Wednesday, January 26, 2011

சாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island



ந்த சாமியார் ஆசிரமத்துக்குள் நுழைந்தது வேறு ஏதோ ஒரு நாட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது . வேறு நாடு என சொல்வதை விட வேறு உலகம் என்றே சொல்லலாம். எங்கும் எதிலும் ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கு. தீவில் இருக்கும் அந்த ஆஸ்ரமத்துக்கு சிறிய கப்பல் மூலம்தான் ( மின் சக்தி மூலம் இயங்க கூடியது) வர முடியும்.. என்னை மட்டும் ஹெலிகாப்டரில் வர அனுமதித்து இருந்தார்கள்.
ஏனென்றால் நான் பக்தி காரணமாகவோ, அரசியல் காரணமாகவோ , பேட்டிக்காகவோ இங்கு வரவில்லை. சாமியாரின் விசேஷ அழைப்பின் பேரில் வந்து இருக்கிறேன்.
ஒரு சாஃப்ட்வேர் நிபுணனான என்னிடம் சாமியாருக்கு என்ன வேலை இருக்க வேண்டும்?
எனக்கு புரியவில்லை.. ஆனால் அந்த இடத்தை பார்க்க வேண்டும் என ரொம்ப நாளாக ஆசை.. நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்.
சாமியாரின் மந்திர ஆற்றல், ஆசி பெற்றதும் அமைச்சர் பதவி கிடைத்த அதிசயம், மூன்று மாதத்தில் ஆன்மீக விழிப்புணர்வு தரும் பயிற்சி போன்ற விஷயங்கள் ஒரு புறம்- பவுர்ணமி அன்று நடக்கும் நிர்வாண பூஜை,  ஆன்மீக நடனங்கள் போன்ற விஷ்யங்கள் ஒரு புறம் என என் புனைவும் அபுனைவும் கலந்து என் ஆர்வத்தை கிளறி விட்டு இருந்தன.
எல்லாவற்றுகும் மேல் எனக்கு அழைப்பு விடுத்த ஆஷ்ரம பெண்ணின் குரல் எனக்கு போதை ஏற்றி இருந்தது..

ஹலோ என்பதற்கு பதிலாக குரு வாழ்க என்று சொல்லி பேச்சை ஆரம்பித்தாள்.
யார் அந்த குரு என குழம்புவதற்குள் அவளே விளக்கினாள்
“ சார்..உங்க கூட ரெண்டு நிமிஷம் பேசணும்.. உலக மகா குரு உன்மத்த குருஜீ உங்களை பார்க்க விரும்புறார். விசிட்டிங் சார்ஜ் கொடுத்துடுவோம் “ என்றாள்.
அவனவன் சாமியாரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும் நிலையில் என்னிடன் இவர் ஏன் அப்பாயின்மெண்ட் கேட்கிறார். சரி.. போய்த்தான் பார்க்கலாமே…
“ ஓகே மேடம் . இந்த பவுர்ணமி அங்கு இருப்பேன் ” ( ஏதாவது ரகசிய பூஜைகள் நடந்தால் பார்த்து விடலாமே !! )
***********************

சாப்பிட்டு ஓய்வெடுத்த பின் சாமியாரிடம் அழைத்து சென்றனர். ஒவ்வொன்றும் கச்சிதமாக செய்யப்பட்டன.. அந்த தீவுக்கென தனியாக ஒரு டி வி சானலை ஆஸ்ரமம் நடத்துவது ஆச்சர்யமாக இருந்தது..
ஒரு பிரமாண்டமான படம் ( சாமியாரின் படம் ) பூக்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது… தீபங்கள் எரிந்தன..  சாமியார் அதற்கு சற்றும் முன் அமர்ந்து இருந்தார்.. அவரையும், அவர் படத்தையும் ஒன்றாக பார்ப்பது வினோதமாக இருந்தது..

அமருமாறு சைகை காட்டினார்.. அமர்ந்தேன்.
நேரடியாக விஷயத்துக்கு வந்தார்..
” தம்பி ..உன்னை பற்றி கேள்வி பட்டுதான் இங்கே வரவழைத்தோம். உன் படிப்பு பிளஸ் ஆன்மீக அறிவு மற்றும் டெக்னிக்கல் ஸ்கிள்  எமக்கு தேவைப்படுகின்றன..
உன் நேர்மையையும் நாம் அறிவோம்.. இந்த எல்லாம் சேர்ந்த ஒருவரை கண்டு பிடிப்பது சிரமம்.. நீ இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்பது இறை விருப்பம்.”
” என்ன பணி ? “
என் முன் வைக்கப்பட்ட சோம பாணத்தை பருகியபடி கேட்டேன்.
“ பல ஆண்டுகளாக எங்கள் ஆன்மீக மரபில் நாங்கள் செய்வது ஒரே ஒரு விஷ்யம்தான். எல்லா மதங்களிலும் உள்ள ஆன்மீக சக்தி கொண்ட வார்த்தைகளை தொகுப்பது.
ஒவ்வொரு மதத்திலும் சில வார்த்தைகள் இருக்கும். ஒரே மதத்தில் இருக்கும் பிரிவுகளில் கூட சில பிரத்யேக வார்த்தைகள் இருக்க கூடும்..
சில பட்டியலிடப்பட்டு இருக்காது.. அதையும் தொகுக்க வேண்டும்..
இதை பட்டியலிட ஒரு புரோகிராமை உருவாக்குதலே உன் பணி. இதை நாங்களாக செய்தால் இன்னும் நூறாண்டுகள் ஆகும். எனவேதான் உன்னை அழைத்தோம் “
” இதற்கு எதற்கு புரோகிராம்? எல்லா மந்திரமும்தான் புத்தகங்களில் இருக்குமே? “
“ இருக்காது.. ஓம் நம சிவாய என்பது ஒரு மந்திரம். இது தெரிந்த ஒன்று.  யாராவது ஒருவர் ஓம் குமாராய நமஹ என ஒரு மந்திரத்தை பயன்படுத்தி வர கூடும். அது எந்த புத்தகத்திலும் இருக்காது.
ஆனால் குமரர் பெயரில் வழிபாடு இருப்பது நமக்கு தெரியும்.. அவர்கள் சைவ மரபில் வந்தவர்கள் எனவும் தெரியும்.. இந்த லாஜிக்கை பயன்படுத்தி , என் அனுபவத்தையும் பயன்படுத்தி , ஒரு ஃபார்முலாவை , புரோகிராமை உருவாக்கினால் , அவர்கள் என்ன மந்திரம் சொல்வார்கள் என்பது தெரிந்து விடும்.
ஒருவர் தெய்வம், அவர்கள் எந்த மத பிரிவை சேர்ந்தவர்கள் என்ற லிஸ்ட் எம்மிடம் இருக்கிறது. இதை மந்திரமாக மாற்றும் புரோகிராம் தேவை.
மேலும் வேறு என்ன மதங்கள் இருக்கின்றன என்பதை கண்டு பிடிக்கும் புரோகிராமும் தேவை..
வெவ்வேறு வார்த்தைகளை உருவாக்கு.. அது மதத்தின் பெயரா இல்லையா என கண்டு பிடிக்கும் கைட்லைன் தருகிறேன். அதையும் ஃபீட் செய்து , புரோகிராம் உருவாக்கு “
எனக்கு தலை சுற்றியது. ஆனால் என் திறமைக்கு தகுந்த சவால் இதுதான் எனவும் தோன்றியது.
ஒப்புக்கொண்டேன்.

*************************
வுர்ணமி பூஜை ..
நான் ஆவலாக எதிர்பார்த்த நிர்வாண பூஜை உண்மையா? உதாரா?
முதன் முதலில் என்னுடன் தொலை பேசிய பெண் பூஜாதான் அழைத்து சென்றாள்.
பெரிய சாமி சிலை.. ஒவ்வொருவரும் பால் எடுத்து செல்ல வேண்டும். சென்று இருந்தார்கள்.
என் கண்கள் பெண்களையே நோட்டமிட்டு கொண்டு இருந்தது. பக்கத்தில் பூஜா இருந்ததால் சற்று கட்டுப்படுத்தி கொண்டேன்.
பூஜைக்கு நேரம் ஆச்சு ‘
சாமியார் குரல் கொடுக்க அனைவரும் பரபரப்பு ஆனார்கள்..
ஒவ்வொருவராக பால் அபிஷேகம் செய்யலாம்.. என அறிவிக்கப்பட்டது..
நிர்வாண பூஜை எப்போ? என் இதயம் வேகமாக துடித்தது..
முதல் நபராக நானும் பூஜாவும் சென்றோம்.
சாமி சிலை அருகே சென்றோம்..
“ ஆடை இல்லாம அபிஷேகம் செய்யணும் “ சாமியார் சொல்ல , பூஜாவை ஆவலாக பார்த்தேன்.
இந்த வெள்ளை சேலையிலேயே இப்படி இருக்கிறாளே.. ம்ம்ம்.
” சார்.. ஆடை இருக்க கூடாது” என்னிடம் அழுத்தமாக சாமியார் சொல்ல , அட , எனக்கும் இந்த விதி பொருந்துமா? சற்று திகைத்தேன்.
லேசாக பெல்ட்டை லூஸ் செய்தபடி பூஜாவை பார்த்தேன்.
அவள் எந்த ரெஸ்பான்சும் இல்லாமல் இருந்தாள்.
“ பூஜா.. அவர் சொன்னாரே.. ஆடை..” இழுத்தேன்.
“ நான் தான் அதை அப்பவே எடுத்துட்டேனே.. நீங்களும் ஆடையை எடுத்துட்டு சீக்கிரம் வாங்க” எரிச்சலுடன் சொல்லி விட்டு,  என் கையில் இருந்த பாலில் இருந்த ஆடையை எடுத்து தூக்கி போட்டாள்.
“ சரி வாங்க”
இந்த ஆடையா?
அட ஆண்டவா.
அவசரமாக அவள் பார்க்காமல் இருக்கும்போது ஜிப்பை போட்டுகொண்டு பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்தேன்
***********************************
பால் அபிஷேகம் இப்படி ஏமாற்றத்தில் முடிந்தாலும், வேலை சுறுசுறுப்பாக சென்றது.
கடினமான வேலைதான்.
ஆனாலும் புரோகிராம் செய்து விட்டேன்.
இனி அது செய்லபடுவதை கண்கானிக்க வேண்டியதுதான்..
இந்த வேலை நடப்பது வேறு யாருக்கும் தெரியாது.
பூஜாவுக்கும் கூட தெரியாது..
மந்திரங்கள் ஒவ்வொன்றாக கம்யூட்டரில் தோன்ற ஆரம்பிக்க சாமியாருக்கு ஏக திருப்தி.
ஆனால் ம்தங்களின் பெயர் தோன்றுவதில் சில சிக்கல்கள் இருந்தன . அர்த்தமற்ற பெயர்கள் கூட வந்தன..
அதை ஃபில்டர் செய்ய சில வசதிகள் செய்தேன்.
*************************************
குரு ஜி.. என் வேலை முடிந்தது… இனி உலகின் எல்லா ம்தங்களின் மந்திரங்களும் ( ரகசிய மதங்களின் மந்திரங்கள் உட்பட ) இதில் தோன்றி விடும்.. இதை ஒலி வடிவில் கேட்கவும், ஒரே நேரத்தில் ஆசிரமத்தில் ஒலிபரப்பாகவும் ஏற்பாடு செய்து விட்டேன் .
இப்போது ஆரம்பித்தால், மாலைக்குள் எல்லாம் கேட்டு விடலாம்.. நானும் இருந்து கேட்க ஆசைதான். ஆனால் அவசர வேலை .. கிளம்ப வேண்டும்”
குரு தாம்பாளத்தில் பழங்கள், பணம் வைத்து கொடுத்தார்.
“உன் வேலைக்கு பணம் மட்டும் போதாது… வேறு ஏதாவது கேள் “
தயக்கதுடன் கேட்டேன்.
“ பூஜாவை என்னுடன் அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்”
சாமியார் புன் சிரிப்புடன் அதை அங்கீகரித்தார்.
”அழைத்து சென்று , உன் வீட்டில் அறிமுகப்படுத்தி விட்டு , மீண்டும் வந்து விட்டுவிடு.  அவள் பெற்றோர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.இங்கேயே திருமணம் நடக்கட்டும் “
*********************
சாமியாரே சொல்லி விட்டதால், என்னுடன் பூஜாவை அனுப்ப அவள் பெற்றொர் சம்மதித்தனர்..
அவ்ள் தங்கைதான் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
“ சீக்கிரம் வந்துடுக்கா… எனக்கு போரடிக்கும்”
பூஜாவும் கண்ணீருடன் கிளம்பினாள்..
கப்பல் கிளம்பியது..
” ஆமா.. நீங்க என்ன வேலையா வந்தீங்க.. “
“ அட..இன்னும் உனக்கு தெரியாதுல…”
சொல்ல ஆரம்பித்தேன்..
சொல்ல சொல்ல அவள் முகம் மாறியது..
“ மை காட்.. இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லல?”
செல்போனை எடுத்தாள்…
பயனில்லை… சிக்னல் கிடைக்கவில்லை..
“ என்ன பூஜா? ஏன் பதட்டம் ? “
” உங்களுக்கு இந்த வேலை கொடுத்தாரே.. அதன் பின் விளைவுகள் என்னாகும்? யோசித்தீர்களா? “
எனக்கு புரியவில்லை..
“ என்ன ஆகும் ? “
“  வாழ்வின்  உச்ச கட்ட சாத்தியத்தை தேடுவதில்தான் மனிதனின் சக்தி பயன்பட்டு வருகிறது.. அதற்குதான் மனிதன் படைக்கப்பட்டு இருக்கிறான்.
உண்மை மிக பிரமாண்டமாக இருபதால், பல்வேறு மதங்கள், மந்திரங்கள் தோன்றின…
ஒட்டு மொத்தமாக அனைத்துமே தெரிந்து விட்டால் அதன் பின் வாழ்வே அர்த்தம் இழந்து விடுமே ? “
எனக்கு ஏதோ புரிவது போல இருந்தது..
“ அப்படி என்றால் அனைத்தும் தெரிந்து விட்ட நிலையில், அந்த குருவும் அந்த தீவுவாசிகளும் தற்கொலை செய்து கொள்வார்கள் என நினைக்கிறாயா? “

“ இல்லை… அவர்கள் வாழ்வின் பொருள் இழந்து விட்டால், அதன் பின் இயற்கையே அவர்கள் வாழ்வை முடித்து விடும் என்பதே என் அச்சம் “
அடடா… இன்னேரம் மந்திரம் சொல்லி முடிந்து இருக்குமே..
உடனே கப்பலை திருப்புங்கள்..
நான் சொல்வதற்குள், தொலைவில் சிறிய புள்ளியாக தெரிந்த தீவில் இருந்து வெண்ணிற தீக்குழம்புகள் எழுந்தன…
கதறி அழ தொடங்கினாள் பூஜா.
ஒட்டு மொத்த ஆஸ்ரமவாசிகளுடன் சாமியார் தற்கொலை”
“ பயங்கர விபத்தில் தீவு அழிந்தது.. சதி வேலையா ? “
“ எதிரிகளின் நாச வேலையா.. சாமியார் உட்பட அனைவரும் பலி
நாளை எப்படி வேண்டுமானாலும் செய்தி வரலாம்..
ஆனால் அவை எதுவும் உண்மையாக இருக்காது என எனக்கு மட்டுமே தெரியும்…

12 comments:

  1. மிகவும் பரபரப்பா இருந்தது ...

    ReplyDelete
  2. ஆன்மீகத் தேடல்தான் இந்த மாதிரியெல்லாம் சிந்திக்கத் தோணுகிறதோ. :)

    சுவாரசியமாய்ப் போய்க்கொண்டிருக்கும் போது இந்தப் பாலாடை 'சப்'பென்றிருந்தது. வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.

    ReplyDelete
  3. ஆஹா..ஆடையில்லாத பால் அபிசேகம் முதலே அனுமானித்துவிட்டேன். கனக்க சாமிக்கதைகளை எழுதாதீங்க பிறகு சாமிக்குத்தம் ஆயிடும். கவனம். நாளையே உங்கள் கணனியை திறக்க அது வெடித்தும் விடும் மந்திரங்களும் உண்டாம்.

    ReplyDelete
  4. பின்னுறீங்களே பாஸ்! :-)

    ReplyDelete
  5. கலக்கல்...ஞானம் ப்ரோக்ராமிலா..அருமை..அருமை..(பாலாடை மேட்டர் ஒட்டவில்லை)

    ReplyDelete
  6. நான் கையில் எடுத்த அந்த சரசம்... சல்லாபம்.,... சாமியார் புத்தகத்தை எனக்கு தெரியாம வாங்கியிருக்கீங்க.... அப்படித்தானே...

    ReplyDelete
  7. யாரப்பா அது விடிகாலைல பதிவு போடறது...?

    ReplyDelete
  8. பாஸ் மேட்டர் கலக்கல்தான்... லே அவுட்ல ஏதோ பிராப்ளம்னு நினைக்கிறேன்.. எடிட் போய் 4வது சீர்க்கு டிக் குடுங்க

    ReplyDelete
  9. ஏதோ ஆங்கிலப்பட விமர்சனம்னு நினைச்சேன்.. அப்புறம் பார்த்தா நித்யானந்தா மேட்டர்... ம் ம் நல்ல புனைவு..

    ReplyDelete
  10. சூப்பர் கொஞ்சமே கொஞ்சமாய் வாத்தியாரின் சொர்க்கத்தீவு ஞாபகம் வந்தது

    ReplyDelete
  11. I ve read, mostly this type of same story by RAJENDRAKUMAR...........on 1985.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா