Sunday, October 17, 2010

ஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி?



வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வீண் பேச்சு.. ஜெர்மனி கலாச்சாரம்தான் சிறந்த்து என ஜெர்மன் அதிபர் அறிவித்து இருப்பது , ஜெர்மன் மீண்டும் ஹிட்லர் கால ஃபாசிச பாதைக்கு திரும்புகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
பல நம்பிக்கை, கலாச்சாரம் கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்வது அழகானது... ஒரே மாதிரி இருந்தால் போரடிக்கும் என இயற்கையே இப்படி அமைத்து வைத்து இருக்கிறதோ என்று கூட தோன்றும்..
ஆனால் பாசிச வாதிகள் எல்லா இட்த்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக கிறிஸ்தவர்கள் நட்த்தும் தொழிற்சாலைகளில் கூட , மற்றவர் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து நேற்று ஆயுத பூஜை கொண்டாடினார்கள்.. அந்த் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கிறிஸ்தவ்ர்கள், தமக்கு உதவும் கருவிகள், ஆயுதங்களுக்கு மரியாதை செய்கிறோம் என அதை எடுத்து கொண்டார்கள்.. சாமி கும்பிட அவர்களை இந்துக்களும் வற்புறுத்தவில்லை.. ஆனாலும் ஒன்றாக கொண்டாடி, பிரசாதங்களை இந்துக்களும், அதை தொழிற்சாலை தரும் இனிப்பாக , உணவாக கிறிஸ்தவர்களும் எடுத்து கொண்டார்கள்..
இதே போல கிறிஸ்தவ நம்பிக்கை இல்லாத இந்துக்களும் , கிறிஸ்துமஸில் உற்சாகமாக கலந்து கொள்வது இயல்பு..
ஆனாலும் ஒரு சிலர், எனக்கு சாமி நம்பிக்கை இல்லை.. நீயும் கும்பிட கூடாது என தம் விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பவ்ர்களும் உண்டு..ஆனால் இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், பெரிய பிரச்சினைகள் இல்லை..
ஆனால் ஜெர்மனியை பொருத்தவரை, என் கலாச்சாரம்தான் சிறந்த்து..மற்றவரை கொல் எனும் ஹிட்லரின் ஃபாசிசம் பெரிய வரவேற்பு பெற்று இருந்த்தும், அதனால் ஏற்பட்ட அழிவுகளும் பழைய கதை..
ஆனால் வரலாறு திரும்புகிறது என்ற கதையாக, வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஜெர்மனியில் தோல்வி அடைந்து விட்ட்து..மீண்டும் ஜெர்மனி ஜெர்மானியருக்கே என்ற பாதைக்கு திரும்ப வேண்டும் என அதன் அரசு தலைவர் ( நம்ம ஊர் பிரதமர் பதவிக்கு இணையான் பதவி ) அங்கீலா மேக்க்ள் (Angela Merkel) அறிவித்து இருப்பது அங்கு இருக்கும் சிறுபான்மை இன , மொழி மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது..
மற்ற மக்களால் , ஜெர்மன் மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்க படுகிறது என்று பரவலான கருத்து அங்கே உருவாக்கி வருகிறது- அல்லது உருவாக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தனது கட்சி கூட்ட்த்தில் பேசிய அவர் , “ 1960 களில் வெளி நாட்டினர் இங்கே வர அனுமதிக்க தொடங்கினோம்.. வேலை முடிந்த்தும் சென்று விடுவார்கள் என நம்மை நாமே ஏமாற்றி கொண்டோம்.. ஆனால் அப்படி நடக்கவில்லை.. சரி, அனைத்து இன மக்களும், இணைந்து வாழ்வோம்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என எண்ணினோம்.. ஆனால் அது தோல்வி அடைந்து விட்ட்து..
இதை முறைப்படுத்த வேண்டும் என பேசி இருக்கிறார்..
பலர் இணைந்து செயல்படுவ்தால்தான், ஜெர்மனி அபார முன்னேற்றம் கண்டு வருகிறது.. எனவே வெளி நாட்டினர் குடியேறுவது ஜெர்மனிக்கு நல்லதுதான்..அதை அவரும் அறிவார்..
ஆனால் தேர்தல் வர இருப்பதால் இப்படி பேசுகிறார் என்கின்றனர் பார்வையாள்ர்கள்..
தற்காலிக லாபம் தரும் துவேஷ பேச்சுக்கள்தான், நீண்ட கால தீமையை ஏற்படுத்துகின்றன என்பதுதான் வரலாறு.
ஆனாலும் அரசியல்வாதிகள், எல்லா இட்த்திலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது , ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்த்தான் செய்கிறது

Saturday, October 16, 2010

கொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா ? அசத்தும் தொழில் நுட்பம் !

கொடி அசைந்த்தும் காற்று வந்த்தா,,, காற்று வந்த்தால் கொடி அசைந்த்தா என்பது ஒருபக்கம் இருந்தாலும் , கொடி அசைவதால் மின்சாரம் உருவாக்க முடியும் என்கிறது ஒரு அமெரிக்க் நிறுவனம்..

இது இயற்கையான கொடி அல்ல... மின்சாரம் தயாரிப்பதற்கென்றே உருவாக்கப்படும், 180 அடி உயரமுள்ள கார்பன் ஃபைபர் தண்டுகள்... உரமான புல் போல இருக்கும்.. காற்றில் இவை அசையும்போது மின்சாரம் உருவாகும்..

காற்றாலைகளை பார்த்து இருப்பீர்கள்.. பெரிய மின்விசிறி போல இருக்கும்.. காற்றில் இது சுற்றும்போது மின்சாரம் உருவாகும்... இது நல்ல முறைதான் என்ராலும், உராய்வால் ஏற்படும் மின் இழப்பு , சத்தம், மெயிண்டன்ன்ஸ் வேலைகள் என சில பிரச்சினைகளும் உள்ள்ன.. ( தென் மாவட்டங்களில் இவற்றின் பயன்பாடு அதிகம்.. )

windstalk-825x525 

1 புதிய தொழில் நுட்பம்..

 

windstalk-park-825x425

2 சுற்ற வேண்டாம்.   அசைந்தால் போதும்

 

 

 windmill

3 . தற்போதுள்ள காற்றாலை

இந்த பிரச்சினைகள் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க இந்த புதிய முறை உதவும்..

கிட்ட்த்தட்ட 60 அடி அகலமுள்ள கான்கிரீட் அடித்தளத்தில் இந்த மாபெரும் உயரமுள்ள கார்பன ஃபைபர் “ புல் “ நடப்படும் .. 180 அடி உயரமுள்ள , இது போன்ற 1200 புல்கள் தேவை ..

காற்றினால் அசையும்போது மின்சாரம் உண்டாகும்... இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஜெனரேட்டர்கள் ஒவ்வொரு புல்லின் அடியிலும் பொருத்தப்பட்டு இருக்கும்..

சத்தம் இல்லாமல் மின்சாரம் உருவாகும், புல்லின் எண்ணிக்கையை , அடர்த்தியை அதிகரித்து , அவுட்புட்டை அதிகரித்து கொள்ளலாம் போன்று பல அனுகூலங்கள் உள்ளன..

இதே போன்ற அமைப்பை கடலுக்கு அடியில் பொருத்தி , நீரோட்ட்த்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சியும் நடந்து வருகிறது..

சோதனை நிலையில் இருக்கும் இந்த ஆய்வுகள் நடைமுறைக்கு வரும்போது , மின்சார தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படும் வாய்ப்பு இருக்கிரது..

அதுவரை, மின் தடையை சகித்து கொள்ள வேண்டியதுதான்...

Friday, October 15, 2010

பரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது வந்தோருக்கு மட்டும்

இனிய பதிவர் பிச்சைக்காரனுக்கு...

பரப்பெழுத்து பற்றி பரபரப்பாக எழுதி இருந்தீர்கள்...பரப்பெழுத்து என்ற வார்த்தை பிரயோகம் சரியா என்பது என் கேள்வி.. பிரச்சாரம் என்பதை வேண்டுமானால் பரப்பெழுத்து என சொல்ல்லாம்.. பாப்புலர் எழுத்து என்பதற்கு மாற்றாக பரப்பெழுத்தை எப்படி பயன்படுத்த முடியும் ?

சைலஜா, தமிழ் வளர்ச்சி துறை, ஆர்ட்டிகா..

அன்புள்ள சைலஜா..

பரப்பெழுத்து குறித்த விவாத்த்தில் உங்கள் கருத்து பொருட்படுத்த தக்கதல்ல.. உங்கள் கருத்தை வைத்து விவாதம் செய்யும் அளவுக்கு ஒரு கருத்து சொல்ல வேண்டுமானால் பயிற்சி தேவை..அது உங்களிடம் இல்லை..

ஆனாலும் என் கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்..

ஒரு எழுத்து பிரபலமாக இருக்க வேண்டும் என்றால் , அதை மக்கள் விரும்பவேண்டும்.. பிரச்சாரம் என்பதை மக்கள் விரும்பாமல் போக வாய்ப்புண்டு..அது பரவலாக மக்களை அடையாமல் போக கூடும்.. எனவே அதை பரப்பெழுத்து என சொல்ல முடியாது..

எந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் , தப்பும் தவறுமாக எழுதப்படும் எழுத்துக்கள், பாலங்களுக்கடியில் பல்வேறு துர் நாற்றத்தை சகித்து கொண்டு எழுதப்படும் எழுத்துக்கல், கழிவறை சுவரில் எழுத்தப்படும் எழுத்துக்கள் ஆகிவைதான் மக்களை ரசிக்க தூண்டுகின்றன...

எனவேதான் சோவியத் கலை சொற்களிடம் இருந்து கடன் வாங்கி இதற்கு பரப்பெழுத்து பெயர் வைத்தேன்..

பரப்பெழுத்து ரசிகர் ஒருவர் முக்கிய்மான கருத்தை முன்வைத்தார்.. பரப்பெழுத்தை உருவாக்குவது யார் என கண்டு பிடிக்க முடியாது என்பது அவரது அபார கண்டுபிடிப்பு..

தனக்கு பாராட்டு கிடைக்காது என தெரிந்திருந்து ம், அந்த முகம் தெரியாத எழுத்தாளர்கள் தம் பணியை செவ்வனே செய்வது பாராட்டுக்கு உரியது...

lib1 lib2 parapp paraopo

 

 

 

 

1. பறந்த அறிவை பெற நூலகம் உதவுகிறது…

         அறிவு எப்படி பறக்கும்? பரந்த அறிவை சற்று மாற்றி நகைசுவை ஏற்படுத்துவது எழுத்தாளரின் திறமை..

2. நூல்களால் நைந்த , நேயங்கள் தைப்போம்..

நூல்களால் , நேயம் எப்படி நைந்து போகும்… நைந்த நேயத்தை நூல்களால் தைப்போம் என்பதுதான் இப்படி மாறி இருக்கிறது என்பதை சொல்லி தருவதுதான் இலக்கியம்

3. இங்கு சுத்தம் செய்யாதீர்கள்..

அசுத்ததின் “அ “ வை அழித்தது, பரப்பெழுத்து திறன்

4 பரப்போவியம்

 

5. பின் நவீனத்துவ பரப்பெழுத்தை ரசிக்கும் பக்குவம் இன்னும் நம் மக்களுக்கு வரவில்லை என்பதால், படங்களை சென்சார் செய்து விட்டு கருத்தை மட்டும் தருகிறேன்…

 

அ. உலகிலேயே விபச்சார தொழிலில் மட்டும்தான், அனுபவம் இல்லாதவருக்கு டிமாண்ட் அதிகம்..

ஆ. ஒரு விபச்சர விடுதி வாசகம் : இங்கு திருமணமானவர்களுக்கு அனுமதி இல்லை… தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம்.. ஆசைகளை அல்ல

இ பெருங்காற்றில், அழகு பெண்ணின் ஆடை விலகினால், அதிர்ஷ்டம்.. அதே காற்றில் உன் கண்ணில், அதே நேரம் தூசி விழுந்தால்., துரதிஷ்டம்..

ஈ நானோ காரின் இரு பிரச்சினைகள்.. கர்ப்பிணி பெண்ணை அதில் உட்கார வைக்க முடியாது.. ஒரு பெண்ணை கர்ர்ப்பிணி ஆக்க அந்த காரில் முடியாது

சிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )

 

சட்டசபையில் இருந்த அனைவரும் நம்ப முடியாமல் திகைத்தனர்.. நடக்கவே முடியாத ஒன்று நடந்து விட்ட்து..

ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்து அரசு தப்பிக்கும் என்று ஒரு குழந்தை கூட நம்பி இருக்காது..

220 பேர் கொண்ட சட்ட சபையில் , 150 எம் எல் ஏக்களுடன் மெஜாரிட்டியாக இருந்த அரசு , 60 பேர் பிரிந்து சென்றதால் சிக்கலுக்கு உள்ளானது..

அவர்களை கட்சி தாவல் தடை சட்டம் எதுவும் செய்ய முடியாது.. கட்சி உறுப்பினரில் மூன்றில் ஒரு பங்கினர் பிரிந்து சென்றால் அது கட்சி பிளவாக கருதப்ப்படும்.. கட்சி தாவல் அல்ல...

பேரம் பேச வழியில்லாமல் அனைவரும் வெளி நாடு சென்று விட்டு வாக்களிக்கும் தினம் நேரடியாக சட்டசபைக்கு வந்தனர்,,,

எனவே அரசு கண்டிப்பாக கவிழும் என டி வி சானலகள் முடிவு செய்து மாற்று அரசு குறித்து ஊகங்கள் வெளியிட ஆரம்பித்தன..

விவாதம் தொடங்கியபோது, எதிர்கட்சியை விட காட்டமாக பேசினார்கள் கட்சி மாறிகள்.

முதல்வர் தவறிழைக்கிறார்.. பதவி விலகுதல் அவர் செய்யும் ஒரே நல்ல காரியமாக இருக்கும் என்றனர்..

கடைசியில் முதல்வர் பேசினார்..

எப்போதும் அமைதியாக இருக்கும் அவர் , கைகளை ஆட்டியும்., மேஜையை குத்தியும் ஆவேசமாக பேசினார்..

மக்கள் என்றும் என் பக்கம் என் சூளுரைத்தார்..

கடைசியில் வாக்கெடுப்பு...

குரல் வாகெடுப்பு அல்ல.. அனைவருக்கும் எலெக்ட்ரானிக் மெஷினில் வாக்களிக்கலாம். முடிவு உடனே தெரியும்..

எதிர்கட்சியினர் பட்டாசு வெடிக்க ஆயத்தமானார்கள்..

ஆளுங்கட்சியினருக்கு சுரத்தே இல்லை... துரோகிகளை திட்டி அறிக்கை விட ஆயத்தமானார்கள்..

முடிவு திரையில் வந்த்து..

சபா நாயகரே திகைத்து விட்டார்...

அரசுக்கு ஆதரவு – 150

எதிர்ப்பு - 70

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி..

அரசு பிழைத்தது...

யாராலும் நம்ப முடியவில்லை... முதல்வர் மட்டும் அமைதியாக இருந்தார்..

********************************************************************************8

“ உன் புன்னகை, பொன் நகையாக ஒளி வீசுதே.. ப்ளீஸ்.. ஒண்ணே ஒண்ணு இச்சு கொடேன் “ வழக்கமான காதலன் போல கெஞ்சினான் சிவா..

” எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் “ பழைய கால காதலிகள் போல பிகு செய்தாள் காமினி...

” இந்த சட்டசபை மேட்டரை முடிச்சுட்டு , உடனே உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்க போறேன் “

“ ஆமாம்பா.. இந்த மேட்டர்ல என்ன மாயாஜாலம் நடந்த்து,, ஒன்னும் புரியல.. இதை மட்டும் கண்டு பிடிச்சா, தேசிய அளவுல பரபரப்பு ஏற்படும் . ஆனா நீ வேலை வேலைனு அலைய்றது எனக்கு சுத்தமா பிடிக்கல“

சிவா ஒன்றும் பேசாமல் சட்டசபை விவாதங்களை டிவிடி யில் பார்த்துகொண்டிருந்தான்..

வழக்கத்துக்கு மாறாக முதல்வர் ஆவேசமாக பேசுவது கவனத்தை கவர்ந்த்து,,,

கையை ஆட்டி பேசுவது அதீதமான நாடக பாணியில் இருந்த்து..

அவர் பேச பேச , அதிருப்தி கோஷ்டி தலைவரின் முகம் மாறுவது இன்னும் ஆச்சர்யம் அளித்த்து.. முதல்வரின் பேச்ச்சை கேட்டு மனம் திருந்துகிறார் என நினக்க அவன் அப்பாவி அல்ல..

மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தான்.

திடீரென மின்னல் வெட்டியது,..

“ காட்..இப்படியும் நடக்குமா ? “ அதிர்ந்தான்..

“ காமினி.. ஆள் சிக்கிட்டார்” கூச்சலிட்டான்..

“ என்ன ஆச்சு ? “

“ முதல்வரின் கை , அதிருப்தி தலைவரை நோக்கி சைகை செய்வதை பார்த்தாயா ? “

காமினியும் கவனித்து விட்டாள்..” அவர் கையில் அணிந்திருக்கும் உலகிலேயே காஸ்ட்லியான வைர மோதிரத்தையும் கவனித்தேன் “

******************************************************************************

அதன் பின் அடுத்த நடவடிக்கைகளை திட்டமிட்வது மளமள வென நடந்த்து..

” உலகிலேயே புகழ் பெற்ற வைரம் மயிலாசனத்தில் இருந்து துண்டாடப்பட்டவைதான்.. அது முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து விடைபெற்றது.. அதன் பின் பல கை மாறி அது எங்கிருக்கிறது என்பது தெரியாமல் இருந்த்து... சிறிய துண்டு கிடைத்தால் கூட கோடிக்கணக்கில், நம்பவே முடியாத தொகைக்கு விலை போகும்..

இந்த நிலையில்தான் வெளினாட்டு அதிபர் ஒருவர் பரிசாக முதல்வருக்கு அதை அளித்தார்,,, ஆனால் அது அரசுக்குதான் சொந்தம்.. முதல்வர் என்ற முறையில் மட்டும் அதை அவர் பயன்படித்தி கொள்ளலாம்.. பதவி முடிந்த்தும் அரசிடம் ஒப்படைதுவிட்டு செல்ல வேண்டியதுதான்..

ஆனால் இதை ஆட்டையை போடுவதில்தான் முதல்வருக்கும் , உள்துறை அமைச்சருக்கும் பிரச்சினை ஏற்பட்டு ஆட்சி கவிழ்ப்பில் முடிய இருந்த்து..

ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் சுதாரித்துகொண்டார்..

சட்டசபை உரையில் பேசும்போது ‘ என்னை நம்பிய மக்களை கைவிட மாட்டேன்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் “ என சாடையாக பேசி, ஆக்‌ஷனையும் காட்டி காரியத்தை நிறைவேற்றி கொண்டார்..

இப்போது நாம் செய்ய வேண்டியது, அந்த வைரம் அரசு கருவூலத்தில் இல்லை என நிரூபிப்பதுதான், அந்த வைரம் உள்துறை அமைச்சர் வசம் இருந்தால் அதை திருடினாலும் தவறில்லை...

ஆளுனர் பரந்தாமன் நேர்மையானவர்.. அவரிடம் இந்த ஆதாரத்தை காட்டினால் போதும் .. அவருக்கு இந்த சந்தேகம் உண்டு .. ஆனால் ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் ”

மூச்சு விடாமல் பேசி முடித்தான் சிவா..

ஒரு நிருபரை காதலித்த்து தவறோ என நினைக்க தொடங்கினாள் காமினி..

*************************************************************************************

” ஆமா காமினி... நான் உனக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கேன்.. ஆனால் நீ ஒரு நிருபனை காதலிச்ச,, அவன் உன்னை விட வேலையைத்தான் முக்கியமா நினைக்கிறான்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. என் இதய வாசல் உனக்காக திறந்துதான் இருக்கு “

கல்லூரி நண்பன் விமல் உருகி பேசுவதை உணர்ச்சி எதையும் காட்டாமல் கவனித்தாள் காமினி...

“!புதிய மனிதா ..பூமிக்கு வா “ செல்போன் கொஞ்சியது.. சிவாதான்,,,

“ காமினி... முக்கிய்மான விஷ்யம்.. இப்பத்தான் தெரிய வந்த்து.. உள்துறை அமைச்சரிடம் இருந்து வைரம் திருடு போயிருச்சு.. சிலரை சந்தேகப்பட்றாங்க.. ஆனால் திருடனுக்கு தேள் கொட்டுன கேஸ்..

விஷ்யத்தை வெளியே சொல்லாம போலிஸ் தேடுது.. அவங்களுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்.. ஏதாவது துப்பு கிடைத்தா சொல்லு..

அரசு சொத்தான வைரம் தொலைந்த்தை , ரிக்கார்டில் காட்டாத்து பெரிய குற்றம்.. இதை கிண்டினா பல மேட்டர் வெளியே வரும் “

பதிலை எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தான் சிவா..

” என்ன டியர்,,,எனி பிராப்ளம் “ என விமல் கேட்ட்தும்தான் , அவனும் உரையாடலை கேட்டு இருப்பான் என்பது அவளுக்கு புரிந்த்து..பரவாயில்லை.. பாதகம் இல்லை... அவன் உதவ கூடும்..

சுருக்க்மாக சொன்னாள்..

அவனுக்கு பல தொடர்புகள் உண்டு.. எனவே அவனுக்கு இது ஆச்சர்யமாக இல்லை..

மாறாக அவன் சொன்ன தகவல், காமினிக்கு ஆச்சர்யம் அளித்த்து.. யோசிக்க தொடங்கினாள்..

****************************************************************

” ஹலோ ..இன்ஸ்பெக்டர்... நான் காமினி பேசறேன்.. அமைச்சரோட பி ஏ தான் வைரம் திருடி இருக்கான்.. இதை வைத்து பிளாக் மெயில் அரசியல் செய்வது அவன் திட்டம்... சீக்கிரம் ஆக்‌ஷன் எடுங்க.. உண்மை தெரிஞ்ச எனக்கும் ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்க “

அவசரமாக பேசி முடிக்கவும், சிவா அவள் அறைக்கு வரவும் சரியாக இருந்த்து..

“ சபாஷ்... சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்னை நம்பாதேனு சொன்னது சரிதான்... உனக்கு தெரிஞ்ச விஷய்த்தை எனக்கு சொல்லாம போலிசுக்கு சொல்றியா..துரோகி,,”

அவள் விளக்கம் அளிப்பாள் என நம்பியதற்கு மாறாக, அவள் புயல் போல வெளியே ஓடினாள்...சுதாரிப்பதற்குள் , ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து விட்டாள்.

“ ஏய் .. நில்லு “ ஓடினான் சிவா

**************************************************************************

சென்னையின் முக்கியமான இட்த்தில் இருக்கும் மருத்துவமனை...

” அய்யோ..அவள் இப்ப்டி பேய் போல வண்டியை கிளப்பும்போதே நினைத்தேன்..ஏதாவது ஆகும் என்று... விபத்தில் சிக்கி விட்டாளாமே... என் வண்டி பஞ்சர் ஆனதால் தொடர முடியவில்லை “ புலம்பினான் சிவா..

“ விமல்னு ஒருத்தர் தான் வந்து அவங்களை அட்மிட் செஞ்சாரு,,, இப்ப பரவாயில்லை சார் “ நர்ஸ் சொல்ல “ விமல்..ம்ம்ம்.. அவன் தான் அவளின் மன மாற்றத்துக்கு காரணமா ..? “ பல்லை கடித்தான் சிவா..

“ மிஸ் காமினி.. உங்க பல் டேமேஜ் ஆயிடுச்சு .. வேற ஒண்ணும் பெரிய பிராப்ளம் இல்ல,,, “

டாக்டர் சொன்னார்.

“அமைச்சரோட கார் டிரைவர் எப்படி இருக்கார் ? “ சைகையில் காமினி கேட்டாள்..

” சாரி,,காப்பாத்த முடியல.. ஒகே காமினி... நான் கிளம்புறேன் “ டாக்டர் கிளம்பினார்..

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

*********************************************************************

“ என்ன ..காமினியை காணோமா... “ அதிர்ந்தான் சிவா..

” காதலனை பார்க்க போய் இருப்பா” விமல் வீட்டை நோக்கி சிவாவின் கார் சீறியது..

வீட்டில் விமல் இல்லை.. ஆனால்....

... காமினி இருந்தாள்... வாயில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்த்து..

பல்லை கடித்தான் சிவா..

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.”

”ப்ளீஸ்.. நான் சொல்றதை கேளுங்க” அவள் கண்கள் கெஞ்சின..

“ சாவுடீ நாயே” அவன் விசையை அழுத்தும் முன், போலிஸ் நுழைந்தது..

சட் என துப்பாக்கியை மறைத்தான் சிவா..

“ மேடம்.. உங்க உயிரை பணயம் வைத்து துப்பு கொடுத்தீங்க... நன்றி... ஆனால் அந்த பி ஏ வைரம் திருடல.. சும்மா நகை, பணம்னு திருடி இருக்கான்.. எனிவே அவனை கைது செஞ்சுட்டோம்..

வைரம் பத்தி துப்பு கிடைத்தாலும் சொல்லுங்க.. யாருக்கும் பயப்படாதீங்க.. உங்க பாதுகாப்புக்கு போலிஸ் இருக்கும் “

” அரசுக்கு எதிராக சதி செய்வதை தடுக்குமாறு கவர்னரிடம் மனு கொடுக்கனும் .. அவர் அப்பாயின்மெண்ட் கூட இருக்கு “ காமினி எழுது காட்டினாள்..

“ இவங்களை போலிஸ் பாதுகாப்போடு அழைத்து போங்க “: உத்தரவு வர, போலீஸ் ஜீப் கவர்னர் மாளிகை நோக்கி விரைந்த்து.. காமினியுடன் சிவாவும்...

ஆளுனர் பரந்தாமன் அன்புடன் வரவேற்றார்..

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“ அவங்க பாதுகாப்போட்த்தான் வர்றேன்” காமினி வாய்திறந்து பேச ஆச்சரியமாக பார்த்தான் சிவா,,

“ என்ன அப்படி பார்க்கறீங்க,,, என் நண்பன் விமலும் வைரத்தை கைப்பற்ற முயன்று இருக்கான்,, உங்களை விட பெரிய ஆள் ஆகணும்ங்ற வெறி..

அமைச்சரோட கார் டிரைவர் மூலம் திருடி இருக்காங்க.. ஒரு ஆக்சிடண்ட்ல அவன் மாட்டி உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தான்..அதே ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி , டாக்டர் உதவியோட டிரைவரிடம் இருந்த வைரம் என் கைக்கு வந்துடுச்சு..

போலிஸ் கவனத்தை திசை திருப்ப, துப்பு கொடுக்குற மாதிரி பி ஏ வை போட்டு கொடுத்தேன்,,

விமலோ , நீங்களோ இன்வால்வ் ஆக முடியாது,, ஏன்னா , போலிஸ் பார்வை உங்க மேலையும் இருக்கு. சோ, நானே இதை செஞ்சு முடிச்சேன் “

அவள் புன்னகைக்க, அவள் புன்னகை பொன் நகையாக இல்லாமல், வைர நகையாக , ஜொலித்தது.. வைர பல்லை கழட்டி ஆளுனரிடம் கொடுத்தாள் காமினி...

ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )

காமினியின் புத்தகத்தில் இருந்து விழுந்த அந்த பேப்பர் , சிவாவின் கண்களை கவர்ந்தது..

அதில் ஏதோ விஷ்யம் இருக்கிறது.. அவன் போலீஸ் மூளை அபாய ஒலி எழுப்பையதை மதித்து அந்த பேப்பரை எடுத்தான்..

என் இதயமே... இன்னும் எத்தனை நாள் நாம் பிரிந்து இருப்பது...

நான் ஒரு மெழுகு வர்த்தி...

நீ வந்து அணைக்கும் வரை

அழுது கொண்டே இருப்பேன்..

 

உன் நினைவில் உயிர் வாழும்,

உன் உயிர் “

படித்து முடித்த்தும் சிவாவின் ரத்தம் கொதித்த்து..

ஒரே தங்கை என அன்பை கொட்டி வளர்த்தால் , என்னையே ஏமாற்றுகிறாளா? அவளுக்கு என மாப்பிள்ளை பார்த்து , எல்லாம் கூடி வரும் நேரத்தில் லவ்வா?

அந்த மாப்பிள்ளைக்கு இவள் புகைப்பட்த்தை பார்த்தே பிடித்து விட்ட்து..எப்ப கல்யாணம் என அவசரப்படுகிறான்.. அவன் வீட்டாருக்கும் பரம திருப்தி..

மாப்பிள்ளை வீட்டார் என்ன நினைப்பார்கள்.. அட்லீஸ்ட் இதை முன்பே சொல்லி இருக்கலாமே..

நல்லவனை காதலித்து இருந்தால் நானே முடித்து வைத்து இருப்பேனே.. காதலுக்கு நான் எதிரி இல்லையே...

போலிஸ்கார இதயத்திலும் காதல் கசியும் என்பது ஷீலாவை கேட்டால் தெரியுமே... இது போல எத்தனை கடிதங்கள் அவளுக்கு எழுதி இருப்பேன்..

**************************************************************************************

மறுபடியும் சிவாவிடமிடம் இருந்து இ மெயில்..

ஷீலா தலையை பிடித்து கொண்டாள்.. தலைவலி...

” நான் உன்னை விரும்புகிறேன்.. நீயும் என்னை விரும்பியே ஆக வேண்டும்” இதுதான் கடிதங்கள் , மெயில்கள், எஸ் எம் எஸ் அனைதுக்குமான் ஒரே பொது மொழி.. வேறு வேறு வார்த்தைகளில் இதைதான் சொல்கிறான்..

விருப்பமின்மையை பல முறை சொல்லியும் புரிந்து கொள்ள மறுக்கிறான்..

காதல் என்பது மற்றவர் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல்.. எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துதல் என புரிந்து கொள்ளாமல், மிரட்டுகிறான்.. என்னை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்ய நினைத்தால், உன் குடும்பம் அனைவரையும் , பொய் வழக்கு போட்டு உள்ளெ தள்ள முடியும்

**************************************************************************

“ ஆமாண்ணா.. நான் ஒருவரை காதலிக்கிறேன் ,,.. அவரைத்தான் திருமனம் செய்ய விருப்பம்... இதை நீங்கள் ஏற்கத்தால் , தற்கொலை செய்து கொள்கிறேன் “

கடித்த்தை பார்த்த உடனேயே , காமினியை மருதுவ மனையில் சேர்த்த்தால், உயிருக்கு ஆபத்து வரவில்லை...

எதேச்சையாக வீட்டுக்கு வந்த பழைய பள்ளி ஆசிரியர் பரந்தாமன் தான் பேருதவியாக இருந்தார்..

“ ரொம்ப நன்றி சார்.. ஆமா என்ன விஷ்யமா வீட்டுக்கு வந்தீங்க..?’

சிவா அன்புடன் கேட்டான்.

“ என் பையன் கல்யாண விஷ்யமா பேச வந்தேன் பா.. சரி இன்னொரு நாள் பேசலாம் “ விடை பெற்றார்..

அந்த மருதுவ மனையில் நர்ஸ் ஆக பணியாற்றும் ஷீலா அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து சுறுசுறுப்பாக பனியாற்றிய நேர்த்தி சிவாவை கவர்ந்த்து...

 

தன் செல் போன் மெசேஜை அப்போதுதான் ஷீலா பார்த்தாள்.

“ இனியும் என்னால் காத்து இருக்க முடியாது... நாளை உன் வீட்டுக்கு வந்து நிச்சயம் செய்ய போகிறேன்.. நீயோ குடும்பத்தாரோ எங்கும் போக முடியாது.. வீட்டை சுற்றிலும் என் ஆட்கள் இருக்கிறார்கள் “

அதிர்ந்தாள்..

காமினியை சோதித்த டாக்டர் , திருப்தியுடன் அந்த இட்த்தை வீடு அகன்றார்.. நாளை டிஸ்சார்ஜ் செய்து விடலாம்..

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

” நீ இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க்றது எனக்கு பயமா இருக்குமா.. உன் அண்ணனை எதிர்த்து இந்த கல்யாணம் நடக்காது மா.. என் பையனும் எங்க குடும்பமும் கொடுத்து வச்சது அவ்வளவுதானு நினச்சுக்க்றேன் . உனக்கு எந்த ஆபத்தும் வர கூடாதுமா... உன்னை கஷ்டப்படுத்தி என் பையன் நல்லா இருக்கணும்னு அவசியம் இல்லை “ கண்ணீர் விட்ட பரந்தாமனை அன்புடன் பார்த்தாள் காமினி..

குடும்பமே ஒரு பெண் மீது அன்பு செலுத்தும் ஆச்சர்யம்... பிரமிப்பாக இருந்த்து..

”இந்த கல்யானம் கண்டிப்பா நடக்கும் . அண்ணனை மீறி நாளக்கி வந்துட்றேன்.. நீங்க ரெடியா இருங்க”

**********************************************************************************

” எனக்கே தண்ணி காட்டுறியா... என்ன தைரியம் இருந்தா ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சு போவ.. காதலனை பார்க்கும் துடிப்பா.. அதெல்லாம் நடக்காது “

கண்ணீருடன் நின்றாள் காமினி..

“ என்னால அவரை மறக்க முடியாது “

”அப்படியா ” துப்பாக்கியை எடுத்தான் .. “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
” அட சீ,,, மிரட்டி என்னை பணிய வைக்க முடியாது... வட பழனி கோயில் ல அவர்க்கும் எனக்கும் நாளை கல்யாணம் நடந்தே தீரும்.. முடிஞ்சா தடுத்துக்க “

இவளை கொலவதை விட அவள் காதலனை பிடித்து மிரட்டுவதுதான் நல்லது ..

இப்பொது இவளை தடுத்தாலும் இன்னொரு நாள் மீறி செல்வாள்.. விட்டு பிடிப்போம் . முடிவு செய்தான்...

நாளைக்கு வட பழனி கோயிலுக்கு அவள் காதலன் வர்ரானா... வரட்டும்” புன்னகைது கொண்டான்..

*****************************************************************************************

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

”ஆமா சார்.. உங்க வைரத்தை உங்க கிட்ட ஒப்படைக்க , டைமண்டோட குடும்பமே வந்து இருக்கு .. ஷீலா எனும் இந்த வைரம் , இனி உங்க வீட்ல் ஒளி வீசும் ”

ஷீலாவும் அவள் குடும்பத்தினரும் புன்னகைத்தனர்.. ஷீலா முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு..

” அண்ணன்தான் ஷீலாவை பார்க்க விரும்புறார் னு நினச்சு காவலர்கள் அலட்சியமா இருந்துட்டாங்க.. என்னை கேள்வி கேட்கும் தைரியமும் அவங்களுக்கு இல்லை.. என் புத்தகத்தில் இருந்து விழுந்த கடிதம் ஷீலாவுக்கு , உங்க பையன் எழுதிய கடிதம்ங்கறது, உங்க கிட்ட தமிழ் படிக்க வந்த என்னிடம் எப்படியோ வந்து சேர்ந்த்தும், நான் தற்கொலை நாடகமாடியது ஷீலாவை பார்க்கத்தான் என்பதும், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்த்து உங்களை பார்க்க என்பது அண்ணனுக்கு இன்னும் தெரியாது , “

“ சரி மா.. நாளைக்கு உங்க அண்ணன் பிரச்சினை செய்ய மாட்டாரா ? “

“ மாட்டாரு.. நாளைக்கு வட பழனி கோயில்ல அண்ணன் காத்து இருப்பாரு.. எனக்குத்தான் கல்யாணனம்னு நினச்சு வருவாரு... ஷீலானு தெரிஞ்சா கோபம் கொஞ்சம் குறையும்... கொஞ்சம் இருக்குற கோபத்தையும் இன்னொருவரு போக்கிடுவாரு “

“ யாரும்மா அது ? “

“ அண்ணன் பார்த்து வச்சுகுற மாப்பிள்ளையை அங்கே வர சொல்லி இருக்கேன்.. அவரிடம் என் சம்மத்தை சொல்லி அண்ணனை சந்தோஷ படுத்திடுவேன் “

” அவரை பார்ப்பது அண்ணனுக்கு மட்டும்தான் சந்தோஷமா “ என்று குறும்பாக கேட்ட பரந்தாமனுக்கு பதிலளிக்காமல் வெட்கதுடன் சிரித்தாள் காமினி ...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா