Wednesday, February 5, 2020

வண்ணதாசனுக்கு சாதீய அணுகுமுறை தேவை

பிற தேச நூல்களைப் பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

தமிழில் ஏன் அந்த தரத்தை எட்ட முடியவில்லை என்பது ஆரம்ப நிலை வாசகனுக்கு ஒரு ஏக்கமாக இருக்கும்

அதற்கு முக்கிய காரணம் விற்பனைதான்.  நூறு ரூபாய்க்கு விற்கப்படும் நூலை ஆயிரம் ரூபாயக்கு வாங்க வாசகன் தயார் என்றால் உயர் ரகம் சாத்தியம். அல்லது லட்சக்கணக்கில் −குறைந்தது ஆயிரக்கணக்கில் − விற்றாலும் உயர் ரகம் சாத்தியமே.

இதைத்தான் சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார்.  கலாப்ரியாவின் வேனல் நாவல் உள்ளடக்கம்தான் இலக்கிய மதிப்பை தீர்மானிக்கும். ஆனால் வடிவமைப்பும் நன்றாக இருந்திருக்க வேண்டும். அதற்கு அதிகம் விற்பனை ஆக வேண்டும் என நூலுக்கு ஆக்கப்பூர்வமான அறிமுகம் கொடுத்தார்.அதிகளவில் வாசகர்கள் வாங்கினால் சாதாரண விலைக்கே செம்பதிப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகும்


சாருவின் ஜீரோ டிகிரி நாவலும்கூட மலிவுவிலைப்பதிவு வந்துள்ளது.  அதன்பிறகு சிறப்புபதிப்பும் வெளிவந்துள்ளது.  ஜெயமோகனின் வெண்முரசு மலிவுப்பதிப்பாக கிடைத்தாலும் விலைகூடுதலாக இருந்திலும் செம்பதிப்பை தேடிச் சென்று வாங்குவோர் பலர்

கெட்டி அட்டை , தரமான தாள் , வண்ணப்படங்கள் என செம்பதிப்பின் அனுகூலங்கள் ஏராளம்.

ஒரு வாசகனின் பார்வையிலும் , எழுத்தாளனை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சாரு சொன்னது கலாப்ரியாவுக்கு சாதகமானதுதான் என்பதை வண்ணதாசன் உணர வேண்டும்.


சில பதிப்பகங்கள் எழுத்தாளர்களை உரிய கவுரவத்துடன் நடத்தாததாலும் தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ராயல்ட்டியை கேட்டால் , அவர்களை பிச்சைக்காரர்கள் போல நடத்துவதாலும் எழுத்தாளர்கள் அந்த பதிப்பகங்களை விட்டு விலகுகின்றன். இதனால் அந்த பதிப்பகங்கள், வாட்சப் வீரர்களின் மெசேஜ்கள் , முகநூல் பதிவுகள் , முதிர்ச்சி அற்ற எழுத்துகள் போன்றவற்றை எந்த பிழை திருத்தமும் இன்றி வெளியிட்டு இலக்கியப்பணி ஆற்றுகின்றன. இவற்றை அவரவர்களின் நண்பர்கள் வாங்கிப் படிக்கின்றனர்

பொதுவான வாசகன் , இளைஞன் இதனால் மனவிலக்கம் அடைந்து ஆங்கில நூல்கள்பால் செல்கிறான். அவர்கள் எதிர்பார்க்கும் தரம் தமிழில் இருப்பதில்லை. உள்ளடக்கத்தை விடுங்கள்.. பிழையற்ற வாக்கியத்தைக் காண்பதே துர்லபமாக இருக்கிறது

தமிழ் வாசிப்பு என்பது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் வழக்கம் என்றாகி வருகிறது.  வணிக இதழ்களைக்கூட இன்றைய பள்ளி , கல்லூரி மாணவன் சீந்துவதில்லை

அராத்து போன்ற சில எழுத்தாளர்கள் தமது நூல்களை எழுதுவதற்கு செலவிடும் நேரத்தை விட , அவற்றை செப்பனிட அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஈகோ பாராமல் மெனக்கெடுகிறார்கள். ஜீரோ டிகிரி பதிப்பகம் போன்ற சிலர் தரமான கட்டமைப்பில் நூல்களை வெளியிடுகின்றனர்.  ராயல்ட்டியில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்கின்றனர்.
இவர்களின் நூல்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்

இணையகூச்சல்களுக்கிடையே வேனல் போன்ற தரமான ஆக்கங்கள் இளைஞனை எட்டுவதில்லை. அப்படி அனைவரையும் அடைவது தமிழுக்கு நல்லது என்பதைத்தான் சாரு சொன்னார்; அதற்கு நூலில் கட்டுமானமும் அவசியம்.  நூலில் இலக்கிய மதிப்புக்கு அதன் உள்ளடக்கமே போதும். ஆனால் பரவலாக வாசகனை அடைய நூல்,வடிவமும் முக்கியம்
இதில் ,வண்ணதாசன் சாதீய நிலைப்பாடு எடுத்திருப்பது நல்லதுதான்.

தமிழ்ச்சாதி , எழுத்தாளன் சாதி என்ற சாதீய சார்பு எடுத்து , சாருவுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பம்






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா