Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, June 2, 2021

ஓர் ஆவி ஆராய்ச்சி :)

 அறிவியலின் சுவாரஸ்யம் என்னவென்றால் சில அடிப்படையான விஷயங்கள்கூட நமக்குத் தெரியாது.  அது தெரியாது என்பதே எப்போதாவதுதான் தெரியும்

உதாரணமாக தண்ணீர் எந்த வெப்பநிலையில் ஆவியாகும் ?

  பலர் 100 டிகிரி செல்சியஸ் என்பர்.  

கொதிநிலை என்பது வேறு ,  ஆவியாதல் என்பது வேறு 

தண்ணீர் 100 டிகிரியில் கொதிக்க  ஆரம்பிக்கும்,,கொதித்து ஆவியாகும் அதற்குமேல்  என்னதான் சூடாக்கினாலும் வெப்பநிலை உயராது.    ( மலைகளில் இதை விட குறைந்த வெப்பநிலையில் கொதிக்க ஆரம்பிக்கும்.  சாதாரண வளி மண்டல அழுத்தத்தைவிட அதிக அழுத்தம் இருந்தால்   100 டிகிரியைவிட அதிக வெப்பநிலையில் கொதிக்கும்  − உதாரணம், , பிரஷர் குக்கர்  120 டிகிரி வரை தண்ணீர் தாக்குப்பிடிக்கும்)

ஆனால் ஆவியாதலுக்கு  அவ்வளவு வெப்பம் தேவையில்லை..   கொதிக்காமலேயேகூட  தண்ணீர் ஆவியாகலாம்்

கீழே சிந்திக்கிடக்கும் தண்ணீர் , தரை வெப்பத்தை பயன்படுத்தியேகூட ஆவியாகும்.  நமது உடல் வெப்பத்தை பயன்படுத்தியேகூட வியர்வை ஆவியாகிவிடும்

காற்றோட்டம் ,  தண்ணீரின் பரப்பளவு ,காற்றின்  ஈரப்பதம் , வெப்பம் ஆகியவை ஆவியாதலை தீர்மானிக்கினறன

மின்விசிறி சுழன்றால் துணி எளிதில் உலர்கிறது.  காரணம் காற்றோட்டம்

ஒரு குவளையில் இருக்கும் நீர் ஆவியாவதற்கு பல நாட்கள் ஆகும்.  அதே தரையில் கொட்டினால்  ( மண் தரை அல்ல ) உடனே உலரும்.   காரணம் பரப்பளவு


மழைக்காலங்களில் துணி உலர அதிக நேரம் ஆகிறது.  காரணம் காற்றின் ஈரப்பதம்

வெயிலில் உலர்த்தினால் அந்த வெப்பத்தில் விரைவாக உலர்கிறது


    கொதிநிலை ,  ஆவியாதலுக்கு இடையேயான வித்தியாசத்தை குழந்தைகளுடன் பேசுங்கள்;

     கொதிக்கும்போது ஆவியாகும்  ஆனால் அனைத்து ஆவியாதலுக்கும் கொதிப்பு தேவையில்லை






Sunday, December 20, 2020

இயற்கை இனிதா கொடிதா ?

 பரணில் குவிக்கப்பட்ட பழைய பொருட்களை சுத்தம் செய்தல் சுவாரஸ்யமான பணி.

பழைய பொக்கிஷங்கள் , அந்தக்காலத்தில் நடத்திய கையெழுத்துப்பிரதி , கடிதங்கள் என எவ்வளவோ கிடைக்கும்

அப்படி சுத்தம் செய்தபோது திடீரென ஓர் எலியைப் பார்த்து திடுக்கிட்டேன்.  விரட்டினாலும் அது ஓடவில்லை.

கடைசியாக துரத்தியாயிற்று

பிறகுதான் அவ்வெலியி


ன் பரிதவிப்புக்கான காரணம் புரிந்தது

உள்ளே சின்னஞ்சிறு எலிக்குஞ்சுகள். வெகு மென்மை. வெகு அழகு

கதகதப்பாக ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு சுருண்டு கிடந்தன.

நடக்கவோ பார்க்கவோ முடியாத புத்தம்புது பிறவிகள்


ஏராளமான உணவுப்பொருட்களை ஆண்டுதோறும் அழிக்கின்றன , நோய்க்கிருமிகளை பரப்புகின்றன , நோய்களை உருவாக்குகின்றன என மனிதனின் எதிரியாக உள்ளன.  ஆனால் இயற்கையைப் பொருத்தவரை அதற்கும் எலியும் ஒன்றுதான்  மனிதனும் ஒன்றுதான்

மனிதனைப்படைப்பது போன்ற கவனத்துடன்தான் எலியையும் இயற்கை படைத்துள்ளது

       பறவைகள் பூனைகள் போன்றவைகளுக்கு உணவாகும் பொருட்டு படைக்கப்பட்டவை எலிகள் இன்று பறவைகள் குறைவு. கட்டட நெரிசல்களில் வாழும் எலிகளை பிற உயிரிகள் உணவாக்குவது கடினம்.

உணவுச்சங்கிலி  உடைந்து இயற்கை சமநிலை பிறழ்ந்துவிட்டது.   இதில் எலிகளின் பிழை ஏதும் இல்லை


எலிப்பொறிகள் , விஷ மருந்து என பல வகைகளில் அவை கொல்லப்படுகின்றன

மனிதன் தலையிடாதவரை இயற்கை அழகுதான்








Wednesday, August 26, 2020

வினோதமான அறிவியல் கேள்விகள்

 திடீரென பூமி தன் சுழற்சியை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்


90% ஒளியின் வேகத்தில் ஒரு பந்தை எறிந்தால் என்னாகும் 

உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரே நேரத்தில் லேசர் ஒளியை நிலவின் மீது பாய்ச்சினால் அதன் நிறம் மாறுமா



தனிம ஆவர்த்த அட்டவணையில் இருக்கும் தனிமங்களால் உருவான செங்கற்களை பயன்படுத்தி தனிம ஆவர்த்த அட்டவணையைப் போலவே ஒரு சுவர் கட்டினால் என்ன நடக்கும்;


உலகின் அ னைத்து மக்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் ஒரு குதித்தால் என்ன நடக்கும்


திடீரென அனைத்து  மனிதர்களும் ஒரே நேரத்தில் அழிந்துவிட்டால் , மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளி மூலங்கள் அணைவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்

கீழ் நோக்கி துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் எதிர்விசையை பயன்படுத்தி பறக்க முடியுமா

நொடிக்கு ஒரு அடி என்ற வேகத்தில் பறக்க ஆரம்பித்தால் நம் மரணம் எப்படி நிகழும்


இண்டர்நெட் இயங்க எவ்வளவு இடம் தேவைப்படுகிறது


பறக்கும் துப்பாக்கி குண்டை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்


ஒரு பந்தை எவ்வளவு வேகத்தில் அடித்தால் அது கோல்கீப்பரைத் 


தள்ளிக்,கொண்டுபோய் அவருடன் சேர்ந்து கோலில் விழும்


உலகில் அனைவரும் தம்மை இரு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் ஜலதோஷத்தை உலகினின்று ஒழித்துவிடலாகுமா 


திடீரென நம் உடலின் டிஎன்ஏ மறைந்துவிட்டால் என்ன ஆகும்


தேநீரை அதிவேகமாக கலக்குவதன் மூலம் அதை சூடாக்க முடியுமா


இது போன்ற பல சுவையான கேள்விகளையும் பதில்களையும் ஒர் ஆங்கில நூலில் படித்தேன்


பதிலை யோசியுங்கள்...






Tuesday, April 7, 2020

சோப்பின் நட்பால் பிழைக்கும் நம் உயிர்


சோப் குறித்தும் அது எப்படி வேலை செய்கிறது என்பதையும் பள்ளியில் படித்திருப்போம். மறந்திருப்போம்

சோப் போட்டு கை கழுவுஙககள் என்கிறாரகள்..  சும்மா கை கழுவினால் போதாதா ? போதாது

ஏன் ?

எண்ணெயும் தண்ணீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காதல்லவா

ஒரு குடுவையில் இரண்டையும் ஊற்றினால் தண்ணீர் மீது அடுக்கி வைத்ததுபோல எண்ணைய் மிதக்கும்.

சோப்புக்கரைசலை ஊற்றினால் இரண்டும் கலந்து விடும்

எப்படி நடக்கிறது



சோப்பின் மூலக்கூறை ஒரு சின்ன புழுவாக உருவகித்துக கொள்ளுங்கள். அதன் தலைப்பகுதி தண்ணீரை நேசிக்கும். வால்ப்பகுதி தண்ணீரை வெறுக்கும்

தண்ணீரை வெறுக்கும்பகுதி எண்ணெயுடனும் நேசிக்கும்பகுதி தண்ணீருடனும் சேரும். இப்படியாக இரண்டையும் சோப்புக்கரைசல் இணைக்கிறது

எண்ணெய் படிந்த கையை தண்ணீரில் கழுவினால் எண்ணெய் போகாது. காரணம் அவற்றின் மூலக்கூறுகளுக்கு தண்ணீரைப் பிடிக்காது. எனவே தண்ணீரில் கரைந்து வெளியேறாது. கையில் மண் இருந்தால் தண்ணீரில் கழுவினால் போய் விடும். மண் மூலக்கூறுகள் தண்ணீரின் நண்பர்கள்

எண்ணெய் படிந்த கரத்தை சோப்பில் கழுவும்போது , சோப் மூலக்கூறின் தலை எணணையைப் பிடித்துக கொள்கிறது..  இப்போது தண்ணீரால் கழுவினால் வால்ப்பகுதி தண்ணீருடன் அடித்துச் செல்லப்படும்போது , தலையையும் அது,கவ்வியுள்ள எண்ணெயையும் இழுத்துச் செல்கிறது. கை சுத்தமாகிறது

இதனால்தான் சோப்பு போட்டு கை கழுவச் சொல்கிறார்கள்

இரு தரப்பினருடனும் நட்பு பாராட்டும் சோப்பின் தன்மை  நம் உயிர் காக்கிறது

Thursday, September 26, 2019

கால் வடிவில் "அது"" . காட்டைக்காக்கும் பூச்சி

கறுப்பு வண்ணஉடலுடன் மஞ்சள் புள்ளிகளுடன் ஊரந்து செல்லும் இப்பூச்சி சிறுவர்களுக்கு ஆர்வமூட்டும் உயிரியாகும். தொட்டால் சுருண்டு கொள்வது சிறுவர்களுக்கு வேடிக்கையாக  இருக்கும். ஆபத்தற்ற பூச்சி என்பதால் பெரும்பாலானோர் இதை கொல்வதில்லை.. ம
கீழே கிடக்கும் இலைதழைகளை தின்று அவற்றை இயற்கை உரமாக்குவதால் இவை நன்மை செய்யும் உயிரியாக கருதப்படுகிறது.. காட்டின் 50% தாவர குப்பைகளை காலி செய்பவை இவைதான். அவற்றை தின்று உரமாக்கி, மண்ணுக்களிக்கின்றன
காடுகளின் அழிவின்மைக்கு  இந்த பூச்சிகளும் காரணமாகும். இவை அழியின் வனங்கள் பாதிப்படையும். ஆனால் அவற்றுக்கு எதிரிகள் அதிகம் இல்லை என்பதால் இவை அழியும் வாய்ப்புகள் குறைவு..  ஏதேனும் சிறுபூச்சிகள் இவற்றை தாக்க முயன்றால் ஹைட்ரஜன் சயனைட் விஷத்தை வெளியேற்றி அவற்றை கொன்றுவிடும்.  பெரிய விலங்குகளுக்கோ மனிதனுக்கோ இந்த விஷத்தால் எந்த அபாயமும் இல்லை
பெண் பூச்சிக்கு 32 கால்கள்.. ஆண் பூச்சிக்கு 32கால்கள் போல தோன்றினாலும் 31 மட்டுமே கால்கள். ஒன்று கால் இல்லை. இனப்பெருக்க உறுப்பு
இந்த பூச்சி குறித்து நம் பழைய இலக்கியங்களில் எந்த குறிப்புகளும் இல்லை. காரணம் இவை நம் நாட்டு பூச்சி இல்லை

அதனால் நல்ல தமிழ்ப்பெயர் இதற்கு இல்லை. ரயில் பூச்சி. அட்டைப்பூச்சி என பேச்சுவழக்கில் அழைக்கிறார்கள்


Wednesday, June 19, 2019

உண்மையான் வெப்பமும் உணரும் வெப்பமும் - அறிவியல்


கோடைக்காலத்திலேயே கூட சில நாட்கள் ஓரளவு வெப்பம் குறைவாக இருப்பதாக தோன்றும்.. சில நாட்கள் புழுக்கமாக இருக்கும்.

ஏன் ?

38 டிகிரி வெப்ப நிலைதான் இருப்பதாக சொல்கிறார்கள் . ஆனால் ஏன் இந்த மாற்றத்தை உணர்கிறோம்

வெப்ப மானியில் காட்டும் அளவைத்தான் பேப்பரில் பார்க்கிறோம்.. ஆனால் இது மட்டுமே போதுமானது அல்ல.

பொது இடங்கள் சிலவற்றில் டிஜிட்டலில் வெப்ப நிலையை பார்க்கும் வசதி உண்டு.. வெப்ப நிலை , காற்றின் ஈரப்பதம் , காற்றின் வேகம் .. இவையும் தெரியும்

இம்மூன்றும் சேர்ந்துதான் , நாம் எவ்வளவு வெப்பத்தை உணர்கிறோம் என்பதை தீர்மானிக்கும்

உதாரணமாக ,   நான் இதை டைப் செய்யும்போது  , வெப்ப மானியில் தெரியும் வெப்ப நிலை 36 டிகிரி செல்சியஸ்.. காற்றின் வேகம் 19 கிமீ / மணி
 காற்றின் ஈரப்பதம் 45 %

இப்படி இருந்தால் நான் உணரும் வெப்பம்  37.5 டிகிரி

அதாவது வெப்ப மானி காட்டும் அளவை விட அதிக வெப்ப நிலையை உணர்கிறேன்

காற்று சற்று நன்றாக வீசும் இடத்தில் குறைவான வெப்பத்தை உணர்வார்கள்

  நாகர் கோயில் போன்ற ஊர்களில் வெப்ப நிலை குறைவு,, காற்றின் வேகம் அதிகம்.. எனவே சென்னையை விட வெப்பம் மிகவும் குறைவு

சில  ஊர்களில் காற்றின் ஈரப்பதம் குறைவு..அதனால் அங்கும் ஒப்பீட்டளவில் சென்னையை விட நன்றாக இருக்கும்

ஈரப்பதத்தை ஏன் சத விகிதத்தில் குறிப்பிடுகிறார்கள்?

30% ஈரப்பதம் என்றால் இன்னும் 70% இடம் காலியாக இருக்கிறது என பொருள்

ஈரப்பதம் அதிகரிக்க அதிகரிக்க புழுக்கம் அதிகரிக்கும்.. ஓரளவுக்கு மேல் காற்றால் அவ்வளவு ஈரத்தை தாங்க முடியாத நிலையில் மழை பெய்கிறது

புழுக்கமா இருக்கு.. மழை பெய்யும்போல என நம் ஆட்கள் இப்படிதான் கணிக்கிறார்கள்

நம்மை விட எறும்புகள் , பறவைகள் போன்றவை இப்படி மழையை கணித்து முன்னேற்பாடுகள் செய்து கொள்கின்றன


 

Friday, May 31, 2019

மேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்

வரலாறு என்பது ஒரு குப்பை என்பார் ஹென்றி ஃபோர்டு

உண்மைதான்,, வரலாறு என நாம் படிப்பவை எல்லாம் , யாராவது  ஒரு சாரார் அவர் பார்வையில் இருந்து சொல்லும் கற்பனையைத்தான்

உதாரணமாக , சீனா இந்தியா மீது படையெடுத்து நட்பு துரோகம் செய்தது.. என படித்துள்ளோம்

அப்படி எல்லாம் இல்லை..  வல்லரசுகளுக்கு ஆதரவாக நாம் செயல்பட்டதால் தனது பாதுகாப்புக்காக சீனா படையெடுத்தது.. வெற்றி பெற்றாலும்கூட , அப்பாவியை துன்புறுத்தவேண்டாம் என அதுவாகவே பின் வாங்கி விட்டது என்கிறார்கள் சில கம்யூனிஸ்ட்கள்...

எனவே வரலாறு என்பதை நம்ப முடியாது

சர் ஐசக் நியூட்டன் மிகப்பெரிய அறிவியல் மேதை என படித்திருப்போம்

ஹூக் விதி என  லேசாக படித்திருப்போம்

உண்மையில் ராபர்ட் ஹூக்தான் மிகப்பெரிய  மேதை

பெண்டுலம் கடிகாரம் , நுண்ணோக்கி , ஹெலிகாப்டர் , வானியல் , பூமியின் சுழற்சி , ஒளியியல் போன்ற பலவற்றில் கில்லாடி

ஆனால் பொறாமை காரணமாக இவரது பல ஆய்வு பேப்பர்களை நியூட்டன் இருட்டடிப்பு செய்து விட்டார்.. இவரது பல கண்டு பிடிப்புகளை தன் பெயரில் வெளியிட்டுக்கொண்ட்டார் நியூட்டன்

 நாம் மேதை என நினைப்பவர் இப்ப்படி அற்பத்தனமாக நடந்துள்ளார்

அதுகூட பரவாயில்லை... எத்தனையோ அரிய கண்டுபிடிப்புகள் வெளிசத்த்துக்கு வராமல் மறைந்தே போய் விட்டன

வானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு

சூரியனில் இருந்து ஒவ்வொரு கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை வானியல் அலகு என்பதை வைத்து சொல்லுகிறார்கள்

வானியல் அலகு என்றால் என்ன?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம்தான் வானியல் அலகு..

இதன் மதிப்பு ஒன்று.. 

ஆகவே ஒன்றை விட அதிகமான வானியல் அலகு என்றால் , பூமியை விட அதிக தூரத்தில் அந்த கிரகம் இருக்கிறது என அறியலாம்

ஒரு வானியல் அலகு = 93 மில்லியன் மைல் / 150 மில்லியன் கிலோ மீட்டர்

புதன் - சூரியன் தூரம் - .387 வானியல் அலகு   .387 AU

வெள்ளி ---   0.722

பூமி  ----        1

செவ்வாய் - 1.52

வியாழன்     - 5.2

சனி  - 9.58

யுரெனஸ்   - 19.2
 

நெப்டியூன் -- 30.1

சரி.. இதை எளிதாக நினைவில் கொள்வது எப்படி ?

ஸ்மார்ட் போனில் கூகிள் செய்வது எளிதுதான் என்றாலும் , இந்த தூரங்களுக்குள் இருக்கும் ஒரு பேட்டர்னை கண்டு பிடித்தவர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு விளக்கம்

0  3  6   12   24

இதை நினைவில் கொள்ளுங்கள்

இவற்றுடன் நான்கை கூட்டி , 10 ஆல் வகுத்து விடுங்கள்

 நமக்கு கிடைப்பது

0.4   0.7  1    1.6    5.2   10   19.6     38


கிட்டத்த்ட்ட தூரங்கள் மேட்ச் ஆகின்றவா அல்லவா

பார்ப்பதற்கு ஒழுங்கினமை போல தெரிந்தாலும் அவற்றுக்குள் ஓர் ஒழுங்கு இருப்பது ஆச்சர்யம்

யார் இப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதுதானே மனித இனத்தின் இடை விடாத தேடல் !!


Sunday, May 26, 2019

நோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்

Murray Gell-Mann at the World Economic Forum Annual Meeting, 2012. Wikipedia

ஒரு பொருளை சின்னதாக உடைத்தால் அதன் மிகச்சிறிய பகுதி அணு என்பது பலருக்கு தெரியும்..

அணு என்பது மிக சிறியது என்றாலும் அதை விட சிறியது எலக்டாரான் , ப்ரோட்டான் ந்யூட்ரான் என்பதும் தெரியும்

ப்ரோட்டானையும் விட சிறியது இருக்கிறது ...

அதைப்பற்றி பேசும் நுண் அறிவியலில் முக்கியமான  விஞ்ஞானிகளில் ஒருவர் முரே ஜெல் மேன்..

யூத இனத்தை சார்ந்த வந்தேறியான இவர் அமெரிக்காவில் பிறந்தார்.. 24.05.2019 அன்று இருந்தார்

அணுவை விட சின்ன துகளை க்வார்க் என்கிறார்கள்.. இந்த பெயரை சூட்டியவர் இவர்தான்

அடுத்த முறை க்வாண்டம் அறிவியல் நூல்களை படிக்கையில் க்வார்க் என்ற பெயரை பார்க்கும்போது இவரை நினைத்துக்கொள்ளுங்கள்

அவரது ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்

ஆள் கலகலப்பானவர்.. சற்றே திமிர் பிடித்தவரோ என எண்ண வைப்பவர்

என்னால் அதிக தூரத்தை பார்க்க முடிகிறது.. காரணம் நான் என் முன்னோர்களின் தோள்களில் நின்று உலகை பார்க்கிறேன் என சிலர் அடக்கமாக சொல்வதுண்டு

இவர் சொல்வது வேறு.. என்னால் மற்றவர்களை விட அதிக தூரத்தை பார்க்க முடிகிறது.. காரணம் மற்றவர்களை விட நான் உயரமானவன்

ஒருவர் புகழுக்கு அவர் பேச்சு அல்ல.. செயலே அளவுகோல் என்ற குறள் விதியின் படி , இவர் தன் ஆய்வுகளால் ஆராய்ச்சிகளால் நினைவுகூரப்படுவார்


பல நூல்களும் எழுதியுள்ளார்

சார். உங்க புக் படிச்சேன்.. அப்படியே விறுவிறுப்பா இருந்துச்சு.. கொஞ்சம்கூட போரடிக்கல என யாராவது என்னிடம் சொன்னால் , அவனுக்கு அல்லது அவளுக்கு அந்த புத்தகம் புரியவில்லை போல என எண்ணிக்கொள்வேன் என்பார் இந்த மேதை

Tuesday, May 21, 2019

பழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்


ஒரு கிலோ என்பதன் வரையறை மாறி விட்டது என சென்ற பதிவில் பார்த்தோம்.. அப்படி என்றால் இனி பழைய எடை கற்கள் செல்லாதா என்றால் அப்படி அல்ல..  பழைய எடைகள் மாறாது.. ஆனால் வரையறை மாறிவிட்டது


ஒரு கிலோ வெங்காயம் வாங்குகிறோம்.. அது ஒரு கிலோதான் என்பதை கடைக்காரரின் ஒரு கிலோ கல் மூலம் உறுதி செய்கிறோம்.. அவரது கல் ஒரு கிலோதானா என்பதை உறுதி செய்ய ஆய்வுச்சாலைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஒரு கிலோ கல்லுடன் ஒப்பிட்டு அறியலாம்..

கடையில் இருக்கும் எடை கல் காலப்போக்கில் எடை குறைந்து விடும் என்பதால் , அதை சோதிக்க ஆய்வுச்சாலைகளில் மாதிரி எடைக்கல் இருக்கும்..

ஆய்வுச்சாலைகளில் இருக்கும் எடைக்கல்லை சோதிக்க , அவற்றை விட இன்னும் பாதுகாப்பான் ஆய்வுச்சாலைகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் தலைமையகம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது.. அங்கிருக்கும் கல் ஒரு கிலோ என எதைக்காட்டுகிறதோ அதுதான் உலகமெல்லாம் ஒரு கிலோ

இப்படித்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேல் இருந்தது

ஆனால் அந்த கல் திருடப்பட்டால் ,.அல்லது எடை குறைந்தால் , கூடினால் என்ன ஆவது?

எனவே பழைய முறையை மாற்றி , இனி பிளாங்க் மாறிலியை அடிப்படையாக கொண்டு எடையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளனர்


இதன் மதிப்பு 6.626 069… × 10–34    
 அலகு ஜூல்ஸ் செகண்ட்

இதன் மதிப்பு எடை , மீட்டர் மற்றும் நொடி ஆகியவற்றை சார்ந்தது


மீட்டர் என்பதை ஒளி குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் தூரம் என துல்லியமான வரையறை செய்துள்ளார்கள்


ஒரு நொடி என்பதை சீசியம் அணுவை வைத்து அணு கடிகாரத்தை பொறுத்து துல்லியமாக வரையறுது விட்டனர்


மீட்டர் தெரியும்..  நொடி தெரியும்... பிளாங்க் மாறிலியும் தெரியும்.. எனவே மிச்சம் இருக்கும் எடையை சுலபமாக கண்டு பிடிக்கலாம்


மீட்டரோ , நொடியோ மாறப்போவதில்லை என்பதால் , கிலோ என்பதும் என்றைக்கும் மாறபோவதில்லை.. ஒவ்வொரு முறையும் ஃபிரான்சுக்கு சென்று சோதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதே புதிய வரை முறையின் அனுகூலம்



இனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது

ஒரு கிலோ என்பதை எப்படி நிர்ணயிக்கிறே ாம் ?  கடைககாரரிடம் இருக்கும்  ஒரு கி ே லா எடைக்கல் ஒரு கி ே லா என நினைககி ே றாம்... 
அந்த கல்லின்  எடை சரி தா னா என அவர்கள் அவ்வப் ே பாது  செக் செய்யவேண்டும்...
இதற்கு என  சோதனை நிறுவனங்கள் உண்டு    அவர்கள்  தம்மிடம் உள்ள எடைக்கல்லுடன் ஒப்பிடுவர்
அதை சோதிக்க மாநில அளவில் தேசிய அளவில்  அமைப்புகள்,,உண்டு..,,எல்லாவற்றுக்கும் தலைமையகம், பிரான்சில் உள்ளது.,,அங்கு ஆய்வகத்தில் பாதூகாப்பாக இருக்கும் ஒரு கிலோ கல்தான்  ஒரு கிலோ என்பதற்கான அளவுகோல்
கடந்த,நூறு ஆண்டுகளாக இருந்த இந்த வரையறை தற்போது மாற்றப்பட்டுள்ளது
இனி பிளாங்க்,மாறிலி என்பதை அடிப்படையாக வைத்து கிலோ வரையறுக்கப்படும் (6.626x10 -34)


ஒரு கிலோ கல்

Wednesday, February 20, 2019

எலி இனம் அழிந்தது- ஆஸ்திரேலியாவில் தேசிய துக்கம்


ஒரு கையடக்க உயிர் ஒன்று நம்மை நம்பி வாழ் முடியலைனா நாமெல்லாம் என்ன மனுஷங்க என 2.0 படத்தில் பக்‌ஷிராஜன் கண்ணீர் மல்க கேட்பார்

நம் கிட்டத்தட்ட குருவிகளை அழித்து விட்டோம்., பல்வேறு தானிய வகைகள் அழிந்து விட்டன... எத்தனை உயிர்கள் அழிந்து வருகின்றன என எந்த கணக்கீடும் இங்கே இல்லை

ஆனால் வளர்ந்த நாடுகளில் ஓரளவு நிலை பரவாயில்லை... பாதுகாக்க முயல்கின்றனர்

ஆனால் அங்குமேகூட அலட்சியத்தால் பல உயிரிகள் அழிகின்றன
The extinction of the Bramble Cay melomys is understood to be the first mammal killed off by human-led climate change.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் படத்தில் இருக்கும் எலி இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்த நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இது தேசிய துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம என அந்த நாட்டு பிரமுகர்கள் கூறுகின்றனர்

அழிந்து வரும் உயிரிகள் பட்டியலில் அது இருந்தபோது , அதை பாதுகாக்க என்ன செய்யலாம் என ஆராய ஒரு கமிட்டி அமைத்தனர்.. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் , காலம் காலமாக வாழ்ந்த உயிரின வகை நம் தலைமுறையில் அழிந்து விட்டது என சோகமாக கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்

சுற்றுச்சூழல் சீர் கேட்டால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவு இது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
இனியாவது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் ஸ்காட் மாரிசனை வலியுறுத்தி வருகின்றனர்

நம் ஊரில் இது குறித்தெல்லாம் எந்த அக்கறையும் யாருக்கும் இல்லை

Wednesday, February 13, 2019

கண் அடித்து காதலியை கரெக்ட் செய்யும் அரிய தவளை இனம்

Mysticellus franki showing its marbled underside and, left, its false eye spots.வெறும் ஐந்து ஆண்டுகள் முன்புவரைகூட , போரூரின் பல பகுதிகள் கீரிகளும் பாம்புகளும் இன்னும் பெயர் தெரியாத பல உயிரிகள் வாழும் காடாக இருந்தது

இன்று அந்த பகுதி மக்கள் வாழும் - அதுவும் பணக்காரர்கள் வசிக்கும் - வசதிமிகு பகுதியாகி விட்டது..அந்த உயிரிகள் இன்று இல்லை

எத்தனையோ அரிய உயிரிகள் அழிந்தனவோ யாருக்குத் தெரியும்?

நம்மிடம் இது குறித்த ஓர் அறியாமை இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஏதாவது புது வகை பாம்பைப் பார்த்தால் என்ன செய்வோம்.. பாம்பு கூட வேண்டாம்.. பழுப்பும் , ஊதாவும் கலந்த ஒரு வினோதமான வண்ணத்தில் ஒரு புழு  நெளிகிறது... என்ன செய்வோம் ?

உடனே காலில் மிதித்து கொன்று விடுவோம்.. ஒருவேளை அதுதான் அந்த இனத்தின் கடைசி பிரஜையாக இருக்கக்கூடும்..

இப்படிப்பட்ட அரிய இனங்கள் இன்னும் சில தப்பி பிழைத்து வாழ்ந்து வருகின்றன

அப்படி ஒரு அரிய தவளை இனம் கேரளா அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டெல்லி பலகலைக்கழகத்தை ஆய்வாளர்கள் சோனாலி கார்க்  மற்றும் அவரது சீனியர் எஸ் டி பிஜு ஆகியோர் இதை கண்டுபிடித்தவர்கள் ஆவர்

இந்த தவளை வெறும் நான்கு நாட்கள் மட்டுமே கண்ணில் படுகிறது..அதன் பின் எங்கோ மறைந்து ரகசிய வாழ்க்கை நடத்துகிறது..எனவே இப்படி ஒரு தவளை இருப்பதே தெரியாமல் இருந்தது

இதன் டி என் ஏ யை சோதித்துப்பார்த்ததில் இதன் மரபணு இந்திய தவளைகள் எதனுடனும் ஒத்துப்போகவில்லை... முற்றிலும் புதிய இனம்..இது போன்ற இனம் , ம்லேசியா , வியட் நாம் போன்ற   நாடுகளில்தான் இருக்கின்றன.. அந்த காலத்தில் ஆசிய பகுதிகள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுவதாக கருதுகின்றனர்

இதன் முதுகுப்புறத்தில் கண்கள் போன்ற வட்டமான இரு மச்சங்கள் இருக்கின்றன

போரிட வரும் எதிரியை குழப்ப இந்த கண் பயன்படுகிறது

தன் காதலியை கண் அடித்து கரெக்ட் செய்யவும் இந்த அமைப்பு பயன்படுகிறது...

அறிய வேண்டிய அரிய விஷயம்தான் இது

Blink and miss: Kerala’s mystery frog


Tuesday, June 10, 2014

திரையை கிழித்து பொங்கி வழிவது ஏன் ? அறிவியல் விளக்கம்


பால் பொங்குவதை நல்ல சகுனமாக பலர் கருதுவதுண்டு,,,  சினிமாக்களில் இதை சிம்பாலிக்காக பல சந்தர்ப்பங்களில் காட்டுவார்கள்..

சூடாக்கும்போது பால் ஏன் பொங்குகிறது?

பாலில் தண்ணீர் பொருட்கள் , கொழுப்பு போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன.. இதில் கொழுப்பின் கொதி நிலை மற்றவற்றைவிட குறைவு... எனவே பால் சூடாகும்போது , இந்த கொழுப்பு பொருட்கள் 50 டிகிரி செல்சியசிலேயே கொதித்து மேற்பரப்புக்கு சென்று ஒரு திரை போல மூடிக்கொள்ளும்.

மேலும் சூடாகும்போது , காற்று குமிழிகள் உருவாகி மேலே செல்ல தொடங்கும்.. ஆனால் மேலே கொழுப்பு திரை இருப்பதால் , அவை அதற்கு மேல் செல்ல முடியாது..   அந்த திரையை உடைக்க இவை முயலும்போது, அதுவரை மேலே வரதா கொழுப்பு பொருட்களும் மேலே வந்து திரையை உறுதி ஆக்கி விடும்..


வெப்ப நிலை உயர்ந்து , பாலின் கொதி நிலையைவிட அதிகமாகும் நிலையில் அனைத்து காற்று குமிழிகளும் ஒன்றாகி பேராற்றல் பெற்று கொழுப்பு திரையை தள்ளிக்கொண்டு மேலே வந்து வழியும்.. இதுதான் பால் பொங்குதல்..


பாலை தொடர்ந்து கிண்டி கொண்டே இருந்தால் , கொழுப்பு திரை அவ்வப்போது சிதைந்து விடுவதால் , காற்று குமிழிகள் அவ்வபோது சிதறி விடும்.. பொங்கி வழியும் வாய்ப்பு இல்லாமல் போய் விடும்..

ஆனால் பால் குக்கரில், இப்படி பொங்கி வழியாது? ஏன்?

பால் குக்கரின் ஓரத்தில் தண்ணீர் ஊற்றும் அமைப்பு இருக்கும்,,, அதில் தண்ணீரை ஊற்றி பாலை அடுப்பில் வைப்போம்..
அந்த ஓரத்தண்ணீர் மூலம் பால் சூடாவதால் , பால் எங்கும் சமச்சீராக வெப்பம் பாயும்.. முன்பு பார்த்தது போல ,  அடிபகுதி சூடாகி சூடான பொருட்கள் மேலே போதல் , மேலே இருந்து சூடாக பகதி கீழே வருதல் எனும் சுழற்சிக்கு இங்கு அதிக வாய்ப்பில்லை   .. ( இந்த சுழற்சிக்கு பெயர் கன்வெக்‌ஷன்)

அதேபோல , பாலின் கொதி நிலையை விட அதிக வெப்ப நிலையை நாம் கொடுக்க முடியாது,, காரணம் கொதி  நிலையை அடைந்த உடனேயே , ஓரத்தில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி விசில் அடித்து விடும்.. குக்கர் இல்லாத நிலையில் , நாம் பக்கத்தில் நின்று கவனிக்க வேண்டும்,, பால் குக்கர் நமக்காக இந்த பணியை செய்து விடுகிறது..




Monday, January 6, 2014

அறிவியல் விரும்பிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான விவாதம்

அறிவியல் வெறியர்களுக்கு..

ஒரு டம்ப்ளரில் 20 ட்கிரி செல்சியஸ் வெப்பத்தில் தண்ணீர் இருக்கிறது... அதை 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பராமரிக்கப்படும் நீர் கொண்ட ஓர் அண்டாவில் விளிம்பு வரை மூழ்க செய்கிறீர்கள்.. ( தண்ணீர் கலந்து விடக்கூடாது....முழுக்க மூழ்கடிக்க கூடாது ) ... கொஞ்ச நேரத்தில் , டம்ப்ளரின் வெப்ப நிலை உயர்ந்து 80 டிகிரி ஆகி விடும்.. ஓகேயா?

சரி... இப்போது அதே அண்டாவில் 20 டிகிரியில் நீர் பராமரிக்கப்படுகிறது... 80 டிகிரி நீர் கொண்ட டம்ப்ளரை மூழ்க செய்கிறீர்கள்... இப்போது தம்ப்ளரின் வெப்பம் குறைந்து கொஞ்ச நேரத்தில் 20 டிகிரி ஆகி விடும்..

மேற்கண்ட இரண்டு நேரங்களும் சமமாக இருக்குமா என்பதே கேள்வி

******************************************************************************************************************************

  • இலக்கியச்செம்மல் வெளங்காதவன் இருக்காது. புற வெப்பநிலை மாறுபாட்டின் காரணமாக வெப்ப ஏற்பும், இழப்பும் மாறுபடும்.
  • Nirmal Mrinzo pichai,heat transferring media is same,temperature difference is also same. so i think it takes same time
  • நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ. நம்ம வெளங்காவா இது?
  • Mithreyi Shiva வெப்பம் வெளியேற முடியாத பெட்டியின் உள் வைத்து சோதனை செய்தால் நேரம் சமமாக இருக்கும்னு அவதானிக்கிறேன். heat transfer subject naan padikkala 
  • Pichaikaaran Sgl படிக்காமயே எப்படி கருத்து சொல்றீங்க? நீங்களும் என்னை மாதிரியா 
  • Mithreyi Shiva இம்ம்கும்... எப்டி உங்கள மாதிரியா அவ்வ்.. நான் வீட்லயே சமைச்சு சாப்பிடுவேனாக்கும்.. 
  • Pichaikaaran Sgl ஓ,, நீங்க சமைச்சத நீங்க மட்டுமேதான் சாப்பிட முடியுமா.ம்ம்ம்...அதனாலதான் என்னை மாதிரியானு கேட்டேன்
  • Mithreyi Shiva க்ர்ர்ர்...
  • Parthiban Nedunchezhian It would be the same time if it's done in experimental conditions without any external interferences like what mithreyi has said!
  • Nirmal Mrinzo if external influence exist it would be also equal and common to both condition? Parthi
  • Daniel Antony சமமாக இருக்காது.நீரின் கொள்ளளவு இரண்டிலும் வேறுபடுவதால்.,வெப்ப இழப்பு நேரம்.,வெப்ப ஏற்பு நேரத்தை விட குறைவாக இருக்கும் என்பது என் அவதானிப்பு.
  • Parthiban Nedunchezhian No water levels are same in both conditions it's only the temperature which changes
  • Parthiban Nedunchezhian External conditions can never be same it changes every minute and hence I said experimental conditions where the external factors are maintained at constant levels
  • Nirmal Mrinzo யெஸ், பார்த்தி.
  • Parthiban Nedunchezhian If that water temperature in larger vessel is not constantly maintained then timing would vary but Pichu has clearly stated //வெப்பத்தில் பராமரிக்கப்படும்//
  • Nirmal Mrinzo யெஸ்,ஆனால் அடுத்த பத்தியில் அது இல்லையே?
  • Parthiban Nedunchezhian That's just a typo error I hope 
  • Parthiban Nedunchezhian ஆனா ஒன்னுபா பத்து வருஷமா ஏத்துன தொப்பையை ஆறே மாசத்துல நிறைய பேர் குறைச்சிட்டாங்க எனக்கு தெரிந்து
    January 3 at 1:19pm via mobile · Like · 2
  • Pichaikaaran Sgl கொள்கலனின் வெப்பம் சீராக பராமரிக்கப்படுவதாக அனுமானித்தே இதை அணுக வேண்டும் . இல்லையேல் பயங்கர காம்ப்ளிகேட் ஆகி விடும்
    January 3 at 1:43pm via mobile · Like · 1
  • Pichaikaaran Sgl பார்த்தி சொன்னது போல , அடுத்த பத்தியில் பராமரிக்கப்படுகிறது என்பது விட்டு போனது கவன பிழையே
    January 3 at 1:44pm via mobile · Like · 1
  • Lanza del Vasto 20 டிகிரியில் இருந்து 80 டிகிரி செலவாகும் நேரத்தை விட 80 டிகிரியில் இருந்து 20 டிகிரிக்கு குறைவான நேரமே பிடிக்கும். ( 80 டிகிரிக்கு டம்ளர் நீர் சூடாக அதை விட பெரிய அண்டா நீர் சூடாகும் நேரமும் சேர்ந்து கணக்கெடுக்க வேண்டி வரும், அதே நேரம் 20 டிகிரிக்கு சூடு இறங்க டம்ளர் நீரின் அளவு மட்டுமே கணக்கில் வரும்)..
  • Parthiban Nedunchezhian Wrong presumption. he has clearly said that larger vessel has water which is preheated to 80 degrees
    January 3 at 2:11pm via mobile · Edited · Like · 2
  • Lanza del Vasto thats right @parthiban nedunchezhian.. anyhow heating a tumbler takes more time than cooling a tumbler.. 20 - 80 took more time than 80-20..
  • Parthiban Nedunchezhian What's your explanation behind that
    January 3 at 2:23pm via mobile · Like · 3
  • Lanza del Vasto heating process took more time than the cooling process.. if it is wrong ur explanation plz.. so that my mistakes will be rectified..
  • Suba Haran சமமாகத்தானிருக்கும்.;
  • Parthiban Nedunchezhian There is nothing called cooling(ie you can't add something called cold)...it's whether you heat something or remove heat from something...similar like light and darkness( you can add light or remove light that's it can't add darkness)
  • Lanza del Vasto here debate is not bout d heating r cooling words, debate is bout d processing time of heating and heat removing. (thanks for the nice explanation bout the heating and cooling...  )
  • Pichaikaaran Sgl இப்படியெல்லாம் காலேஜ்ல விளக்கி இருந்தா , நானெல்லாம் உருப்பட்டு இருப்பேன்
    January 3 at 2:46pm via mobile · Like · 5
  • Suba Haran Pichaikaaran Sgl நானெல்லாம் உருப்பட்டு இருப்பேன்.........வாய்ப்பே இல்லை...விதி வலியது..........ஹஹஹஹ்
  • Parthiban Nedunchezhian God help me  I explained that so you can understand since it's just about heat it will take same time
    January 3 at 2:50pm via mobile · Like · 2
  • Lanza del Vasto Pichaikaaran Sgl... படிக்க போன இப்படியெல்லாம் குழப்புவாங்கன்னு தெரிஞ்சு தான்.. பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்கலியே.... 
  • Parthiban Nedunchezhian But good that we discuss such useful and informative subjects
  • Lanza del Vasto obvious parthiban... hope we may go for more n more useful and informative subjects...
  • Nirmal Mrinzo heat transfer இது கண்டக்‌ஷன் முறை,இம் முறையில் வெப்பம் கடத்துவதை மாற்றக் கூடியது;1. மீடியம் அது வெப்பத்தைக் கடத்தும் பொருள், 2. அதன் பரப்பளவு, 3. இரண்டு பெருள்களுக்கு இடையிலான வெப்ப வேறுபாடு. சரியா பிச்சை?
  • Parthiban Nedunchezhian All three points remain same in both case and hence the timing remains same 
  • Pichaikaaran Sgl கண்டக்ஷன் கன்வெக்ஷன் ரேடியஷன் என்ற மூன்று விதங்களில் வெப்ப பரிமாற்றம் நடக்கும் . நாம் பார்ப்பதில் கண்டக்ஷன் மட்டுமே
    January 3 at 3:33pm via mobile · Like · 2
  • Vinoth Kumar சமமாக இருக்காது என்று நினைக்கிறேன்
    அறை வெப்பநிலையைப் பொருத்து மாறுபடும்...
    January 3 at 4:19pm via mobile · Like · 1
  • Lanza del Vasto அட போங்கப்பா... எனக்கு தலையே சுத்துது.... (குடுத்துவச்சவன் உன் முதுக நீயே பாக்கலாம்னு பல்பு குடுக்காதீங்க...)
  • Ragu Ram Annur Devaraj Rangasamy u must answer here.....
  • Daniel Antony Externally some heat source is required to heat gain..,But like that nothing is required for heat loss..,It''ll happened naturally by heat transfer methods (Conduction,Convection,Radiation).
  • Kavin Smk சமமாக இருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் உங்கள் கூற்றுப்படி 20டிகிரி நீரை 80டிகிரி அண்டாவில் வைக்கும்போது(நெருப்பு என்ற புறக்காரணியின் தூண்டல் இருக்கிறது) மேலும் 80 டிகிரி அளவுள்ள நீரின் கொதிநிலை(Boiling point)அதிகமாக இருப்பதால் குறைந்த அளவுள்ள 20 டிகிரி வெகு...See More
  • Kavin Smk Boiling point of water: 99.98 °C
  • Nirmal Mrinzo ரொம்ப காம்ளிக்கேட்ட செய்றிங்ளோன்னு தோனுது.
  • Kavin Smk -20C உள்ள ஒரு ஐஸ்கட்டிய 80 தண்ணிலயும் 20 தண்ணிலயும் போட்டு கற்பனை பண்ணி பாருங்க..அவ்ளோதான்.(டாட்) 
  • Satheesh Jayabalan Its certainly not the same. Cooling will always take more time than the heating process. Its due to the movement of ions . When the water is heated the molecules move at higher rate and this helps in conducting heat quickly. 

    But when it gets cooled the movement of molecules are not at the same pace, hence the time difference.


Vikram Sekaran Takes SAME TIME.

These two cases resembles the heat pump and refrigerator. 


In 1st case, heat is supplied to the big vessel to maintain the vessel at 80° C. This resembles the heat pump. 

In 2nd case, heat is removed from the big vessel to maintain the vessel at 20° C. This resembles the refrigerator. 

The efficiency of these devices is denoted as COP, Coefficient of performance. It's the ratio of desired effect to the work input. 
COP = Q/W 

Desired effect is the condition or state which is to be maintained. It is the amount of heat, which is to be stored at a particular temperature. 

Work input is the heat added or removed to/from the vessel to obtain the desired effect. 

Here we need to concentrate on this work input to find solution for our problem. 

Initially, the water in a big vessel is at 80° C. When a tumbler of water at 20° C is placed inside the vessel the equilibrium of the vessel collapses. Now the tumbler and vessel becomes a "single system". Now the heat flows from the water in vessel to the water in tumbler to maintain equilibrium. During this process of equilibrium, we have to supply heat to the vessel to compensate the heat loss. This supply of heat is called work input. 

Similarly, in the 2nd case, heat in the vessel increases as it absorbs from the tumbler which is at 80° C. So heat is removed from the vessel. This heat is said to be work input. 

If both the cases consumes same amount of work input, then it takes same time. 
If we start the two processes simultaneously, after the consumption of equal amount of work input(heat), then the processes finishes at the same time.

Vikram Sekaran Here the work input is same for both the cases, and hence the same time.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா