Tuesday, February 18, 2020

ஜெயமோகனின் யாதேவியும் , பாலியல் சோதனைகளும்


அந்தி மழை இதழில் ஜெயமோகனின் யா தேவி சிறுகதையைப் பார்த்து சற்றே அதிர்ச்சி அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்

இப்போதெல்லாம் தமிழ்ப்பத்திரிக்கைகளைப் படிப்பது முகநூல் பக்கங்களைப் படிப்பதுபோன்றுதான் இருக்கிறது. அறிவுஜீவி பாவனை , மேலோட்டமான புரிதல்கள் , தப்புத்தப்பான தமிழ் , அரசியல் சார்புகள் என பத்திரிக்கைகள் எல்லாம் முகநூல் தரத்துக்கு வந்து விட்டன

என் பதிவு வாட்சப்பில் வைரல் ஆகிறது
என அந்தக்கால வலைப்பதிவர்கள் மகிழ்வது போல பத்திரிக்கையாசிரியர்கள் மகிழும் கால கட்டம்.

நமக்குத்தேவையான தீனி இங்கு கிடைக்காது என ஆங்கிலத்தின் நகரும் சூழலில் , யா தேவி கதை நல்லதொரு அனுபவத்தை தந்தது

எல்லாஆன்செல் என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க ஶ்ரீதரன் என்பவன் அவள் அறைக்கு செல்கிறான்.
யாரும் கேட்கவாய்ப்பற்ற அவனது காலடி ஓசைகளை அவளுக்கு கேட்கிறது என்று ஆரம்ப வரிகளிலேயே ஒரு குறிப்பு வருகிறது.

அவள் நீலப்பட நடிகை. இவன் ஒரு துறவற வாழ்க்கை நடத்துபவன் . அவளுக்கு சிகிச்சை அளிக்க வருகிறான்.

அவன் அவளை புரிந்து கொள்வதைவிட , அவள் அவனை அதிகம் புரிந்து கொள்கிறாள் எனபதுதான் இந்தக்கதையின் மறைபொருளாக இருக்கும் அழகு

 பிணங்களை தகனம் செய்வதை அடிக்கடி பார்ப்பதன் மூலம் வாழ்க்கையின் நிலையாமையை உணர்தல் , மரண பயத்தை வெல்லல் போன்றவற்றை சாதிப்பதை ஒரு ஆன்மிக பயிற்சியாக செய்வார்கள்

அதேபோல கட்டற்ற காமத்தை அனுமதித்து அதை கடக்கும் முயற்சிகளும் உண்டு.  இது சற்று raw ஆன முயற்சி. ஆனால் சரியான வழிகாட்டுதல்களுடன் இதை செய்வது உண்டு

ஓஷோவுடன் நெருக்கத்தில் இருந்த சில பாலிவுட் நடிகர்கள் தாங்கள் புணர்ந்த பெண்களின் எண்ணிக்கையை பெருமையாக கூறி , தற்போது காமம் கடந்த நிலையை அடைந்து விட்டதாக புத்தகங்கள் எழுதினார்கள். இப்படி ஒரு நடிகர் பெருமையாக ஆன்மிக சோதனை செய்து புத்தகம் எழுத முடியுமா என்பது வேறு விவகாரம் 

உண்மையில் அப்படி அனுபவிப்பது மட்டுமே விழிப்புணர்வை தந்துவிடும் என்பது தவறான புரிதல்.

உதாரணமாக இடுகாட்டில் , சுடுகாட்டில் பணி செய்வோருக்கு மரணம் என்பது அதிர்ச்சியை தராது , பிணம் அச்சம் தராது. அதற்காக மரண பயம் கடந்த ஞானியர் என அவர்களை சொல்ல முடியாது..   ஆனால் சிலருக்கு அந்த நிலை வாய்க்கவும் வாய்ப்பிருக்கிறது


இந்த கதையில் வரும் அந்த நிலையை −காமம் கடந்த நிலையை −ஶ்ரீதரன் அடைய விரும்பும் நிலையை − அல்லது அதன் சாயலை அனுபவித்து விட்டாளோ என தோன்ற வைக்கிறது கதை

எதிர்பாலருடன் மரியாதைக்குரிய வகையில் பாலியல் சோதனைகள் செய்யும் வாய்ப்பை வாழ்க்கை அவளுக்கு வழங்கவில்லை ஆனால் கிடைத்த வாழ்க்கையேகூட அந்த சோதனைகளால் அடையப்படும் இறுதி அனுபவத்தை அவளுக்கு அளித்து விட்டதா என்ன ?

அவளில் மகாசக்தியை பெண்மையின் பேரழகை அவன் காண்பதைவிட ,அவனில் அவள் காணும் பெண் மிகவும் யோசிக்க வைத்தது

அவளது இறுதிப்,பெருமூச்சு அர்த்தம் மிக்கது







No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா