Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, March 25, 2019

இரிடியம் நிப் - சில உண்மைகள்


பேனா ரசிகர்களுக்கு இரிடியம் நிப் என்றால் மிகவும் பிடிக்கும்., எளிதில் தேயாது.. நல்ல லைஃப் வரும்..,, எழுதுவதற்கு சூப்பராக இருக்கும்

அப்ப நான் ஒரு இரிடியம் நிப் வாங்குகிறேன் என்கிறீர்களா?

உண்மையில் இரிடியம் நிப் என்பது உலகில் இல்லை... ஒரு காலத்தில் இருந்தது... அதுவும் உலோக கலைவையின் ஒரு சின்ன பகுதியாகவே இரிடியம் இருக்கும்

அதுவும் நிப்பின் நுனிப்பாகம் மட்டுமே..

கொஞ்சூண்டு இரிடியம் இருந்தாலும் இரிடியம் நிப் என அழைத்தார்கள்.. இப்போது இரிடியமே இல்லாமல் , இரிடியம் நிப் என்கிறார்கள்

அப்படி என்றால் ஏமாற்றுகிறார்களா என்றால் இல்லை... நகல் எடுப்பதற்கு பொதுவான பெயராக ஜெராக்ஸ் இருப்பது போல , தரமான நிப் என்பதன் பொதுப்பெயராக இரிடியம் ஆகி விட்டது.. தரமான நிப் தான்.. ஆனால் அது இரிடியம் இல்லை

இரிடியம் என்பது தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகமாகும்... உலகில் வெகு குறைந்த அளவே கிடைக்கிறது

இதை பயன்படுத்திதான் பல மோசடிகள் நடக்கின்றன.. அபூர்வமான இரிடியம் சிலை , ரைஸ் புல்லர் என்றெல்லாம் சதுரங்க வேட்ட பாணியில் பல இடங்களில் மோசடி நடக்கிறது

விண் கல் ஒன்று பூமியில் மோதியதாகவும்  அதனால்தான் டைனோசர் உள்ளிட்ட பல உயிர்கள் அழிந்ததாகவும் சொல்வார்கள்...

அந்த விண்கல் இரிடியத்தால் ஆனது என ஒரு தியரி உண்டு.. இப்போது பூமியில் கிடைக்கும் இரிடியத்தை விட , அந்த விண்கல்லில் இருந்த இரிடியத்தின் அளவு அதிகம்


ஒரு நண்பர் என்னிடம் தன் பென்னை கொடுத்து எழுதிப்பார்க்க சொன்னார்..,,  நன்றாக எழுதியது

இரிடியம் நிப் என்றார் பெருமையுடன்.... அவர் மகிழ்ச்சியை குலைக்க விரும்பாமல் , அறிவியல் உண்மையை மறைத்தேன்...


Tuesday, December 11, 2018

இங்க் பேனாவும் இள மாணவனும்



இங்க் பேனாவின் இனிமை குறித்து எழுதி இருந்தேன் அல்லவா..,, அதை எழுதும்போது , இன்க் பேனாவெல்லாம் நம் தலைமுறையோடு முடிந்தது என நினைத்தேன்.

ஆனால் அந்த கட்டுரையைப் படித்த பள்ளி மாணவன் ஒருவன் , நல்ல பள்ளிகளில் எல்லாம் இங்க் பேனாவில்தான் எழுதச்சொல்லி பழக்குகிறார்கள் என்ற தகவலைச் சொன்னான்.. அதற்கு காரணம்  ஒரே பேனாவில் எழுதினால்தான் கை எழுத்து கன்சிஸ்டெண்ட் ஆக அழகாக இருக்கும்...

என் கை எழுத்து தலை எழுத்த்து போல இருப்பதற்கு காரணம் , அது போன்ற பள்ளிகளில் படிக்காததுதான்,,   நான் படித்த அரசுப்பள்ளியில் அது போல கண்டிஷன் போட்டால் பாதிபேர் வர மாட்டார்கள்.. அதனால் , தக்காளி , நீ எப்படியாவது எழுதித்தொலை என தண்ணி தெளித்து விட்டு விட்டனர்,, எழுத்தாணியால் எழுதினாலும் சரி... இங்க் பென் என்றாலும் சரி,, உன் பேனா,,உன் சுதந்திரம்

எது எப்படியோ..., நம்மை விட நம் அடுத்த தலைமுறை சிறப்பான நிலையில் இருப்பது எல்லா உயிர்க்கும் இனிது.. அம்மாணவன் சொன்னது மகிழ்ச்சி அளித்தது

இன்க் பேனாதான் நல்லது என நான் கஷ்டப்பட்டு தெரிந்து கொண்டதை அந்த பள்ளி சுலபமாக சொல்லிக்கொடுத்து விட்டது


இதே போல , ஒவ்வொரு துறையிலும் அனுபவத்தின் சாராம்சங்கள் சுலபமாக கிடைக்கின்றன.. நாம் அதை தெரிந்து கொள்ளாமல் கஷ்டப்பட்டு தெரிந்து கொள்கிறோம்


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா