Friday, September 21, 2012

புயலிலே ஒரு தோணியை மிஞ்சிய ”கடலுக்கு அப்பால்” நாவல்

புயலிலே ஒரு தோணி- புகழ் சேர்த்த நாவல்

ப. சிங்காரத்தின் இன்னொரு நாவலான , கடலுக்கு அப்பால் மிக சிறந்த நாவல்களில் ஒன்று. ஆனால் புயலிலே ஒரு தோணி பெற்ற புகழுக்கு முன் , இந்த புகழ் கொஞ்சம் பின் தங்கியே இருக்கிறது ( பு. ஒ . தோணி நாவலே கூட உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பது வேறு விஷயம் )

         கடலுக்கு அப்பால் நாவல், பு ஒ தோணி நாவலின் தொடர்ச்சியோ, முன் பாகமோ இல்லை. இரண்டின் கதை களமும் , கால கட்டமும் ஒன்று. ஆனால் இரண்டும் தனி தனி நாவல்கள். ஒன்றை படிக்காமலேயே இன்னொன்றை படிக்கலாம்.

ஆனால் இரண்டையும் சேர்த்து படித்தால் முழுமையான பார்வை கிடைக்கும். காரணம் இரண்டு நாவல்களும் வெவ்வேறு எதிர் துருவங்களில் இயங்குகின்றன.  புயலிலே ஒரு தோணியின் எதிர் நாவல் என்று கூட கடலுக்கு அப்பால் நாவலை சொல்லி விட இயலும்.

    நாம் பெரும்பாலும் நம்மை பற்றியேதான் யோசித்து கொண்டு இருப்போம். அன்றாட கவலைகள் , பிரச்சினைகள் என்று மனம் பிசியாக இருக்கும்.

  புயலிலே ஒரு தோணி வாழ்க்கையை , அதன் அபத்தங்களை , குரூரங்களை , மகிழ்ச்சிகளை , கொண்டாட்டங்களை , சாகசங்களை உன்னிப்பாக பதிவு செய்கிறது.

 தலைகளை வெட்டி கண்காட்சி வைப்பது , வெட்டப்பட்ட தலைகளுக்கு தலை சீவி விடுவது , பேருந்துகளை கார் என அழைத்த கால கட்டம் , சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாபெரும் தலைவனைக் கூட , உணர்ச்சி வசப்படாமல் ஒரு பார்வையாளனாக கவனிக்கும் நிகழ்வு என ஒவ்வொன்றையும் பாண்டியன் மூலம் உன்னிப்பாக கவனிக்கிறோம்.

 வாழ்க்கையை பாரபட்சமின்றி ஒரு வித எள்ளலுடன் , ஒரு விலகலுடன் கவனிப்பது , மிகவும் நுட்பமான விஷ்யம். நமக்கு சம்பந்தம் இல்லாத விஷ்யங்களை இப்படி கவனிக்கலாம். ஆனால் நாமே சம்பந்தப்படும் விஷ்யங்களில் , இந்த வில்கல் சாத்தியம் இல்லை.

கடலுக்கு அப்பால் செல்லையா வேறு விதம்.  நம்மை சுற்ரி நிகழும் விஷ்யங்களை நாம் எப்படி பிரதிபலிக்கிறோம்  என தன்னை உன்னிப்பாக கவனிப்பவன் இவன்.

தன்னை கவனிப்பது ஒரு துருவம் என்றால் , தன்னை சுற்றி நிகழும் விஷ்யங்களை உன்னிப்பாக கவனிப்பது இன்னொரு துருவம்.

தன்னை அறிந்தால் உலகை அறியலாம். உலகை அறிந்தால் , தன்னை அறியலாம் என்ற நம் ஊர் சித்தர் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது .

செல்லையா போர் காலங்களில் ஹீரோவாக திகழ்ந்தவன்,  போர் இல்லாத நிலையில் அவன் வீரம் , திறமைக்கு வேலை இல்லை. எனவே மீண்டும் பழைய வேலைக்கு திரும்ப வேண்டிய நிலை.

இவனை வளர்த்து ஆளாக்கி தன் மகளை அவனுக்கு கொடுக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் இருந்தவர் வயிரமுத்து பிள்ளை. ஆனால் அவன் ராணுவத்துக்கு சென்று வந்தது அவருக்கு பிடிக்கவில்லை.

அவர் மகள் மரகதமும் , செல்லையாவும் ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கிறார்கள்.

முன்பு இந்த காதலுக்கு ஆதரவாக இருந்த  வயிரமுத்து   பிள்ளை இந்த காதலுக்கு இப்போது எதிரி.

வயிரமுத்து ரி பிள்ளை கெட்டவர் இல்லை. கடும் உழைப்பாளி , செல்லையா உட்பட அனைவருக்கும் நல்லது நினைப்பவர். ஆனால் அவர் மூர்க்கமாக காதலை எதிர்க்கிறார்.

அவர் கொஞ்சம் கெட்டவராக இருந்தால் கூட , அவரை தூக்கி எறிந்து விட்டு காதலர்கள் ஒன்று சேர்ந்து இருக்க முடியும். ஆனால் இப்போது பிரிவை தவிர வேறு வழி இல்லை.

இந்த பின்னணியில் , பல விஷ்யங்களை ஆராய முடியும்.  வயிரமுத்து   பிள்ளை நல்லதுதான் நினைக்கிறார் என்றாலும் , அவர் செய்வது அனைவருக்கும் கெட்டதுதான் . அவர் மகளுக்கோ, அவர் பார்த்திருக்கும் மாப்பிளைக்கோ, செல்லையாவுக்கோ , அவருக்கே கூட தொலை நோக்கு பார்வையில் இது நல்லது இல்லை.

ஏன் இப்படி செய்கிறார் என ஆராய்ந்து பார்த்தால் சில விஷ்யங்கள் தெரியும். செல்லையாவை தன் வியாபார வாரிசாக்க நினைத்த நிலையில் , அவன் ராணுவத்துக்கு சென்றது அவர் ஈகோவுக்கு பெரிய அடி.

இன்ன்னோரு கோணத்தில் பார்த்தால் , அவர் ஆசையாக வளர்த்த அவன் மகன்  இறந்து விடுகிறான். அவர் மகன் வயதை ஒத்த செல்லையாவை பார்க்கையில் , அவர் மனதில் இனம் பெரிய பொறாமை வெறுப்பு ஏற்பட்டு இருக்க கூடும்.

மரகதத்தின் கோணத்தில் இருந்து பார்த்தால் , அவள்  நியாயம் என்பது ஊரோடு ஒத்து வாழ்வது. செல்லையாவுடன் பழகி விட்டு , இன்னொரு மணப்பது அவளை பொறுத்தவரை தவறு இல்லை.

கவனித்து பார்த்தால் , இவர்கள் இருவரையும் குற்றம் சாட்ட , வெறுக்க ஆயிரம் காரணங்கள் செல்லையாவுக்கு கிடைக்கும்.

ஆனால் செல்லையா இவர்களையோ , வாழ்க்கையையோ விமர்சிக்கவில்லை. முழுக்க முழுக்க தன்னை மட்டுமே கவனிக்கிறான்.

தனக்கு உரியவள் , தன்னை நேசித்தவள் இன்னொருவனுக்கு உடமையாவது தனக்கு பொறாமை ஏற்படுத்துகிறது என்றால், இதில் காதல் எங்கே இருக்கிறது. தன் அகங்காரம்தானே இதில் தெரிகிறது என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுகிறது.

தன் காதலியை இழந்தாலும் , தன்னை புரிந்து கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது.

உலகம் தோன்றியது எத்தனையோ செல்லையாக்கள் , எத்தனையோ மரகதங்கள்.. எவ்வளவோ கண்ணீர்கள். கண்ணீர் சிந்திய செல்லையாக்கள் எத்தனையோ பேர்..யாருக்காக இந்த கண்ணீர். அகந்தைக்காகவே இந்த கண்ணீர் என்ற சிந்தனை உலுக்கி விடுகிறது..

காதல் , அன்பு என்று நாம் நினைத்து வைத்து இருக்கும் விஷ்யங்களை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த நாவல்.


இந்த இரண்டு நாவல்களும் ஒரே புத்தகத்தில் கிடைக்கின்றன. ப சிங்காரத்தின் பேட்டி இடம் பெற்று இருப்பது இனிய போனஸ்.

புயலிலே ஒரு தோணி - ப . சிங்காரம்
தமிழினி பதிப்பகம்
விலை - ரூ 180
**************************************

என்னை கவர்ந்த வரிகள் சில


  •  பொண்டாட்டிய கூப்பிட சொன்னா , மாமியாளை கூட்டியாந்து விடிகிற பயல்ங்கிறது சரியா போச்சுல
  • தண்டமிழாசான் சாத்தன் இப்போது மணிமேகலையின் பிறப்பு மர்மத்தை நேர்முகமாக ஆராய்ந்து கொண்டு இருக்கிறான். அவனை பதினாறாம் இலக்க அறையில் இருந்து வெளியேற்றுவது கடினம்
  • தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதலில் பொதிய மலை போதையில் இருந்து விடுபட வேண்டும்
  • தனியாக சென்றாலும் நீதி கிடைக்கும் என்ற நிலை வந்தால் , ஜாதி முறையின் பிடி தளர்ந்து விடும்
  • ஒன்றை விட்டு ஒன்றை பற்றுதல் . ஆ, என்ன மடமை. சாதி சமயத்தை விட்டேன். சங்கத்தையும் , கட்சியையும் பற்றினேன். கற்பனை தெய்வ சிலைகளை நிராகரித்து , வெட்ட வெளிச்ச மானிட பொம்மைகளை தொழுகிறேன். காவி உடை சன்னியாசிகளை பழித்து , வேறு உடை செயலாளர்களை தொழுகிறேன். தேர் திருவிழாக்களுக்கு செல்வதை நிறுத்தி, மா நாடுகளுக்கு செல்கிறேன் . நெற்றியில் திரு நீறு அணிவதை விடுத்து சட்டையில் சின்னம் அணிகிறேன். மானிடனே , நண்பனே.. நீ ஏமாந்தாய். எதை விட்டு எதை பற்றினாய். அதற்கிது எவ்வகையில் நயம்?
  • போன டச்சு காரர்கள் திரும்பி விட்டனர். இருந்த ஜப்பானியர் போய் விட்டனர். மீண்டும் இவர்கள வரலாம். அவர்கள் போகலாம்.  கீர்த்தியின் விலை என்ன ? பயன் என்ன ? முடிவு என்ன ?
  •        ஒரே ஒருக்க , உன் முகத்தை இரண்டு கைகளால் தொடணும் மரகதம்”  செல்லையாவின் குரல் , தாயிடம் ஒரே ஒரு மிட்டாய் கேட்கும் சிறுவனின் கெஞ்சல் போல குழைந்தது
  • நான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா ?   சொல்லு   “ நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா , மரகதம்னு பேரு வைங்க
  • எந்த கழுதையும் கற்புரசியாக இருக்க முடியும். காலைக்கட்டி கொண்டு சும்மா இருந்தால் போதும்

            எல்லாம் யோசிக்கும் வேளையில், பசி தீர உண்பதும் , உறங்குவதுமாய் முடியும்


******************************


கண்டிப்பாக படித்து பாருங்கள் 

1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா