Wednesday, August 4, 2010

aunty யின் காம வெறியும் , பாண்டியின் இலக்கிய வெறியும் ... அடல்ட்ஸ் ஒன்லி



(இந்த கதையில் வரும் பெயர்கள் , சம்பவங்கள, இடங்கள் அனைத்தும் கற்பனையே... )

" என்னது, பலான படம் பாக்குறதுக்கு உனக்கு சம்பளமா?" வாயை பிளந்தனர் பாண்டியின் சகாக்கள்...
அந்த காலத்தில் நம்முடன் சேர்ந்து மது தியேட்டரில் பிட்டு படம் பார்த்தவன் இன்று சீனைசென்னை சென்று பெரிய ஆளாகி , மீண்டும் ஊருக்கு வந்ததை பாராட்டாமல் இப்படி பொறாமை படுவது பாண்டிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது...

"சென்னை சென்று எப்படி எல்லாம் கஷ்டபட்டோம்.. எப்படி எல்லாம் சாதனை செய்தோம்.. இன்று எந்த கண்டிஷனில் ஊருக்கு வந்து இருக்கிறோம் , என தெரியாமல் இப்படி நினைக்கிறார்களே !!! "

பாண்டியின் சிந்தனை சிறகுகள் பின்னோக்கி பறந்தன...

********************************************************************************************************************************************************************
பசங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுதல், சீன் படம் பார்த்தல் என இருந்தாலும் நன்றாக படிப்பவன் பாண்டி... எந்த தேர்வு எழுதினாலும் பக்கம் பாகாமாக எழுதுவான்... அடிஷனல் சீட் கொடுத்து , தேர்வு நடத்துபவரே திணறி போவார்... நண்பர் அணியில் அவன் மட்டும் படிப்பை முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்தான்...


வேலைக்கான தேர்வுகள் அவனுக்கு ரசிக்க வில்லை .... எழுத வாய்ப்பு இல்லை.. சும்மா டிக் அடிப்பது.... அவனுக்கு ஒத்து வரவில்லை...

வேறு வேலை தேடினான்...

ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றான்...

" வாங்க தம்பி " ஆசிரியர் மன்னாரு வரவேற்றார்...

அமர்ந்தான் பாண்டி...

" எனக்கு நூல் விமர்சனம் எழுத ஆள் தேவை... இதோ, இந்த மேஜைல இருக்கிற புத்தகத்தை படிச்சுட்டு , எழுதி காட்டுங்க.. எனக்கு பிடிச்சு இருந்தா வேலை... "

மேஜையை காட்டிவிட்டு அவர் சென்று விட்டார்...

விமரசம எழுதி பழக்கம் இல்லை.. ஆனால் எழுத்துதான் கை வந்த கலை ஆச்சே.. நம்பிக்கையுடன் படிக்க ஆரம்பித்தான்... பெரிய புத்தகம்...


கலையில் சென்ற மன்னாரு மாலைதான் வந்தார்.. எழுதியதை காட்டினான் பாண்டி...

எல்லோரும் சும்மா நாலு வார்த்தைகள் எழுதி மன்னரை எரிச்சல் படுத்துவார்கள்... இவன் எழுதியது நாற்பது பக்கம்... அசந்து போய் படிக்க ஆரம்பித்தார் ..

அருமை , அருமை...அட என சொன்னவாறே படித்தார்... விமர்சனத்தை படித்தவுடன் அவருக்கே அந்த நாவலை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது...

" சுப்பர் தம்பி " என்றவரே நாவலை எடுத்தவர் , அதிர்ச்சி அடைந்தார்....

புத்தக கவர் பிரிக்கபடமலேயே இருந்தது... " அட பாவி... புத்தகம் படிக்காமலேயே விமரசனமா... யாரை ஏமாற்ற பாக்குற/.. என் அனுபவமும , உன் வயசும் ஒன்னு....ராஸ்கல்.. கெட் அவுட் "அலறினார்..

" சார்.. பொய் சொல்லி வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ... படிச்சுதான் எழுதுனேன் " ரோஷத்துடன் சொன்னான் பாண்டி...

" எதை படிச்ச ? "

" இதோ. மேஜை மேல இருந்த இந்த புத்தகத்தைதான் " அவன் காட்டிய புத்தகத்தை பார்த்து திகைத்து போனார் மன்னாரு

"இந்த புத்தகத்துக்கு நாற்பது பக்க விமர்சனமா ?? !!! " அவன் காட்டிய புத்தகத்தை திகைப்புடன் பார்த்தார்..

அவன் காட்டியது............ டெலிபோன் டைரக்டரி !!!!!!!!!

மீண்டும் விமர்சனத்தை படிக்க ஆரம்பித்தார்..

" நான் லீனியர் பாணியில் கதை எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என தெரியாமல் அருமையாக எழுதப்பட்டுள்ளது... பின்நவினத்துவ எழுத்துக்கு உதாரணம் இதுதான்... மண்ணின் மனத்துடன் பல கேரக்டர்கள் நம்முன் நடமாடுகின்றன.... ஒவ்வொரு அத்தியாயத்தையும் நமபர் அடிப்படையில் பிரிக்காமல் , எழுத்தின் அடிப்பதையில் பிரித்து இருப்பது , எழுத்தாளரின் கிரியேட்டிவிட்டியை காட்டுகிறது.... ஊரின் ஒவ்வொரு தெருவுக்கும்செல்லும் உணர்வை நாவல் ஏற்படுத்துகிறது.."

என்பது போல நாற்பது பக்கம் சென்றது,,

கடைச்யில் முத்தாய்ப்பாக எழுதி இருந்தான்..

பிளஸ் : பலதரப்பட்ட கேரக்டர்கள் இருப்பது

மைனஸ் : சம்பவங்கள் அதிகம் இல்லாதது

வெர்டிக்ட் ; வித்தியாசமாக எழுத நினைப்பவர்களும், எழுத்தை பயில நினைப்பவர்களும் ஒருவாட்டி படிக்கலாம் ...

ஆடி போய் விட்டார் மன்னாரு.... " யு ஆர் அப்ப்பாயன்ட் டேட் "

*************************************************************************************************************************************

அதன் பின் பாண்டியின் இலக்கிய பாய்ச்சல் ஆரம்பித்தது... மகிழ்ந்துபோன மானாறு அவனை பல இடங்களுக்கும் கூட்டி செல்ல ஆரம்பித்தார்..

ஒரு முறை அவனை பலான தியேடருக்கு கூட்டி சென்றார்...

"படம் எப்படி? " அவனிடம் இடைவேளையின்போது கேட்டார்..

" டைரக்ஷன் சரி இல்லை சார் "

" இந்த படத்துல ஆக்ஷன்தனே முக்கியம் " என நினைத்து கொண்ட அவர், அவனை புரியாமல் பார்த்தார்...

" கதாநாயகனோட குறி , கதாநாயகிக்கு தெரியாமல் இருந்தால்தான் கதை நல்ல இருந்து இருக்கும்... தெரியற மாதிரி இருப்பது சரி இல்லை "

ஆடி போனார் மன்னாரு...

" குறி எப்ப தெரிஞ்சுது? " நாம் சரியாய் பாக்கலை போல என நினைத்து கொண்டார்...

" காதலிக்கும் போது, அவனோட குறி , அதாவது நோக்கம் உடல்சுகம்தான் னு , அவன் பார்வை காட்டி கொடுதுடுது... ..கேமிர அந்த இடத்துல சூப்பர் "

" ஒ.. அந்த குறியா ? " சற்று நிம்மதி அடைந்தாலும், அவனது வித்தியாசமான பார்வை அவரை கவர்ந்தது..

" இனி மேல் , ஊர்ல இருக்குற எல்லா பிட் படத்தையும் பார்த்து விமர்சனம் எழுதுவதுதான் உன் வேலை . டபுள் சாலரி உனக்கு " என்றார்...

*********************************************************************************************************************************************

ஜாலியாக படம் பார்ப்பது வேறு.. ஆனால் விமரசனத்துக்காக பார்க்க போவது டென்ஷனாக இருந்தது,,,,

பக்கத்தி சீட்டில் ஒரு லோக்கல் அரசியல்வாதி இருந்ததை பார்க்க ஆசாரியாமாக இருந்தது...

" நான் பத்திரிக்கையாளன்... உங்களை பார்த்ததில் சந்தோசம் " கைகுல்க்கினான்.. அவர் சற்று சங்கடமாக கை குலுக்கினார்...

படம் சூடு பிடிக்க தொடங்கியது...

அவர் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்...

" சார்.. என்னோட தம்பி... ? "

" சொல்லுங்க சார்.. அவரும் அரசியல்ல இருக்காற... தேர்தல்ல நிக்க போறாரா... " குடும்ப அரசியல் என கவர் ஸ்டோரி செய்யும் ஆவலில் கேட்டான்...

" ஆமா... தம்பி நிக்கிறான்... நீங்கதான் கை கொடுக்கணும் ..உதவியா இருக்கும்..நானும் கைம்மாறு செய்றேன் "

" இதெல்லாம் யோசிச்சிதான் சொல்ல முடியும் . ஆசிரியரை கேட்கணும் " அவன் பந்தாவாக சொல்ல அவர் ஏமாற்றம் அடைந்தார்...

கொஞ்ச நேரம் கழித்து , பேச்சு கொடுத்தான்... " சரி சார்.. அவன்ர் தேர்தல்ல ஜெயிக்க நான் கை கொடுக்க தயார் "

" ஒன்னும் வேண்டாம்... அவன் சுயேச்சையாகவே ஜெயிச்சுட்டான் "........

அவர் எழுந்து செல்வதை புரியாமல் பார்த்தான் பாண்டி...

***************************************************************************************************************************


அவன் விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியது... புத்தகத்தின் பாதி பக்கங்கள் அவனுக்கு ஒதுக்கப்பட்டன.. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எழுதுவது பெரிய வரவேற்பை பெற்றது...

ஆனால் ஆரம்ப காலத்தில் அனுபவம் இல்லாமல் தவறு செய்தான்...

தியேட்டருக்கு செல்லும் வழியில் , ஒரு கோழி குஞ்சுதனியாக கத்தி கொண்டு இருப்பதை பார்த்தான்... இதை வீட்டுக்கு எடுத்து சென்றால் வறுத்து சாப்பிடலாமே ..

நைசாக பேன்ட் பாக்கெட்டில் எடுத்து வைத்து கொண்டான்..

எல்லோரும் அவனையே பார்ப்பது போல தோன்றியது... பேன்ட் பக்கெட்டில் கோழி குஞ்சு முண்டி கொண்டு இருப்பது எரிச்சலாக இருந்தது... " அனுபவமில்லாமல் திருட கூடாது,, "

அவன் அருகில் பள்ளி மாணவர்கள் சிலர் மனது படத்தை ரசித்து கொண்டு இருந்தனர்.... அவர்களை பார்த்த பாண்டி திடிக்கிட்டான்.. அவர்களும் கோழி குஞ்சை திருடி பாக்கெட்டில் வைத்து இருந்ததும், அது முண்டி கொண்டு இருப்பதும் ,தெரிந்தது..

" அட திருட்டு பசங்களா " நினைத்து கொண்டான்...

அதில் ஒருவன கோழி குஞ்சை கொன்று விட்டன போல... ரத்தம் வடிவது போல தோன்றியது..

" ஐயோ..கோழி குஞ்சை கொன்னுட்டான் ": தன்னை மறந்து கூவ, அவர்கள் அதிர்ந்து போய் பார்த்தனர்..

" யோவ்... படத்தை பாருய்ய... இதை எல்லாம பாக்குறது.. " எரிச்சலுடன் எழுந்து சென்றனர்.. அதில் இருந்து யார் பிரச்சினையிலும் தலை இடாமால் , படம் மட்டும் பார்க்கஆரம்பித்தான்.
***************************************************************************************************************************


தமிழ்நாட்டில் ஒரு அதிர்வை உண்டாக்கியது அவன் எழுத்து.. பலான படங்களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்து கிடைத்தது...

நல்ல படங்கள் பிளப் ஆக தொடங்கின...

பெரிய நடிகர்கள் பயந்தனர்... அந்த பத்திர்க்கையை தட்டி வைக்க முடிவு செய்தனர் ..

*****************************************************************************************************************************

" சார்..இனி மேல் இது போல எழுத மாட்டோம் சார் " மன்னாரு பம்மினார்...

" பிட்டு படத்தை இப்படியா ரசித்து எழுதுவீங்க... எம்பது பக்கத்துக்கு சிறப்பு மலர் வேற .. என் தம்பி படம் வர்ற நேரத்துல உங்கள மாதிரு ஆளுங்களை நினைச்ச பயம் இருக்கு... இனிமே எழுத மாட்டோம் எழுதி கொடுத்துட்டு, தேவையான பணம் வாங்கிட்டு போங்க "

பாண்டி எழுத ஆரம்பித்தான்..

திடிரென எழுதுவதை நிறுத்தி விட்டு யோசிப்பதை பார்த்த மன்னாரு குழம்பினார் ..

" என்ன ஆச்சுப்பா ? "

"அடிஷனல் சீட் வேணும் சார் "

மன்னாரு மயக்கம் அடைந்தார் .

********************************* a short story by pichaikkaaran.com *************************************************************

10 comments:

  1. ரொம்ப நல்லா எழுதறீங்க தல .........

    ReplyDelete
  2. நல்லா எழுதியிருக்கீங்க.....புரியிறவங்களுக்கு புரியும்..

    நண்பரே நிஜமாகவே அனுபவம் அதிகம் போல..


    (கோவப்படாதிங்க நான் படம் பாக்கிறதா சொன்னேன்..)

    ReplyDelete
  3. wow man u r great

    ReplyDelete
  4. " ஒன்னும் வேண்டாம்... அவன் சுயேச்சையாகவே ஜெயிச்சுட்டான் "........

    அவர் எழுந்து செல்வதை புரியாமல் பார்த்தான் பாண்டி...

    Engalukku puruinchuthu.

    ReplyDelete
  5. என் சிரிப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது....

    ReplyDelete
  6. " ஆமா... தம்பி நிக்கிறான்... நீங்கதான் கை கொடுக்கணும் ..உதவியா இருக்கும்..நானும் கைம்மாறு செய்றேன் "

    அருமையான நடை....வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  7. பிச்சை - சூப்பர் சூப்பரு...........

    ReplyDelete
  8. சூப்பர்... சூப்பரு

    ReplyDelete
  9. செம்ம...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா