Tuesday, September 10, 2013

அதிர்ச்சி அளித்த சாரு- மதுரை அனுபவங்கள்


 மதுரைக்கு போனால் அவ்வப்போது மீனாட்சி அம்மன் கோயில் போவது நீண்ட நாள் வழக்கம். பரீட்சையில் பாசாக வேண்டும், நல்ல மார்க் எடுக்க வேண்டும், வயிறு வலி சரியாக வேண்டும், ஃபிகர் வொர்க் அவுட் ஆக வேண்டும் , வேலை கிடைக்க வேண்டும் , அரைகுறையாக செக் செய்து அனுப்பிய இயந்திரம் பாதியில் நின்று போய் மானத்தை வாங்க கூடாது என்பது போல அந்தந்த மூடுக்கெற்ப ஏதாவது வேண்டிக்கொண்டு வந்து விடுவது வழக்கம். அல்லது சும்மா பொழுது போக்குக்காக சுற்றுவதும் உண்டு.

இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தர்சனம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. கடம்ப மரத்தை  பார்த்தாக வேண்டும் என சாரு சொன்னது எனக்கு கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோயிலில் யாராவது அழகான பெண்கள் வந்தால் , மரம் போல நின்று விடுவது என் இயல்பு. ஆனால் கடம்ப மரத்தை இத்தனை நாள் பார்க்காமல் போனோமே என வருத்தமாக இருக்கவே மதுரை கிளம்ப ஆயத்தம் ஆனேன். புத்தக கண்காட்சிக்கும் போய் வரலாம் என்றும் ஓர் எண்ணம்.
 ஆனால் எந்த பஸ்சிலும், டிரெய்னிலும் டிக்கட் இல்லை. எனவே சாரு மதுரையில் இருக்கும்போது என்னால் மதுரைக்கு போக முடியவில்லை.  அவருடன் போய் இருந்தால் , இன்னும் சில நல்ல அனுபவங்கள் கிடைத்து இருக்கும்.

அங்கு இருக்கும் சகோதரர் ஒருவர் , கோயிலுக்கு போகலாமா என்று கேட்டார். நானே கோயிலுக்கு போகும் ஐடியாவில் இருந்தாலும், லேசாக பிகு செய்து விட்டு , அவருக்காக கோயில் செல்வது போல சென்றேன்.

என்னை விட சிறியவர் என்றாலும், கோயிலைப்பற்றி நன்கு விளக்கி சொன்னார். கோயிலை புதிதாகப் பார்ப்பது  போல இருந்தது. ஒவ்வொரு சிலையையும் நின்று நிதானித்து ரசித்து பார்த்தேன்.

ஒவ்வொரு சிலைக்கும் அந்த கால சிற்பிகள் கொடுத்துள்ள உழைப்பு ஆச்சர்யப்பட்ட வைத்தது. ஒரு தூணில் சிற்பம் செய்யும்போது, ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் ,எல்லாமே வீணாகி விடும். எனவே மிக மிக கவனமாக செய்ய வேண்டும். அப்படித்தான் செய்து இருக்கிறார்கள். முக பாவம் , ஆடை மடிப்பு, அணிகலன்கள், ஒரு சிலைக்கும் இன்னோர் சிலைக்கும் இருக்கும் நுண்ணிய வேறுபாடு என கலைத்திறமை வியக்க வைத்தது.

யாளி என்ற சிற்பம் தூண்கள் முழுதும் இருக்கும். எல்லாமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். நுணுக்கமாக கவனித்தால் , ஒவ்வொன்றிலும் நுட்பமான வேறுபாட்டை காணலாம். இது கற்பனை உயிரியா அல்லது டைனோசர் போல அழிந்து போன உயிரியா என்பது தெரியவில்லை.

சிற்பம் என்றால் எல்லாமே சாமிசிற்பங்கள்தான் இருக்கும் என நினைப்போம். ஆனால் கவனித்து பார்த்தால் , பொதுவான சிற்பங்களும் இருப்பதை அவதானிக்கலாம்., ஒவ்வொன்றை வைத்தும் ஒரு சிறுகதை எழுதலாம் என தோன்ற செய்ய அளவுக்கு ஒவ்வொன்றும் பல்வேறு விபரங்களை சொல்கின்றன. உதாரணமாக ஒரு பெண் என்றால் , அவள் வயது என்னவாக இருக்க கூடும், அவள் அங்கே போகிறாள், என்ன செய்கிறாள்., அப்போது நேரம் என்ன என்பதை உணர்த்த பல்வேறு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பார்க்க பார்க்க எல்லாமே உயிர் பெற்று விடுமோ என்ற பிரமை எழுந்தது. யாளியின் ஓசை காதில் விழுகிறதோ என கற்பனை எழுந்தது.

கடைசியில் கடம்ப மரத்தை தேடிப்பார்த்தேன். பழமையான இந்த மரத்தை , வேலியிட்டு வெள்ளி கவசம் இட்டு பாதுகாத்து வருகிறார்கள். அந்த காலத்தில் மதுரை முழுதும் கடம்ப மரங்களால் சூழப்பட்டு , கடம்ப வனமாக இருந்ததாம். பிறகுதான் மதுரை நகர் உருவாக்கப்பட்டதாம். கடம்பவன வாசின்யை நமஹ என லலிதா சகஸ்ரனாமத்தில் இதைத்தான் சொல்கிறார்கள்.

கோயில் ஆங்காங்கு இடம் பெற்று இருந்த தமிழ் பாடல்களை ரசித்து படித்தேன்.

கம்பன் என் காதலன் என்ற புத்தகத்தில் ( நடிகர் ) சிவகுமார் இப்படி எழுதி இருப்பார்.

தமிழ் இலக்கியத்தை பக்தி இலக்கியம் , பகுத்தறிவு இலக்கியம் என பிரித்தால் , பெரும்பாலானவற்றை இழந்து விடுவோம். மிச்சம் இருப்பதை ஆரியர் இயற்றியது, திராவிடர் இய்ற்றியது என பிரித்தால் இன்னும் பல அரியவற்றை இழந்து விடுவோம் என எழுதி இருப்பார்.

அந்த பாடல்களை பக்தி நோக்கில் படிக்காமல் , தமிழுக்காக படித்தால் உவமை நயம் , அணி நயம், சொல்வன்மை என இனிமையாக இருந்தது.

குறிப்பாக இந்த வரியை வெகு நேரம் ரசித்தேன்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி


உலகத்தை கடவுள் என ஒருவர் இருந்து படைத்து இருக்க முடியாது.. இது எப்போதும் இருப்பது, மாறிக்கொண்டே இருப்பது... அப்படிப்பட்ட மாற்றத்தில் ஒரு பகுதிதான் இப்போது நாம் காணும் உலகம் என ஒரு தியரி உண்டு. கீழ் காணும் வரிகள் அதை நினைவு படுத்தின.

மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!


நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!



கோபுர சிற்பங்களை தொலைனோக்கி வழியாக ரசித்து பார்த்தேன்.  தொலை நோக்கியையும் , கம்பன் என் காதலனையும் புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.


சென்னையை விட கூட்டம் அதிகம் என்றே சொல்ல வேண்டும். ஒப்பீட்டளவில் சென்னையை விட ஸ்டால்கள் குறைவு என்றாலும் கூட்டம் அதிகம்.

பலரும் ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிச்சென்றனர். மனுஷ் வந்து இருந்தார். அவரிடம் கை எழுத்து வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.

சென்னையில் நான் பார்த்ததவரையில் , ஆன்மீக அரசியல் சினிமா சமையல் போன்ற புத்தக ஸ்டால்களில் கூட்டம் குவியும். ஆனால் மதுரையில் இந்த ஏரியாக்களில் கூட்டம் குறைவுதான், குறிப்பாக ஆன்மீக ஸ்டால்களில் கூட்டம் குறைவு.

அறிவியல் கருவிகள் விற்பனை செய்யும் ஸ்டாலில் செம கூட்டம். ஓரளவுக்கு விற்பனையும் இருந்தது. அங்குதான் தொலை நோக்கி வாங்கினேன். அந்த அறிவியல் கருவியை ஆன்மீக ஆராய்ச்சிக்காக வாங்குகிறேன் என்பது அவர்களுக்கு தெரியாது :)

தொலை நோக்கி வழியாக கோபுரத்தை பார்க்கும்போதுதான், எத்தனை எத்தனை அழகான சிற்பங்கள் , எத்தனை எத்தனை கதைகள் என கவனிக்க முடிந்தது. யார் பார்ப்பார்கள் என எதிர்பார்த்து அத்தனை உயரத்தில் இதை படைத்தார்கள் என தெரியவில்லை. யாராவது பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அமைத்து இருப்பார்கள்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றிய மன நிறைவோடு , அறிவுத்தேடல், ஆன்மீகத்தேடலை முடித்து கொண்டு உணவு தேடலில் இறங்கினேன். அயிரை மீன், ஜிகிர் தண்டா , மதுரை ஸ்பெஷல் கோழிக் கறி , ஃபில்ட்டர் காஃபி , பருத்தி பால் என அடுத்த கட்ட தேடல் தொடர்ந்தது.....



 
மீனாட்சி அம்மன் கோபுரம்




அயிரை மீன் குழம்பு


செம டேஸ்ட்


ஜிகிர்தண்டா

கோழி கறி

புத்தக விழா





மனுஷ்

தொலை நோக்கி வழியே



ஃபில்ட்டர் காஃபி

கூல் சர்பத்

2 comments:

  1. தல என்கிட்ட சொல்லாம மதுரை வந்துட்டிங்களே...

    வெளியூர் பயணங்கள் இருந்ததால் புத்தக கண்காட்சிக்கு செல்ல இயலவில்லை....

    ReplyDelete
    Replies
    1. நான் உங்கள் நிலைத்தகவல்களை படித்து பார்த்து , நான் மதுரை வரும் நேரம் நீங்கள் கேரளாவில் சுற்றுப்பயணத்தில் இருப்பதை அறிந்தேன்..அதனால்தான் கால் செய்யவில்லை..அடுத்த முறை நான் வரும்போது , ஊரில் இருப்பீர்கள் என நம்புகிறேன்

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா