Showing posts with label காலா. Show all posts
Showing posts with label காலா. Show all posts

Sunday, June 17, 2018

ரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி

----

ரஜினி அரசியல்  நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா 

-காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்... இந்த பட விவாதத்தின்பே ாது  ரஜினி அரசயல் நுழைவை அறிவிக்கவில்லை. செ ால்லப்   ே பானால் தேர்தல் அரசியலை  களமாக  கெ ாண்ட  கதை ஒன்று  அவர்க்கு பிடித்திருந்த பே ாதும் அதில் நடிக்க விரும்பவில்லை


அரசியல் அறிவிப்பை  ெ வளியிட்டதும் திரைக்கதையில்  மாற்றங்கள் ஏதும் செய்ய செ ான்னாரா

-இல்லை...இயக்குனர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பவர் ரஜினி சார்.. இது மக்கள் பிரச்சனைகளைப்பேசும் மக்கள் படம்..  குடும்பம் குறித்தான படமும் கூட...இந்த தீம் அனைவர்க்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை  அவருக்கு இருந்தது

நிலம் என்பதை  கதைக்களமாக ஏன்தேர்ந்தெடுத்தீர்கள்

தாராவி என்பது  பல பிரிவினர் வசிக்கும் ஒரு மினி இந்தியா.. இருப்பவர்கள் இல்லாதவர்கள் பிரச் னை எங்கும் உள்ளது..  இதைத்தான் படம்பேசுகிறது..   இதை  இயக்கியவன் நான  என்பதால் சாதிய முத்திரை  குத்துகிறார்கள்

காலாவில் ரஜினி ரஞ்சிதை பயன்படுத்தி கெ ாண்டாரா அல்லது ரஞ்சித் ரஜினியை யா ?

இரண்டும் இல்லை..  எனக்குப்பிடித்த நான் ஈடுபாடு  ெ காண்டுள்ள அரசியலையும்  மக்கள் மீது ரஜினி   ெ காண்டுள்ள அக்கறையையும் கலந்து உருவான படம் காலா

ரஜினியின ஆன்மிக அரசியல் குறித்து ?

சம நீதி மற்றும் மக்கள் நல் வாழ்வு இவை தான் அவர் செ ால்லும் ஆன்மிக அரசியல்.  படப்பிடிப்பு இடைவேளைகளில் சாதாரணமாகபேசும் பே ாதும் மக்கள் குறித்தும்  அவர்களுக்கு  ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும்தான்  விவாதிப்பார்

காலா கதை தங்களுடையது என சிலர்செ ால்கிறார்களே

வெங்கல் கிராமத்தில் பஞ்சாயத்து  தலைவராக இருந்த என் தாத்தாவின் வாழக்கையை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய கதைதான் இது

Thursday, June 14, 2018

காலாவுககு வரவேற்பு எப்படி - ஓர் அலசல்

 சிங்கப்பூர்/மலேசியா
சிங்கப்பூரில் ஒரு இந்தியத் திரைப்படம் 17 அரங்குகளில் திரையிடப்பட்டது இதுவே முதல் முறை. பிரீமியர் என்று சொல்லப்படும் சிறப்புக் காட்சிகள் அனைத்து சிங்கப்பூர் அரங்குகளிலும் இந்திய ரிலீசுக்கு முதல் நாள், அதாவது (6ம் தேதி, புதன் கிழமை) அன்றே திரையிடப்பட்டது.  வெளியானது வார நாள் என்றாலும், சிங்கப்பூரில் மாபெரும் ஓப்பனிங்கைப் பெற்று சாதனை படைத்தது.
மலேசியா தலைவர் கோட்டை என்பதை கபாலிக்குப் பின் காலா மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. மலேசியா-வில் "Hot Movie Checks"-ல் முதல் இடத்தைப் பிடித்து மக்களிடம் இருக்கும் வரவேற்பை உறுதிப்படுத்தியது காலா.

2. ஆஸ்திரேலியா
முதல் இரெண்டு நாட்களின் வசூல் 1 கோடி. இது, ஆஸ்திரேலியாவில் 2018-ல் வெளியான அனைத்து தமிழ்ப்படங்களை விட மிக மிக அதிகம். ஓப்பனிங் A$105,672, வெள்ளிக்கிழமை அன்று A$100,662, சனிக்கிழமை A$110,616, ஞாயிற்றுக்கிழமை A$85,263 என்று வசூலித்து, ஆஸ்திரேலியாவின் டாப் 5 வரிசையில், பத்மாவதிற்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் (A$402,213) இருக்கிறது.  

3. USA
- இதுவரை வெளியான தலைவரின் படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக, நிறைய திரையரங்குகளில் வெளியான படம் காலா மட்டுமே.
- காலா, 1 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கும் தலைவரின் 4வது படமாகும். (கபாலி, எந்திரன் மற்றும் லிங்கா மற்ற படங்கள்). இந்த வார இறுதியில் 2 மில்லியன் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2018-ன் தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்து சாதனை. அமெரிக்காவில் இன்னும் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
- முதல் வார இறுதியில் திரையிடப்பட்ட 324 இடங்களில், வார இறுதியில் மட்டும்  $1,625,614 வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் இடம் எது? நம்ம "கபாலி" தான்! கபாலியின் இமாலய சாதனையான $3,616,002-ஐ வேறு எந்த படங்களும் நெருங்குவதற்கு சில வருடங்கள் ஆகும்.

4. இந்தியா
- சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ஒரு நாள் வசூல் செய்து சாதனை படைத்தது காலா  - 1.76 கோடி
- காலாவின் 15 கோடி ஓப்பனிங், 2018-ல் வெளிவந்த அனைத்து படங்களை விட அதிகம்.
- தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 15.4 கோடி.
- காலாவின் இரண்டாம் நாள் வசூல் 10.5 கோடி...இது சாதாரண விஷயமல்ல! பொதுவாக, படத்தைப் பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் கூட, இரண்டாம் நாள் வசூல், முதல் நாளை விட, 50% குறைந்துவிடும்.
- சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 85% அரங்கு நிறைந்த காட்சிகள். விடுமுறை வாரம், பண்டிகை வாரம் என்று எதுவுமே இல்லாமல் இவ்வளவு கூட்டம் வருவது பெரிய விஷயம்.
- சனிக்கிழமை (9ம் தேதி) அன்றும், ஞாயிற்றுக்கிழமை (10ம் தேதி) அன்றும் முறையே  8.4 கோடி மற்றும் 9.3 கோடி வசூல் செய்தது. ஆக மொத்தம், முதல் 4 நாட்களில் 43.6 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
- சென்னையைப் பொறுத்த வரை, இதுவரை கிட்டதட்ட 6.6 கோடி வசூலித்துள்ளது.
- சென்னை சத்யம் திரையரங்கில், நேற்று (12ம் தேதி) மேட்னி காட்சி house full என்ற செய்தி கிடைத்துள்ளது. வார நாளான நேற்று பகல் காட்சி house-full ஆவது படத்தின் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
- சென்னையை அடுத்து, கோவை, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில் சிறப்பான வசூல் செய்கிறது.
- பொதுவாக, எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இலாபம் கொடுக்கும் அளவிற்கு படம் ஓடுவது அரிதாகி விட்டது. இப்போது, சேலம் சினிப்ளெக்ஸ் ட்விட்டர் பதிவின் படி, அவர்களின் முதலீட்டை மீட்டு விட்டதாகவும், இனிமேல் வரும் வசூல் அனைத்தும் இலாபம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வார நாட்களிலும் 95% அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றி நடை போடுவதாக அறிவித்துள்ளனர்.
- இதே போல், புதுக்கோட்டை சினிமாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 34 ஷோக்களில் அனைத்து காட்சிகளும் house-full ஆக மொத்தம் 22.6 லட்சம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு படத்தின் உண்மையான வெற்றியை, அப்படம் தென் மாவட்டங்களில் பெறும் வசூல் தான் முடிவு செய்யும். அவ்வகையில், காலா மாபெரும் வெற்றி கண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று!

5. சவுதி அரேபியா
- சவுதியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை "காலா" பெற்றுள்ளது. மற்றும், சவுதியில் வெளியான 2வது படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.  இதற்கு முன், ஹாலிவுட் தயாரிப்பான "Black Panther" வெளியானது.


6. மற்ற நாடுகள்:
- நைஜிரியாவில் காலாவைக் கொண்டாடுகிறார்கள், தென் ஆப்ரிக்காவில் படம் செம ஹிட் என்று கண்டம் தாண்டி தலைவர், தனது ஆளுமையை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார்.
- தமிழர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும்  காலாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய இடங்களில் தினசரி காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது.
- வளைகுடா நாடுகளில் இதுவரை 7 கோடி வசூல் என்று தகவல் கிடைத்துள்ளது. ரமலான் நோன்பு முடிந்தவுடன் வரும் வார இறுதியிலிருந்து இன்னும் சிறப்பான வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவிலும் வரும் வார இறுதி ரமலான் விடுமுறையை ஒட்டி வருகிறது  என்பதால், மேலும் ஒரு சில வசூல் சாதனைகளை எதிர்ப்பார்க்கலாம்.
- ரஷ்யாவில், மாஸ்கோ நகரில் படம் வெளியாகி, கடந்த வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- ஜப்பானைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? வழக்கம் போல், அங்கிருக்கும் தலைவரின் ரசிகர்களின் பேராதரவால் படம் சக்கைப் போடு போடுகிறது



Tuesday, June 12, 2018

நான்தான் காலா - படத்தைகெ ாண்டாடும் அரசியல் தலைவர்கள்

பாட்ஷா அண்ணாலை பே ான்ற படங்களை பே ான்ற படஙகளை   பார்க்கும் சிறுவர்கள்  தம்மை அந்த பட  நாயகன்க ளாக நி னைப்பது வழக்கம்..
காலா படத்தை பெ ாருத்தவரை  தலைவர்களும் இப்படி கெ ாண்டாடி வருகின்றனர்

கலைஞர் தான் காலா என திமுகவினரும்  சீமான் தான் காலாவில் வரும் ராவணன் என்றும் அந்தந்த கட்சியினர் கூறுகின்றனர்...  இன்னும் பல கட்சியினரும் காலா என்பது தாங்கள்தான்  என செ ால்லி படத்தை கெ ாண்டாடி வருகின்றனர்..

இதற்கெல் லாம் உச்சமாக குஜராத் எம் எல் ஏவான ஜினேஷ்மேவானியும் இப்படி கூறியிருக்கிறார்

காலா படம் பார் தேன்  என்னையே பார்ப்பது ோல  இருந்தது...  சமூக நீதியை  கமர்சியல் அம்சத்துடன் தந்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள்..

இப்படி அவர்ட்வீட்செய்துள

Monday, June 11, 2018

காலா -நாயகன் : ஆறு வித்தியாசங்கள்

காலா  நாயகன் ஒப்பிடுக


1 நாயகன் தனி மனிதபே ாராட்டம்..  காலா சமூக நீதிோராட்டம்


2 காட் ஃபாதர் நாயனை கமல் பிரதி எடுத்திருப்பார்..  ரஜினியின் இயல்பான பாணியை ரஞ்சித் பயன்படுத்தி இருப்பார்

3 மகன் இழந்ததும் அழும் காட்சியில் டை நாடகஙளை கமல் நினைவு படுத்துவார்..  அதே பே ான்ற காட்சியில் ரஜினி உலக சினிமாக்களை நினைவு படுத்துவார்

4 மும்பையிலேயே  வாழ்ந்தாலும் மெ ாழி பெயர்ப்பாளர் மூலம்பேசு வார்  நாயகன்..  இந்தியில் பஞ்ச்பேசுவார் காலா

5 பாலகுமாரன் மணிரத்னம் கமல் என்ற அவாள் கூட்டணியில் உருவானது நாயகன்..  ரஞ்சித் மகிழ்நன் ஆதவன்தீட்சண்யா ரஜினி என கருப்பு மக்களால் உருவானது காலா

6 நாயகிக்கு வாழ்வு கெ ாடுப்பார் நாயகன்..  ந ாயகியால் உருவாக்கப்பட்டுபெண்களால் காக்கப்படுபவர் காலா

Sunday, June 10, 2018

காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ? -ரஞ்சித்பேட்டி

கீழ்த்தரமான அவதூறுளையும் தடைகளையும் மீறி காலா சாதனை படைக்கும் நிலையில் இயக்குனர் ரஞ்சித் அளித்தபேட்டி

------
ரஜியை வித்தியாசமாக காட்ட எப்படி தே ான்றியது

- கபாலி ஷுட்டிங் இடைவேளைகளில் சாதாரணமாக ரஜினி சாரிடம் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. சினி மா ரஜினியை விட இயல்பான ரஜினி பவர்புல்லாக இருந்ததை கண்டேன்...  அதை காட்சிப்படுத்தினேன்..  அதுதான் காலா

- காலா உயிதெழும் காட்சி எதன் குறியீடு

-சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகழை யாரும் தெ ாடக்கூட முடியாது.. அது ஒன்று...  காலா எனும் தத்துவத்துக்கு என்றும் அழிவில்லை   இவற்றத்தை தான் அந்த காட்சி காட்டுகிறது

-காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ?

கண்டிப்பாக இது சூப்பர் ஸ்டார் படம்தான்... அவர் அனுமதியின்றி ஒரு காட்சியும் வசனமும் இடம்பெறவில்லை
அவர் வழிகாட்டுதலுடன் என் கருத்துளை படத்தில் வைதேன்..  சமூக நீதி கருத்துகள் இதன் மூலம் உலக அளவில்சென்றுசேர்ந்துள்ளது




Saturday, June 9, 2018

காலா - இந்துத்துவ தலித் விரோத சக்திகளுக்கு காலன்


காலாவில் ஒரு காட்சி ... தன் முன்னாள் காதலியை சந்திக்க யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவள் வீட்டுக்கு செல்கிறார் ரஜினி..  அதை தெரிந்து கொண்ட வில்லன் கோஷ்டி அவரை சுற்றி வளைக்கிறது.

தன்னந்தனியாக மாட்டிக்கொள்ளும் ரஜினி வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு ஆயத்தமாகிறார்...

காலம் காலமாக நாம் பார்த்து வந்த ஹீரோயிச சண்டையை ( ஒரு வித அலுப்புடன் ) பார்க்க ஆயத்தமாகிறோம்... ஒரே ஆள் நூறு பேரை சமாளிக்கும் சண்டையை எத்தனை முறை பார்த்திருப்போம்...

ஆனால் அங்குதான் ஒரு இனிய ஆச்சர்யம். அந்த டிபிக்கல் சண்டை நடப்பதில்லை... ரஜினியின்  மகன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் புயலாக புறப்பட்டு வந்து எதிரிகளை பந்தாடுகிறார்கள் .  அது இயல்பாக இருந்தாலும் , யாருக்கும் தெரியாமல் ரஜினி வந்தது அவர்களுக்கு எப்படி தெரியவந்தது ?

அதுதான் ஒரு சிறுகதையாக மிளிர்கிறது.. ஒரு பெண்ணால் , அவள் காதலால் ரஜினி காப்பாற்றப்படுகிறார் என்பது ஒரு சின்ன குறும்படமாக அட சொல்ல வைக்கிறது... கபாலியில் மகளால் காப்பாற்றப்படுவதை விட இந்த காட்சிக்கோர்வை மிக பிரமாதம்.

இப்படி ஒரு ஒவ்வொரு காட்சியாக ரசிக்க வைக்கிறது காலா

அறிமுகப்பாடல் , ரசிகர்களை பார்த்து கும்பிட்ட்ட படி கண் சிமிட்டியபடி அறிமுக ஆவது பாசிட்டிவான ஒரு வசனததுடன் அறிமுகம் ஆவது போன்ற காட்சிகள் ரஜினியால் பிரபலமடைந்து இன்று  போதும் போதும் என்ற அளவுக்கு எல்லா படங்களிலும் இடம் பெற்று வருகின்றன..
\
தக்காளி  போதும்டா .. திருந்துங்கடா என சொல்லும் விதத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு அறிமுக காட்சி ., செம தில் ,திமிர் அல்லது தன்னம்பிக்கை தேவைப்படும் காட்சி..
\
வில்லன்களால் சூழப்பட்டத்தை குறிப்பால் அறிந்து அவரை காப்பாற்ற முயலும் பைக் இளைஞன் , ஒன் லைனர்களால் திரையரங்கை அதிரச்செய்யும் சமுத்திர கனி , எதிர் கருத்தை துணிச்சலாக முன் வைக்கும் இளைய மகன் , தந்தையை மிஞ்சும் மூத்த மகன் , போராளி மருமகள் , கொல்ல விரும்பும் எதிரி என்றாலும் அவனை வீட்டுக்குள் அனுமதிக்க தன் அறம் சார்ந்து ஒரு காரணத்தை சொல்லும் வில்லன் , மனைவி , காதலி என ஒவ்வொரு பாத்திரமுமே செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளன...

இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் என ஒவ்வொருவரும் மிகச்சிறப்ப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..


படம் என்ற வித்த்தில் கிளாஸ்.. சரி ? உள்ளட்டக்கம்?

ரஜினி இந்து மத கடவுளை அவமதித்து விட்டார் என ஒரு இந்துத்துவ நாளிதழ் புலம்பி இருந்தது.//

அற்ப மனிதனின் கடவுளும் அற்பமாகவே இருக்கும் என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி...     மகாத்மா காந்தி வணங்கும் ராமனும் கந்து வட்டிக்காரன் ஒருவன் வணங்கும் ராமனும் ஒரே ராமனாக இருக்க முடியாது அல்லவா ?  அந்த கந்து வட்டிக்காரன் வணங்கும் ராமன்  கண்டிப்பாக அறத்தை போதிப்பவனாக இருக்க முடியாது...

இந்த படம் முழுக்க முழுக்க புத்தர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.. இதில் வரும் புத்தர் போற்றத்தக்கவர்.. ஆனால் இலங்கையில் தமிழனை கொன்று புத்த ஆலயம் கட்டினால் அதை ஏற்க முடியுமா ? இலங்கையில் தமிழ் கைதிகளை கொன்று புத்தர் சிலைக்கு படையல் வைத்த சிங்களர்களை ஏற்க முடியுமா ?

கடவுளை யார் எந்த அர்த்தத்தில் முன் வைக்கிறார்கள் என்பதே முக்கியம்..

இந்த படத்தில் வெகு தெளிவாக இதை கையாண்டு இருக்கிறார்கள்...\

ஒரு காட்சியில் பெண் போராளியை சில போலிசார் அவள் ஆடையை களைந்து மான பங்கம் ( ??? !! ) செய்கின்றனர்...

மானம் போனதும் தற்கொலை செய்யும் பெண்களை தமிழ் சினிமாக்களில் பார்த்துள்ளோம்// என்னை ஒன்னும் செய்யாதே என கெஞ்சும் பெண்களை பார்த்துள்ளோம்..

இந்த போராளி வலியுடன் தன் ஆடையை நோக்கி செல்கிறாள்.. ஆடையை எடுத்துக்கொண்டு அழுது கொண்டு வீட்டுக்கு செல்லப்போகிறாள் என சராசரி ரசிகன் நினைக்கிறான்..
ஆனால் அவள் எடுப்பது ஆடையை அல்ல... எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆயுதம் ஒன்றை.

ஒரு பெண்னை நிர்வாணமாகவோ அரை குறை ஆடையுடனோ பார்த்து விட்டால் அது அவள் கற்புக்குதான் இழுக்கு என இது வரை உருவாக்கப்பட்ட கற்பிதங்களை உடைத்து எறிகிறது காலா///

நாயகன் படத்தில் மும்பையில் வளர்ந்து ஆளான ஹீரோ கடைசி வரை மொழி பெயர்ப்பாளர் துணையுடன் தான் பேசுவார்//

இதில் நாயகன் ஹிந்தியிலும் மராட்டியிலும் புகுந்து விளையாடுகிறார்..

மக்களின் விருப்பம் முன்னோர்கள் சொல் அதுதான் என்னை வழி நடத்தும் ஆணை என கம்பீரமாக ஹிந்தியில் சொல்வது செம

பல காட்சிகளில் பாட்ஷா  மற்றும் படையப்பாவை மிஞ்சிக்காட்டி இருக்கிறார் ரஞ்சித்

மரண மிரட்டல் விடுத்து விட்டு கிளம்பும் வில்லனிடம் , உன்னை நான் இன்னும் கிளம்ப சொல்லலயே என கேலியாக சொல்வதும் அதை அலட்சியம் செய்து விட்டு வில்லன் கிளம்புவதும் அதை தொடரும் காட்சியும் ரஜினி படங்களின் சிகரங்களுள் ஒன்று


ரகுவரனுக்குப்பிறகு சிறப்பான வில்லன்.. பல காட்சிகளில் ரஜினியையே மிஞ்சி இருக்கிறார்..

இப்படி ஒரு சமூக நீதிக்கான படம் இதுவரை வந்ததில்லை..  அம்பேத்கர் உள்ளிட்ட புரட்சியாளர்கள் அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனி வாசன் போன்ற பலர் குறித்து  மற்றவர்கள் பேசி இருந்தால் டிரையாக அல்லது பிரச்சார தொனியுடன் இருந்திருக்கும்.. கமெர்ஷியலாக ஒரு கனமான விஷ்யத்தை ரஞ்சித் வெற்றி பெற்றுள்ளார்

தலித்துகளின் சோகங்களை தோல்விகளை சொன்னால் அரசியல் கட்சியினர் ரசிப்பார்கள்/.////   ஆனால் தலித்துகளை வெற்றியாளர்களாக தலைவர்களாக காட்டினால் தமிழக கட்சியினர் ரசிப்பதில்லை///   கடவுள் எதிர்ப்பை இந்த்துதுவ கட்சியினர் விரும்புவதில்லை//  இந்த இரு தரப்பையும் பகைத்துக்கொண்டு படம் எடுக்க அசாத்திய துணிச்சல் தேவை

சிஸ்டம் சரியில்லை என ரஜினி சொன்னது இந்தியா முழுமைக்கானதும்தான் என தன் காசில் படம் எடுத்து சொன்ன தயாரிப்பாளர் தனுஷ் பாராட்டுக்குரியவர்////

காலா - இன்னும் பல காலம் விவாதிக்கப்பட இருக்கும் கலைப்படைப்பு


------------------------------------------------------



                           



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா