற்காலத்தில் வென்றிருக்கலாம்

அல்லது இப்போது சில நடிகரககள் செய்வதுபோல paid news உருவாக்கியிருக்கலாம்

திறமையையும் உழைப்பையும் மட்டுமே நம்பி வெல்ல முயன்றவர் என்பதால் அவர் தோல்வி வருத்தத்துக்கு உரியதாகிறது


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா