Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Sunday, March 17, 2019

வலைச்சரம் சீனா இயற்கை எய்தினார்- அஞ்சலி

இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும் என நம்பிய , அதற்காக முயற்சிகளை செய்தவர்களுள் முக்கியமான ஒருவர் , சீனா என பரவலாக அறியப்பட்ட சிதம்பரம் அவர்கள்

வலைச்சரம் என்ற வலைப்பூ மூலம் பல வலைப்பதிவர்களை அறிமுகம் செய்தார்.. வலைப்பதிவர்களுக்கிடையே நல்லதோர் உறவை ஏற்படுத்தினார்

என் எழுத்துகளையும் படித்து இருக்கிறார் என்பதை பெருமையாக நினைக்கிறேன்.. அவருடன் பேசியது என் பெரும் பேறு...

அவருடன் பேசும்போதே எனக்கு அவர் உயர்வு தெரியும் என்பதால் அந்த உரையாடல்களை முழுமையாகவும் கவனமாகவும் பயன்படுத்திக்கொண்டேன்..  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டோமே என்ற வருத்தம்  இல்லை

அவர் போன்றவர்கள் உருவாக்கிய மாண்புகளும் , இணைய நாகரிகமும் , இணைய நெறிறைகளும் இன்றும்கூட பலரை வழி நடத்துகிறது

கரையான் கட்டிய புற்றில் பாம்பு குடிபுகுந்தது போல , இணைய எழுத்து பிரபலமாக தொடங்கியதும் , மலினமான எழுத்துகளும் பல்கிபெருகி இணையத்துக்கான மரியாதையை குறைத்து விட்டாலும் , அவர் வழிகாட்டலால் , மீண்டும் இணைய எழுத்து புத்துயிர் பெறும் என நம்புகிறேன்

அதுதான் அவருக்கு மிகப்பெரிய அஞ்சலியாக இருக்கும் என நினைக்கிறேன்




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா