Showing posts with label எழுத்து. Show all posts
Showing posts with label எழுத்து. Show all posts

Monday, March 25, 2019

இரிடியம் நிப் - சில உண்மைகள்


பேனா ரசிகர்களுக்கு இரிடியம் நிப் என்றால் மிகவும் பிடிக்கும்., எளிதில் தேயாது.. நல்ல லைஃப் வரும்..,, எழுதுவதற்கு சூப்பராக இருக்கும்

அப்ப நான் ஒரு இரிடியம் நிப் வாங்குகிறேன் என்கிறீர்களா?

உண்மையில் இரிடியம் நிப் என்பது உலகில் இல்லை... ஒரு காலத்தில் இருந்தது... அதுவும் உலோக கலைவையின் ஒரு சின்ன பகுதியாகவே இரிடியம் இருக்கும்

அதுவும் நிப்பின் நுனிப்பாகம் மட்டுமே..

கொஞ்சூண்டு இரிடியம் இருந்தாலும் இரிடியம் நிப் என அழைத்தார்கள்.. இப்போது இரிடியமே இல்லாமல் , இரிடியம் நிப் என்கிறார்கள்

அப்படி என்றால் ஏமாற்றுகிறார்களா என்றால் இல்லை... நகல் எடுப்பதற்கு பொதுவான பெயராக ஜெராக்ஸ் இருப்பது போல , தரமான நிப் என்பதன் பொதுப்பெயராக இரிடியம் ஆகி விட்டது.. தரமான நிப் தான்.. ஆனால் அது இரிடியம் இல்லை

இரிடியம் என்பது தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகமாகும்... உலகில் வெகு குறைந்த அளவே கிடைக்கிறது

இதை பயன்படுத்திதான் பல மோசடிகள் நடக்கின்றன.. அபூர்வமான இரிடியம் சிலை , ரைஸ் புல்லர் என்றெல்லாம் சதுரங்க வேட்ட பாணியில் பல இடங்களில் மோசடி நடக்கிறது

விண் கல் ஒன்று பூமியில் மோதியதாகவும்  அதனால்தான் டைனோசர் உள்ளிட்ட பல உயிர்கள் அழிந்ததாகவும் சொல்வார்கள்...

அந்த விண்கல் இரிடியத்தால் ஆனது என ஒரு தியரி உண்டு.. இப்போது பூமியில் கிடைக்கும் இரிடியத்தை விட , அந்த விண்கல்லில் இருந்த இரிடியத்தின் அளவு அதிகம்


ஒரு நண்பர் என்னிடம் தன் பென்னை கொடுத்து எழுதிப்பார்க்க சொன்னார்..,,  நன்றாக எழுதியது

இரிடியம் நிப் என்றார் பெருமையுடன்.... அவர் மகிழ்ச்சியை குலைக்க விரும்பாமல் , அறிவியல் உண்மையை மறைத்தேன்...


Friday, March 15, 2019

பேட்ட நாகரிகம் , பெண்கள் விஷயத்திலும் தேவை





பேட்ட படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அதன் அட்டகாசமான கிளைமேக்ஸ்,..

படம் முடிந்து விட்டது என நினைத்து , சீட்டிலிருந்து எழுந்து கொண்டிருக்கும் ரசிகனை மீண்டும் உட்கார வைத்து ஒரு ட்விஸ்ட்டுடன் படம் முடியும்..

இதில் என்ன ஒரு குறிப்பிடத்தக்க விஷ்யம் என்றால் , படம் குறித்து இணையத்தில் எழுதிய யாருமே - ஒருவர் கூட - அந்த சஸ்பென்சை வெளிப்படையாக இங்கே எழுதாமல் ரகசியம் காத்தனர்

ரஜினியை திட்டியவர்கள் , பேட்ட படத்தை பிடிக்காதவர்கள் எழுதும்போதுகூட சஸ்பென்சை உடைக்கவில்லை

சஸ்பென்சை இங்கு உடைத்தால் படம் தோல்வி அடையப்போவதில்லை.. ஆனாலும் ஒரு நாகரிகம் கருதி அதை யாரும் செய்யவில்லை

அரசின் மிரட்டல்களோ , சட்டங்களோ செய்ய முடியாததை இயல்பாக உருவாகி வந்த ஒரு நாகரிகம் சாதித்தது..

இது போன்ற நாகரிகத்தை பெண்கள் பாதிக்கப்படும் விஷயங்களில் கடைபிடிக்க வேண்டும்

நம் சகோதரி ஒருவர் , சில மிருககங்களால் பாதிகப்பட்டால் , கிராமத்தை பெண்ணை நாசமாக்கிய சம்பவம் ... பெண்ணை சீரழித்தனர் என்றோ எழுதக்கூடாது

  நாசமாய் போனது நம் சமூகம்தான்.. சீரழிந்தது ஆண் வர்க்கம்தான் ..

அந்த பெண்ணின் புனிதம் கெட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது போல எழுதக்கூடாது

கற்பழிப்பு விவகாரம்.. புதிய வீடியோ ரிலீஸ் என்றெல்லாம் யாரேனும் வாட்சப் அனுப்பினால் உடனடியாக அவர்கள் நட்பை துண்டிக்க வேண்டும்

கற்பை வேறு யாரும் அழிக்க முடியாது... கற்பு என்பது அவரவர் மனம் சார்ந்தது....

பெண்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்ப்போம்

Wednesday, March 13, 2019

ராஜம் கிருஷ்ணன் - அன்பு சூழ் உலகில் வாழ்ந்த அற்புதம்


ராஜம் கிருஷ்ணன் அவர்கள் ஒரு நாவலாசிரியாக அறியப்பட்டு இருந்தாலும் அவர் நல்ல சிறு கதை எழுத்தாளரும்கூட

எழுத்து என்பதை மானுடத்தை உயர்த்தும் ஒரு கருவியாக நினைத்தவர் அவர்.. அகச்சிக்கல்கள் , மன சிடுக்குகள் போன்றவற்றை விட புறக்காரணிகளை அதிகம் அலசியவர் அவர்

ஆனால் நாவல் , சிறுகதை ஆகியவற்றை விட அவரது கட்டுரைகளில்தான் இலக்கிய அம்சம் கூடுதலாக புலப்படுகிறது

மதம் , சமூகம் , பண்பாடு என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக வைத்திருக்க முயலும் மனப்பாங்கை அழகாக அவர் எழுத்து சொல்கிறது -ஆதாரப்பூர்வ தரவுகளுடன்

இன்று அறிவியலும் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதையே செய்ய முனைவது மாபெரும் துன்பவியல் நிகழ்வாகும்

எழுத்து சமூகத்தை மாற்றுமா என்பது ஒரு நிலையான கேள்வி

இவரைப்பொறுத்தவரை , சமூகம் இவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது

பாரம்பரிய குடும்ப சிந்தனைகளோடு லட்சியவாத சிந்தனைகளோடு ஆரம்பித்த இவர் எழுத்துப்பயணம் விளிம்பு நிலை மக்களுடனான பழக்கம் , சோவியத் யூனியன் பயணம் போன்றவைகளால் நிறைய மாறியது... கம்யூனிட் மண்ணில் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பும் , உரிமையும் இவரை நிறையவே மாற்றியது

அனைத்து தரப்பினருனே இவர் மீது மரியாதை வைத்து இருந்தனர்... உயிருடன் இருந்தபோதே இவர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன,,,

இவர் உடல் நலம் குன்றி சுய நினைவு இழக்கத்தொடங்கிய கடைசி நாட்களில் எழுத்தாளர்கள் சிலர் சேர்ந்து அவரை வரவழைத்து ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தினர்,, நாற்காலியில் அமர்ந்தபடி அவர் ஆழ் உள்ளம் அதைக்கண்டு மகிழ்ந்தது... ஓர் எழுத்தாளருக்கு இப்படிப்பட்ட அன்பான சுற்றம் அமைவது அரிது

தன் செல்வங்களை எல்லாம் பிறருக்கே செலவிட்ட்டவர் இவர்... ஏழைச்சிறுவர்கள் , குடிசைவாசிகள் பலரை தன் காசில் படிக்க வைத்தவர்.. அதற்கு அவர் கணவரும் ஆதரவாக இருந்தார்


இந்த தர்மம் அவரை கை விடவில்லை.. கடைசி வரை அவர் பிறரால் பேணப்பட்டவராக இருந்தார்,., ராமச்சந்திரா மருத்துவமனையில் நல்ல மதிப்புடன் கடைசிக்காலத்தில் கவனிக்கப்பட்டார்

உறவினர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் முழுக்க முழுக்க நண்பர்களால் , சக எழுத்தாளர்களால் ஆதரவுடன் ஒரு பெண் வாழ்ந்தார் என்றால் அதற்கு காரணம் அவரது எழுத்து ... அவரைச்சுற்றி இருந்த நல் உள்ளங்கள்

இருக்கும்போது தன் உழைப்பை  , செல்வத்தை பிறருக்காக செலவிட்ட இவர் இறந்த பின்ன்னும் தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனை ஆராய்ச்சிக்காக கொடுத்து விட்டே சென்றார்

மீள் வாசிப்பு செய்து அடிக்கடி நினைவுகூரப்பட வேண்டிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

Thursday, November 8, 2018

பேனா - சில சிந்தனைகள்


  ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்..  ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்கினார்..    நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்ப்போது அவரிடம் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டார்.. பேனா கொடுங்க என அவர் அருகில் இருந்தவர்களிடம் கை நீட்டினார்..  யாரிடமும் இல்லை.. பேனா என்பதே சற்று வழக்கொழிந்த சாதனமாகி விட்டது என்பதால் பலரிடம் இல்லை...

எனது இங்க் பேனாவை எடுத்து கொடுத்தேன்... எனக்கு ஒரு நண்பர் பரிசளித்த அழகான இங்க் பேனா அது...  அதில் கையொப்பம் இட்டார்.. அந்த பேனா குறித்த விபரங்கள் கேட்டார்..சொன்னேன்..

அத்தனை பேருக்கு நடுவில் பேனா சரியாக எழுதாமல் தகராறு செய்திருந்தால் , தர்ம சங்கடமாக போயிருக்கும்...  ஆனால் என் பேனா தகராறு செய்யாது என நன்கு தெரிந்திருந்தால்தான் அதை அளித்தேன்

 பந்து முனைப்பேனாவுக்கும் இங்க் பேனாவுக்கும் இதுதான் வித்தியாசம்..  பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவோம்.. ஆனால் இங்க் பேனா பல மாதங்களாக  நம்முடன் இருப்பவை,,, பல ஆண்டுகளாக ஒரே பேனாவை பயன்படுத்துவோரும் உண்டு... எனவே நம் பேனா குறித்து நமக்கு நன்றாக தெரியும்.. ஒரு வித உறவு அல்லது நட்பு அல்லது புரிதல் அதனுடன் ஏற்பட்டு விடும்

இங்க் பேனாவை முதலில் பயன்படுத்த ஆரம்பிக்கையில் சற்று முரண்டு பிடிக்கும்.. எழுத எழுத நம் கைகளின் அழுத்தம் , எழுதும் கோணம் , வேகம் என பலவற்றை அது புரிந்து கொள்ளும்.. அதற்கேற்ப அதன் நிப் மாறும்.. நாமும் பேனாவை புரிந்து கொண்டு அதற்கேற்ப எழுதுவோம்..

இந்த உறவு பந்துமுனைப்பேனாவில் இல்லை.. ஆனால் பந்து முனைப்பேனாவுக்கு என சில பயன்பாடுகள் உண்டு.. எனவே அதை தவிர்க்க இயலாது.. உதாரணமாக டெலிவரி சலான், பில் போன்றவை எழுதும்போது கார்பன் நகல் சரியாக வருவதற்கு பந்து முனைப்பேனாவின் அழுத்தம் முக்கியம்

  ஆனால் சிறப்பான சேவையை தருவது மசி பேனாக்கள்தான்... இங்க் பேனா வாங்கினால் ஒருபோதும் மலிவானவற்றை வாங்க கூடாது.. அது எழுதும் இன்பத்தையே கெடுத்து விடும்.. தரமானவற்றை மட்டுமே வாங்க வேண்டும்..

பைக் , கார் போன்றவற்றை அவ்வப்போது சர்வீஸ் செய்வது போல , பேனாவை மாதம் ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்...  ஒருவர் பயன்பாட்டில் பேனா இருக்க வேண்டும்

ஐந்து அல்லது 10 ரூபாய் விலையில் கிடைக்கும் பந்து முனைப் பேனா ஒன்றை ஓசி கொடுப்பதற்கு என வாங்கி வைத்து கொள்ள வேண்டும்

வெளியூர் செல்கிறோம்.. ரொம்ப நாள் பயன்படுத்தப்போவதில்லை என்றால் முழுமையாக மசியை வெளியேற்றி வைக்க வேண்டாம்.. இல்லாவிட்டால் மசி அடைப்பு ஏற்படலாம்

பேனா வாங்கும்போது , ஒல்லி பேனாவா  குண்டு பேனாவா என நம் கை வாகுக்கு ஏற்றபடி வாங்க வேண்டும்

இப்படி கவனமாக தேர்ந்தெடுத்து ஒழுங்காக பராமரித்தால் கை எழுத்து மாறாமல் சிறப்பாக இருக்கும்.. கல்லூரி தேர்வெழுத பயன்படுத்திய பேனாவை , பணிகளில் பயன்படுத்துவோர் உண்டு என்பது ஆச்சர்யமான உண்மை





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா