Friday, November 29, 2013

இயக்குனர் மகேந்திரன் ஆணாக்திக்கவாதியா ? கவிஞர் றியாசுடன் ஓர் உரையாடல்

ஆண்டிகளில் பரம்பரை ஆண்டி , பஞ்சத்துக்கு ஆண்டி என இருவகை உண்டு..
நானெல்லாம் இப்போதுதான் மகேந்திரன் படங்கள் பார்த்து வருகிறேன்... ஆனால் அவர் படங்களை வெகு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ,பார்த்து நினைவில் வைத்திருப்பவர்கள் உண்டு...அவர்களுடன் உரையாடுவது ஓர் இனிய அனுபவம்,

அவர் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் , ஆணாதிக்கம் ,மணிரத்னம் போன்றோர் அவர் கதையை சுட்டது ,போன்ற பல விஷ்யங்களை நேற்று விவாதித்தோம்..அவற்றின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு..

**********************************************************



குறியீடு பற்றி பற்றி பேசுபவர்கள் , மகேந்திரனின் பூட்டாத பூட்டுகள் பார்க்க வேண்டும்.. மல்லிப்பூ காட்சி, அஞ்சு பைசா காட்சி ஆகிய இரண்டை மட்டும் பார்த்தாலே போதும்

  • Gj Premkumar பாஸு நானும் பாத்தேன்..எனக்கு தெறிஞ்ச குறியீடு ..ஹாஆஆஆஆவ்..


  • Siva Raj இதுல ரெண்டு தடவை ' பற்றி' வருதே , இதுவும் குறியீடா...?! 


  • Riyas Qurana ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது. பாடல் சட்டென்று நினைவுக்கு வந்தது.


  • Balamurugan Chendurpandian அலோ பிச்சைக்கார்...சினிமா பத்தியே பேசறீங்களே...படம் இயக்க போறீங்களா, தயாரிக்கப் போறீங்களா?


  • Riyas Qurana நன்டு படம் குறித்து பதிந்தபோது, அள்ளித்தந்த வானம் பாடல் நினைவில் வந்தது. ” தனித்த காலம் வளர்த்த இடங்களெ, இளமை நினைவை இசை்கும் தெருக்கள்” வரி சுற்றிக்கொண்டிருந்தது.


  • Riyas Qurana மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை , மணிரத்னம் - மௌனராகமாக எடுத்தார். உதிரிப்பூக்களை - வசந்த் - ஆசை என எடுத்தார்.

  • Riyas Qurana தனது படங்களில் ஆண்களோடு நேருக்கு நேர் பேசாத, எதையும் அமைதியாக பொறுத்துக் கொள்கிற ‘குடும்ப பாங்கான’ பெண்கள்தான் முன்மாதிரியான பெண்கள் என்ற கருத்தை அநேகமாக பதிவு செய்திருக்கிறார்.

    அவரின் முதல் படமான முள்ளும் மலரும் ஷோபா, உதிரிப்பூக்கள் அஸ்வினி, ஜானி ஸ்ரீதேவி, நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி, அதேப் படத்தில் திருமணத்திற்கு பிறகு சுகாசினியின் மாற்றம், கண்ணுக்கு மை எழுது சுஜாதா, மெட்டி விஜயகுமாரி, நண்டு பட நாயகி இப்படி… மகேந்திரன் காட்டவிரும்பும் பெண்கள் விமர்சனத்திற்குரியவை.

  • Pichaikaaran Sgl அவரது எல்லாப்படங்களும் பார்த்து இருக்கீங்க போல...இதைப்பற்றி விரிவா எழுதுங்க...எல்லோருக்கும் பயன்படும்


  • Gj Premkumar அதே போல்..ஆணாதிக்கம் நிறைந்து,ஐயா மகேந்திரனின் படங்கள்..

  • Riyas Qurana தோழர், ஆணாதிக்கம் நிறையாத தமிழப்படமே இல்லை. மகேந்திரனின் படங்களிலும்...

  • Gj Premkumar பெண்களை ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் காட்டிய விதத்தில் அவரின் பங்கு அதிகம் தோழரே..

  • Riyas Qurana முள்ளும் மலரில் படாபட் ஜெயலட்சுமி, உதிரிப்பூக்களில் அஸ்வினியின் தக்கச்சி, கை கொடுக்கும் கையில் ராஜலட்சுமி. துணை நாயகிகளாக காட்டும் பெண்களை அறிந்திருந்தால் இதைச் சொல்ல மாட்டீர்கள். 12 படங்கள் இயக்கியிருக்கிறார். தனக்கு பிடித்த படமான ”உதிரிப்பூக்களை” பிழைகள் குறைந்த படம் என்றுதான் சொல்லியிருக்கிறார். மிகப் பெரிய மனது.

  • Gj Premkumar துணை நாயகிகள் மட்டும்..மற்றபடி மனைவி என்பவள் ,அதே அஸ்வினி,ஷோபா..?

  • Riyas Qurana நாயகிகள் பற்றி மேலே குறிப்பிட்டிருக்கிறேன். படிக்க மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறென்.

  • Gj Premkumar Sorry..

  • Pichaikaaran Sgl அருமை Riyas Qurana .. ஜானியில்கூட ரஜினியை விட ஸ்ரீதேவியை ஒரு படி மேலாக காட்டி இருப்பார்...பூட்டாத பூட்டுகளில், தன் கணவன் கண் ஆப்பரேஷனுக்கு வைத்து இருந்த பணத்தை எடுத்து கொடுக்கும் பெண்ணை மறக்க முடியுமா

  • Riyas Qurana ஜொனி படத்தில், சுஜாதா பாடிய இரண்டாவது பாடல் என நினை்கிறேன். ” ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” அற்புதமான பாடல்.

  • Pichaikaaran Sgl Gj Premkumar விவாதத்தில் என்ன sorry? 
    a
  • Riyas Qurana தன் மனைவி வேறு ஒருவருடன் காதல்கொண்டு அவரோடு சென்று திரும்பவும், தனது கணவனிடம் திரும்பி வருகிறாள். அவளை அவன் ஏற்றுக்கொள்ளும் காட்சி... மிக அபூர்வமானது. இது என்ன படம்...?

  • Pichaikaaran Sgl Riyas Qurana நண்டு படத்தில் கதானாயகியின் தோழியை பவர்ஃபுல்லாக காட்டி இருப்பார் அல்லவா,...இதன் உள்ளீடு என்ன
  • Pichaikaaran Sgl Riyas Qurana நீங்கள் சொல்வது பூட்டாத பூட்டுகள்..தோழர் , அவர் படங்களில் துணை நாயகிகளை , நாயகிகளைவிட வலுவாக காட்டும் உள்ளீடு என்ன

  • Riyas Qurana அவரின் படத்தில் துணைநாயகி என்பது இருப்பதில்லை. ஒரு வசதிக்காக நாம் இப்படி சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு சமாந்திரமாக, விமர்சனமாக பெண்களை உருவாக்கிக்காட்டிய படியே நகருவார். அமைதியான எதையும் ஏற்றுக்கொள்ளுபவள்தான் பெண் எ்ன்ற கருத்து நிலைபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே, முற்றிலும் மாற்றமான ஒரு பெண்ணை சமாந்தரமாக உருவாக்குவார். அப்படிச் செய்வதால், ஆணாதிக்கத்தின் நிழலை படியவிடும் வாய்ப்பை தனது திரையிலிருந்து நீக்குகிறார்.

  • Gj Premkumar ஸாரி என்றது பேட்டரி லோ..அதனால் தோழரே..

  • Pichaikaaran Sgl ஹாஹா..... சூப்பர்....அடிச்சு ஆடுங்க

  • Riyas Qurana ஒரு இனிய மனது பாடலின் இணைப்பிருந்தால் இ்ங்கே தந்துவிடுங்கள். ... அனைவரும் மகேந்திரனை நினைக்கட்டும். அவரது தொலைபேசியின் ரிங்டோன் கூட அந்தப்பாடல்தான்.

  • Pichaikaaran Sgl Riyas Qurana எவ்வளவோ இருளாக இருந்தாலும் , அங்கு ஓர் ஒளி இருக்கும் என்பது அவர ப்டங்களின் பொதுக்கருத்தா... அந்த “துணை நாயகிகளை “ அந்த ஒளியாக கொள்ளலாமா?

  • Pichaikaaran Sgl Gj Premkumar புலி பதுங்குவது , பாய்வதற்காகத்தான் என நான் அறிவேன் 

  • Riyas Qurana ஒருவகைப் பிரகாசம்.
  • Gj Premkumar இங்கு பாடலைப் பற்றி அல்ல விவாதம் தோழரே..அவரின் பாத்திர படைப்பு..


  • Riyas Qurana சலிப்பு வரும்போது கேட்பதற்குத்தான் பாடல். கேட்டுப்பாருங்கள். விவாதிப்பதைவிட ரசிப்பது மிக அற்புதமான தருணம்.


  • Pichaikaaran Sgl மகேந்திரன் படங்களை நான் இப்போதுதான் பார்க்கிறேன்,, நீங்கள் எல்லாம் முன்பே பார்த்தவர்கள்...உங்களிடம் இருந்து அதிகபட்சம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் Riyas Qurana Gj Premkumar

  • Gj Premkumar அவரின் ஆபார திறமை ஓரு வட்டத்திற்குள் நின்று விட்டது என்பதுதான் எனது ஆதங்கம்..

  • Pichaikaaran Sgl எப்படி சொல்கிறீர்கள்? கணவன் மனைவி உறவு , நடுத்தர குடும்ப பிரச்சனை , ஒரு சகோதரனின் பாசம், சிறுவயது ஈர்ப்பு , காமம் என பல தளங்களை அவர் தொட்டு இருக்கிறாரே

  • Riyas Qurana அவர் ஒருபோதும் தன்னை அபாரமான திறமையானவராக சொன்னதில்லை.

  • Riyas Qurana பூட்டாத பூட்டுக்கள் போன்ற கதையைத் தொடுவதற்கு தமிழ் சினமாவுக்கு இன்னும் காலம் பிடிக்கும் என நினைக்கிறென்.

  • Riyas Qurana நெ்ஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலிருந்து... பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலை இணைத்துவிடுங்கள். இன்னுமொரு தேநீர்.

  • Pichaikaaran Sgl ரசிகனை அழ வைக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும், அதை தவிர்ப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்



  • Gj Premkumar அப்படி பார்த்தால் பாலசந்தர் அதை விட அதிகமான கதைகளை கையாண்டவர்..

  • Pichaikaaran Sgl நம்மை அழ வைப்பதை தனது வெற்றியாக பாலச்சந்தர் கருதுவார்...மகேந்திரன் அப்படி நினைப்பதில்லை என்பது முக்கிய வித்தியாசம் என கருதுகிறேன் Riyas Qurana

  • Gj Premkumar ஒரு ரசனையோடு கொடுத்தவர் என்ற விதத்தில் மகேந்திரன் ஒரு படி மேலே நிற்கிறார் எனலாம்..

  • Pichaikaaran Sgl ஆமா ஆமா...அதைதான் சொல்றேன்..அழகியல்

  • Riyas Qurana கடும்கோபம் வந்தாலும், உரத்துப் பேசாத மனிதர்களையும், அவர்கள் தமது வலிகளையும் சந்தோசங்களையும், உள்ளுக்குள்ளே ரசிக்கும்படி ஆக்கிவைத்தவர். தலைமறைவு வாழ்க்கைபோன்ற ஒன்றை உறவுகளிடையெ இருப்பதை வெளிப்படுத்தியவர். பாலச்சந்தர், அழவைத்து பார்க்க முயற்சித்தவர். மகேந்திரன் உணர்த்தியவர்.

  • Pichaikaaran Sgl மகேந்திரன் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் பெண்களுக்கே கொடுக்கப்படுவது குறித்து ?

  • Gj Premkumar ஆனால் பாலசந்தர்'ன் பெண்கள் ஆளுமை திறன் மிக்கவர்கள்..

  • Riyas Qurana கதையின் முக்கியத்துவம் குறித்து... பாடல்கள் அமைவது வழக்கம். மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட என்ற பாடலின் இணைப்பை தாருங்கள். இன்றுவரை வந்த எந்தப்பாடலும் இதற்கு நிகரில்லை என்றே சொல்லுவேன். கேட்டுப்பாருங்கள். அதில், மலையாள பாடகர் பிரேம்மானந்த் பாடிய ” சந்தககவிகள் பாடிடும் மனதில் இன்பக் கனவுகளே..” ஒரு அற்புதமான பாடலும் இருக்கிறது. இணைப்பு கிடைக்கட்டும்.



  • Pichaikaaran Sgl ஆணை பழிவாங்க , அவன் மூலம் கர்ப்பமாகும் கல்கி , சங்கீத் ஞானம் இல்லாமல் கண்வனை டார்ச்சர் செய்யும் சிந்து பைரவி , பாடகனை டார்ச்சர் செய்து பிறகு அவன் காலில் விழும் புது புது அர்த்தங்கள் என பாலச்சந்தர் படங்களில்தானே பெண்னடிமைத்தனம் உள்ளது?

  • Riyas Qurana நுால்வேலி சரிதா மட்டுமே போதும் அவருடைய நாயகிகள் நிங்கள் சொன்னதுபோல இல்லை என்பதற்கு. திருமணம் ஆகாமல் கற்பமாகிறாள். அவளை கடைசியில் கொலை செய்ய வேண்டி வருகிறது. சிந்து பைரவி கதை எல்லாம் தெரியும்தானே... முற்போக்கான பெண்கள் கடைசியில் தற்கொலை செய்வதுதான் முடிவா. இல்லாமல் வாழவைக்க முடியாதா?

  • Pichaikaaran Sgl Riyas Qurana காட்சிகளை தன் இசையால் மூழ்கடித்து விடுகிறார் என இளையராஜா மீது குற்ற்சாட்டு உண்டு,.ஆனால் மகேந்திரன் படங்களில் அழகாக, தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசைக்கிறார்... சண்டைகளில் டிஷ்யூம் டிஷ்யூம் ஓசைகூட இல்லை...மகேந்திரன் படங்களில் இருக்கும் இசை குறித்து என்ன சொல்கிறீர்கள்

  • Riyas Qurana இளையராஜா அப்படி மூழ்கடிப்பதில்லை. அவரின் இசைக்கற்பனையின் வீச்சில் காட்சிகள் கலைந்துவிடுவதுண்டு. நிண்டுபிடிக்க முடியாயாமல் போவதுண்டு. பாலுமகேந்திரா, மகெந்திரனின் படங்களிலும், நிவாஸ், சிறிராம், போன்றவர்களின் கமெராவிலும் அது நடப்பதில்லை.

  • Riyas Qurana மெட்டி ஒலி காற்றோடு என்ற பாடலை கேட்டுப்பாருங்கள். ஒரு பெண் குரலை ஒரு இசைக்கருவிபோல மாத்திரமே பயன்படுத்தியிருப்பார்.

  • Pichaikaaran Sgl மெட்டி ஒலி படத்தில் அண்ணனும் தங்கையும் பாடுவதாக பாடல் வருமே...அது போல சகோதாரப்பாசத்தை காட்டும் பாடல்கள் வேறு வந்ததாக தெரியவில்லையே ( செண்டிமெண்ட் பாடல்கள் வேறு விதம்.. நான் சொல்வது அழகியலோடு கூடிய பாடல்)

  • Pichaikaaran Sgl அதுதான் நீங்கள் சொல்லும் சந்தககவிகள் பாடிடும் மனதில் இன்பக் கனவுகளே

  • Riyas Qurana ஆமா... மிக அருமையான பாடல். ஜெயமோகனுக்கு பிடிக்கும் என்று சொன்னதாக ஞாபகம் அப்போது எனது ரசனையில் சந்தேகம் வந்தது. பின்னர், அந்தப்பாடலைப் பாடிய பிரேமானந்தம் பற்றி கூறியதாக அறிந்தேன்....

  • Riyas Qurana கைகொடுக்கும் கை படத்தில் ”தாளம்பூவே வாசம் வீசு” அருமையான பாடல். அதுபோல, முள்ளும் மலரும் படத்தில் ஜென்சி பாடிய , அடி பெண்ணே பொன்னுாஞ்சல் ஆடும் இளமை. பாலுமகேந்திராவின் கமெரா, எனக்கு விருப்பமான நடிகை ஸோபா, என ஒரே கொண்டாட்டமாகவே இருக்கும். இணைப்பை தந்துவிடுங்கள்.
  • Pichaikaaran Sgl ”ஜெயமோகனுக்கு பிடிக்கும் என்று சொன்னதாக ஞாபகம் அப்போது எனது ரசனையில் சந்தேகம் வந்தது.” ஹா ஹா.... சீரியசான விவாதத்தில் ஒரு காமெடி இடைவேளை சூப்பர்

  • Pichaikaaran Sgl வாவ் வாவ் வாவ்,... நினவில் வைத்து இருந்து கொட்டுகிறீர்களே..ம்ம்ம்

  • Riyas Qurana எப்போதோ படித்தவைகள்தான், பார்த்தவைகள்தான், கேட்டவைகள்தான். நினைவிலிருந்தே எழுதுகிறேன். எனது ஞாபக சத்தியின்மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. ம்...ம்...ம்...

  • Pichaikaaran Sgl அந்த அளவுக்கு உங்கள் மனம் க்வர்ந்து இருக்கிறது
    41 minutes ago · Like · 1
  • Pichaikaaran Sgl பிற்காலத்தில் ஊர்பஞ்சாயத்து , சாசனம் என அவர் ஏன் நீர்த்து போனார்?

  • Pichaikaaran Sgl கலைக்கும் முதுமை உண்டா?

  • Riyas Qurana அவருடைய 12 படங்களில், 4 அல்லது 5 படங்கள்தான் கொண்டாடப்பட்டடுபவை. அதுவும் நம்மைப்போன்ற சிலர். அல்லது புதிதாக வரும் துணை இயக்கநர்கள் போன்றவ்களினால். ஜனவெளியை கைப்பற்ற முடியாது போய்விட்டது. ரஜனியை வைத்து எடுத்த கை கொடுக்கும் கை படத்திற்கும் அதுதான் நிலை.கலைக்கு முதுமை இல்லை. சிந்தனை என்பது காலத்தோடு நகர்ந்துகொண்டு வர வேண்டும். அது காலத்தை பிந்துமானால் எவ்வளவு திறயைமானவராக இருந்தாலும் அவர் பழசுபட்டுப்போய்விடுவார். ஜெயமோகன், இளையராஜா, என அதிக உதாரணங்களைச் சொல்லலாம். சிலருக்கு, தங்கள் இளமைப்பருவத்துக் காலமே தங்களோடு எப்போதும் இருக்கும். அந்தக்கால விசயங்களுடன் தங்கிவிட்டிருப்பார்கள். சிலர் மிக மெதுவாக சிந்திப்பவர்களாக இருப்பார்கள். புதிதாக வருபவைகளை ஏற்க்கமாட்டார்கள். ஒரு பத்தாண்டு கடந்துவிட்டால். தான் பறக்கணித்தவைகளை கொண்டாடுவார்கள். மிகச்சிலரே, காலத்திற்கு சமாந்தரமாக பயணிக்கக்கூடியவர்கள். சாரு, ராஜ சுந்தரராஜன் போன்றவர்கள். காலத்தோடு பயணிப்பதுதான் உயிர்ப்புமிக்கது. பின்தங்கும்போது, மிகப்பழசு பட்டுவிவார்கள்.
  • Pichaikaaran Sgl சுஜாதாவும் கடைசி வரை உயிர்ப்புடன் இருந்தார் என நினைக்கிறேன்..சரியா

  • Riyas Qurana ஆமா.... அவர்குறித்து அதிகமான விமர்சனங்கள் இருக்கிறது. அவர் எழுத்தாளரே இல்லை என்றுகூட, அவரது பிரதிகளை வைத்து சொல்லலாம். ஆனால், அவர் உயிர்ப்புமிகு இலக்கியச் செயற்பாட்டாளர்.

  • Riyas Qurana பிரபஞ்சன்,ஜெயகாந்தன்,சுஜாதா, போன்றவர்களை ஜனரஞ்சக வெளிக்குள்ளும் தள்ளிவிட முடியாது, நவீன வெளிக்குள்ளும் இழுத்து வைக்க முடியாது. இரண்டிலும் தமது செயல்பரப்பை விரிவுபடுத்தியவர்கள். இவர்களை கலைஞர்கள் என சொல்லலாம். இவர்களுடைய செயல்பாட்டை இன்னும் விரிவுபடுத்தி, நவீனப்படுத்தி கொண்டுசெல்ல முடிகிறவர்தான் தமிழின் சிறந்த இலக்கியச் செயற்பாட்டாளராக இன்றைய பொது உளவியல் ஏற்க்கும்.

சங்கராச்சாரியார் விவகாரம் - ஒரு மாற்றுப் பார்வை

அரசியல் பேசுவதெல்லாம் அலுத்துப்போய் விட்டது.. எனவே அரசியல் , அவ்வப்போதைய பரபரப்பு செய்திகள் என எழுத நான் விரும்புவது இல்லை... இதெல்லாம் இன்று படிக்கலாம்,..அடுத்த வாரம் படிக்க முடியாது..

இருந்தாலும் ஒரு மாற்றுப்பார்வை என்ற வகையில் தினமணியில் வந்த இந்த கட்டுரையை ஷேர் செய்கிறேன்.
மற்றபடி இதில் என் கருத்து எதுவும் இல்லை... விவாதிக்கவும் விரும்பவில்லை...



சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள்பார்வை!  ( நன்றி - தினமணி)



புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார்கள் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 பேரையும் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு நேற்று (நவம்பர் 27, 2013) வெளிவந்தவுடன் கடந்த 2004 நவம்பர் மாதம் சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புகளையும், அநாகரிகமான விமர்சனங்களையும் எண்ணிப் பார்க்கத் தூண்டியது.
சங்கராச்சாரியாருக்கு எதிராக என்னென்ன விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, எப்படிப்பட்ட கேலியும் கிண்டலும் செய்யப்பட்டன என்பதையும், திராவிடக் கொள்கையாளர்களாலும், கட்சியினராலும், ஏன் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஊடகங்களாலும், சமுதாயப் பிரமுகர்களாலும் காஞ்சி சங்கர மடமும், சங்கராச்சாரியார்களும் தரம் தாழ்த்தி சித்திரிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது நினைத்தாலும் முகம் சுளிக்க வைக்கின்றன.
சங்கராச்சாரியார்தான் குற்றவாளி என்று விசாரிக்காமலேயே முடிவுசெய்தது போதாதென்று, ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி பற்றி இல்லாததும் பொல்லாததுமாக எத்தனை எத்தனையோ அபவாதங்களை வேறு எழுப்பினார்கள். இதில் இறை நம்பிக்கை இல்லாத திராவிடக் கட்சிகளின் பங்களிப்புக்கு எள்ளளவும் குறைவில்லாதது, நமது ஊடகங்களின் பங்களிப்பு. இதனால் மனம் புண்பட்ட லட்சக்கணக்கான காஞ்சி மடத்தின் பக்தர்களும், ஆன்மிக நாட்டமுள்ளவர்களும் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் விம்மி விம்மி அழுததும், ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் மெüனமாக அதையெல்லாம் சகித்ததும் எளிதில் மறந்துவிடக் கூடியவையா?
காஞ்சி சங்கரமடமும், சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானபோது, இந்து மதத்தின் அடித்தளத்தை உடைத்துவிட வேண்டும் என்று சில நலம் விரும்பிகள் முனைந்தபோது, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் மட்டும்தான் உண்மையின் பக்கம் நின்றது. ஆதாரமில்லாமல், காழ்ப்புணர்ச்சியால் இறையுணர்வின், ஆன்மிகத்தின் எதிரிகள் ஒன்றுபட்டு சங்கர மடத்தையும், சங்கராச்சாரியாரையும் பொய்யான குற்றச்சாட்டை ஆதாரமாகக் கொண்டு பழிவாங்க முற்பட்டபோது, உண்மை என்று தான் நம்பிய கொள்கைக்காகத் துணிந்து போராடியதும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் மட்டுமே!
மடமும் சங்கராச்சாரியார்களும் எந்தவித ஆதாரமுமில்லாமல் காயப்படுத்தப்படுகிறார்கள், போதிய சாட்சியமில்லாமல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது என்பதை நாங்கள் மட்டுமே உறுதியாகச் சொன்னோம். இப்போது, போதிய ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லாமல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை, சங்கராச்சாரியார் கைதான போதே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்திருக்கிறது.
"வழக்கு செத்துவிட்டது. எப்போது, யார் இறுதிச்சடங்கு செய்வது?' என்று தலைப்பிட்டு சங்கரராமன் கொலை வழக்கு பற்றிய ஐந்து தொடர் கட்டுரைகள் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியானது. சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்ட தீபாவளி தினத்திலிருந்து 12-ஆவது நாளான நவம்பர் 24, 2004 அன்று எழுதப்பட்ட அந்தக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையிலேயே இந்த வழக்கு எந்தவித ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல் தொடுக்கப்படுகிறது என்பதை விளக்கமாவே எழுதி இருந்தேன்.
""சங்கராச்சாரியார் மீது தொடுக்கப்பட்ட இந்த வழக்கு பலமில்லாதது என்பது மட்டுமல்ல, ஆரம்பம் முதலே அடிப்படை ஆதாரமும் இல்லாதது. அது மட்டுமல்ல, இட்டுக்கட்டப்பட்டதும் கூட. ஆமாம், சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியைக் குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காகவே புனையப்பட்ட வழக்கு இது'' என்று தொடங்கியது அந்தக் கட்டுரை.
""காவல்துறையினர் தாங்கள் அடையாளம் கண்ட சங்கராச்சாரியார்தான் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் ஆதாரங்களைத் தேடி அலைகிறார்கள். ஆதாரமும் சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்பதற்காக விட்டுவிடவும் முடியவில்லை. சாட்சியங்களை இட்டுக்கட்டி எப்படியாவது வழக்கை ஜோடித்துவிட எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள். ஆனால், வழக்கு ஆரம்பத்திலேயே தோற்றுவிட்டது. காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, காக்கியின் சாயம் வெளுத்துவிட்டது. எந்த இரண்டு குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சங்கராச்சாரியாரை சங்கரராமன் கொலையில் முதல் குற்றவாளி என்று காவல்துறை தங்களது வழக்கை ஜோடித்திருந்ததோ, அந்த இருவருமே, நாங்கள் காவல்துறையால் வற்புறுத்தப்பட்டதால் தரப்பட்ட வாக்குமூலம் இது என்று சொன்னபோதே, வழக்கு தோற்றுவிட்டது'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது சங்கரராமன் கொலை வழக்கிலான தீர்ப்பு அதையேதான் கூறுகிறது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் நான் எழுதிய அந்தக் கட்டுரைத் தொடரில் ஒன்று - "அபிமன்யு போல நிராதரவாக நிற்கும் சங்கராச்சாரியார்!'. அந்தக் கட்டுரையில், தன்மீது அபாண்டமாக சுமத்தப்பட்டிருக்கும், கொலைப் பழியால் திகைத்துப்போய் செய்வதறியாமல் நிற்கும் சங்கராச்சாரியாரை, இறை மறுப்பாளர்களும், இந்துமத வெறுப்பாளர்களும், திராவிடக் கட்சியினரும், போலி மதச் சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட சமூக சிந்தனையாளர்களும், அரசியல் கட்சிகளும் வல்லூறுகளைப் போலக் கொத்திக் குதறக் காத்திருக்கிறார்கள். காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்படும் புனையப்பட்ட செய்திகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் நமது ஊடகங்களும், திராவிட இயக்க பிரச்சார இயந்திரமும் சங்கராச்சாரியாரைக் களங்கப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் முனைந்து செயல்படுகின்றன. வழக்கால் ஏற்படும் பாதிப்பை விட இதுபோன்ற ஆதாரமற்ற தவறான பிரசாரங்களால் ஏற்படுத்தப்படும் கருத்துருக்கள்தான் சங்கராச்சாரியாருக்கு அதிக களங்கம் ஏற்படுத்துகின்றன'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
"ஏதோ சங்கராச்சாரியார் ஒரு மிக மோசமான கிரிமினல், தரம் கெட்டவர் என்பதுபோன்ற கருத்தை நீதிமன்றத்திற்கு ஏற்படுத்த, மிகவும் மோசமான குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களின் வாக்குமூலங்களை வலுக்கட்டாயமாகக் காவல்துறை பெறுகிறது' என்று "இந்த வழக்கை மறு விசாரணை செய்யாமல், நீதி கிடைக்காது' என்கிற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
டிசம்பர், 3 2004-இல் எழுதியிருந்த கட்டுரையில், எப்படி இந்த வழக்கு ஒரு கொலை குற்றத்தின் புலன் விசாரனை என்கிற நிலையிலிருந்து விலகி, சங்கராச்சாரியாரைத் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்துவதையும், காஞ்சி சங்கர மடத்தின் மரியாதையைக் குலைப்பதையும்தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறது'' என்று எழுதி இருந்தேன். ""தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, எதிர்பாராமல் ஏற்பட்டிருக்கும் தாக்குதல்களால் விக்கித்து வாயடைத்துப்போய் நிற்கும் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிராக நடக்கும் யுத்தமாகக் காவல்துறை இந்த வழக்கை மாற்றிவிட்டிருக்கும் நிலையில், பல மிகப்பெரிய தவறுகளுக்கு இது வழிகோலியிருக்கிறது. சமுதாயத்தில் ஆன்மிக மடங்களின் மரியாதை சீர்குலைக்கப்படுகிறது. மத நம்பிக்கையே தகர்க்கப்படுகிறது. குற்றப் புலனாய்வாக இல்லாமல், மத நம்பிக்கையையும், காஞ்சி சங்கர மடத்தின் புகழையும் தகர்க்கும் செயலாக இது மாறிவிட்டிருக்கிறது'' என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
""மதச்சார்பின்மை பேசும் ஊடகங்கள் நீதிபதி ரெட்டியின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்குமா?'' என்பது 2005 ஜனவரி 14ஆம் தேதி நான் எழுதிய கடைசி கட்டுரையின் தலைப்பு. கைது செய்யப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தொழிற்சாலையில் விருந்தினர் விடுதியில் தங்கி இருந்ததால், அந்தத் தொழிற்சாலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு கொலையுடன் அவரைத் தொடர்புபடுத்தி யாரோ தொடுத்த வழக்கில் நீதிபதி நரசிம்ம ரெட்டி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பளித்தார். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அவர் அளித்த தீர்ப்பில், 2,500 ஆண்டு பாரம்பரியமிக்க ஒரு ஆன்மிக அமைப்பின் மரியாதைக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியிருந்தார் நீதிபதி ரெட்டி.
""தனிநபர்கள் மட்டுமல்ல, சில இயக்கங்களும், ஏன் அரசு இயந்திரமே கூட நமது பாரம்பரியப் பெருமைகளைச் சிறுமைப்படுத்தவும், புகழ்பெற்ற நிறுவனங்களைக் களங்கப்படுத்தவும், குற்றப்படுத்தவும் முயற்சிப்பது வேதனைக்குரியது. தேசத்தையே நிலைகுலைய வைத்திருக்கும் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரான பிரசாரங்களை எப்படி மனித உரிமை, நீதி, நேர்மை, சுய மரியாதை என்றெல்லாம் பேசும் நபர்களும், அமைப்புகளும் பார்த்துக் கொண்டு மௌனம் காக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. அன்று கெüரவர்கள் சபையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எள்ளளவும் குறைவானதல்ல இப்போது காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி மீது கட்டவிழ்த்து விடப்படும் பிரசாரங்களும், ஆதாரமில்லாத அபவாதங்களும்'' என்றும் நீதிபதி ரெட்டி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியும், காஞ்சி சங்கர மடமும் உண்மையை எடுத்துரைக்க வாய்ப்புக்கூட அளிக்கப்படாத அந்த தர்மசங்கடமான நிலையில், உண்மையின் பக்கம் நின்று குரலெழுப்பிய ஒரே ஊடகம் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' மட்டுமே!
அதற்கு எனக்குத் தரப்பட்ட வெகுமதிதான் வாரண்டு அனுப்பப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை அலுவலகம் சோதனையிடப்பட்டது. இந்தக் கட்டுரைகளின் தமிழாக்கத்தை வெளியிட்ட "துக்ளக்' இதழும் சோதனையிடப்பட்டது. வழக்கம்போல, நீதிமன்றம் தலையிட்டுத் தடை வழங்கியதால் எங்கள் தலை தப்பியது.
என்னை விசாரணை செய்த விசாரணை அதிகாரியிடம், "எந்த அடிப்படையில் நீங்கள் சங்கராச்சாரியாரைக் குற்றவாளி என்று கருதுகிறீர்கள்?' என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர் அளித்த பதில்-- ""கொலை செய்யப்பட்டவர், சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதிக்குத் தொடர்ந்து அவரை விமர்சித்தும் குற்றம் சாட்டியும் கேவலப்படுத்தும் விதத்திலும் கடிதங்கள் எழுதியவண்ணம் இருந்திருக்கிறார். அதனால், அவரை ஜயேந்திர சரஸ்வதி கொலை செய்வதற்கான காரணம் இருக்கிறது!''
""இந்தக் காரணத்தால் சங்கரராமனை சங்கராச்சாரியார் கொலை செய்திருக்கக் கூடும் என்று நீங்கள் கருதுவதானால், அதற்கு முன்னால், சங்கராச்சாரியாருக்கு வேண்டாத வேறு யாராவது இதையே காரணமாக வைத்து சங்கரராமனைக் கொலை செய்து அந்தப் பழியை சங்கராச்சாரியார்மீது சுமத்திவிடவில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். செய்தீர்களா?'' என்று நான் கேட்டேன்.
அவரிடம் பதில் இல்லை. மெüனமாக இருந்தார். நான் மீண்டும் அதே கேள்வியை கேட்டேன். முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டார்.
கிரிமினல் குற்ற விசாரணையில், விசாரணை அதிகாரி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், அது தொடர்பான எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, விசாரித்து, அவை எதுவுமே சாத்தியமில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் விளக்கினேன். அப்படிச் செய்யாமல் போனால், வழக்கு தோற்றுவிடும் என்று நான் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே தயாராக இருக்கவில்லை.
காஞ்சி சங்கராச்சாரியாரை எப்படியாவது குற்றவாளியாக்கி சிக்க வைக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் குறியாக இருந்தார்களே தவிர, அதற்குப் போதிய ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்கின்றனவா என்பதை எல்லாம் உறுதிப்படுத்தும் மனநிலையில் காவல்துறை இருக்கவில்லை. அதன் விளைவுதான் இந்த மிகப் பெரிய சமுதாய, பண்பாட்டு இழப்பு.
ஒரு மேன்மையான, பாரம்பரியமிக்க ஆன்மிக நிறுவனம் மட்டுமல்ல, அதன் லட்சக்கணக்கான வன்முறையை விரும்பாத, சமாதானத்தை நேசிக்கும் விசுவாசிகளும் காயப்பட்டிருக்கிறார்கள். இந்து மதம் கேவலப்படுத்தப்பட்டது. நமது கலாசாரமும், மத நம்பிக்கையும், தரம்தாழ்த்தப்பட்டன. ஆன்மிக வழிகாட்டிகள் ஆஷாடபூதிகளாக சித்திரிக்கப்பட்டனர். காரணமில்லாமல் அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதன் பின்னணியில் அரசியல் மட்டுமல்ல, நமது பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும், ஆன்மிக சிந்தனையையும் சிதைக்கும் சதியும் இருந்தது.
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 குற்றவாளிகளும், போதிய ஆதாரமோ சாட்சியங்களோ இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்கள் என்கிறது தீர்ப்பு. குற்றவாளி யார், அவர் ஏன் தண்டிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்படும்.
நீதிமன்றத்தின் முன்னால் இன்னார் குற்றவாளி என்று காவல்துறை சிலரை குற்றம்சாட்டி நிறுத்துகிறது. அவர்களைக் குற்றவாளிகளாக்கவோ தண்டிக்கவோ போதிய சாட்சியங்கள் இல்லை. உண்மையான குற்றவாளி கிடைக்கவில்லை, அதனால் உங்களை தண்டிக்கிறேன் என்று நீதிமன்றம் இவர்களை தண்டிக்க முடியாது. விடுதலைதான் செய்ய முடியும்.
அப்படியானால் உண்மையான குற்றவாளி யார்? விசாரணை அதிகாரியிடம் 2004 ஆம் ஆண்டு நான் எழுப்பிய அதே கேள்வியை காவல்துறை எழுப்பினால் ஒருவேளை அதற்கு விடை கிடைக்கக் கூடும். ஆனால், காலம் கடந்துவிட்ட பிறகு ஆதாரங்களையும், சாட்சிகளையும் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்போதே செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
ஆரம்பத்திலிருந்தே, காவல்துறைக்கு சங்கரராமனைக் கொலை செய்த உண்மைக் குற்றவாளியைக் கைது செய்வதில் இருந்த அக்கறையைவிட, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியின் மீது பழி சுமத்தி, அவரைக் குற்றவாளியாக்கி, காஞ்சி சங்கரமடத்தின் மரியாதையையும், இந்து மதத்தின் மீதான நம்பிக்கையையும் குலைப்பதில்தான் ஆர்வம் இருந்தது என்பதுதான் உண்மை. அதைத்தான் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது.
சங்கரராமன் கொலை வழக்குத் தீர்ப்பின் பின்னணியில் காவல்துறையினர், அரசு, ஊடகங்கள், சமுதாய சிந்தனையாளர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைத் தொட்டு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். சங்கராச்சாரியாருக்கு எதிராக, காவல் துறையினருக்கு ஆதரவாக, சங்கர மடத்திற்கு எதிராக புழுதிவாரி இறைத்துக் கேவலப்படுத்தும் இயக்கமே நடத்தினார்களே, அவர்கள் தங்களது செயல்களை, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சற்று மீள்பார்வை செய்வார்களா?

Wednesday, November 27, 2013

மகேந்திரனின் மகத்தான படைப்பு - இயல்பு மாறாத இன்னிசை




இப்போது ரஜினி ரசிகனாக இருப்பது வேறு. பள்ளிக்காலங்களில் ரஜினி ரசிகனாக இருப்பது வேறு. அப்போதெல்லாம் ரஜினி ரசிகனுக்கென , எழுதப்படாத மரபுகள் இருந்தன.. கமலை பெர்சனலாக திட்ட வேண்டும்... திட்ட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டு கமல் படத்துக்கு போக வேண்டும்... பாராட்ட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்டு ரஜினி படத்துக்கு போக வேண்டும்.. படங்கள் மட்டும் அல்ல... பாடல்களைக்கூட இப்படி இனம் பிரித்து ரசிக்க வேண்டும் என பல விதிகள் உண்டு.

நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என அவ்வப்போது ஆரோக்கியமான வாக்குவாதங்கள் நிகழும்.. இந்த டிரண்ட் கல்லூரியிலும் தொடர்ந்தது...

எப்படி இருந்தாலும் ரஜினி படம்தானே நல்லா ஓடுது என்பதால் விவாதங்களில் எங்கள் கை சற்று ஓங்கியே இருக்கும். ஆனால் வெளியே சொல்ல முடியாமல் இரண்டு காம்ப்ளக்ஸ்கள் அப்போது இருந்தன..
ரொமான்ஸ் பாடல்களில் பெரும்பாலும் கமல் பட பாடல்கள்தான் நன்றாக இருக்கும்... இன்னொன்று ரஜினி படத்தில் தெரியும் லேசான ஆணாதிக்கம்..

இந்த குறைகளை நீக்கியது டீவியில் பார்த்த ஒரு ரஜினி படம். அந்த படத்தை அதன் பின் மீண்டும் மீண்டும் பல முறை பார்த்து வருகிறேன். ரஜினி படங்களில் எனக்கு பிடித்தது அந்த படம்தான்... அதுதான் ஜானி... மகேந்திரன் படங்களிலும் எனக்கு பிடித்தது அந்த படமே.. கதானாயகியை அந்த அளவுக்கு வேறு யாரும் கண்ணியமாக காட்டியதில்லை.. ரஜினியை அந்த அளவுக்கு யாரும் நடிக்க வைத்ததும் இல்லை..

இந்த காட்சியில் ஸ்கோர் செய்வது ரஜினியா,ஸ்ரீதேவியா, இளையராஜாவா

ரஜினியை மிகவும் வித்தியாசமாக காட்டி இருப்பார் இயக்குனர் மகேந்திரன். அதன் பின்புதான் முள்ளும் மலரும் பார்த்து பிரமித்தேன்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மகேந்திரன் எனக்கு பிடித்த இயக்க்குனராகிப்போனார். அவரது மற்ற படங்களையும் தேடி தேடி பார்க்க ஆரம்பித்தேன்.
அவர் படங்களிம் இயல்பு தன்மை , இயல்பான சுருக்கமான வசனங்கள் , ஈர்க்கும் திரைக்கதை , இயல்பான நடிப்பு , பாடல்கள் படமாக்கப்படும் விதம் என அவர் படங்களின் மாணவன் ஆனேன்,

அந்த வகையில் அவர் படங்களில் எனக்கு பிடித்த ( ஜானி , முள்ளும் மலரும் நீங்கலாக ) படம் நண்டு ( 1981) ...  வெகு வெகு இயல்பான கதை, இயல்பான சம்பவங்கள் , மறக்க முடியாத பாத்திரப்படைப்புகள், விஷுவ
குறியீட்டு ரசிகர்களுக்காக...
ல் ட்ரீட்கள், பாடல்கள் , விறுவிறுப்பான திரைக்கதை , சஸ்பென்ஸ் , வித்தியாசமான சில முயற்சிகள் என கலக்கி இருப்பார்.

ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் பல இருந்தாலும், இரண்டு மட்டும் சொல்கிறேன்..இந்த படத்தில் இரண்டு முழு நீள ஹிந்தி பாடல்கள் இடம்பெற்றுள்ளன.,.. தமிழ் படத்தில் ஹிந்தி பாடல் !!

சிறந்த பாடகராக  நம் மனதில் இருக்கும் பிபி ஸ்ரீநிவாஸ் அவர்கள்தான் இந்த பாடல்களை படைத்த கவிஞர் ஆவார் !!!

டைட்டில் கார்டில் திரைக்கதை வசனம் இயக்கம் மகேந்திரன் என்பது ஹிந்தி மொழியிலும் காட்டப்படுகிறது..


இப்படி பல ஆச்சர்யங்கள்..

படத்தின் கதை சிவசங்கரியினுடையது... அதை அப்படியே எடுக்காமல் கொஞ்சம் மாற்றி வேறோர் அர்த்தம் கொடுத்து இருக்கிறார் மகேந்திரன்.  ஆனால் முள்ளும் மலரும்போல முழுமையாக மாற்றவில்லை..

அது என்ன நண்டு? தலைப்பே ஆச்சர்யம் அளித்தது... படம் முழுக்க நண்டு வந்து கொண்டே இருக்கிறது..  நண்டு வளைக்குள் போகிறது என் இண்டர்வெல் கார்ட் போடுகிறார்கள் ...ஒருவேளை ஹீரோ என நாம் நினைப்பவன் மர்மமான ஆளா என்றெல்லாம் நினைக்கிறோம். கடைசியில்தான் அந்த குறியீடு புரிகிறது..
ஸ்பாய்லர் என்பதெற்கெல்லாம் பழைய படங்களில் அர்த்தம் இல்லை என்றாலும், இன்னும் படம் பார்க்காதவர்கள் யாரேனும் இருக்க கூடும்..எனவே அவர்கள் படம் பார்க்கும் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை..அதை விளக்கவும் விரும்பவில்லை..

நண்டு பாறைகளை துளைப்பதில்லை... துயரங்கள் நல்லவர்களை அழிப்பதில்லை ..இதுதான் படத்தின் கான்சப்ட் என்பதால் , இதன் குறியீடாகவும் நண்டை பார்க்கலாம்..

 நண்டுகளை ஒரு கூடையில் போட்டு வைத்து பாருங்கள்..ஒரு நண்டு மேலே ஏற முயன்றால் , மற்றவை அதை கீழே இழுக்கும். மத்திய தர வாழ்க்கை இப்படித்தான்... கஷ்டப்பட்டு , சிக்கனமாக இருந்து முன்னேற முயலும்போது , பிரச்சனைகள் கீழே இழுக்கும்.. மீண்டும் பல்லைக்கடித்துக்கொண்டு முன்னேறியாக வேண்டும்..இதன் குறியீடாகவும் நண்டை பார்க்கலாம்..

நண்டு வெளியே தெரியாமல் மண்ணுக்குள் இருக்கும்.திடீர் என வெளிப்படும்..அது போல வாழ்க்கையில் பிரச்சனைகள் திடீர் என்றுதான் தோன்றும் என்பதன் குறியீடாகவும் பார்க்கலாம்..

ஆனால் படத்தில் இன்னொரு விஷ்யம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.. பழைய படம்தானே என சொல்ல விரும்பவில்லை... யாரேனும் ஒருவராவது புதிதாக பார்ப்பீர்கள்..உங்கள் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை..


பெரிய இடத்து வடக்கிந்திய பையன் ராம்... பொறுப்பற்ற அப்பா... குடும்பத்தில் மற்றவர்கள் அன்பான்வர்கள்.. பையன் ஆஸ்த்மா நோயாளி... அப்பாவின் டார்ச்சர் பொறுக்க முடியாமல் , அங்கிருந்து கிளம்பி சென்னையில் வேலை கிடைத்து வந்து விடுகிறான்

அங்கே ஓர் ஒண்டு குடித்தனத்தில் புரோக்கர் குமரி முத்து சேர்த்து விடுகிறார்.சென்னை ஆஃபிசில் வேலை செய்யும் சக ஊழியர் சீதாவும் அதே வீட்டில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது தெரிந்து மகிழ்கிறான் ராம் ( குறியீட்டு ரசிகர்கள் , இந்த பெயர்களை கவனியுங்கள் !! ) .

சிதாவின் அம்மா , ( அப்பா இல்லை ) சீதா அக்கா , அவள் கணவன் , வீட்டு ஓனர், எல் அய் சி ஏஜண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி , வீட்டு ஓனர் மகள் , அங்கு இருக்கும் மற்ற பெண்கள் , சீதாவின் தோழி , அவள் தகப்பன் , என பிரதான கேரக்டர்களும் அவர்கள் குணாதிசயங்களும் ( ராமின் குடும்பம் உட்பட ) , வெறும் பத்து நிமிடங்களில் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன என்பதில்தான் மகேந்த்ரன் நிற்கிறார்.

அதன் பின் பலத்த போட்டிகளுக்கிடையே காதலில் சீதா வெல்வது , அக்கா கணவனின் வில்லத்தனத்தை மீறி திருமணம் , குழந்தை , மகிழ்ச்சியான வாழ்க்கை , வட இந்தியா செல்லுதல் , ராம் அம்மாவின் மகிழ்ச்சி , என இளையராஜாவின் பாடலுடன் படம் இனிமையாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.. கடைசியில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த நண்டு வந்து படத்தை முடித்து வைக்கிறது..

பிரச்சனைகள் என்றும் ஓயப்போவதில்லை.. ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே படத்தின் மெசேஜ்..

பிரச்சனைகளை வெல்லும் ஆற்றல்  நம்மிடம் இருப்பது வரம் என்றால் , ஒரு பிரச்சனை முடிந்து விட்டது என ஹாயாக உட்கார முடியாது என்பது சாபம்...மண்ணுக்கடியில் ஒளிந்து இருக்கும்  அடுத்த பிரச்சனை எப்போதும் வெளி வரலாம்..

இந்த இரண்டுக்கும் நடுவில்தான் வாழ்க்கை செல்கிறது..

படிக்கும்போது பாசாகும் பிரச்சனை , காதல் பிரச்சனை , குழ்ந்தை பிறக்கவில்லையே என பிரச்சனை , குழந்தைகளால் பிரச்சனை , அவர்களுக்கு திரும்ண பிரச்சனை என எப்போதும் பிரச்சனைகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன..சினிமாவில்தான் , காதலர்கள் திருமணம் செய்து கொள்வதுடனோ . ஹீரோ பழி வாங்குவதடனோ பிரச்சனை முடிந்து விடுவதாக காட்டுவார்கள்...அல்லது எல்லாம் நாசமா போச்சே என ஒப்பாரியுடன் படத்தை முடிப்பார்கள்.. ஆனால் வாழ்க்கை இப்படி இல்லை..at a given moment , இரண்டுமே இருக்கும்..

இந்த வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த வெகு சில படங்களில் இந்த படமும் ஒன்று..

குளிக்க தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை என்பதும் ஒரு பிரச்சனைதான்,, ஆனால் அங்கும்கூட யாராவது உதவக்கூடும்.. அந்த நேரத்தில் அது பேருதவி.. ஓர் ஆணுடன் பேசினால் , புரணி பேசுபவர்கள் இருந்தால் , ஆதரவு கொடுப்போரும் எங்காவது இருப்பார்கள்.. திருமணத்தை பேசி முடிக்கும் நல்லிதயங்கள் தொலைவில் இருந்து வரக்கூடும்...அதைக்கெடுக்கும் சதிகாரர்கள் கூடவே இருக்கக்கூடும்.. வந்த மருமகளை வாயார வரவேற்கும் மாமியாரும் , துரத்தும் மாமனாரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்..
இப்படி சீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் வெகு இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வட இந்திய காட்சி வசனங்களை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யம்... கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசுவார்கள்..ஆனால் குரல் தமிழில் ஒலிக்கும்..அதாவது நமக்கும் புரிந்து விடும்..அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் வராது..

ஆனால் எல்லா காட்சிகளிலும் இப்படி தமிழ் ஒலிக்காது.. சில சந்தர்ப்பங்களில் தமிழ் , ஹிந்தி மொழி வேறுபாடுகளை வைத்து காட்சி இருக்கும்..உதாரணமாக , மாமியார் பேசுவது சீதாவுக்கு புரியவில்லை..கணவனிடம் கேட்கிறாள் என்றால் , மாமியார் ஹிந்தியிலேயே பேசினால்தான் இயல்பாக இருக்கும்... அது போன்ற இடங்களில் ஹிந்தியிலேயே பேசுவார்கள்.
அதில் சுவாரஸ்யமான காட்சி ஒன்று.. சீதா பேசுவதை தன் தாய்க்கு ராம் விளக்குகிறான் இல்லையா.. அவனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படும்.. அதை அவன் தமிழிலேயே கேட்பான்... என்னப்பா சொல்ற என அம்மா கேட்க, வெட்கத்துடன் தன் தவறை உணர்ந்து ஹிந்தியில் கேட்பான்// மெல்லிய நகைச்சுவை..அதே நேரம் அவன் தமிழ் குடும்பத்தில் பழகி பழகி அவன் மனதில் தமிழ்தான் இருக்கிறது என்பதும் பூடகமாக சொல்லப்பட்டு இருக்கும்..லல்லி சீன்


செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா , குமரிமுத்து , வீட்டுஓனர் , ரிக்‌ஷா ஓட்டுப்வர் என ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது...தேவை இன்றி ஒரு காட்சியும் இல்லை... ஒரு கேரக்டரும் இல்லை...

கதானாயகன் சுரேஷ் நாயகி அஸ்வினி....இருவரும் செம க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள்...  நாயகனுக்கு குரல் கொடுத்து இருப்பவர் சரத்பாபு... அருமை.

அள்ளித் தந்த் பூமி அன்னை அல்லவா , சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா.

எனக்கு மிக மிக பிடித்த பாடல்..

இதை வட இந்திய நாயகன் பாடப்போகிறானா என சற்று புன்னகையுடன் எதிர்பார்த்தேன்.. ஆனால் மகேந்திரன் கில்லாடி... அதை நாயகன் பாடவில்லை.. அவர்கள் ஊர் சுற்றி பார்க்கும்போது பின்னணியில் பாடல் ஒலிக்கும்.. ராஜாவின் பல பாடல்களை நம் இயக்குனர்கள் வீணடித்துள்ளனர்.. ஆனால் மகேந்திரன் போன்ற மேதைகள் அந்த பாடல்களுக்கு உரிய மரியாதை கொடுத்து பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்...உதா. இந்த பாடல்..

பார்த்தே ஆக வேண்டிய அந்த பாடல்

மஞ்சள் வெயில் என்றொரு இன்னொரு பாடல்..மயக்கும் பாடல்..

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்... உன் மூஞ்சிய பார்த்தா காறித்துப்புற மாதிரி இருக்கு என ஓர் இளம்பெண் முன் காறித்துப்புகிறார் நடிகர்... ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்..இதில் என்ன நகைச்சுவை என எனக்கு புரியவில்லை...

காட்சிப்பூர்வமான ஹாஸ்யம் இங்கு வளரவே இல்லை... இந்த படத்தில் காட்சிப்பூர்வ ஹாஸ்யங்கள் அனேகம்.. உதாரணமாக சுண்டல் காட்சி... படம்பார்த்தால் , அதை காண மறக்காதீர்கள்..

கிளைமேக்ச்சை மட்டும் வைத்து படம் எடுக்காமல் , ஒவ்வொரு காட்சியையும் சிறுகதையாக செதுக்கி இருக்கும் நேர்த்தி அபாரம்... சீதாவின் காதலுக்காக , தோழியும் அவள் அப்பாவும் பேசுவது அழகு அழகு அழகு..

இன்னொரு காட்சி..

ராக்கி பண்டிகை... அந்த வீட்டு பெண்களிடன் ராக்கி கயிற்றை கொடுத்து, யாராவது ஒருவர் எனக்கு கட்டி விட்டு , எனக்கு தங்கை ஆகுங்கள் என்கின்றான் ராம்.

அவனை மாடிக்கு போகச்சொல்லி விட்டு பெண்கள் விவாதிக்கிறார்கள்.. யாருக்கும் தங்கையாக விருப்பம் இல்லை... நைசாக நாயகியிடம் கொடுத்து மாடிக்கு அனுப்புகிறார்கள்..அது வரை அவர்கள் காதலை சொல்லிக்கொண்டதில்லை...எனவே நாயகி ராக்கி கயிற்றுடன் மாடிக்கு போகிறாள்..

முன்னணி இசை , இசையராஜா என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டு சிலர் அவரை ஒழித்து கட்டி விட்டார்கள்.. ஆனால் நான் சொல்லும் இந்த காட்சியில் அவர் இசையமைப்பு ஃபர்ஸ்ட் கிளாஸ்.

இந்த காட்சி , அதற்கு நாயகன் பதில் , அவள் என்ன செய்கிறாள் , கீழே வந்து தன் உணர்வுகளை தன் தாயிடம் எப்படி வார்த்தை இன்றி வெளிப்படுத்துகிறாள் , அந்த் தாய் அதை எப்படி ஏற்கிறார் என்பதையெல்லாம் பார்க்கையில் என் கண்கள் கலங்கி விட்டன ( சோகத்தால் அல்ல )/.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா