Sunday, December 9, 2012

விஸ்வரூபம் - கமல் அறிக்கையும் , மக்களின் எதிர்வினையும்


  
   விஸ்வரூபம் படம் , கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கிய பின்னும் , எதிர்பார்த்தபடி அவுட் புட் இல்லை எனவும் எனவே நேரடியாக டீவியில் வெளியிட்டு கிடைத்த பணத்துடன் சேஃபாக இருந்து கொள்ள கமல் திட்டமிட்டுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு கமல் பதில் அளித்துள்ளார். ஆனால் அந்த பதில் சால்ஜாப்பாக இருப்பதாகவும், தெளிவில்லை என்றும் கூறப்படுகிறது.

  கமல் அறிக்கையும் , நடு நிலையாளர்களின் எதிர்வினையும் பின் வருமாறு..

*********************************************************************
  கமல் : புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

   நடு நிலையாளர்கள்   எல்லா புதிய கண்டு பிடிப்புகளும் நன்மைக்காகவே என்று சொல்லி விட முடியாது. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் என்ற விஷ்யத்தை இங்கு புகுத்தி விவசாயத்தை அழிக்க சிலர் முயற்சி செய்தார்கள் . புதிய விஷ்யம் என அதை ஏற்க முடியுமா?  அணு சக்தி என்ற கண்டு பிடிப்பு கோடிக்கணக்கானோரை அழிக்கவில்லையா... 
 இன்னொரு நாட்டிற்கு பொருந்தகூடிய விஷ்யம் நம் நாட்டிற்கும் பொருந்தும் என்ற அடிமை மனப்பான்மை கமல் போன்றோரிடன் நீடிப்பது வருந்தத்தக்கது.  


ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
          புரிந்து கொண்டுதான் எதிர்க்கிறார்கள்.. 

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.

    ஒரு பொருள் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து வாங்கும் உரிமையை நுகர்வோரிடம் இருந்து பறிக்கும் இந்த முறை , அம்பானி போன்ற பணக்கார முதலாளிகளுக்கு உவப்பாகத்தான் இருக்கும். அவர்கள் இதை வரவேற்க கூடும், ஆனால் மற்றவர்கள் இதை எதிர்க்கிறார்கள் . முதல்வரிடம் மனு கொடுக்கும் அளவுக்கு கோபம் அடைந்து இருக்கிறார்கள். 
இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
                      இது நாசம் விளைவிக்கும் என சிறுபான்மை அல்ல.. பெரும்பான்மையான திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், ரசிகர்கள் நினைக்கிறார்கள்.            
ல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.
        வசதியானவர்களை தாஜா செய்ய நினைத்து , எளியவர்களை பலியாக்குவது தவறல்லவா ?

இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.
  என்ன பெரிய சான்று? கமலால் நஷ்டம் என புலம்பாத தயாரிப்பாளர் உண்டா.. முக்தா சீனிவாசன் , கலைப்புலி தாணு என மாபெரும் பட்டியலே இருக்கிறதே.... 

என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.

 யார் என்ன விலை கேட்டார்கள்... சொல்ல முடியுமா? சில படங்கள் திரைய்ரங்குகளுக்கே வராமல் நேரடியாக தொலைக்காட்சிக்கே விற்கப்பட்டுள்ளன... அதிக விலை கேட்டும் , இப்படி செய்யவில்லை. விலைபோகாமல் போனதால் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டன. 

முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.
    இதையெல்லாம் விட , நல்ல படம் எடுக்க வேண்டும் என்பது முக்கியம். காப்பி அடிப்பதோ, மொழி பெயர்ப்பு செய்வதோ மட்டும் போதாது. 

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.
         இசை வெளிவந்ததே பலருக்கு தெரியாது என்பதே உண்மை... இசைத்தகடு சேல்ஸ் ரிப்போர்ட் மிக மோசமாகவே இருக்கிறது..

இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

         இந்திய சினிமாவை நம்புகிறது..ஓகே..கமல் படத்தை நம்புகிறதா ? 
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. 
           தங்காவிட்டாலும் , வேறு முறையில் காப்பி செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரியும். 
ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.
          தியேட்டர் கட்டணத்தை போல பத்து மடங்கு என்பது சரியான கணக்கல்ல.. அந்த ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஆள் மட்டுமா வீட்டில் படம் பார்ப்பார் ? 

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.
               பிறகு ஏன் டீவியில் காட்டுகிறீர்கள். இது ஆயிரம் ரூபாய் கொடுப்பவனை ஏமாற்றுவது ஆகாதா ? 

DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.
            அந்த 1 1/2 விழுக்காட்டினர், படம் குப்பை என சொல்லி விட்டால் , நெகடிவ் பப்ளிசிட்டி ஆகி 100 விழுக்காட்டையும் பாதிக்குமே ...

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.
 திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

ஒரு தவறு , இன்னோரு தவறை நியாயப்படுத்தாது.. இரண்டுமே தவறு... 
இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.
 சிலர்தான் சுபிட்சமாக வாழ்கிறார்கள்..பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர்கள் , சினிமாவை விட்டே போய் விட்டார்கள்.. பல சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.  சில மூடப்பட இருக்கின்றன.  
பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.
      ஆனால் கேபிள் டிவி , விசிடி வரவால் சினிமாவுக்கு போவதை குறைத்து கொண்டார்கள். முன்பெலலாம் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும்ம். இப்போதோ போதிய ஆட்கள் வராமல் காட்சிகள் ரத்தாகின்றன. 

கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. 
        சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?
ஹோட்டல்களை மூடவில்லை... ஆனால் சினிமா வீடுகளுக்கே வருவதால் , பல தியேட்டர்களை மூடி விட்டார்கள். 


முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.
 அவ்வளவு உறுதியாக இருந்தால் , இஸ்லாமிய பெரியவர்களுக்கு படத்தை முன்கூட்டியே திரையிட்டு காட்டலாமே.. படம் இஸ்லாத்தின் மாண்பை உயர்த்துவதாக் இருந்தால் , வேண்டிய அளவு விருந்தளிப்பார்களே... 
அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

                இஸ்லாம் பெரியவர்களுக்கு திரையிட்டு காண்பித்து அனுமதி பெற்றால் , கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை மகிழ்ச்சியுடன் செய்வார்கள்...

4 comments:

  1. குரலாக கேட்டேன் ஒரு தளத்தில்..இப்போது அதற்க்கு எதிர் COMMENT போட்டு படிக்கிறேன் .உங்கள் கேள்விகளில் சில எனக்கும் எழுந்தன ..

    ReplyDelete
  2. Dear Sir,

    I have only one doubt....In your blog , you always mention about 'நடு நிலையாளர்கள்'...Yaru sir avanga???ethanai per irukkanga

    ReplyDelete
  3. தியேட்டருக்கே வரதாவங்களுக்கு டி.டி.ஹெச். என்றால் படம் ரிலீஸ் ஆகி நாலஞ்சு நாள் கழித்து அதில் ஒளிபரப்ப வேண்டியது தானே

    - ட்வீட்டரில் மாயவரத்தான் கேள்வி

    ReplyDelete
  4. பெரும்பான்மையானோர் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லி விட்டு சினிமாத்துறையினர் எதிர்க்கிறார்கள் என்றும் பிதற்றல். அப்போ ஆதரிக்கும் பெரும்பான்மை சினிமாத் துறை இல்லையோ?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா