Monday, April 29, 2013

மற்றவர்களை திட்டுவதில் இன்பம் காண்கிறீர்களா- இந்த ஆச்சர்மூட்டும் புத்தகம் உங்களுக்குத்தான்...


  நண்பனின் நண்பன் ஒருவன். அவனிடம் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. அவனிடம் கவர்ச்சிகரமான அம்சங்கள் ஏதும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட திறன் மறக்க முடியாதது.  அந்த திறனால் பெரிதாக பலன் ஏதும் இல்லைதான். ஆனாலும் அந்த திறன் குறிப்பிடத்தக்க ஒன்று.

நாய்களுடன் எளிதாக பழகும் தன்மைதான் அந்த திறன்.

புதிய வீடுகளுக்கு செல்லும்போதோ , கிராமங்களில் புதிய தெருக்களில் செல்லும்போது நாய்கள் குலைக்கும்.   எந்த நாயாக இருந்தாலும் அவனால் சில நிமிடங்களில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட இயலும். பார்ப்பதற்கு ஆச்சர்ய்மாக இருக்கும்.

நாய்களுடன் பழகி பழகி நாய்களின் வாசனை அவன் உடலில் பதிந்து விட்டதாகவும் அதனால்தான் நாய்கள் இணக்கமாக இருப்பதாகவும் சில நண்பர்கள் சொன்னார்கள்..எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனாலும் அவனுக்கு நாய்களுக்கும் இடையே ஏதோ ஓர் ஒத்திணைவு இருப்பது உண்மை.

புதிய இடம் செல்கிறோம். அனைவரும் நமக்கும் புதியவர்கள் என்றாலும் சிலரிடம்தான் பேச ஆரம்பிப்போம்.அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு..


இப்படி புலன்களுக்கு தட்டுப்படாத விஷ்யங்கள் ஏராளம். அதில் ஒரு விஷ்யத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்ட்ர் எமட்டோ எழுதியுள்ள புத்தகம்தான் messages from water.

தண்ணீரை வைத்து சில பரிசோதனைகள் செய்து இந்த புத்தகம் எழுதி இருக்கிறார்.

சரி...தண்ணீரை வைத்து ஏன் ஆராய்ச்சி.

உலகத்தின் பெரும்பாலான மேற்பரப்பு தண்ணீரால் ஆனது. மனிதன் பிறக்கையில் அவன் 95% தண்ணீரால் ஆனவன். போக போக தண்ணீரின் அளவு குறைந்தாலும் , வயது  வந்த ஒருவன் உடலில் தண்ணீர்தான் பிரதானமாக இருக்கும்/ .கிட்டத்தட்ட 70 %.

ஆகவே தண்ணீரை புரிந்து கொண்டால் , நம்மை புரிந்து கொள்ளலாம். உலகை புரிந்து கொள்ளலாம் என்பது அவர் பார்வை.


கொதிக்க வைத்து , குளிர வைத்து , ரசாயனங்களை கலந்து செய்யப்படும் வழக்கமான ஆய்வு அல்ல.

கொஞ்சம் வித்தியாசமான ஆய்வு.

நம் உணர்வுகள் தண்ணீரை பாதிக்கிறதா என்பது அவர் ஆய்வு.

கர்ண கடூரமான இசையை ஒரு நீர் பாத்திரம் அருகே ஒலிக்க செய்தார். இன்னொரு பாத்திரம்அருகே இனிய இசை ஒலிக்க செய்தார்.

அதன் பின் ஆராய்ந்த போது ஆச்சர்யம்.

இனிய இசையை அனுபவித்த தண்ணீரில் அழகான கிரிஸ்டல் உருவாகி இருந்தது. கொடூர இசை தண்ணீரில் ஒழுங்கற்ற கிரிஸ்டல் உருவாகி இருந்தது.


இசை மட்டுமல்ல...பாடல் வரிகளுக்கேற்பவும் தண்ணீரின் தன்மை மாறுவது கண்டறியப்பட்டது..சோக பாடல்கள், கோபமூட்டும் பாடல்கள் தண்ணீரில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின.

இனிய பாடல்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தின.


இன்னும் ஒரு படி மேலே போய் , வார்த்தைகளும் தண்ணீன் மீது பாதிப்பு ஏற்படுத்துவதை நிரூபித்தார்.

முட்டாள் , உருப்பட மாட்டாய் போன்ற வார்த்தைகளை தொடர்ச்சியாக தண்ணீர் பாத்திரம் அருகே சொல்லி வந்தார்கள்/. இன்னோர் பாத்திரம் அருகே , நன்றி நன்மை போன்ற வார்த்தைகளை சொல்லி வந்தார்கள்..  நேர்மறை வார்த்தைகள் சொல்லப்பட்ட தண்ணீரில் அழககான கிரிஸ்டல்கள் உருவாகி இருந்தன.


இதை விட உச்சமாக வரை படங்கள்,.புகைப்படங்களும் தண்ணீரில் பாதிப்பு செலுத்துவது நிரூபிக்கப்பட்டது/

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.

தண்ணீருக்கு செய்திகளை கிரகிக்கும் ஆற்றல் அறிவு இருக்கிறது. நம் உடலோ பெரும்பாலும் தண்ணீரால் ஆனது.

எனவே நேர் மறை சிந்தனைகள் , நல்ல மனிதர்கள் , நல்ல விஷ்யங்கள் நம்மை சுற்றி இருந்தால் , நம் உடலில் இருக்கும் தண்ணீர் மகிழும்,  தண்ணீரால் உருவாகி இருக்கும் நமக்கு இது ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எதிர்மறை சிந்தனைகள் , அக்கப்போர், வம்புச்சண்டை என இருந்தால் , அது நம் உடல் சிஸ்டத்துக்கு கேடாக முடியும் என்கிறார் இவர்.

வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்..

மற்றவர்களை திட்டுவது , அவதூறு போன்றவை மற்றவர்களுக்கு கெடுதி ஏற்படுத்தும் முன் நம்மை கெடுத்து விடுமோ என்ற பயம் ஏற்படுவது உறுதி

இனிமையான பேச்சு, நேர் மறை சிந்தனைகள் இருந்தால் , மற்றவர்கள் பாராடுகிறார்களோ இல்லையோ...  நமக்கு நன்மை அதுவாகவே நடக்கும் என்பதே புத்தகத்தின் செய்தி


வெர்டிக்ட்        message from water  - mesmerizing 

எழுதியவர் : டாக்டர் Masaru emotto

3 comments:

  1. ஆக்க பூர்வமான சிந்தனையுடன் இனிமையாகப் பேசினாலே போதும் நமக்கு வாழ்க்கை நன்றாக நடக்கும் - உண்மை தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. @cheena ( சீனா ) இந்த தத்துவங்களை நேரடி அனுபவங்கள் மூலம் அறிந்து இருப்பவர்கள் நீங்கள் ... உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா..

    ReplyDelete
  3. மிகவும் ஆச்சரியமான ஒரு ஆராய்ச்சி தான். உங்களின் அறிமுகம் படித்தபின் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா