Sunday, September 5, 2010

சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத்தாளர் பாலகுமாரன் கருத்து

balakumaaran


கேள்வி : இலங்கையின் இன்றைய நிலை பற்றி நீங்கள் பேசுவதே இல்லையே ?

பாலகுமாரன் பதில்
விடுதலைப் புலிகளை நசுக்கி , தமிழ் இனத்தை சீரழித்து , கொக்கரிக்கின்ற சிங்கள மக்களுக்கு பின்னால் மிகப்ப்பெரிய வெடி குண்டு இருக்கிறது. மிக மோசமான ஒரு மனிதரை இலங்கை அரசு தன் நண்பனாக கொண்டு இருக்கிறது.
சீனா தனக்கு பாதுகாப்பு என நினைத்து கொண்டிருக்கிறது இலங்கை.
தமிழர்களுடைய அழிவை விட மிக மோசமான வகையில் சிங்களவர்களின் அழிவு இருக்கும். பதினொரு வருட்த்துக்குள் சீன அரசு இதை செய்து முடித்து விடும்.
இந்திய துணைக்கண்ட்த்துக்கு நெருக்கடி கொடுக்க, அமெரிக்க சந்தையை தடுக்க , தன் சந்தையை விரிவு படுத்த சீன அரசு முன்னும் பின்னும் நெருக்கி தொந்தரவு கொடுக்க கூடிய ஒரு சூழ்னிலை ஏற்படும் . அப்போது இலங்கைக்கு துணை போக தமிழர்கள் இருக்க மாட்டார்கள். சிங்கள மக்களிடையே அரசியல் படுகொலைகள் வெகு வேகமாக விரைவில் நடைபெறும். நிலையற்ற தனமைக்கு அதுதான் ஆரம்பம்.
சரி, இந்த சீனாவை யார் அதட்டி கேட்க முடியும் ? இயற்கை அழிவு , உள் நாட்டு குழப்பம், அந்த ஊர் மக்களின் கிளர்ச்சி , மாணவர்கள் புரட்சி என பல ஆபத்துக்கள் அங்கே இருக்கின்றன.
2010 முதல் 2020 வரை தினசரி சீனாவின் ஏதேனும் ஓர் அழிவை பற்றி கேட்காமல் நாம் தூங்க முடியாது.

Saturday, September 4, 2010

சிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி

டியர் பதிவர் பிச்சைக்காரன்,
உங்கள் எழுத்தில் மயங்கிய கோடிக்கணக்கான ரசிகைகளில் ஒருத்தி மயங்கியவள் நான். உங்களை நேரில் பார்த்தால் .. ( சென்சார் ட் )
என்னதான் நீங்கள் எங்களை திட்டினாலும் எங்கள் நேசம் மாறாது..
ஆயிரம் முத்தங்களுடன்,
நடாலியா ஷரபோவா, மாஸ்கோ, ரஷ்யா...

டியர் ஷரபோவா,
இந்த உண்மை சம்பவத்தை பாருங்கள். அதன் பின் நான் ஏன் கோப்ப்படுகிறேன் என்பது புரியும்.
எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்து விட்ட்தால் யாரையாவது திருமனம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.
தினமும் ஒரு பெண்ணை பார்க்கும் சூழ் நிலை இருந்த்து. அவளிடம் மனதை பறிகொடுத்தேன்.
காதலை சொல்ல தயக்கமாக இருந்த்து. பயமாகவும் இருந்த்து.
எப்படியோ கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு , அவளை தனியாக சந்திக்க விரும்புவதாக சொல்லி விட்டேன்.
ஒரு ஹோட்டலில் அமர்ந்து இருந்தோம்.
மெதுவாக பேச ஆரம்பித்தேன்..
“ உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்.. உங்க பேர் , முகவரி சொன்னால் வீட்டில் வந்து பெண் கேட்கிறேன். பிடிக்கவில்லை என்றால் நண்பர்களாக பிரிந்து விடுவோம்” என்றேன் .
அவள் காலில் இருந்து செருப்பை கழட்டி பளார் என அறை விட்டாள். கூட்டம் கூடி விட்ட்து..
என்ன ஆச்சு என அவளிடம் கேட்டார்கள்.
“ பாருங்க சார்.. கல்யாணம் ஆகி இத்தன நாள் கழிச்சு என் பெயர் என்ன்னு கேட்குறாரு. கட்டின பொண்டாட்டிக்கே லவ் லெட்டர் தர்ராரு.. இவரை அடிச்ச்து தப்பா ? “
நான் இந்த அளவுக்கு உலகையே மறந்து இலக்கியப்பணி செய்கிறேன்.. என்னை கிண்டல் செய்தால் கோபம் வருமா வராதா..?

ஞாயிற்று கிழமை கூட ஓய்வெடுக்காமல் எழுதுவது என் வழக்கம். ஒரு நண்பன் அவசரமா வா.. பார்க்கணும் என்றதால் அவன் வீட்டுக்கு போனேன்.
நான் போன நேரத்தில் அவன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அவனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..
“ உன்னையும் சாப்பிட கூப்பிட ஆசை.. ஆனால் கூப்பிட்டால் சாப்பிடவா போற? “
“ நான் வேண்டாம்னு சொன்னாலும் நீ விட்டுடவா போற ? “
“ நான் வற்புறுத்துனாலும், சாப்பிட்டுட்டுதான் வர்ரேன் அப்படீனு சொல்லிடுவ.. உன்னை கஷ்டப்படுத கூடாது . “
“ நான் சாப்பிடுடுதான் வந்தெனு ஃபார்மாலிட்டுக்கு சொன்னா கூட . அட்லீஸ்ட் லெக் பீஸா வது சாப்பிடுனு சொல்லுவியே .. பாசக்கார பையண்டா நீ “
“ ஆமா. அப்படி சொல்ல ஆசைதான்,, ஆனா, சாப்பாடு இல்லாம லெக் பீஸை மட்டும் கொடுக்க சங்கடாமா இருக்குமே பார்க்குறேன் “
இப்படியே இரண்டு மணி நேரம் சென்றது. கடைசியில் தண்ணீர் கூட தராமல் அனுப்பி வைத்தான்.
ஞாயிற்று கிழமை ஆகி விட்டாள் பிச்சைக்காரன் என்ற இந்த கி பு வின் ( கிறுக்கு புண்ணாக்கின் ) நினைவு வந்து போன் போட்டு விடுகிறார்கள்
இலக்கியவாதிக்கு இதுதான் மரியாதை.. எத்தனுக்கு எத்தனாக இருக்கிறார்கள்.
ஒரு கதை..

ஒரு பெண் கடவுளுக்கு தொண்டாற்ற போகிறேன் என சொல்லி விட்டு கல்யானம் செய்து கொள்ளாமல் இருந்தாள். யாரும் தன் முகத்தை கூட பார்க்க கூடாது என முகத்தை மூடியே இருப்பாள். அவளை அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்டான் ஒருவன்.
எப்படி என புரியாமல் தவித்தான். அவன் ஏக்கத்தை புரிந்து கொண்ட பொறுக்கி ஒருவன் ஐடியா கொடுத்தான்.
”நீதான் கடவுள் என அவளை நம்புமாறு செய்து விடு.. அவள் உன் ஆசைக்கு இணங்கி விடுவாள்.”
நல்ல யோசனையாக தோன்றியது..
அன்று இரவு அவள் தனியாக முகத்தை மூடியபடி வந்து கொண்டு இருந்தாள். இவனும் முகத்தை மூடிக்கொண்டு அவள் முன் சென்றான்.
“ நான் தான் கடவுள். உன் பக்தியை மெச்சினேன். அதுதான் உன் முன் வந்தேன். என் ஆசைக்கு இணங்கு ” என்றான்..
“ சரி கடவுளே.. ஆனால் என் கன்னித்தன்மையை இழக்க விரும்பவில்லை. அதனால் என் ”பின் வாசலை” பயன்படுத்தி உங்கள் ஆசையை தீர்த்து கொள்ளுங்கள் “ என்றாள்.
அவனும் அப்படியே செய்தான்.
செய்து முடித்த்தும், வெற்றி புன்னகையுடன் சொன்னான்.
“ நான் கடவுள் இல்லை. உன் பின் சுற்றிய வாலிபன் ..ஹா ஹா “
அவள் சொன்னாள்.
“ நானும் அந்த பெண் இல்லை.. உனக்கு ஐடியா கொடுத்த பொறுக்கி ..ஹாஹா “

Friday, September 3, 2010

கொலை செய்தால் ஊக்க தொகையா? - மனிதாபிமானிகளின் ஓவர் பாசம்

தூக்கு தண்டனை சரியா , தவறா என்பது அவ்வப்போது தலை காட்டும் விவாதம்தான்...

இருதரப்பு வாதங்களையும் கேட்டால், இருவர் சொல்லுவதும் சரி போலவே தோன்றும்.. நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது..
ஆனால், தூக்கு தண்டனை தவறு என்று சொல்பவர்களின் வாதம் வடிவேலுவின் காமடியையும் மிஞ்சும்படி இருக்கும்.. ஆனால் நாம் ,பிரச்சினையின் சீரியஸ்னசை கவனத்தில் கொண்டு இந்த வாதத்தில் இருக்கும் சிரிப்பை கவனிப்பதில்லை...

இந்த மனிதாபிமானிகளின் நகைச்சுவையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறோம்..

1 ஒருவர் சமுகத்தில் இருக்கும் ஒருவரை கொல்வதால், சமுகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது... அந்த இழப்பை நிவர்த்தி செய்ய பார்க்காமல், சமுகத்துக்கு மேலும் இழப்பை ஏற்படுத்தும்படி அவரையும் அரசே கொல்வது என்ன லாஜிக் ? ஒரு இழப்பு என்பது , இரண்டு இழப்பாக மாறுவதுதான் நாம் காணும் பலன்..

சூப்பர் வாதம் ... பேசாமல் கொலையாளிக்கு நஷ்ட ஈடு கொடுத்து , விடுதலை செய்து விடலாமா?

2 தூக்கு தண்டனை கொடுப்பதால் , இனி கொலையே நடக்காதா? கொலை என்பது நடக்கத்தான் செய்யும்...தூக்கு அதை நிறுத்தாது...

சிறைதண்டனை என்பது திருட்டை தடுக்காதுதான்.. பேசாமல் சிறை அனைத்தையும் திரை அரங்காக மாற்றி விடலாமா...

3 கொலை செய்யும் அளவுக்கு ஒருவர் துணிகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருப்பார் .. ? அவருக்கு மேலும் கஷ்டம் கொடுப்பதுதான் தூக்கு தண்டனை..

ஆமாமா.. இனிமேல் கொலையாளிகளுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடு வழங்கப்பட்டு, ஊக்க தொகையும் வழங்கப்பட வேண்டும்...

4 தூக்கு தண்டனை கூடாது என மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார்..

ஆமா.. நாங்க அவர் சொன்ன எல்லாத்தையும் கேட்டுட்டோம்... இது ஒண்ணுதான் பாக்கி,,,இதையும் கேட்டு காந்தியின் சிஷ்யர்கள் ஆக போறோம்..

5 மரண தண்டனை என்பது தண்டனை ஏ அல்ல.. அது உலகம் என்ற சிறையில் இருந்து கொடுக்கப்படும் விடுதலைதான்... ஒரு கொலையாளிக்கு தண்டனை வழங்காமல் , விடுதலை வழங்கும் சமூகத்தை என்னவென்று சொல்வது ??

அருமை..அருமை.. இனிமே நாட்டுக்கு நல்லது செய்பவர்கள், அப்பாவிகள், நல்லவர்கள் , கல்லூரி மாணவிகள், பெண்கள் எல்லோருக்கும் இது போன்ற " விடுதலை " அளிக்கவும், கொலையாளிகள் இந்த உலகம் எனும் சிறையில் இருந்து கஷ்டப்படவும் தேவையான சட்ட திருத்தம் செய்ய வேண்டும்...

6 கொலைக்கு கொலை என அரசே இறங்குவது மிருகத்தனம் அல்லவா.. ? அவர்களை திருத்தி நல்வழி படுதுவதுதானே அரசின் வேலை..?


பஸ்ஸில் டிக்கர்ட் எடுக்காமல் அரசுக்கு பண இழப்பு ஏற்படுத்தினால், பதிலுக்கு அபராதம் போட்டு பண இழப்பு ஏற்படுத்தலாமா? அருமை...

******************************************************************************

மனித உயிர் மதிப்பு வாய்ந்தது... எனவே யாராக இருந்தாலும் மனித நேயம் முக்கியம்தான்... ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் நிலையையும் , என் இறந்தோம் என தெரியாமலேயே இறந்தவர்கள் நிலையையும் கொஞ்சம் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும்.. வெறும் அறிவு பூர்வ விவாதங்கள் உதாவாது...

உண்மையான மனித நேயம் , உலகில் மறைந்து வருகிறதோ என தோன்றுகிறது...

Thursday, September 2, 2010

வேலூர் புத்தக கண்காட்சி


Image0020
Originally uploaded by pichaikaaran




Image0009
Originally uploaded by pichaikaaran



Image0008


Image0007


புத்தகம் வாங்க வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்க செய்வது வரவேற்கத்தக்கது...
சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பவர்கள்கூட , வேலூருக்கு சென்று, நெரிசல் இல்லாமல் புத்தகங்கள் பார்வையிட்டு தேவையானதை வாங்க , இந்த கண்காட்சி உதவுகிறது.

தினமும் முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள், இலக்கிய அமர்வுகள் நடக்கின்றன..
வரலாற்று சிறப்பு மிக்க வேலூரை சுற்றி பார்த்து விட்டு அப்படியே புத்தகங்களையும் பார்வையிட்டு , தேவையானதை வாங்கி கொண்டு வரலாம்.
நான் ரொம்ப நாளாக தேடிய புத்தகங்கள் கண்ணில் பட்ட்ன.. தள்ளுபடி விலையில் வாங்கிக் கொண்டேன்..
தேடிய புத்தகங்கள் சில கிடைக்கவில்லை.. அதாவது என் கண்ணில் படும்படி வைக்கப்பட வில்லை... ( ஜெயமோகனின் கொற்றவை , கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம், தாஸ்தயெவ்ஸ்கியின் ஒரு புத்தகம் அங்கு இருந்திருக்க கூடும்.. ஆனால் என் கண்ணில் பட வில்லை )
நான் அவசரமாக இன்னொரு இடம் செல்ல வேண்டி இருந்த்தால் , விசாரித்து வாங்க முடியவில்லை..
அவ்வப்போது மின்சார தடை ஏற்பட்ட்து வருத்தம் என்றாலும், நல்ல முயற்சியை வரவேற்க வேண்டும்...

.

Wednesday, September 1, 2010

ராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா ?

சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரைப் பற்றி பலருக்கு பலவித அபிப்ராயங்கள் இருக்க கூடும். அவர் மேல் பல விமர்சனங்கள் இருக்க கூடும். அதை எல்லாம் மறந்து விட்டு ராஸ லீலா என்ற அவரது நாவலை மட்டும் படித்தால் அது எப்படி இருக்கிறது??

இரண்டு பாகங்கள் கொண்ட பெரிய புத்தகம் இது. முதல் பகுதியில் . கண்ணாயிரம் பெருமாள் என்பவரை பற்றி கதை சொல்லப்படுகிரது.. இரண்டாம் பகுதியில் கண்ணாயிரம் பெருமாள் நமக்கு ஒரு கதை சொல்லுகிறார்.

தபால் துறையில் பணி புரியும் பெருமாள் அங்கு நடக்கும் அடக்குமுறை, ஒழுங்கீனம் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இதை சொல்லுவதுடன் நின்று விடாமல், பின் குறிப்புகள் மூலம் வேறு ஒரு அர்த்த்தை தருகிறது.
அடக்குமுறை , பாசிசம் என்பது நம் ரத்த்தில் ஊறிய ஒன்று. கொடுங்கோல் ஆட்சி நடக்கும் சர்வாதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள் , அவர்களுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. நமக்குள்ளும் அந்த குணம் இருக்கிறது. நம் சக்திக்கேற்ப அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
அலுவலக மேலாளராக, தந்தையாக, கணவனாக, மனைவியாக என எங்கெல்லாம் முடியுமா அங்கெல்லாம் மற்றவரை அடக்கி ஆள முயல்கிறோம். சர்வாதிகாரியால் மற்றவரை கொல்ல முடியும்,. நாம் அப்படி செய்வதில்லை என்பது நாம் நல்லவர் என்பதால் இல்லை. நமக்கு அந்த அளவுக்கு சக்தி இல்லை என்பதால். மற்றபடி நமக்கும் சர்வாதிகாரிக்கும் வித்தியாசம் இல்லை..

கதையில் வரும் இந்திராணி என்ற அதிகாரியால் ஏற்படும் மன உளைச்சலை அதில் வரும் வெளினாட்டு கைதிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் இது புரியும்..

இது ஒரு புறம்..
இன்னொரு பக்கம் பார்த்தால், கட்டற்ற சுதந்திரம். ஒரு காலத்தில் ஒரு பெண்ணை பார்த்து சிரித்து அவள் பதிலுக்கு பார்த்தாலே ஒரு சாதனை..லவ் லெட்டர் கொடுபதெல்லாம் இமாலய சாதனை. இன்று நிலை வேறு.

பார்ப்பது , பழகுவது என்பதெல்லாம் இயந்திரமயமாகி விட்ட்து. ஆனாலும் சிலர் உண்மையாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்... நாம் உண்மையாக ஒருவருடன் பழகுகிறோம். அவரோ கொஞ்சம் பழகி விட்டு, நம்மை உதறி செல்கிறார். இதை நடைமுறையில் அனுபவத்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இரண்டாம் பகுதி நாவலை நன்கு ரசிக்க முடியும்.
உண்மையில் எதற்குமே அர்த்தம் இல்லை.. எல்லாமே ஜஸ்ட் ஒரு விளையாட்டுதான் என தோன்றுகிறது.. அபத்தமான நாடகம்தான்..

ஆனால் இது போன்ற அனுபவங்கள் இல்லாத ஒருவர் இந்த நாவலை படிக்கும்போது , அபத்தமான நாவலாக தோன்றலாம்..
இன்னும் சிலருக்கு இது ஒரு நல்ல ஃபாண்டசியாக தோன்றலாம். விறுவிறுப்ப்பான கவர்ச்சி நாவலாக தோன்றலாம்...

ஆனால் அனுபவித்து நொந்து போனவர்களுக்கு , இந்த நாவல் கண்ணாடியில் முகம் பார்த்து கொள்வது போல தோன்றும்.

மொத்த்தில் இந்த நாவல் எல்லோருக்குமான நாவல் அல்ல... அனைவரும் படிக்க கூடாது..
வாழ்வின் அபத்தங்களை அனுபவித்தவர்கள் படித்து பார்க்கலாம்.
சிறந்த நாவலில் ஒன்று என இதை தமிழ் உலகம் ஏற்குமா என்பது சந்தேகம். சாருவின் நாவல்களை ஒப்பிட்டாலே கூட இதை சீரோ டிகிரிக்கு அடுத்த நிலையில்தான் வைப்பார்கள்.
ஆனால் என்னை பொருத்தவரை இது நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று.
அதற்காக எல்லோரும் படியுங்கள் என சொல்ல வில்லை... படித்துவிட்டு என்னை திட்டாதீர்கள்...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா