Friday, November 30, 2012

எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகல் - ஏன் , எதற்கு ?

 நீண்ட நாட்களாக பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்த எடியூரப்பா ஒரு வழியாக பா.ஜ கவில் இருந்து வெளியேறி புதிய கட்சி உருவாக்கி இருக்கிறார், ஆனால் , அவர் பேச்சு இது மொத்தமும் நாடகமோ என எண்ண வைத்துள்ளது.

பிஜேபி அரசை கவிழ்க்க மாட்டேன், அந்த கட்சிதான் எனக்கு முகவரி தந்தது , கட்சியில் இருந்து கண்ணீருடன் தான் வெளியேறுகிறேன், இது மிகவும் துக்ககரமான  நாள் என்றேல்லாம் பேசி இருக்கிறார்.

ஆர் எஸ் எஸையோ , பிஜேபி தலைவர்களையோ எதிர்த்து எதுவும் பேசவில்லை. பிஜேபியின் கைப்பிள்ளைகளான நிதின் கட்காரியையும் , அனந்த குமாரையும் பற்றியும் மட்டும் போனால் போகட்டும் என விமர்சித்து பேசி இருக்கிறார். இவர்களை திட்டி ஒன்றும் ஆக போவதில்லை என  அவருக்கு நன்றாகவே தெரியும்.

இவர் கட்சியில் இருந்து விலகுவதாகவே இல்லை. ஆனால் வழக்குகள் பாயும் என்ற நிலையில், காங்கிரஸ் சார்பு நிலை எடுத்தால் பாதுகாப்பு என நினைத்தார். ஆனால் , காங்கிரசில் ஏற்கனவே பல தலைவர்கள் இருக்கும் நிலையில் , இவரை வரவேற்க அவர்கள் தயாராக இல்லை. பிஜேபியையும் முறைத்து கொண்டாயிற்று , வேறு வழியில்லாமல்தான் விலகி இருக்கிறார்,  அவர் தவறு செய்து இருந்தால் , அந்த தவறுக்கு பிஜேபியும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் , ஆனால் இந்த விலகலால் , பிஜேபி தவறே செய்யாதது            போலவும் , அவர்தான் அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பு என்பது போலவும் , பிஜேபி ஒரு கருத்தௌ உருவாக்க முயலும்.


கொஞ்ச நாள் கழித்து கண்கள் பனிக்க , இதயம் இனிக்க இருவரும் இணைவார்கள்.. குஜராத் தேர்தலுக்காக  காத்திருக்கிறார்கள்...


மற்றபடி மக்கள் நலனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா