Saturday, September 4, 2010

சிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி

டியர் பதிவர் பிச்சைக்காரன்,
உங்கள் எழுத்தில் மயங்கிய கோடிக்கணக்கான ரசிகைகளில் ஒருத்தி மயங்கியவள் நான். உங்களை நேரில் பார்த்தால் .. ( சென்சார் ட் )
என்னதான் நீங்கள் எங்களை திட்டினாலும் எங்கள் நேசம் மாறாது..
ஆயிரம் முத்தங்களுடன்,
நடாலியா ஷரபோவா, மாஸ்கோ, ரஷ்யா...

டியர் ஷரபோவா,
இந்த உண்மை சம்பவத்தை பாருங்கள். அதன் பின் நான் ஏன் கோப்ப்படுகிறேன் என்பது புரியும்.
எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்து விட்ட்தால் யாரையாவது திருமனம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.
தினமும் ஒரு பெண்ணை பார்க்கும் சூழ் நிலை இருந்த்து. அவளிடம் மனதை பறிகொடுத்தேன்.
காதலை சொல்ல தயக்கமாக இருந்த்து. பயமாகவும் இருந்த்து.
எப்படியோ கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு , அவளை தனியாக சந்திக்க விரும்புவதாக சொல்லி விட்டேன்.
ஒரு ஹோட்டலில் அமர்ந்து இருந்தோம்.
மெதுவாக பேச ஆரம்பித்தேன்..
“ உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்.. உங்க பேர் , முகவரி சொன்னால் வீட்டில் வந்து பெண் கேட்கிறேன். பிடிக்கவில்லை என்றால் நண்பர்களாக பிரிந்து விடுவோம்” என்றேன் .
அவள் காலில் இருந்து செருப்பை கழட்டி பளார் என அறை விட்டாள். கூட்டம் கூடி விட்ட்து..
என்ன ஆச்சு என அவளிடம் கேட்டார்கள்.
“ பாருங்க சார்.. கல்யாணம் ஆகி இத்தன நாள் கழிச்சு என் பெயர் என்ன்னு கேட்குறாரு. கட்டின பொண்டாட்டிக்கே லவ் லெட்டர் தர்ராரு.. இவரை அடிச்ச்து தப்பா ? “
நான் இந்த அளவுக்கு உலகையே மறந்து இலக்கியப்பணி செய்கிறேன்.. என்னை கிண்டல் செய்தால் கோபம் வருமா வராதா..?

ஞாயிற்று கிழமை கூட ஓய்வெடுக்காமல் எழுதுவது என் வழக்கம். ஒரு நண்பன் அவசரமா வா.. பார்க்கணும் என்றதால் அவன் வீட்டுக்கு போனேன்.
நான் போன நேரத்தில் அவன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அவனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..
“ உன்னையும் சாப்பிட கூப்பிட ஆசை.. ஆனால் கூப்பிட்டால் சாப்பிடவா போற? “
“ நான் வேண்டாம்னு சொன்னாலும் நீ விட்டுடவா போற ? “
“ நான் வற்புறுத்துனாலும், சாப்பிட்டுட்டுதான் வர்ரேன் அப்படீனு சொல்லிடுவ.. உன்னை கஷ்டப்படுத கூடாது . “
“ நான் சாப்பிடுடுதான் வந்தெனு ஃபார்மாலிட்டுக்கு சொன்னா கூட . அட்லீஸ்ட் லெக் பீஸா வது சாப்பிடுனு சொல்லுவியே .. பாசக்கார பையண்டா நீ “
“ ஆமா. அப்படி சொல்ல ஆசைதான்,, ஆனா, சாப்பாடு இல்லாம லெக் பீஸை மட்டும் கொடுக்க சங்கடாமா இருக்குமே பார்க்குறேன் “
இப்படியே இரண்டு மணி நேரம் சென்றது. கடைசியில் தண்ணீர் கூட தராமல் அனுப்பி வைத்தான்.
ஞாயிற்று கிழமை ஆகி விட்டாள் பிச்சைக்காரன் என்ற இந்த கி பு வின் ( கிறுக்கு புண்ணாக்கின் ) நினைவு வந்து போன் போட்டு விடுகிறார்கள்
இலக்கியவாதிக்கு இதுதான் மரியாதை.. எத்தனுக்கு எத்தனாக இருக்கிறார்கள்.
ஒரு கதை..

ஒரு பெண் கடவுளுக்கு தொண்டாற்ற போகிறேன் என சொல்லி விட்டு கல்யானம் செய்து கொள்ளாமல் இருந்தாள். யாரும் தன் முகத்தை கூட பார்க்க கூடாது என முகத்தை மூடியே இருப்பாள். அவளை அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்டான் ஒருவன்.
எப்படி என புரியாமல் தவித்தான். அவன் ஏக்கத்தை புரிந்து கொண்ட பொறுக்கி ஒருவன் ஐடியா கொடுத்தான்.
”நீதான் கடவுள் என அவளை நம்புமாறு செய்து விடு.. அவள் உன் ஆசைக்கு இணங்கி விடுவாள்.”
நல்ல யோசனையாக தோன்றியது..
அன்று இரவு அவள் தனியாக முகத்தை மூடியபடி வந்து கொண்டு இருந்தாள். இவனும் முகத்தை மூடிக்கொண்டு அவள் முன் சென்றான்.
“ நான் தான் கடவுள். உன் பக்தியை மெச்சினேன். அதுதான் உன் முன் வந்தேன். என் ஆசைக்கு இணங்கு ” என்றான்..
“ சரி கடவுளே.. ஆனால் என் கன்னித்தன்மையை இழக்க விரும்பவில்லை. அதனால் என் ”பின் வாசலை” பயன்படுத்தி உங்கள் ஆசையை தீர்த்து கொள்ளுங்கள் “ என்றாள்.
அவனும் அப்படியே செய்தான்.
செய்து முடித்த்தும், வெற்றி புன்னகையுடன் சொன்னான்.
“ நான் கடவுள் இல்லை. உன் பின் சுற்றிய வாலிபன் ..ஹா ஹா “
அவள் சொன்னாள்.
“ நானும் அந்த பெண் இல்லை.. உனக்கு ஐடியா கொடுத்த பொறுக்கி ..ஹாஹா “

2 comments:

  1. எப்படி இப்படி எல்லாம் ....

    ReplyDelete
  2. ”எப்படி இப்படி எல்லாம்’

    அதுவா வருது.. ஹி ஹி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா