Friday, December 31, 2010

சந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …

எளிதான வாசிப்பில் ஆரம்பித்து சாரு நிவேதிதா போன்ற இலக்கிய வாசிப்புக்கு வந்து சேர்பவர்கள் பலர்… ஆரம்பத்திலேயே சாரு போன்றவர்களிடம் இருந்து வாசிப்பை ஆரம்பிப்பவர்கள் சிலர்..
அந்த சிலரில் ஒருவர்தான் நண்பர் நிர்மல்..
சந்தல் போராட்டம் (The Santhal revolt 1855 )குறித்தும் படுகொலை குறித்தும் சென்ற பதிவில் எழுதினார்…
அதன் தொடர்ச்சியாக , ஜீரோ டிகிரி நாவல் படித்த பாதிப்பில் , அந்த பிரச்சினையை அலசுகிறார் அவர் , இந்த பதிவில்..
ஒரு நாவல் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம் ..
இனி வருவது அவர் கருத்து

Thursday, December 30, 2010

கர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்

 

லகின் மற்ற இசைகளுக்கும் கர்னாடக இசைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.

இந்த இசை மட்டுமே ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான இசை என்ற முத்திரையை சரியாகவோ தவறாகவோ பெற்று விட்டது…

 

இது குறித்து நண்பர் Mrinzo நிர்மலின் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

 

**********************************************************************

 

ர்நாடக இசையின் மாதம் இது, நம்மால இந்த இசையை ரசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.  நம்ம ஊர் சாஸ்த்ரிய இசை என்று புகழ்கிறோம்.அது தமிழில் இல்லை என்று வருந்துகிறோம்.

நம்ம ஊர்லதான் இருக்கு என்றாலும் நாம் அந்நியப்பட்டுகிடக்கிறோம். ஓர் இசையை இப்படியா சமுகத்தின் பெருவாரியான மக்களிடம் இருந்து அந்நியபடுத்துவது.

இதெல்லாம் உங்களோட Problem , அந்த இசையின் problem இல்லை என்று சொல்லுவாங்க.

சரி எங்களுக்கு ரசனை இல்லைதான், அதை ரசிக்கிறவர்கள் எதை ரசிக்கிறார்கள்? யார் ரசிக்கிறார்கள்? இப்படித்தான் தொன்று தொட்டு இந்த இசை அந்நியப்பட்டு கிடந்ததா?

.

எனக்கு கோபமெல்லாம் அது தமிழில் பாடவில்லை என்றோ அது ஒரு சிறு குழுவின் கையில் இருக்கிறதோ இல்லை.

எனக்கு கோபமெல்லாம் அது ஏன் பக்தியை தவிர எந்த பாடலுக்கும் அங்கு இடமில்லை?

உலகில் உள்ள எல்லா சாஸ்திரிய சங்கீதம் போலத்தானே இதுவும்.

கடவுளுக்கு இந்த இசையை மட்டும்தான் பிடிக்கும்போல...

பக்தியை பிரித்து இந்த இசையை பார்க்கமுடியவில்லையே?

சரி இந்த இசை ஒரு மேட்டுகுடி இசையென்று வைத்து கொள்ளவோம்,

நீங்க தலித்தை, தீண்டாமையை, தொழிலாளியை பற்றி பாடவேண்டாங்க

அதுக்கு நாட்டுப்புற பாட்டு இருக்கு,  

atleast உங்க சகோதரி பற்றி, பெறந்த குழதையை பற்றி, ஒரு நட்பை பற்றி, சாப்பாடை,உங்க சோகத்தை, உங்க காதல் அதன் வெற்றி , தோல்வியை பற்றி, மனிதனை பற்றி இப்படி எவள்ளவோ பற்றி பாடலாம்ல.

இந்த ஹிந்துஸ்தானி இசையை பாருங்க..

பக்திக்கு பஜன், காதலுக்கு கவிதைக்கும் சோகத்துக்கும் கசல், கொண்டாட்டத்துக்கு கவாலி என்று எப்படி பல கோணங்கனில் பரந்து கிடக்குது.

ம்ம்,ஒரு வேளை இந்த இசை கடவுளின் காதல், கடவுளின் செயல் அவரது கருணை, அன்பு மேலும் நூறாண்டுக்கு முன்பு நடந்தவற்றை பற்றி மட்டும்தான் பாடமுடியுமோ?

பக்தி இருக்கவேண்டியதுதான் ... அதற்கு இப்படியா? 100 ஆண்டு கழித்து ஓர் ஆராய்ச்சியாளன் இந்த இசையை வைத்து நமது சமுகத்தை ஆராய்ந்து எழுதினால் என்ன எழுதுவான்?

- Mrinzo Nirmal

-

Wednesday, December 29, 2010

மனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறும்

 நாம் வரலாறு என படிப்பது சில சமயம் கட்டுக்கதைகளாக இருக்க கூடும். உண்மையான வரலாறு கட்டுக்கதையாக தோன்றக்கூடும்.

மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாறுகள் எத்தனையோ உண்டு.

கொடூரங்கள், ஆக்கிரமிப்புகள், வதைகள் என இவற்றின் பேட்டர்ன் ஒரே மாதிரி இருக்கும் என்பதைத்தான் சாரு நிவேதிதாவின் தேகம், சீரோ டிகிரி போன்றவை சொல்கின்றன.

 நம் மண்ணில் நடந்த எத்தனையோ சம்பவங்கள் நமக்கு தெரிவதில்லை..
அந்த வகையில், நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட , இதயத்தை கலங்க வைக்கும் , வரலாற்று தகவலை, நண்பர்  நிர்மல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

********************************************************************


Tuesday, December 28, 2010

exclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அனுப்பிய மனுஷ்யபுத்திரன் - கலகலப்பான புத்தக வெளியீட்டு விழா தொகுப்பு

 சாரு என்றால் எல்லோரையும் திட்டுபவர் என்ற பெயர் பரவியிருக்கிறது..உண்மையில் நான் அப்படிப்பட்டவன் அல்ல.  என சாரு கூறினார்.

இதற்கு முன்பும் , இதற்கு பிறகும் என்ற கவிதை தொகுப்பு நூல் ( எழுதியவர் : கவிஞர் மனுஷ்யபுத்திரன் ) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது...

அந்த கவிதைகளை பற்றி பிறகு விரிவாக எழுதுவேன்..

இப்போது விழா பற்றிய சுருக்கமான தொகுப்பு , உங்கள் பார்வைக்கு


சுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mrinzo Nirmal

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய கேளுங்க, சுகம்கொடுக்குற பொண்ணுக்கு மனசு இருக்கு பாருங்க.

 ஈசன் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில்   தஞ்சை செல்வி படிய பாட்டை கேட்டீர்களா.?


 எனக்கு தெரிஞ்சி "சுகம் குடுக்குற பொண்ணு" என முதல்  முறையா ஒரு பொண்ணு சொலற மாதிரி நம்ம தமிழ் படத்தில் வந்தது இதுதான் முதல் முறை என்று  நினைகேறேன். ஒரு பொண்ணோட கதைதான் பாட்டு, அந்த பாட்டு சொல்லும் அர்த்தத்திற்கு Irony யான ஒரு background music.


 கதைய கேட்கும் போது ஏற்படும் உணர்வை அந்த rhythem  மறைகிறது, இதுதான் நம்ம ஸ்டைல், சோகத்தை சொன்னாலும் ஒரு கும்மாளத்தோடு சொல்லுறது. இந்த Back  ground music ....



  • அந்த பெண் அவளது வறுமையை தனது உடலால் வென்றதை சொல்லுதா?!!! 
  • விபச்சாரம் பாவம்.. அதை செய்பவர்கள் பாவி என்று சொல்லும் கலாச்சார கனவான்களுக்கு குடுக்குற மரண அடியா?


  •  என்னோட கனவுகள் உடைந்துபோனாலும் மத்தவங்க   கனவுகளுக்காக    இந்த கூத்தா?!!



இப்படி பல நெனைப்பு நமக்கு ஏற்படுது இந்த பாட்டை கேட்கும்போது.  


இந்த தஞ்சை செல்வி என்ற பாடகியை பார்க்கணும்னா...  http://www.cinefundas.com/2010/11/22/thanjai-selvi-speaks-about-easan ,


--Mrinzo Nirmal

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா