Sunday, June 10, 2018

கியாரே செட்டிங்கா -காலா வசனகர்த்தாபேட்டி


கா லா  படத்துக்கு வசனம் எழுதியவர்களில் ஒருவரான மகிழநன் விகடனுக்கு வழங்கியபேட்டி


 . 
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தாராவிதான். ஏழு வருடங்களுக்கு முன்னாடி சென்னைக்கு வரும்போது எங்க மக்களைப் பற்றிப் படம் எடுக்க மாட்டாங்களானு ஏக்கத்தோடதான் வந்தேன். என் அரசியல் கண்ணோட்டம் இங்கே இருந்த பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகலை. பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியில வேலைக்குச் சேர்ந்துட்டேன்" என்ற மகிழ்நனிடம் சில கேள்விகள்.  


காலா
"இயக்குநர் ரஞ்சித்துடனான பழக்கம்..?"
"தோழர் ரஞ்சித் எனக்கு முகநூல் நண்பர். அவ்வப்போது நான் எழுதுவதைப் படித்திருக்கிறார். அப்பப்போ போன்ல பேசியிருக்கோம், பின்னர் உற்ற நண்பர் ஆனார். 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி இயக்குநர் என்ற தோரணை எதுவுமே அவரிடம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. 'கபாலி' முடிந்ததும் ஒருநாள் போன் பண்ணி, 'தோழர் வாங்க, தாராவி போயிட்டு வருவோம்'னு சொன்னார். இணை இயக்குநர்கள் பார்த்தி, ஜெனியோடு போய் அங்கே நாங்க சந்திச்ச மனிதர்கள்தான், 'காலா' கதாபாத்திரங்கள் ஆனார்கள். 


நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால், எனக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் யார்னு சொல்ல முடியும். உதராணத்துக்கு, செல்வி கதாபாத்திரம் பல தாராவி பெண்களோட பிரதிபலிப்பாக இருந்தது. ஆரம்பத்துல என்னை வசனம் எழுதச் சொல்வார்னு தெரியாது. எனக்கு ரஞ்சித் தோழரை ரொம்பப் பிடிக்கும். நான் உதவி இயக்குநராக வேலை செய்யணும்னுதான் அவர்கிட்ட கேட்டேன். 'கொஞ்சம் பொறுங்க, உங்களுக்குனு ஒரு வேலை இருக்கு'னு சொன்னார். பிறகு, கதை விவாதத்துல இணைச்சுக்கிட்டார். வசனம் எழுதுறதுக்கு ரஞ்சித், ஆதவன் தோழர்களோடு நானும் சேர்ந்துக்கிட்டேன்." 
"நீங்க தாராவியைச் சேர்ந்தவர்னுதான் வசனம் எழுத வச்சாங்களா?"
"படம் பார்க்கும்போதுதான் எனக்கு ஏன் வசனம் எழுதுற வேலை கொடுத்தார்னு புரிஞ்சது. ரஞ்சித் தோழர்கிட்ட தாராவியைப் பத்தி நான் பல விஷயங்கள் பேசியிருக்கேன். நான் பேசுற தமிழும் திருநெல்வேலி ஸ்லாங்கும்கூட காரணமா இருக்கலாம். படத்துல இயக்குநர் காட்சிக்குத் தேவைப்படுற வசனங்களைக் கேட்பார். அவருக்குத் தேவையான வசன ஆப்ஷன்ஸ் கொடுக்கிறதுதான் என் வேலை. நல்ல வசனங்களா பார்த்துத் தேர்ந்தெடுத்ததும் திருத்தினதும் இயக்குநர்தான்." 


காலா காட்சியில் மகிழ்நன்
" 'கியாரே... செட்டிங்கா' வசனம் உருவான விதத்தைச் சொல்லுங்க, படத்துல பன்ச் வசனங்கள் கம்மியா இருக்கக் காரணம் என்ன?" 
"பாம்பேல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். திடீர்னு ரஞ்சித் தோழர், 'ஒரு பன்ச் வசனம் எழுதனும்'னு சொன்னார். எனக்கு ரஜினி சாருக்கு பன்ச் எழுதுற டென்ஷனைவிட, தோழருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதணும்னு டென்ஷன். சில ஆப்ஷன்ஸ் கொடுத்தேன். அதுல, இயக்குநர் ரஞ்சித் தேர்ந்தெடுத்ததுதான், 'கியாரே செட்டிங்கா' வசனம். மக்களோடு மக்களாக இருக்கிற காலா பன்ச் வசனங்களைவிட, மக்களோட உணர்வுகளைப் பேசணும். கதையோட எல்லையும் அதுதானே!"


"தாராவி மக்கள்ல ஒருத்தனா நீங்க சந்திச்ச பிரச்னைகளைப் படத்துல ரஜினி பேசுனதைப் பார்க்கும்போது எப்படி இருந்தது?"
"தாராவில நான் 10x10 ரூம்லதான் பிறந்தேன். பெரும்பாலான இரவுகள்ல வீட்டுக்கு வெளியே உறங்கும் நிலைதான் எனக்கு. காலா கதாபாத்திரம், தாராவி பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் பல இளைஞர்களோட பிரதிபலிப்புதான். படத்தில் பேசும் அரசியல், துண்டு பிரசுரம் கொடுப்பது, சமூகம் சார்ந்து பேசுற பசங்க... என எல்லாம் நிஜ தாராவியில் நடக்கும் விஷயம்தான். சமுத்திரக்கனி கதாபாத்திரம்கூட தாராவியில் இருக்கும் பல மனிதர்களோட பிரதிபலிப்புதான்."  
தாராவி


"படத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வசனங்கள் உள்ளதா?"            
"ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடி தாராவியை டாப் ஆங்கிள் ஷாட்டில் எடுத்தார்கள். அதை எனக்குப் போட்டுக் காட்டும்போது என் கண் கலங்கிடுச்சு. படத்துல செல்வி கதாபாத்திரம் பேசுற பல வசனங்கள் எங்க அம்மா என்னை எப்படித் திட்டுனாங்கனு கேட்டு எழுதுனேன். சில இடங்களில் காலா பேசுற 'எரிச்சாலும் புதைச்சாலும் இங்கதான். இது இந்த இடத்தில வளந்த மரம்'னு சொல்லும்போது, எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. பல பசங்களுக்கு அந்த 'விழித்திடு இளைஞர் இயக்கம்' பெயரைப் பார்த்துட்டு, தாராவி பசங்க நடத்துற விழித்தெழு இளைஞர்  இயக்கத்தோட கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. என் அக்கா பையன், லெனின் கதாபாத்திரத்தோட கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சதுனு சொன்னான். காலா மக்களை ஒன்றுதிரட்டி, 'உடம்புதான் நம்ம ஆயுதம்'னு  சொல்லும்போது, ரொம்ப உணர்வுபூர்வமாய் இருந்தது." 
'' 'காலா' படத்துல தாராவியின் அரசியல் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கா?"
"தாராவி மிகப்பெரிய ஏரியா. அதுல பல அரசியல் இருக்கு. தாராவி ஒரு ரியல் எஸ்டேட் ஹப் மாதிரிதான். நிறைய பில்டர்ஸ் அணுகுறாங்க. அங்கே இருக்கிற எல்லோருக்கும் ஒரு நல்ல கட்டடம், வீட்டுக்குள்ளேயே டாய்லெட்னு எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கு. ஆனா, அதுக்காக நிலத்துல பாதியைத் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிற திட்டத்தோடதான் வர்றாங்க. எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து மக்கள் உருவாக்கிய நிலம் அது. அது மொத்தமும் தாராவி மக்களுக்குத்தான் சொந்தம். அந்த வகையில, 'காலா' தாராவியைப் பற்றி யாரும் பேசாத அரசியலைப் பேசியிருக்குனுதான் சொல்வேன். இப்படம் தாராவி மக்களுக்கே தாராவியைப் பற்றி எடுத்துச் சொல்ல பெரிதும் உதவியிருக்கிறது!"  என்கிறார் மகிழ்நன்.

Saturday, June 9, 2018

காலா சாதனை - ஏடுகள் படப்பிடிப்பு


ஆதிக்க சாதியினர் மறறும் இந்துத்துவ சக்தியினர் எதிர்ப்புகளை மீறி காலா வெற்றி நடை பே ாடுவதை ஏடுகள் படம் பிடித்து வருகின்றன...
காலாவின் வெற்றி அரசியல்வெற்றியாக மாறாது என ஆருடம்  கூறுகிறார் அதிமுக அமைச்சர்ஜெயகுமார்...  பார்க்கத்தானே  ே பாகிே றாம் :)

காலா - இந்துத்துவ தலித் விரோத சக்திகளுக்கு காலன்


காலாவில் ஒரு காட்சி ... தன் முன்னாள் காதலியை சந்திக்க யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவள் வீட்டுக்கு செல்கிறார் ரஜினி..  அதை தெரிந்து கொண்ட வில்லன் கோஷ்டி அவரை சுற்றி வளைக்கிறது.

தன்னந்தனியாக மாட்டிக்கொள்ளும் ரஜினி வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு ஆயத்தமாகிறார்...

காலம் காலமாக நாம் பார்த்து வந்த ஹீரோயிச சண்டையை ( ஒரு வித அலுப்புடன் ) பார்க்க ஆயத்தமாகிறோம்... ஒரே ஆள் நூறு பேரை சமாளிக்கும் சண்டையை எத்தனை முறை பார்த்திருப்போம்...

ஆனால் அங்குதான் ஒரு இனிய ஆச்சர்யம். அந்த டிபிக்கல் சண்டை நடப்பதில்லை... ரஜினியின்  மகன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் புயலாக புறப்பட்டு வந்து எதிரிகளை பந்தாடுகிறார்கள் .  அது இயல்பாக இருந்தாலும் , யாருக்கும் தெரியாமல் ரஜினி வந்தது அவர்களுக்கு எப்படி தெரியவந்தது ?

அதுதான் ஒரு சிறுகதையாக மிளிர்கிறது.. ஒரு பெண்ணால் , அவள் காதலால் ரஜினி காப்பாற்றப்படுகிறார் என்பது ஒரு சின்ன குறும்படமாக அட சொல்ல வைக்கிறது... கபாலியில் மகளால் காப்பாற்றப்படுவதை விட இந்த காட்சிக்கோர்வை மிக பிரமாதம்.

இப்படி ஒரு ஒவ்வொரு காட்சியாக ரசிக்க வைக்கிறது காலா

அறிமுகப்பாடல் , ரசிகர்களை பார்த்து கும்பிட்ட்ட படி கண் சிமிட்டியபடி அறிமுக ஆவது பாசிட்டிவான ஒரு வசனததுடன் அறிமுகம் ஆவது போன்ற காட்சிகள் ரஜினியால் பிரபலமடைந்து இன்று  போதும் போதும் என்ற அளவுக்கு எல்லா படங்களிலும் இடம் பெற்று வருகின்றன..
\
தக்காளி  போதும்டா .. திருந்துங்கடா என சொல்லும் விதத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு அறிமுக காட்சி ., செம தில் ,திமிர் அல்லது தன்னம்பிக்கை தேவைப்படும் காட்சி..
\
வில்லன்களால் சூழப்பட்டத்தை குறிப்பால் அறிந்து அவரை காப்பாற்ற முயலும் பைக் இளைஞன் , ஒன் லைனர்களால் திரையரங்கை அதிரச்செய்யும் சமுத்திர கனி , எதிர் கருத்தை துணிச்சலாக முன் வைக்கும் இளைய மகன் , தந்தையை மிஞ்சும் மூத்த மகன் , போராளி மருமகள் , கொல்ல விரும்பும் எதிரி என்றாலும் அவனை வீட்டுக்குள் அனுமதிக்க தன் அறம் சார்ந்து ஒரு காரணத்தை சொல்லும் வில்லன் , மனைவி , காதலி என ஒவ்வொரு பாத்திரமுமே செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளன...

இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் என ஒவ்வொருவரும் மிகச்சிறப்ப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..


படம் என்ற வித்த்தில் கிளாஸ்.. சரி ? உள்ளட்டக்கம்?

ரஜினி இந்து மத கடவுளை அவமதித்து விட்டார் என ஒரு இந்துத்துவ நாளிதழ் புலம்பி இருந்தது.//

அற்ப மனிதனின் கடவுளும் அற்பமாகவே இருக்கும் என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி...     மகாத்மா காந்தி வணங்கும் ராமனும் கந்து வட்டிக்காரன் ஒருவன் வணங்கும் ராமனும் ஒரே ராமனாக இருக்க முடியாது அல்லவா ?  அந்த கந்து வட்டிக்காரன் வணங்கும் ராமன்  கண்டிப்பாக அறத்தை போதிப்பவனாக இருக்க முடியாது...

இந்த படம் முழுக்க முழுக்க புத்தர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.. இதில் வரும் புத்தர் போற்றத்தக்கவர்.. ஆனால் இலங்கையில் தமிழனை கொன்று புத்த ஆலயம் கட்டினால் அதை ஏற்க முடியுமா ? இலங்கையில் தமிழ் கைதிகளை கொன்று புத்தர் சிலைக்கு படையல் வைத்த சிங்களர்களை ஏற்க முடியுமா ?

கடவுளை யார் எந்த அர்த்தத்தில் முன் வைக்கிறார்கள் என்பதே முக்கியம்..

இந்த படத்தில் வெகு தெளிவாக இதை கையாண்டு இருக்கிறார்கள்...\

ஒரு காட்சியில் பெண் போராளியை சில போலிசார் அவள் ஆடையை களைந்து மான பங்கம் ( ??? !! ) செய்கின்றனர்...

மானம் போனதும் தற்கொலை செய்யும் பெண்களை தமிழ் சினிமாக்களில் பார்த்துள்ளோம்// என்னை ஒன்னும் செய்யாதே என கெஞ்சும் பெண்களை பார்த்துள்ளோம்..

இந்த போராளி வலியுடன் தன் ஆடையை நோக்கி செல்கிறாள்.. ஆடையை எடுத்துக்கொண்டு அழுது கொண்டு வீட்டுக்கு செல்லப்போகிறாள் என சராசரி ரசிகன் நினைக்கிறான்..
ஆனால் அவள் எடுப்பது ஆடையை அல்ல... எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆயுதம் ஒன்றை.

ஒரு பெண்னை நிர்வாணமாகவோ அரை குறை ஆடையுடனோ பார்த்து விட்டால் அது அவள் கற்புக்குதான் இழுக்கு என இது வரை உருவாக்கப்பட்ட கற்பிதங்களை உடைத்து எறிகிறது காலா///

நாயகன் படத்தில் மும்பையில் வளர்ந்து ஆளான ஹீரோ கடைசி வரை மொழி பெயர்ப்பாளர் துணையுடன் தான் பேசுவார்//

இதில் நாயகன் ஹிந்தியிலும் மராட்டியிலும் புகுந்து விளையாடுகிறார்..

மக்களின் விருப்பம் முன்னோர்கள் சொல் அதுதான் என்னை வழி நடத்தும் ஆணை என கம்பீரமாக ஹிந்தியில் சொல்வது செம

பல காட்சிகளில் பாட்ஷா  மற்றும் படையப்பாவை மிஞ்சிக்காட்டி இருக்கிறார் ரஞ்சித்

மரண மிரட்டல் விடுத்து விட்டு கிளம்பும் வில்லனிடம் , உன்னை நான் இன்னும் கிளம்ப சொல்லலயே என கேலியாக சொல்வதும் அதை அலட்சியம் செய்து விட்டு வில்லன் கிளம்புவதும் அதை தொடரும் காட்சியும் ரஜினி படங்களின் சிகரங்களுள் ஒன்று


ரகுவரனுக்குப்பிறகு சிறப்பான வில்லன்.. பல காட்சிகளில் ரஜினியையே மிஞ்சி இருக்கிறார்..

இப்படி ஒரு சமூக நீதிக்கான படம் இதுவரை வந்ததில்லை..  அம்பேத்கர் உள்ளிட்ட புரட்சியாளர்கள் அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனி வாசன் போன்ற பலர் குறித்து  மற்றவர்கள் பேசி இருந்தால் டிரையாக அல்லது பிரச்சார தொனியுடன் இருந்திருக்கும்.. கமெர்ஷியலாக ஒரு கனமான விஷ்யத்தை ரஞ்சித் வெற்றி பெற்றுள்ளார்

தலித்துகளின் சோகங்களை தோல்விகளை சொன்னால் அரசியல் கட்சியினர் ரசிப்பார்கள்/.////   ஆனால் தலித்துகளை வெற்றியாளர்களாக தலைவர்களாக காட்டினால் தமிழக கட்சியினர் ரசிப்பதில்லை///   கடவுள் எதிர்ப்பை இந்த்துதுவ கட்சியினர் விரும்புவதில்லை//  இந்த இரு தரப்பையும் பகைத்துக்கொண்டு படம் எடுக்க அசாத்திய துணிச்சல் தேவை

சிஸ்டம் சரியில்லை என ரஜினி சொன்னது இந்தியா முழுமைக்கானதும்தான் என தன் காசில் படம் எடுத்து சொன்ன தயாரிப்பாளர் தனுஷ் பாராட்டுக்குரியவர்////

காலா - இன்னும் பல காலம் விவாதிக்கப்பட இருக்கும் கலைப்படைப்பு


------------------------------------------------------



                           



Friday, June 8, 2018

காலா. கர்நாடகத்திலும் ஹிட்

உலகம் சுற்றும் வாலிபன் படம் எப்படி கீழ்த்தரமான பிரச்சாரளை எதிர்ப்புளை மீறிவென்றதே  ா  அதே மாதிரி கா லாவும் வெற்றி வாகை சூடுவதை ஏடுகள் சுட்டிக்காட்டுகின்றன

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா