Tuesday, November 5, 2013

பப்ப பொட்ட தப்ப - ஆங்கில எழுத்துருவில் படித்த பலான கதை அனுபவம்

அந்த காலத்தில் எல்லாம் கம்யூட்டர் பரவலாக இருக்காது.. நெட் செண்டர்தான்..ஒரு ம்ணி நேரத்துக்கு நாற்பது ரூபாயெல்லாம் சில இடங்களில் உண்டு.

 அங்கு போய் tamil sex story என டைப் செய்து தேடினால், சில கதைகள் கிடைக்கும்.. கதை ஆங்கில எழுத்துருவில் இருக்கும்.. இப்போது போல தமிழ் அவ்வளவாக கிடையாது... வந்த வரை லாபம் என அறிவு தேடலை ஆங்கில எழுத்துருவிலேயே ஆரம்பிப்போம்.

படிக்க ஆரம்பித்த உடனேயே  சிக்கல்.. பப்ப பொட்ட தப்ப - என்ன இது என திகைப்போம்.பிறகுதான் அது பாப்பா போட்ட தாப்பா என புரியும் ( papa potta thappa ) சிலர் மட்டுமே நெடிலுக்கு ரெண்டு ஏஏ போடுவார்கள்..பலர் ஒரு ஏ தான் போடுவார்கள்... அவன் ஒத்துக்கொண்டான் என்பதை தவறாக படித்து கிளர்ச்சி அடைவோம்.. பிறகு உண்மை புரிந்து அடங்கி போவோம்.. ஒரு மணி நேரம் போராடிய பிறகு ஆடை நனைந்து விடும் , வியர்வையில்... போராடிய களைப்பில்... எரிச்சலுடன் காசை கொடுத்து விட்டு வருவோம்... காலப்போக்கில் ஆங்கில எழுத்துரு கை விடப்பட்டு , தமிழில் அது போன்ற புனிதமான கதைகள் வரத்தொடங்கி விட்டன .. நான் பெற்ற துன்பம் வேறு யாரும் படக்கூடாது என நானும் சில கதைகளை பெயர்போடாமல் அப்படிப்பட்ட இணைய தளங்களுக்கு அனுப்பி இருப்பது இங்கு முக்கியம் இல்லை... மீண்டும் ரிவர்ஸ் கியர் சென்று ஆங்கில எழுத்துருவுக்கு போவது சற்றும் பயனற்றது என்பது அனுபவபூர்வ உண்மை

வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் பேசத்தெரியும். புரிந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ் எழுதப்படிக்க தெரியாது... பேசாமல் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினால் அவர்களும் தமிழ் படிக்க வாய்ப்பு ஏற்படுமே என்றொரு வாதம் வைக்கப்படுகிறது... அது தவறான கருத்தாகும்.
ஒருவருக்கு ஒரு மொழியில் இருக்கும் விஷ்யங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் , அந்தந்த மொழியை கற்க ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார்.. உதாரணமாக சாருவையே கூட எடுத்து கொள்ளலாம்.. பல மொழிகளை கற்க ஆர்வம் காட்டுகிறாரா இல்லையா...
அது போல தமிழில் படிப்பதற்கு பல விஷ்யங்கள் இருக்கின்றன என்பது அயல் நாட்டு தமிழர்களுக்கு தெரிய வந்தால் , அவர்கள் தமிழை கற்க ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.. 
உதாரணமாக எனக்கு தெரிந்த சில கன்னட பெண்0  தோழர்கள் ( தோழிகள் என அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவர்கள் அல்லர் )   , வேதாத்திரி மகரிஷியின் அமைப்பில் இருக்கிறார்கள்..வேதாத்திரி மகரிஷியின் கருத்துகளை அவர் மொழியிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் எழுத்துருவை கற்றவர்களை எனக்கு தெரியும் .. 
ஆக நம்முடைய பணி தமிழில் படிக்கவேண்டியவை ஏராளம் இருக்கின்றன என்ற நிலையை உருவாக்குவதுதான். சீரோ டிகிரியின் ஆங்கிலப்பதிப்பு உலகளாவிய ரீச்சை எட்டும் பட்சத்தில் , அவர்களில் சிறிய சதவிகிதத்தினராவது , தமிழிலிலேயே நேரடியாக படிக்க முனைவார்கள்.. அப்போது இயல்பாகவே தமிழை கற்க ஆரம்பிப்பார்கள்...
இதமிழ் எழுத்துருதான் அயல் நாட்டு தமிழர்கள் தமிழ் படிக்காமைக்கு காரணம் என்பது தவறு.. கோணங்கி எழுத்தை தமிழ் எழுத்துருவில் படித்தாலே புரியாது.. இதில் ஆங்கில ஃபாண்டில் எப்படி படிப்பார்கள்?

நம்மில் பலரையே உதாரணமாக வைத்து பாருங்கள்.. நம்மில் பலர் வெளி மானிலங்களில் , வெளி நாடுகளில் வேலை செய்து சில மொழிகளை பேச , புரிந்து கொள்ள கற்று இருப்போம். எழுதப்படிக்க தெரியாது என்ற நிலை இருக்கும்.. அதற்காக ஆங்கில எழுத்துருவில் அந்தந்த மொழி இலக்கியங்களை படிக்க சொன்னால் படிப்போமா?


உதாரணமாக எனக்கு கன்னட மொழி பேசத்தெரியும் , புரிந்து கொள்ள முடியும் என்பதற்காக ஆங்கில ஃபாண்டில் கன்னட நாவலை படிக்க சொன்னால் சத்தியமாக படிக்க மாட்டேன். எனக்கு தெரிந்த ஒரளவு கன்னடத்தை வைத்து கன்னட எழுத்திலேயேதான் படிக்க முயல்வேன்...
ஆக ஜெயமோகன் முன் வைக்கும் வாதம் தவறு என்பதை அழுத்தமாக இங்கு பதிவு செய்கிறேன்.

1 comment:

  1. Dear Brother,
    Will you be comfortable, if your mother or sisters read first 2 paragraphs? if yes, you are a shamless tamilian. if no, why did you publish this? this is a cultureless article..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா