Friday, October 15, 2010

ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )

காமினியின் புத்தகத்தில் இருந்து விழுந்த அந்த பேப்பர் , சிவாவின் கண்களை கவர்ந்தது..

அதில் ஏதோ விஷ்யம் இருக்கிறது.. அவன் போலீஸ் மூளை அபாய ஒலி எழுப்பையதை மதித்து அந்த பேப்பரை எடுத்தான்..

என் இதயமே... இன்னும் எத்தனை நாள் நாம் பிரிந்து இருப்பது...

நான் ஒரு மெழுகு வர்த்தி...

நீ வந்து அணைக்கும் வரை

அழுது கொண்டே இருப்பேன்..

 

உன் நினைவில் உயிர் வாழும்,

உன் உயிர் “

படித்து முடித்த்தும் சிவாவின் ரத்தம் கொதித்த்து..

ஒரே தங்கை என அன்பை கொட்டி வளர்த்தால் , என்னையே ஏமாற்றுகிறாளா? அவளுக்கு என மாப்பிள்ளை பார்த்து , எல்லாம் கூடி வரும் நேரத்தில் லவ்வா?

அந்த மாப்பிள்ளைக்கு இவள் புகைப்பட்த்தை பார்த்தே பிடித்து விட்ட்து..எப்ப கல்யாணம் என அவசரப்படுகிறான்.. அவன் வீட்டாருக்கும் பரம திருப்தி..

மாப்பிள்ளை வீட்டார் என்ன நினைப்பார்கள்.. அட்லீஸ்ட் இதை முன்பே சொல்லி இருக்கலாமே..

நல்லவனை காதலித்து இருந்தால் நானே முடித்து வைத்து இருப்பேனே.. காதலுக்கு நான் எதிரி இல்லையே...

போலிஸ்கார இதயத்திலும் காதல் கசியும் என்பது ஷீலாவை கேட்டால் தெரியுமே... இது போல எத்தனை கடிதங்கள் அவளுக்கு எழுதி இருப்பேன்..

**************************************************************************************

மறுபடியும் சிவாவிடமிடம் இருந்து இ மெயில்..

ஷீலா தலையை பிடித்து கொண்டாள்.. தலைவலி...

” நான் உன்னை விரும்புகிறேன்.. நீயும் என்னை விரும்பியே ஆக வேண்டும்” இதுதான் கடிதங்கள் , மெயில்கள், எஸ் எம் எஸ் அனைதுக்குமான் ஒரே பொது மொழி.. வேறு வேறு வார்த்தைகளில் இதைதான் சொல்கிறான்..

விருப்பமின்மையை பல முறை சொல்லியும் புரிந்து கொள்ள மறுக்கிறான்..

காதல் என்பது மற்றவர் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல்.. எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துதல் என புரிந்து கொள்ளாமல், மிரட்டுகிறான்.. என்னை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்ய நினைத்தால், உன் குடும்பம் அனைவரையும் , பொய் வழக்கு போட்டு உள்ளெ தள்ள முடியும்

**************************************************************************

“ ஆமாண்ணா.. நான் ஒருவரை காதலிக்கிறேன் ,,.. அவரைத்தான் திருமனம் செய்ய விருப்பம்... இதை நீங்கள் ஏற்கத்தால் , தற்கொலை செய்து கொள்கிறேன் “

கடித்த்தை பார்த்த உடனேயே , காமினியை மருதுவ மனையில் சேர்த்த்தால், உயிருக்கு ஆபத்து வரவில்லை...

எதேச்சையாக வீட்டுக்கு வந்த பழைய பள்ளி ஆசிரியர் பரந்தாமன் தான் பேருதவியாக இருந்தார்..

“ ரொம்ப நன்றி சார்.. ஆமா என்ன விஷ்யமா வீட்டுக்கு வந்தீங்க..?’

சிவா அன்புடன் கேட்டான்.

“ என் பையன் கல்யாண விஷ்யமா பேச வந்தேன் பா.. சரி இன்னொரு நாள் பேசலாம் “ விடை பெற்றார்..

அந்த மருதுவ மனையில் நர்ஸ் ஆக பணியாற்றும் ஷீலா அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து சுறுசுறுப்பாக பனியாற்றிய நேர்த்தி சிவாவை கவர்ந்த்து...

 

தன் செல் போன் மெசேஜை அப்போதுதான் ஷீலா பார்த்தாள்.

“ இனியும் என்னால் காத்து இருக்க முடியாது... நாளை உன் வீட்டுக்கு வந்து நிச்சயம் செய்ய போகிறேன்.. நீயோ குடும்பத்தாரோ எங்கும் போக முடியாது.. வீட்டை சுற்றிலும் என் ஆட்கள் இருக்கிறார்கள் “

அதிர்ந்தாள்..

காமினியை சோதித்த டாக்டர் , திருப்தியுடன் அந்த இட்த்தை வீடு அகன்றார்.. நாளை டிஸ்சார்ஜ் செய்து விடலாம்..

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

” நீ இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க்றது எனக்கு பயமா இருக்குமா.. உன் அண்ணனை எதிர்த்து இந்த கல்யாணம் நடக்காது மா.. என் பையனும் எங்க குடும்பமும் கொடுத்து வச்சது அவ்வளவுதானு நினச்சுக்க்றேன் . உனக்கு எந்த ஆபத்தும் வர கூடாதுமா... உன்னை கஷ்டப்படுத்தி என் பையன் நல்லா இருக்கணும்னு அவசியம் இல்லை “ கண்ணீர் விட்ட பரந்தாமனை அன்புடன் பார்த்தாள் காமினி..

குடும்பமே ஒரு பெண் மீது அன்பு செலுத்தும் ஆச்சர்யம்... பிரமிப்பாக இருந்த்து..

”இந்த கல்யானம் கண்டிப்பா நடக்கும் . அண்ணனை மீறி நாளக்கி வந்துட்றேன்.. நீங்க ரெடியா இருங்க”

**********************************************************************************

” எனக்கே தண்ணி காட்டுறியா... என்ன தைரியம் இருந்தா ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சு போவ.. காதலனை பார்க்கும் துடிப்பா.. அதெல்லாம் நடக்காது “

கண்ணீருடன் நின்றாள் காமினி..

“ என்னால அவரை மறக்க முடியாது “

”அப்படியா ” துப்பாக்கியை எடுத்தான் .. “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
” அட சீ,,, மிரட்டி என்னை பணிய வைக்க முடியாது... வட பழனி கோயில் ல அவர்க்கும் எனக்கும் நாளை கல்யாணம் நடந்தே தீரும்.. முடிஞ்சா தடுத்துக்க “

இவளை கொலவதை விட அவள் காதலனை பிடித்து மிரட்டுவதுதான் நல்லது ..

இப்பொது இவளை தடுத்தாலும் இன்னொரு நாள் மீறி செல்வாள்.. விட்டு பிடிப்போம் . முடிவு செய்தான்...

நாளைக்கு வட பழனி கோயிலுக்கு அவள் காதலன் வர்ரானா... வரட்டும்” புன்னகைது கொண்டான்..

*****************************************************************************************

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

”ஆமா சார்.. உங்க வைரத்தை உங்க கிட்ட ஒப்படைக்க , டைமண்டோட குடும்பமே வந்து இருக்கு .. ஷீலா எனும் இந்த வைரம் , இனி உங்க வீட்ல் ஒளி வீசும் ”

ஷீலாவும் அவள் குடும்பத்தினரும் புன்னகைத்தனர்.. ஷீலா முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு..

” அண்ணன்தான் ஷீலாவை பார்க்க விரும்புறார் னு நினச்சு காவலர்கள் அலட்சியமா இருந்துட்டாங்க.. என்னை கேள்வி கேட்கும் தைரியமும் அவங்களுக்கு இல்லை.. என் புத்தகத்தில் இருந்து விழுந்த கடிதம் ஷீலாவுக்கு , உங்க பையன் எழுதிய கடிதம்ங்கறது, உங்க கிட்ட தமிழ் படிக்க வந்த என்னிடம் எப்படியோ வந்து சேர்ந்த்தும், நான் தற்கொலை நாடகமாடியது ஷீலாவை பார்க்கத்தான் என்பதும், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்த்து உங்களை பார்க்க என்பது அண்ணனுக்கு இன்னும் தெரியாது , “

“ சரி மா.. நாளைக்கு உங்க அண்ணன் பிரச்சினை செய்ய மாட்டாரா ? “

“ மாட்டாரு.. நாளைக்கு வட பழனி கோயில்ல அண்ணன் காத்து இருப்பாரு.. எனக்குத்தான் கல்யாணனம்னு நினச்சு வருவாரு... ஷீலானு தெரிஞ்சா கோபம் கொஞ்சம் குறையும்... கொஞ்சம் இருக்குற கோபத்தையும் இன்னொருவரு போக்கிடுவாரு “

“ யாரும்மா அது ? “

“ அண்ணன் பார்த்து வச்சுகுற மாப்பிள்ளையை அங்கே வர சொல்லி இருக்கேன்.. அவரிடம் என் சம்மத்தை சொல்லி அண்ணனை சந்தோஷ படுத்திடுவேன் “

” அவரை பார்ப்பது அண்ணனுக்கு மட்டும்தான் சந்தோஷமா “ என்று குறும்பாக கேட்ட பரந்தாமனுக்கு பதிலளிக்காமல் வெட்கதுடன் சிரித்தாள் காமினி ...

5 comments:

  1. வித்தியாசமா இருக்குங்க... நல்லா வந்திருக்கு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இந்த வாரம் சிறுகதை வாரமா? இதுவும் நல்லாருக்கு.

    ReplyDelete
  3. நல்லா இருக்கு. 'அட' அப்படிங்கற மாதிரி இருக்கு கிளைமாக்ஸ்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா