Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Saturday, March 28, 2020

இயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்


சாலைகளில் வாகனங்கள் குறைவு,,பறவைகளின் சிறகடிப்புக்கூட துல்லியமாய்க் கேட்கிறது. தூசி குறைந்து விட்டது

இயற்கையை எப்படியெல்லாம் கதறகதற சீரழித்திருக்கிறோம் என புரிகிறது

இயற்கையிடம் மன்னிப்புக்,கேட்க வேண்டிய நேரமிது

இயற்கையை ஒரு மனிதனாக தெய்வமாக உருவகப்படுத்தினால் மன்னிப்புக் கேட்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

 சினம் கொண்ட ருத்ரனாக உருவகப்படுநாத்திக் கொள்ள விரும்புவோரக்கு ருத்ரம் ஸ்லோகங்களின் ஒரு பகுதி ..,படியுங்கள்;
.......
ருத்ரனே வணங்குகிறேன்.பகைவர்களை இரக்கமின்றி,அழிப்பவன் நீ
ன் கோபத்தில் இருந்து எங்களைக் காக்க அன்னையை இறைஞ்சுகிறோம்
கருணைமிகு சிவனே. உம் சினத்தை எம்மீது காட்டாதீர்
நாங்கள் செய்த பிழைகள் மன்னிக்கப்படட்டும்
எம்மை அழிக்க வரும் அம்புகளை,உம் வலிய"கரத்தால் தடுப்பீராக
நல்லவர்கள் அழியக்கூடாது

வலிய பாம்பு தன் எதிரிகளை அழிப்பதுபோல எமைத்தாக்க வரும் வியாதிகளை அழிப்பீராக

எதிரிகள் மீது பாயும் உம் அம்புகள் ஒரு ஃப்ளோவில் எம்மீது பாய்ந்துவிடாமல் காப்பீராக

.....

நுண்ணுயிர்கள் இன்றி,நாம் இல்லை நமது கொடுமைகளால் அவை நமக்கு எதிராக திரும்பியுள்ளன

இயற்கைதான் மிகப்பெரிய வைத்தியன். அதை நம் எதிரியாக்கி நம் குழந்தைகளை மரண வரிசையில் நிறுத்திய கொலைகாரர்களாக இருக்கிறோம்

இந்த சவாலான கால கட்டத்தை நெஞ்சுரத்துடன் சமாளிப்பது உடனடி தேவை. கற்றபாடத்தை மறக்காதிருத்தல் நிரந்தர தேவை









Monday, May 27, 2019

குளவிகளின் தாகம்


சிறிய குழியின் அடிப்பகுயில் இருந்த ஈரத்தை குளவி"ஒன்று உறிய முனைவதை கண்டேன்,    அதை சற்றே பறக்க செய்து விட்டு குழியை நீரால் நிரப்பினேன்

காத்திருந்தது போல குழியை பாய்ந்து வந்து மொய்த்தன குளவி கூட்டம்

அவற்றுக்கு இவ்வளவு தாகம்"எடுக்கும் என்பதை அறிந்த"நாள்

Wednesday, February 20, 2019

எலி இனம் அழிந்தது- ஆஸ்திரேலியாவில் தேசிய துக்கம்


ஒரு கையடக்க உயிர் ஒன்று நம்மை நம்பி வாழ் முடியலைனா நாமெல்லாம் என்ன மனுஷங்க என 2.0 படத்தில் பக்‌ஷிராஜன் கண்ணீர் மல்க கேட்பார்

நம் கிட்டத்தட்ட குருவிகளை அழித்து விட்டோம்., பல்வேறு தானிய வகைகள் அழிந்து விட்டன... எத்தனை உயிர்கள் அழிந்து வருகின்றன என எந்த கணக்கீடும் இங்கே இல்லை

ஆனால் வளர்ந்த நாடுகளில் ஓரளவு நிலை பரவாயில்லை... பாதுகாக்க முயல்கின்றனர்

ஆனால் அங்குமேகூட அலட்சியத்தால் பல உயிரிகள் அழிகின்றன
The extinction of the Bramble Cay melomys is understood to be the first mammal killed off by human-led climate change.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் படத்தில் இருக்கும் எலி இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்த நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இது தேசிய துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம என அந்த நாட்டு பிரமுகர்கள் கூறுகின்றனர்

அழிந்து வரும் உயிரிகள் பட்டியலில் அது இருந்தபோது , அதை பாதுகாக்க என்ன செய்யலாம் என ஆராய ஒரு கமிட்டி அமைத்தனர்.. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் , காலம் காலமாக வாழ்ந்த உயிரின வகை நம் தலைமுறையில் அழிந்து விட்டது என சோகமாக கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்

சுற்றுச்சூழல் சீர் கேட்டால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவு இது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
இனியாவது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் ஸ்காட் மாரிசனை வலியுறுத்தி வருகின்றனர்

நம் ஊரில் இது குறித்தெல்லாம் எந்த அக்கறையும் யாருக்கும் இல்லை

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா