Monday, March 23, 2020

எம்"கே யும் வினோபாவும்,.. ஜெயமோகன் கதையை முன்வைத்து


அமுதசுரபி இதழில் இந்திரா
பார்த்தசாரதியின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது

என்ற குறளை அழகாக விளக்கிய கட்டுரை


இது அதிகம் கேட்டிராத குறள்..

உடனடியாக புரிந்து விடாத குறளும்கூட

புகழின் வளர்ச்சியால் அன்றாட சராசரி வாழ்வை கெடுத்துக கொள்ளலும் , சராசரி வாழ்வு முடிந்து மரணமடையும்போது , அத்துடன் மறைந்துவிடாமல் புகழ் ஒளி என்றென்றும் ஒளி வீசுதலும் வித்தகர்களுக்கு மட்டுமே உரியது என்பது இதன் மேலோட்டமான பொருள்.,பலர் பல விதமாக இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர்

அன்றாட வாழ்வில் கவனம் செலுத்தி அதில் பெரு வெற்றி பெற்றவன் , சாகும்போது ஏனைய புழுக்கள் , விலங்குகள் போல மண்ணோடு மண்ணாகிறான். வித்தகர்கள் தமது,அன்றாட வாழ்வை சிதைத்துக் கொண்டாலும் அவர்களின் மரணத்துக்குப்பின் வாழ ஆரம்பிக்கின்றனர்;

இதை மார்ச் இதழில் படித்து,மனதை பறிகொடுத்து அதைப்,பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்

அப்போதுதான் ஜெயமோபாகனின் எண்ண,எண்ணக் குறைவது கதையை படித்தேன்.

அந்த குறளுக்கும் கதைக்குமான ஒற்றுமை ஆச்சர்யப்படுத்தியது

அந்த கதையில் பல அழகான தருணங்கள். 


உதாரணமாக இந்த,வரி
ஐம்பது வயதில்கூட நமக்கு எதிர்காலமே நமது மெய்யான ஆற்றல்கள் வெளிப்படும் இடம், நமது சாதனைகள் நிகழும் களம் என்று தோன்றுகிறது

வருங்காலத்தில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து எல்லாமே மாறப்போகிறது என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைக்கிறது. 

ஆனால் விரும்பியது அனைத்தும் கிடைத்தாலும் மனதின் நிறைவின்மை மாறுவதில்லை. நிறைவு எப்போதும் எதிர்காலத்தில் எங்கோ இருக்கிறது

கடைசியில் எதற்கோ ஆசைப்பட்டு,வாழக்கையை வீணடித்த வெறுமை தோன்றுகிறது

இந்த கதையில் அந்த குறளில் வரும் வித்தகர் ஒருவரின் கடைசி நாள் காட்சி வருகிறது
   சக்தி மிகுந்த இளமைப்பருவத்தில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தன் ஆற்றலை செலவழிக்கிறார். ஒரு சராசரி மனிதன் பார்வையில் அவர் தன் வாழ்வை சிறுக சிறுக அழித்துக் கொள்வதாகவே தோன்றும்

அனைத்தும் நிறைவேறிய பின் அவர் எடுக்கும் முடிவு,சராசரி மனதால் தற்கொலை என்றே கருதப்படும்

எதிர்காலத்தில் மட்டுமே, எண்ணங்களாலும் கனவுகளாலும் வாழும் மக்களுக்கு வித்தகனின் வாழ்வு கிறுக்குத்தனமாக தோன்றலாம். அவனது மரணம் அதிர்ச்சி அளிக்கலாம்

எனக்கு வெகு மங்கலாகநினைவு தெரிந்த சின்ன வயதில் , பேப்பரில் பெரியவர்கள் ஏதோ பரபரப்பாக படித்து,விவாதித்த காட்சி நினைவுக்கு வருகிறது.;

இந்திரா காந்தியே கெஞ்சியும் கேட்க,மாட்டேங்கறார். சாப்பிட மறுக்கிறார் என கவலையுடன் பேசிக் கொண்டனர். கிழிஞ்ச சட்டையை பயன்படுத்துவது முட்டாள்தனமில்லையா. தூக்கிப்,போட்ருவோம்ல. அந்த மாதிரி வயசாகி தளரந்த உடம்ப தூக்கிப் போட்றனும்னு நினைக்கிறாரு என வினோபா பாவேயின் மரண உபவாசம்
குறித்து சுருக்கமாக சொன்னார் என் தந்தை

இந்த கதையை படிக்கையில் வினோபாவின் வாழ்வும்,மரணமும் இன்னும் துலக்கமாக
புரிந்தது


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா