Monday, September 16, 2013

கண்கள் பனித்தன , இதயம் இனித்தது- ஜென் குருவுடன் ஒரு சிலிர்ப்பான சந்திப்பு




ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?- பாரதியார்

சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக , தம் குருவுக்கு  நல்லது செய்வதாக நினைத்து , தவறாக செய்து விடும் சம்பவங்கள் வரலாற்றில் ஏராளமாக  பதிவாகி இருக்கின்றன..

ஒரு முறை ஷிர்டி பாபா தனக்காக தங்க தேர் பவனியை ஏற்பாடு செய்யுமாறு கூறினார். சில சீடர்கள் இந்த செயல் அவரது இமேஜை பாதிக்கும் என நினைத்து அதை தடுக்க முனைந்தனர்.

உண்மையில் அவர் ஏன் அதை செய்தார் என்றால் , அது சீடர்களுக்கு வைக்கப்பட்ட ஒருவகை சோதனைதான்.
அந்த சோதனையில் வென்றவர்கள் வெகு சிலரே..

ஷீர்டி பாபா வரலாறு முழுக்க இருக்கபோகிறவர்.. என்னவோ தாங்கள்தான் அவர் புகழை நிலை நிறுத்துவதாக நினைத்த சீடர்கள் யார் என்று இன்று தெரியாது..

எனவேதான் , ஒரு குருவின் புகழை நாம் வகுக்க நினைப்பது , சூரியனை சங்கிலியால் அளக்க நினைப்ப்பது போன்றது என்கிறார் பாரதியார்.

    கடவுள் கோபித்தால் , ஒரு குருவால் அவனை காப்பாற்ற முடியும். ஆனால் ஒரு குரு கோபித்தால் , ஆண்டவனே நினைத்தாலும் அவனை காக்க முடியாது.

 சாருவால் ஆளாக்கப்பட்ட ஒருவர் , சாருவைப்பற்றி நம்பவே இயலாத ஒரு குற்றச்சாட்டை வைத்தார். சாரு அதை பொருட்படுத்தவும் இல்லை. பதில் அளிக்கவும் இல்லை.

அந்த பொய்குற்றச்சாட்டு சொன்னவர் யார், அவரது இன்றைய நிலை என்ன என்பதைப்பற்றி எல்லாம் எழுதுவது நாகரிகம் அல்ல. பழைய இலக்கியப்பத்திரிக்கைகளை பார்த்தால் , அந்த நபரின் பெயர் பரவலாக காணப்படும். அவரது இன்றைய நிலையை எழுத எனக்கு மனம் வரவில்லை.

இதைத்தான் வள்ளுவர் வேறு பாஷையில் சொல்கிறார்.


வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.


என்ன பொருள் சேர்த்து என்ன வாழ்ந்தாலும் , குணத்தில் சிறந்த பெரியோர்கள் கோபப்பட்டால் எல்லாமே பயனற்று போகும் என்கிறார் வள்ளுவர்.


  சாருவைப்பார்த்து  வெகு நாட்கள்  ஆயிற்று என்றாலும் அவர் எழுத்துகள் வழியாக தினமும் உரையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.


உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர் திரு கோளூரே


என்று திருவாய் மொழியில் சொன்னது போல , ஒரி நல்ல சினிமாவை பார்க்கையில் , நல்ல புத்தகம் படிக்கையில் சாருவை நினைக்காமல் இருக்க முடியாது.

சாருவுடன் பேசுவது என்பது அலாதியான அனுபவம். கேஷுவலாக பேசுவார். ஆனால் ஆங்காங்கு நுட்பமான தகவல்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார். உணவு முறை , இலக்கியம் , இசை , சினிமா என எத்தனையோ விஷ்யங்கள்.

இவ்வளவு அனுபவம் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும் , இன்னும் ஒரு வாசகனாகவும் இருக்கிறார். நல்லவற்றை தேடி தேடி படிக்கிறார். பிடித்த எழுத்தாளர்களை மனம் விட்டு பாராட்டுகிறார்.

அப்படி அவர் சொன்ன ஓர் ஆங்கில எழுத்தாளரை படித்து பார்த்தேன். என்னை பொருத்தவரை சாரு அவரை எல்லாம் கடந்து சென்று விட்டார். ஆயினும் அந்த எழுத்தாளர் என்னமா எழுதறார்.. என்னையெல்லாம் முந்திட்டாரே...அடுத்த நாவலில் அவரை மிஞ்சிக்காட்டுறேன் என குழந்தை போல பாராட்டுவார். அதெல்லாம் உயர்வு நவிற்சி என நன்கு தெரிந்தும் கேட்டு கொண்டு இருப்போம்,

நான் சந்தித்தபோது ஒரு புத்தகத்தை ஏதோ ஒரு பொக்கிஷம் போல கையில் ஏந்திக்கொண்டு இருந்தார். ஆச்சர்யமாக இருந்தது.

சாருவை ஒருவர் ஏற்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால் புறக்கணிக்க இயலாது.

சாரு இமயமலை போனதைக்கேட்டு ஜெமோவும் கிளம்ப்பி சென்றார். காப்பி அடிப்பதாக பேச்சு கிளம்பியதும், அப்படி எல்லாம் இல்லை. நான் சின்ன வயதில் இருந்தே செல்கிறேன் என சமாளிக்கப்பார்த்தார்

ஆனால் அப்போதுதான் முதல் முறையாக போவது போலத்தான் அவர் கட்டுரைகள்  அமைந்து இருந்தன..

சாரு மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்கு செல்வதாக அறிவித்ததும், தானும் செல்வதாக சொன்னார்.

இப்படி சின்னப்பிள்ளை போல போட்டி போடுவதை நான் சுட்டிக்காட்டி இருந்ததை , சாரு அவ்வளவாக விரும்பவில்லை.

உலகளவில் போட்டி போடும் அவருக்கு இணையாக ஜெயமோகன் , அசோகமித்ரன் போன்றோரை வைத்து பேசுவதை அவர் ரசிக்கவில்லை.

இருளுடன் ஒப்பிட்டுத்தான் வெளிச்சத்தை சொல்ல முடியும் என்பதாலேயே ஜெயமோகன் பற்றி சொல்ல வேண்டியதாயிற்றே தவிர சுண்டெலியையும் சூரியனையும் நான் ஒப்பிடக்கூடியவன் அல்ல. ஆனாலும் அப்படி ஒரு இம்ப்ரஷன் ஏற்பட்டது உண்மைதான்.

பயணம், நண்பர்கள் சந்திப்பு என இருந்தாலும் , எக்சைல் வேலையில் தினமும் ஈடுபட்டு வருகிறார். இதற்கான நேரத்தை தூக்கத்தை குறைப்பதில் இருந்து பெறுகிறார். சதுரகிரி பயணத்தைக்கூட , எக்சைலுக்காக ஒத்தி வைத்துள்ளார். சதுரகிரி பயணம் எப்போது நடந்தாலும், முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்பது நிச்சயம்.

இனி என் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ள வகையில்தான் செலவிட வேண்டும். அதுதான் அவருக்கு நான் காட்டும் மரியாதை என உணர்ந்தேன்.

அந்த பிசி செட்யூலிலும் என்னை சந்திக்க நேரம் ஒதுக்கி பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.

ஜெயமோகன், அசோகமித்ரன் என யார் வேண்டுமானாலும் இலக்கியம் படைக்கலாம். ஆனால் இலக்கியமாகவே வாழ்வது சாருவால் மட்டுமே முடியும் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

ஒரு ஜென் குரு போல , நேரடி அறிவுரைகள் இல்லாமல் , தன் வாழ்க்கையே தன் செய்தி என வாழும் அவரை வணங்கி பெற்றேன்.

அந்த சந்திப்பு  நினைவுகள் தித்திக்கும் கல்கண்டாய், தெவிட்டாத தேனமுதாய் இதயத்தில் இனிக்கிறது.,












2 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா