Saturday, January 17, 2015

எக்சைல் - மொண்ணைகள் உலகில் உண்மையான ஒரு நாவல்

ஒருவர் கஷ்டப்பட்டு பணம் திரட்டி புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் கொண்டு வந்தார். உண்மையிலேயே எல்லாமே மிக சிறந்த புத்தகங்கள். கொஞ்சம் பிரமோட் செய்தால் , டாப் செல்லராக இருக்கும் என நினைத்தேன்.
அப்போதுதான் ஒரு ட்விஸ்ட். பதிப்புத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட இன்னொரு  பதிப்பகம் , தன் ஆதரவு நாளிதழ்களை வைத்து ஒரு சென்சேஷனல் செய்தியை பிரசுரிக்க வைத்தது. எல்லோருமே அந்த பதிப்பக புத்தகத்தைப்பற்றி பேச ஆரம்பித்தனர், அந்த புத்தகம் இலக்கியத்தரம் வாய்ந்ததா , அது முக்கியமான புத்தகமா என்றெல்லாம் கவலைப்படாமல் கூட்டம் கூட்டமாக போய் வாங்கினர்.
நல்ல புத்தகம் வெளியிட்ட முதல்வரி பதிப்பகம் இதனால் வருத்தம் அடையும் என நினைத்தேன்…அதுதான் இல்லை.. இந்த ஸ்ட்ண்ட் பதிப்பகத்தின் விளம்பர ஏஜெண்டாக மாறி அவரும் களாமாடி , இந்த ஃபேக்  புத்தகத்தை பிரமோட் செய்ய ஆரம்பித்தார்.
இந்த பிரச்சனையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற , உண்மையிலேயே நல்ல நாவலான அஞ்ஞாடி போதிய கவனம் பெறாமல் போனது.


இது போன்ற தமிழகத்தின் மொண்ணைத்தனங்களை பேசும் நாவல்தான் புதிய எக்சைல் . சென்சிட்டிவிட்டி அற்ற தன்மை. தமக்கு பிடிக்காதவர்களை நாடு கடத்துவதையே எக்சைல் என்பார்கள். நடை முறையில்,  நாம் எல்லாமே நாடு கடத்தப்பட்ட வாழ்வையே வாழ்கிறோம். நம் மொழி , நம் பண்பாடு , சக உயிர்களின் உணர்வுகள் என எதுவும் தெரியாமல் , ஏதோ ஒரு வேற்றுக்கிரகவாசி வாழ்வது போல வாழ்கிறோம். இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். ஒருவர் முழு சுரணை உணர்வுடன் இங்கு வாழ்ந்தால் , அவர் தன்னை ஒரு வேற்றுகிரக வாசியாகவே உணர்வார். இதுதான் புதிய எக்சைல்.

இதற்கு முன்பு வந்த எக்சைல் தரும் வாசிப்பு அனுபவம் வேறு. இந்த எக்சைலின் வாசிப்பு அனுபவம் வேறு. அதில் இருந்த சில காட்சிகள் நீக்கப்பட்டு , புதிதாக சில சேர்க்கப்பட்டு , தனித்துவமாக வந்துள்ளது எக்சைல்.

ஜொகரி விண்டோ என்றோரு கான்சப்ட் உண்டு.  நம்மைப்பற்றிய சில விஷ்யங்கள் , நமக்கு தெரியும்.. பிறர்க்கும் தெரியும். இது ஒருவகை..சில நமக்கு மட்டும் தெரியும்..பிறர்க்கு தெரியாது..சில நமக்கு தெரியாது ,பிறர்க்கு தெரியும்..சில நமக்கும் தெரியாது. பிறர்க்கும் தெரியாது, இது குறித்த தொடர்பு கொள்ளலில் மிக அவசியம். தொடர்பு கொள்ளலே வாழ்க்கை என ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வது இதைத்தான்.

தொடர்பு கொள்வதன் மூலமே நம்மை நாம் அறிகிறோம்.. மரங்களுடன் , மீன்களுடன் , பிரபஞ்சத்துடன் , சக மனிதர்களுடன் நாம் கொள்ளும் உறவுதான் நம் வாழ்க்கை என்பது . இதை மிக அழகாக எக்சைல் கையாள்கிறது.

ஒருவர் நான்வெஜ் சாப்பிடுவதில் அதீத ஆசை கொண்டவர். ஆனால் அவருக்கு ஒரு விலங்கின் வலி புரிகிறது. கோழியின் கதறலைக்கேட்டு , கோழிக்கறி ஆசையே போய் விடுகிறது. இது ஒரு கேரக்டர். அகிம்சையை போதிக்கும் ஓர் அமைப்பு .. ஆனால் பட்டுப்பூச்சிகள் இறப்பது குறித்து அவர்களுக்கு  கவலை இல்லை.

 அகிம்சையை போதிக்கும் ஒருவர் , பொது விவாதம் ஒன்றில் அவன் இவன் என ஏக வசனம் பேசுகிறார். இப்படி நாவல் முழுதும் சுவையான முரண்களை சுட்டிக்காட்டுகிறார் சாரு. இலக்கியம் என்பது புலியின் பசியையும் சொல்ல வேண்டும். புலிக்கு பலியான மானின் குட்டிகள் அடையும் தவிப்பையும் சொல்ல வேண்டும் என்பார்கள். ஒற்றைப்பார்வையுடன் நாவலை படைத்த காலம் எல்லாம் காலாவதியாகி விட்டது. ஆனாலும் இப்படி ஒற்றைப்பார்வையுடன் , பிரச்சார நெடியுடன் படைக்கப்பட்ட ஜேஜே சில குறிப்புகள் போன்ற ஃபேக் நாவல்களை இன்றளவும் சிலர் பாராட்டி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான நிலையில் எக்சைல் வந்திருப்பது ஆரோக்கியமான ஒன்று.

 செவ்வியல் இலக்கிய நடை , மொழி பெயர்ப்பு நடை , ஜனரஞ்சக நடை , கிராமத்து நடை என பல்வேறு விஷயங்களை இதில் காண முடிகிறது. நாவல் அவ்வப்போது ஓவ்வொருவர் பார்வையில் நகர்கிறது. சில நேரங்களில் ஒருவர் பார்வையை , இன்னொருவர் மறுக்கிறார்.

பிம்பங்கள் தொடர்ந்து சிதறடிக்கப்படுகின்றன. அவ்வளவு நேரம் நம் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருந்த அஞ்சலியின் கேர்க்டர் ஒரே நிமிடத்தில் கொக்கரக்கோவால் வீழ்த்தப்படுகிறது. ஞானியா, பித்தனா , சித்தனா என நம்மை சஸ்பென்சில் ஆழ்த்தி வைத்திருக்கும் சிவாவின் பிம்பம் கலையும்போது அதிர்ந்து போகிறோம்.
அவ்வளவு ஏன் ..கதை சொல்லியான உதயாவின் பிம்பமே ஒரு கட்டத்தில் கலைகிறது. சிதறுண்டு போன்ற இன்றைய வாழ்வை , இன்றைய மனிதனை இப்படி அன்றி வேறு எப்படியும் சொல்லி விட முடியாது.

பக்கிரிசாமியின் பார்வையில் செல்லும் அத்தியாசம் செம.. சொல்லும் யுக்தியும் தமிழுக்கு புதுசு. ரமணி சந்திரன் நடையில் அமைந்த அத்தியாயம் சூப்பர்.

பல நல்ல விஷயங்களை கற்றுத்தந்த ஆசிரியர் ஒருபால் புணர்ச்சியாளர் என அறிகையில் ஒரு சராசரி தமிழ் மனம் திடுக்கிடத்தான் செய்யும். 

இருவேறு முரண்களை சுட்டிக்காட்டுகையில் ஒன்றை ஒன்று ரத்து செய்வதில்லை. கோழிக்கு பரிவு காட்டுவதும் உண்மை .  நான் வெஜ் ரசித்து சாப்பிடுவதும் உண்மை. காரணகாரிய உலகும் உண்மை, எந்த தர்க்கத்துக்கும் உட்படாத வாழ்வியல் அபத்தமும் உண்மை.

கடவுள் சக்தியை உணர்கிறோம் . ஆனால் அதே ஆலயத்தில் விபத்து எப்படி நடக்கிறது. தீயவர்களை பாம்பு பழி வாங்குவதையும் கண் முன் பார்க்கிறோம். எந்த பாவமும் அறியாமல் கொத்துகொத்தாக சாகும் மக்கள் கூட்டத்தையும் பார்க்கிறோம். இவை அனைத்தையும் பாரபட்சம் இன்றி நேர்மையாக பதிவு செய்கிறது நாவல்.

இதை நாவல் என சொல்லாமல் வாழ்க்கைக்கான கையேடாகவும் பயன்படுத்தலாம். அத்தனை தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அல்லது சிறுகதை தொகுப்பாகவும் வாசிக்கலாம். கேசவன் என்ற யானையை வைத்து தனியாக ஒரு குறு நாவலே எழுதலாம்.

இது வரை வெளிவந்த சாரு நாவல்களுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கொண்டாட்டமான நடை , காமம் , காதல் , பெண்கள் மீதான பரிவு , பெண் மீதான அடக்குமுறை குறித்த விமர்சனம் என்பது போல சில ஒற்றுமைகள் உண்டு.

ஆனால் மிக மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று இருக்கிறது. இதுவரை காமத்தில் இருக்கும் வலியை வாதையை பேசிய சாருவின் எழுத்து இதில் அன்பை பேசுகிறது. வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரின் உள்ளத்தை பேசுகிறது.

நட்சத்திரங்களின் குளிர்மை, காற்று, மண்ணின் மணம், மரம், மகரந்தத் துகள், கடல், வானம், எரிமலை, பிரபஞ்ச வெளி, மேகம், மலையின் தனிமை, புல்லாங்குழலின் இசை, குழந்தையின் முதல் குரல், மரணமடைந்தவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எரிதழல், சூரிய ரேகை, நீரோடையின் சலன சங்கீதம், மழை, பூரண நிலவு, பசுவின் குரல், தவளைச் சத்தம், எரிந்து தணிந்த வனம், ஆலம் விழுது, அரச இலை, உறைபனி, அகல்விளக்கு, மலர், தென்றல்...

இது எல்லாவற்றிலும் உன்னை நான் காண்கிறேன். என் இனிய ஃப்ளோரான் மீனே… உன் உயிர் எங்கே போனது? ஒளிப் புள்ளியாக மாறி எங்கே நின்றுகொண்டிருக்கிறாய்? அங்கிருந்து என்னைக் காண்கிறாயா?




அனைவருக்கும் ஆம் பிறருக்கு ஓர் இன்னுரை என்பார் திருமூலர். பிறர்மேல் அன்பாக இருப்பது , அன்பாக பேசுவது எல்லோராலும் செய்யக்கூடிய எளிதான ஒன்று. அதைக்கூட நாம் செய்வதில்லை.. அன்பு என்பது உயிர்களின் இயல்பான தன்மை. நாம்தான் இயல்பை மீறி வாழ்கிறோம்.

பிளாக்கி மேலும் கொஞ்ச நேரம் குரைத்தது. ஃப்லோரானிடம் அசைவில்லை. பிறகு வருத்தத்துடன் குட்பை சொல்லி நகர்ந்தது . என்ற வரியை படிக்கையில் நம் மனதுக்குள் ஏதோ ஒன்று புரள்கிறது.

அசோகமித்ரன் பிரயாணம் என்றொரு உன்னதமான சிறுகதை எழுதி இருக்கிறார். தன் குருவுடன் மலை வழியாக பயணிக்கிறான் ஒரு சீடன்.  குரு நோய் வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருக்கிறார். கஷ்டப்பட்டு அழைத்து செல்கிறான். வழியில் அவர் இறந்து விடுகிறார்.  இப்போது அவரை முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதே அவன் விருப்பம். இந்த நிலையில் சில ஓனாய்கள் அந்த இறந்த உடலை இழுக்க முயல்கின்றன. அவன் தடுக்க போராடுகிறான். ஒரு கட்டத்தில் மயங்கி விடுகிறான். காலையில் விழித்து பார்த்தால் , அவரது உடல் சேதமாகி இருக்கிறது.. ஆனால் அதை விட கடும் அதிர்ச்சி…   அந்த குருவின் கையில் ஓனாயின் கால் பிய்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த கிளைமேக்ஸ் நமக்கு அளிக்கும் ஒரு திறப்பை , ஒரு ஜென் கணத்தை இந்த நாவலின் முடிவு நமக்கு அளிக்கிறது .

இதோ இந்த கூழாங்கல்.. இது மட்டும் அல்ல. இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. எதுவுமே பயனில்லாமல் இல்லை. இந்த கூழாங்கல்லுக்கு அர்த்தம் இல்லாவிட்டால் பின் எதற்குமே அர்த்தம் இல்லை. ஏன் அந்த நட்சத்திரங்களுக்கும் கூட ‘

இப்போது இந்த மலையும் நானும்தான். மௌனம் . பெரும் மௌனம் என்னை சூழ்ந்து கொண்டு இருக்கிறது என ஒரு தியான அனுபவத்தை தருகிறது எக்சைல்.

 மீனைப்பற்றிய கடைசி அத்தியாயம் காலத்தை வென்று நிற்கும் என கருதுகிறேன்

இதில் இன்னொரு சுவாரஸ்யம் , ஆங்காங்கு வரும் அடிக்குறிப்புகள். கூர்ந்து கவனித்தால் , அவற்றின் நோக்கம் தகவல் மட்டும் அல்ல… குறிப்பிட்ட மூட் செட் செய்வதும்கூட என புரியும்.

  சின்ன சின்ன அத்தியாயங்கள்  வாசிப்பை சுவை ஆக்குகின்றன. இவற்றை எந்த வரிசையிலும் படிக்கலாம்.. தனியாகவும் படிக்கலாம் என்பது சிறப்பு.  நாகூர் , டெல்லி , ஃபிரான்ஸ் என இடம் கடந்து காலம் கடந்து பயணிக்கிறது நாவல். பின் நவீனத்துவம் என்றால் என்ன என இனியும் யாரும் கேட்க கூடாது. எக்சைல் படித்தால் போதும்.

நாவலில் எழுத்து சார்ந்த குறைகள் இல்லை. ஆனால் பதிப்பு சார்ந்த குறைகள் சில இருக்கின்றன. சாரு எழுத்தில் காணவே முடியாத எழுத்து பிழைகள் உள்ளன. எழுத்துரு பிரச்சனைகள் , ஒரே பகுதி மீண்டும் வருவது என சில பிரச்சனைகள் உள்ளன. எப்படியும் அடுத்த பதிப்பு விரைவில் வர இருப்பதால் , அதை சரி செய்யுமாறு பதிப்பகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

 -_______________________________________________________
சில சுவையான வரிகள்

பெருந்தேவியிடம் நீர் கேட்டு வரும் பல காகங்க்ள். அவள் கையால் நீர் அருந்தும் பாக்கியம் பெற்ற ஒரு காகம் நான்

ப்ரௌனியை நான் முதன் முதலில் தொட்டபோது என்னை தொட்ட முதல் மனிதன் நீதான் என அது என்னிடம் சொன்னது. அனேகமாக கடைசி ஆளாகவும் நானாகத்தான் இருப்பேன் கண்ணே என நான் அதனிடம் சொன்னேன்

கடைசியில் விடைபெற்றபோது தோன்றியது. அவனுடைய வாழ்க்கை நிலையும் சூழலும் யாருக்கு வாய்த்திருந்தாலும் அவர்களும் அவனைப்போலவே ஆகி இருப்பார்கள்

மின்னஞ்சலில் எனக்கு ஒரு அறிவுரை. உங்கள் கட்டுரைகளின் தரத்தை நீங்கள் மேம்படுத்த வேண்டும்

இது என்ன நரசுஸ் காஃபியா.. தரத்தை மேம்படுத்துவதற்கு

குஷால்தாஸ் சந்தோஷமாக இரு என்கிறார். ஒரு அமைப்புக்கு அடிமையாக இருப்பவன் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்

அவனிடம் பத்து லட்சம் கொடுத்து கொஞ்ச நாள் கழித்து வாங்கி கொள்கிறேன் என்றார். கொஞ்ச நாள் கழித்து கேட்டார். அவன் அந்த பத்து லட்சத்தை கொடுத்தான். அதற்கு அவனை கட்டி வைத்து உதைத்தார்க்ள். 
புரியவில்லை அல்லவா.. எனக்கும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது

காசை மதித்தால்தான் காசு தங்கும் என மிடில் கிளாஸ் தத்துவம் பேசுவார் மினிஸ்டர். அம்பானி ஐயாயிரம் கோடியில் வீடு கட்டி இருக்கிறார். காசு ஓடியா போய் விட்டது

முல்லா ஒரு முறை தூக்கம் வராமல் புரண்டார். மனைவி காரணம் கேட்டாள். பக்கத்து வீட்டு அப்துல்லாவிடம் வாங்கிய கடனை நாளை தருவதாக சொன்னேன். ஆனால் பணம் இல்லை என்றார். அவ்வளவுதானே.. நான் பார்த்துக்கொள்கிறேன் என சொன்ன மனைவி அப்துல்லா அப்துல்லா என ரோட்டில் நின்று கத்தினாள். அப்துல்லா வந்தார். உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நாளை தர முடியாது என சொல்லி விட்டு வீட்டுக்குள் வந்தாள்.  இனிமேல் நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.. அப்துல்லாவுக்குதான் தூக்கம் வராது என்றாள்

உதயாவுக்கு பயம் வந்துவிட்டது போல என்றார். அத்துடன் விட்டு இருந்தால் பரவாயில்லை. எனக்கே பயமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு டிரக்கையும் கடக்கையில் உயிர் போய் உயிர் வருகிறது என்றார்

எனக்கு அடி வயிறு கலங்கியது.  அவர் அத்துடன் நிறுத்தவில்லை
இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் கார் ஓட்டுகிறேன் என்றார்

ஏன் ஓட்டவில்லை

ஒரு விபத்து . அதில் இருந்து ஓட்டுவதில்லை

உடனே கணேஷ் தனக்கு தெரிந்த விபத்துகளைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்

அய்யோ... அதிர்ச்சியில் உயிர் போய் விடும்போல இருக்கு..கதையை நிறுத்துங்கள் என அலறினேன்

முருகன் அடுத்த குண்டை வீசினார்...  அதற்கில்லை உதயா.. நீண்ட நாள் கழித்து காரை எடுப்பதால் தூக்கம் வருகிறது. அதனால்தான் பேசுகிறேன்

கடிதத்தை படித்து விட்டு எதிரிகள் அழிய வேண்டாம்.  எதிரிகளால் நான் அழியாமல் இருந்தால் போதும் என நினைத்துக்கொண்டேன்

கடவுள் இருப்பதற்கு வலுவான காரணங்கள் இருப்பதுபோல , கடவுள் இல்லை என்பதற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன

தாய் மாமன் என்ற முறையில் நீதான் தோடு வாங்கிப்போட வேண்டும் என நைனா கடிதம் எழுதினார்.அதற்கு நான் ஆபாசமாக பதில் எழுதினேன்

( அந்த பதில் செம ரகளை...ஹாஹா.. புத்தகத்தில் படியுங்கள் )

அந்த உலகத்தில் குளியலறை குழாயை திறந்தால் பூமழை கொட்டும் - நினைத்தால் பழரசம் , சாய்ந்தால் மலர் மஞ்சம் , தேனாய் கொஞ்சும் காதலன் , ஏவினால் ஓடி வரும் வேலையாள் , ஓடி விளையாட பூந்தோட்டம் , அலுப்பை போக்க அழகான நாய்கள் - எல்லாமே சாத்தியம்தான்

தமிழை தாயாக்கி சமாதி கட்டி வணங்கி விட்டு , இன்னொரு மொழி பேசும் இந்த மூடர்களை என்னவென்பது.. ஆங்கிலம் நன்றாக தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை

வெர்டிக்ட்
எக்சைல் - எக்சலண்ட்
வெளியீடு - கிழக்கு பதிப்பகம் 



3 comments:

  1. நல்லதொரு அறிமுகம்
    நன்றி
    த ம +

    ReplyDelete
  2. சிவசுப்பிரமணி.KJanuary 20, 2015 at 12:24 AM

    எக்ஸைல் படித்துக்கொண்டிருக்கிறேன்...
    ஒவ்வொரு பக்கத்தை திருப்பும்போதும் ஆச்சரியம் கூடிக்கொண்டே இருக்கிறது...

    ReplyDelete
  3. இதோ படித்துக் கொண்டேயிருக்கிறேன்...

    மிக எடை கொண்ட புத்தகம் என்பதால் மும்பை இரயிலில் பயணிக்கும்போது படிக்க முடியவில்லை... காலை 5 to 7 அல்லது பின்னிரவு மட்டுமே படிக்க முடிகிறது... (மற்ற நேரங்களில் பிள்ளைகள் படிக்க விடுவதில்லை) ஒரு வகையில் எக்சைல் படிக்க இந்த நேரமே உகந்ததாகவும் படுகிறது...

    cheers...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா