தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் என்றாலும் அவர் செய்த பணிகள் காலம் வென்று வாழும்
மூன்று முதல்வர்களுடன் பழகியவர் , தமிழ் மா நாடுகளில் முக்கிய பங்காற்றியவர் , பல நூல்கள் படைத்தவர் , பல மேடைகள் கண்டவர் , சொற்பொழிவுகள் பல ஆற்றியவர் என்பதை எல்லாம் விட , கடைசி மூச்சு வரை தமிழ்ப்பணியில் ஆர்வம் கொண்டு இருந்தார் என்பது மிகப்பெரிய விஷ்யமாகும்
ரத்த அணுக்களில் அந்த அளவு தமிழ் பற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்
கடைசி ஆண்டுகளில் கூட அவரை கூட்டங்களில் பார்க்க முடிந்தது,. அவரிடம் ஆசி பெற பலர் போட்டி போடுவார்கள்
இசை பட வாழ்ந்து புகழுடன் மறைந்த அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்


