Showing posts with label இலக்கணம். Show all posts
Showing posts with label இலக்கணம். Show all posts

Tuesday, August 4, 2020

கோவில் கோயில் எது சரி ?


கோவில்...  கோயில்.. இரண்டில் எது சரி என்பதில் சிலருக்கு சந்தேகம்.

எவ்வளவோ பார்த்து விட்டோம்.. இதைப்பார்க்க மாட்டோமோ.. 

வாங்க பார்த்து விடுவோம்..

தலைவனின் அரசனின் அல்லது இறைவனின்  இல்லம் என்பதுதான் கோ இல்  

   கோ மற்றும் இல் ஆகியவை சேர்ந்தால் என்ன ஆகும் என்பதே கேள்வி

இரு சொற்கள் சேர்ந்தால் உருவாகும் புது சொல் எப்படி இருக்கும் என்பதற்கு சில விதிகள் இருக்கின்றன

பூ + தொட்டி  = பூந்தொட்டி ( புது எழுத்து உருவாதல்)

மண் + வெட்டி     = மண்வெட்டி ( எந்த எழுத்தும் சேரவில்லை/ அழியவில்லை)

பனை + காய்  = பனங்காய்  ( ஐ அழிந்து , அங் என்ற சாரியை உருவானது)

இப்படி எல்லாம் பல்வேறு விதிகள் உள்ளன

கோ  இல் என்பது  எப்படி சேரும்?


கடல் .. அலை என்பது கடலலை என மாறும்..  தாய் .. அன்பு என்பது தாயன்பு என சேரும்


புள்ளி வைத்த எழுத்தை ( மெய் எழுத்து)  தொடர்ந்து இன்னொரு சொல் வரும்போது அதிக சிக்கல் இன்றி அப்படியே இணைவு நடக்கிறது

ஆனால் அடுத்து வரும் சொல் க ச ட த ப என்பதில் ஆரம்பித்தால் கவனம் தேவை
நாய் கடி   என்பது நாய்க்கடி என க் சேரும்

தாய் பாசம்   என்பது தாய்ப்பாசம் என்றாகும் 

 முதல் சொல் உயிர் எழுத்தில் முடிந்து அடுத்த சொல் உயிர் எழுத்தில் ஆரம்பித்தால் , வ் அல்லது ய் என புதிதாய் ஓர் எழுத்து சேர்ந்து , அவ்விரு சொற்களையும் சேர்த்து வைக்கும்

உதாரணமாக மொழி ;. அறிவு...    என்ற சொற்களுக்கு மத்தியில் ய் தோன்றுகிறது


மொழி  ய்  அறிவு  = மொழியறிவு

திரு  வ்  அருள்         = திருவருள் 


வ் வருமா ய் வருமா என தொல்காப்பியரிடம் கேட்டால் , அவர் இப்படி எல்லாம் திட்டவட்டமாக சொல்லக்கூடாது என்கிறார்

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே

உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்

உயிர் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்தால் , வ் ய் அன்ற எழுத்து  தோன்றும். ஆனால் இந்த எழுத்துதான் வரும் என வரையறுக்க மாட்டார்கள்

என்கிறார்

தக்காளி, அப்ப என்னதான் தீர்வு?

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி

இசையின் திரிதல் நிலைஇய பண்பே


சொற்களின் ஓசை நயத்துக்கேற்ப புது எழுத்து தோன்றும் என்கிறார்


 நன்னூல் என்ன சொல்கிறது ?


இ ஈ ஐ வழி “ய” வ்வும்

ஏனை உயிர்வழி “வ” வ்வும்

ஏமுன் இவ் இருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்


அதாவது முதல் சொல் இ ஈ ஐ என முடிந்தால் , ய் என்ற எழுத்து தோன்றும்


பள்ளி   அறை    -- பள்ளி  ய் அறை        பள்ளியறை


வாழை  இலை    ---  வாழை  ய் இலை      வாழையிலை


ஏ என்ற சொல்லில் முடிந்தால் ,  வ் ய் என இரண்டுமே வரக்கூடும்


மற்ற உயிர் எழுத்துகளில் முடிந்தால் ,வ் தோன்றும்

 

மா  இலை    மாவிலை


அளவு  அறிந்து   அளவறிந்து


இந்த விதிப்படிதான் , கோ இல் என்பதை சிலர் கோவில் என எழுதுகிறார்கள்


ஆனால் சங்க இலக்கியங்களில் கோயில் என்றே வருகிறது. .பேச்சு வழக்கில் கோயில் என்றுதான் சொல்ல முடிகிறது..   கோவிலுக்கு போகிறேன் என்பதில் இயல்பு இல்லை




மா  + இருள் என்பது இந்த விதிப்படி மாவிருள் என்றுதான் வர வேண்டும் .. ஆனால் மாயிருள் என்பதே சரியானது



அதற்கு காரணம் , இ என்ற சொல்  வந்தால் அங்கே ய் தோன்றும் என நன்னூல் சொல்வதை , இரண்டாவது சொல்லில் வைத்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர்


அதாவது  மா   + இருள் என்பதில் இரண்டாம் சொல் இ என்பதால் , அங்கே ய் தோன்றி மாயிருள் ஆகிறது


அதேபோல கோ இல் என்பது கோயில் என்றுதான் ஆகும்..


அதுமட்டுமின்றி தொல்காப்பியர் சொன்னதுபோல , இசை நயம்தான் முக்கியம் என்ற விதிப்படியும் கோயில்தான் சரி .. அதனால் சங்க நூல்களில் கோயில் என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள்


சில ஆர்வக்கோளாறு இலக்கணப்பண்டிதர்களால் , கோவில் என்பதும் பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அது தவறு என நிறுவ முடியாது.. நன்னூல் விதியின்படி கோவில்தான் சரி என்பார்கள்.


ஆனாலும் கோயில்தான் சரியான் சொல்.. யாராவது கோவில்தான் சரி என்று சொன்னால் , மையமாக புன்னகைத்து நகருங்கள்.. 






















    

Thursday, April 9, 2020

லைட்வெளிச்சம், நடுசெண்டர் இலக்கண குறிப்புகள்

தோட்டம்துரவு , கண்ணீரும்கம்பலையும்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக இன்னொரு விஷயம்

வாயும்வயிறுமாக , பாத்திரம்பண்டம் என்றெல்லாம் பேச்சு வழக்கில் கேட்கிறோம்.

ஆனால் தற்போதைய எழுத்துகளில் இவற்றை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. காரணம் பலர் இவற்றை கிராமத்து கொச்சைப் பேச்சு வழக்கு என நினைக்கிறார்கள்

உண்மையில் இப்படி இருசொற்களை இணைத்துச் சொல்வது இலக்கணத்துக்கு உட்பட்டது. ஒரு விஷயத்தை அழகுபடச் சொல்ல இது உதவுகிறது
இப்படி இணைத்து எழுவதற்கு இணைச்சொற்கள் என்று பெயர்

நேரிணை

எதிரிணை

செறியிணை

என இதில் பிரிவுகள் உண்டு

நோய்நொடி
குற்றம்குறை
சீரும்சிறப்பும்
பேரும்புகழும்

என ஒரே பொருள்கொண்ட சொற்கள் இணைவது நேரிணை
நோய் நொடி இரண்டுக்கும் என்ன சம்பந்தம்

இரண்டுக்குமே வேர்ச்சொல் ஒன்றுதான்

நொய் நோய் நொடித்துப்போதல் நொந்துபோதல் என இரண்டும் ஒரே குடும்பத்தின் கிளைகள்தான்

அல்லும்பகலும் , குறுக்குநெடுக்காக என அதிர்ச்சொற்களை சேர்ப்பது எதிரிணை

ஒரு சொல்லை அழகுபடுத்த இன்னொரு சொல்லைப்போடுவது செறிவிணை

கன்னங்கரிய , செக்கச்செவேல் , பச்சப்பசேல் போன்றவை செறிவிணை;

இதில் ஒரு டுபாக்கூர் பிரிவும் உண்டு

உப்பு என்ற சொல்லை அது கல் உப்பு அன்று , தூளாக்கப்பட்ட உப்பு என துல்லியமாக குறிப்பிட உதவும் சொல் சால்ட்உப்பு

ஒரு இடத்தின் நடுப்பகுதியை இன்னும் துல்லியமாக குறிப்பிட உதவும் சொல் நடுசெண்டர்

லைட்வெளிச்சத்துல பாரு என்றால் மின்விளக்கு , குழல்விளக்கு , அலைபேசி விளக்கு போன்றவற்றின் ஒளி என்று பொருள்

நேரிணையின் டுபாக்கூர் வடிவம் இது






Saturday, March 30, 2019

சொற்களை சேர்த்து எழுதுதலில் இலக்கண நூல்கள் காட்டும் நெறி


சொற்களை சேர்த்து எழுதுவது...பிரித்து எழுதுவது குறித்து தமிழில் முறையான இலக்கண வரையறைகள் உண்டு,,, ஆனால் பலர் இதை முறையாக பின்பற்றுவது இல்லை

நல்ல பெண் , நல்ல வேலை , நல்ல வெயில் என்பதில் இரண்டு சொற்கள் உள்ளன,,, இதை இப்படியும் சொல்லலாம்.. பண்பான பெண் , கவுரவமான வேலை , கொடூரமான வெயில்... இப்படி வெவ்வேறு விதமாக வார்த்தைகளை சேர்த்து , வெவ்வேறு காம்பினேஷன் களில் எழுதுவது நெகிழுந்த்தன்மையுடனான சொற்சேர்க்கை ஆகும்

ஆனால் சிலவற்றை அப்படி மாற்ற முடியாது,,, நல்லபாம்பு , பல்கலைக்கழகம், இளங்கலை , கணிப்பொறி , எழுதுகோல்

இவற்றை பிரித்து எழுதினாலும் தனிச்சொற்களின் அர்த்தம் மாறாது எனினும் இவற்றை சேர்த்துதான் எழுத வேண்டும்...

இவை உறுதியான சொற்சேர்க்கைகள் ஆகும்

திருச்சிராப்பள்ளி , கேட்டுப்பார் , சொல்லித்தா,,, என்பது மேலும் சில உதாரணங்கள் ஆகும்

ஒன்பது வகையான கூட்டுச்சொற்கள் குறித்தும் அவற்றின் இயல்பு குறித்தும் நம் இலக்கண நூல்கள் அழகாக விவரித்து உள்ளன

மேலும் சில சொற்சேர்க்கைகளை மட்டும் பார்ப்போம்

கூட்டு வினையெச்சங்கள்

செய்யாதிருந்து,, ( செய்யா திருந்து அல்ல,,,, செய்யாது இருந்தும் அல்ல,,, செய்யாதிருந்து ) செய்யாமலிருக்க , செய்யாவிட்டால் , சொன்னபடி , பேசியவண்ணம் என்றே எழுத வேண்டும்

( தொடரும் )

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா