Saturday, March 27, 2010

ஒண்ணரை வாரத்தில் கன்னடம் கற்று கொள்வது எப்படி ?ஒரு இலக்கிய வாதியின் நாள் குறிப்பு

சக தமிழன் என்ற முறையில், குரல் கொடுப்பது , என் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என நான் அப்போது நினைக்கவில்லை..
வழக்கம் டி சாப்பிட அந்த கடைக்கு சென்ற போதுதான் அவனை பார்த்தேன்.... கடை பையனுடன் சண்டை போட்டு கொண்டு இருந்தான்... " அட...தமிழனா " என எனக்கு உற்சாகமாக இருந்தது... பெங்களூரில் எனக்கு தமிழ் நண்பர்கள் யாரும் இல்லாததால் , பேச்சு துணைக்கு ஒரு ஆள் கிடைத்த உற்சாகம் எனக்கு...

கடை பையனுடன் அவனுக்கு இருந்த மொழி பிரச்சினையை, தலை இட்டு தீர்த்து வைத்தேன்...வழக்கமா அங்கு இருக்கும் தமிழ் பைய்யன் லீவு போல...

நானும் தமிழ்தான் பாஸ்.. போன வாரம்தான், இங்கே வேலை கிடைச்சு வந்தேன்..லாட்ஜ்ல தங்கி இருக்கேன்..ரூம் தேடிகிட்டு இருக்கேன்... என தன சுய வரலாறு சொன்னான்...

பெங்கலோர்ரில் வேலை என்றால், நம் மக்கள் சாப்ட் வேர் என்றுதான் நினைகிறார்கள்... ஆனால், மற்ற துறைகளில், அதுவும் சிறிய நிருவனகளில், புதிதாக வேலைக்கு சேர்பவர்களின் பிரச்சினை பலருக்கு தெரிவதில்லை... ரூம் முதல் உணவு வரை நாம் தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்...

நான் ஒரு வீட்டின் , கீழ் போஷனில் தங்கி இருந்தேன்... " உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால், என் ரூமுலயே தங்கிகொங்க " என்ற என் அழைப்பை அவன் ஏற்று கொண்டான்...

" ஊர் நல்ல தான் இருக்கு... மொழிதான் பிடி படல... "முத்தே"ங்ராய்ங்க்க ... "சவ் சவ் பாத்"ங்ராய்ங்க்க ..ஒன்னும் புரியல மாமு என்றான் அவன்... வேலை இடத்தில பல பிரச்சினைகள்... சாப்ட் வேர் மாதிரி இங்கிலிஷை வைத்து காலம் தள்ள முடியாது... ஒரு முடிவெடுத்து, முப்பது நாளில் கன்னடம் என்ற புத்தகம் வாங்கினோம்... படித்ததும் , ஓரளவு தன்னம்பிக்கை ஏற்பட்டது...

பல்லவில நல்ல படம் போட்டு இருக்க்காய்ங்க்க...போலம்ட மச்சான் என்ற அவன் அழைப்பை மறுக்க முடியாமல் சென்றேன்... எப்படி போறது... ரெண்டு பேருக்கும் ரூட் தெரியாது...
கன்னட அறிவை காட்டும் உத்தேசத்துடன், ஒரு கடை காரரை அணுகினேன்,,, " பல்லவி தியேட்டர் ஹொகு பேக்கு... சினிமா... எல்லி .. எப்படி போகணும்...விச் பஸ்.. ஆட்டோ " என தெளிவாக கேட்டேன்... அவர் சிறிது யோசித்து விட்டு என் நபனிடம் சொன்னார்.. " தம்பி என்ன மொழி பேசறாரு..எனக்கு தமிழ் கன்னடம், தெலுங்கு எல்லாம் தெர்யும்..இவர் பேசறதை கொஞ்சம் மொழி பெயர்த்து சொல்லுங்க "

புத்தக கன்னடம் உதவாது என புரிந்து கொண்ட நாங்கள், நேரடியாக கற்று கொள்ள முடிவு செய்தோம்... வீட்டு ஓனர் மகள், எங்களோடு அவபோது தமிழ் கலந்த கன்னடம் பேசுவாள்... அவளை அணுகி, ஒரு மாதம் , கன்னடம் கற்று தர வேண்டு கொள் விடுத்தோம்... சில பேச்சு வார்த்தைகளுக்கு பின் , தினமும் கற்று தர முடிவானது...

என்னதான் கற்று கொண்டாலும், என்னால் இயல்பாக கன்னடம் பேச முடியவில்லை... மற்றவர்கள் பேசும் போது ஆச்சரியாமாக இருக்கும்.... என் நண்பன், ஆர்வமாக கற்று கொண்டான்... சில சமயம் , நீண்ட நேரம் கூட ஆவலுடன் இருந்து ஊக்கமாக கற்று கொண்டான்... நான் விரைவில் முடித்து கொள்வேன்...

ஒரு நாள் இரவு படுத்து இருந்தேன்... " மச்சான்.. ஒரு முக்கியமான மேட்டர்... அந்த கன்னட சொல்லி தர்ற பொண்ணு..." என ஆரம்பித்தான்... " டேய் ..தூங்கு...எப்ப பார்த்தாலும் கன்னடம தான... எனக்க தமிழ் போதும் " எரிச்சலுடன் சொல்லி தூங்கி விட்டேன்...

மறு நாள் காலை... அவன் ரூமில் இல்லை... அவன் சாமன்களும் இல்லை.. எனக்கு ஆச்சரியாமாக இருந்தது.... மேஜையில் ஒரு லெட்டெர் இருந்தது..வந்து பார்த்துக்கலாம் என நினைத்த படி வெளியே வந்தேன்...

வீட்டு ஓனர் வீடு பர பரப்பாக இருந்தது... அவர் மகளை காணவில்லையாம்....

எனக்கு திக் என இருந்தது.... அட பாவி... இதை தான் நேத்து சொல்ல பார்த்தியா ....
வீடு ஓனர் என்னிடம் வந்தார்... விஷயம் எனக்கு தெரிய கூடாது என நினைத்தாரோ என்னவோ.. சகஜமாக பேசினார்.. " நல்ல இருக்கியாப....உன் சிநேகித எல்லி " என சாதாரநமாக கேட்டார்...

என் பயத்தை காட்டி கொள்ளாமல் நானும பேசினேன்... 'அவனு அலசூர் ஹோகிதனே சார்.. சார், நன்கே சென்னயல்லி கலச சிக்கிதே... " அட... பயத்தில் கன்னட பேச வருகிறதே என ஆச்சர்யத்துடன்., சென்னையில் வேலை கிடைத்து இருப்பதாவும், ரூமை காலி செய்வதாகவும் சொன்னேன்....

அவருக்கு எங்கள் மேல் எந்த சந்தேகம் இல்லை என்பதால், எந்த பிரச்சினையும் இல்லாமல், ரூமை காலி செய்து தப்பித்தேன்...

இன்று நன்றாக கன்னட பேசுகிறேன்... ஆபாச மாக எழுதி, கன்னட இலக்கிய புரட்சி செய்யும் அளவுக்கு அறிவு ஜீவி ஆகி விட்டாலும் , அன்று பேசிய என் முதல் கன்னட வார்த்தைகளை என்றும் மறக்க முடியாது... ஒன்ன்னரை வாரத்தில் கன்னட சொல்லி கொடுத்த அந்த பெண்ணையும் மறக்க முடியாது...

அந்த நண்பன், லெட்டரை எடுத்து வர மறந்து விட்டதால், அதில் என்னதான் எழுதி இருந்தான், என இது வரை தெரியவில்லை

3 comments:

  1. i know what he has written in the letter:
    i have shot the girl

    ReplyDelete
  2. aa letternalli enu barithe gothha"naanu aa hudugiyannu oduskondu hoguthene neenu solppa jagirthiyagi roomnalli iru ee mane sowkar barthane bandhu nin snegitha ellianthu keluthane kelithare ithannu avarige helli"nanu helvathannu yaratharannu helubeda ondhu eradu koottu kuda heluthare athare neenu enu helubeda"

    magane nin snegitha ninna trousara bittu hogithana illa athannu kooda bichukonndu hogithana..

    Its so nice baby,

    Regards,
    Prabhu
    mangaloruindhe......

    ReplyDelete
  3. .ha ha ..super..
    prabhu avare .. dhanyawaadhagaLu.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா