Friday, January 30, 2015

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதை சொல்லி யார்/? - ஜ்யோவ்ராம் சுந்தருடன் ஓர் உரையாடல்


எக்சைல் போன்ற நூல்களை படித்தால் போதாது... விவாதித்து புரிந்து கொள்வது முக்கியம்.. அந்த வகையில் ,  நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருடன் பேசினேன்.. அவருடன் பேசுவது எப்போதுமே சுவையான அனுபவம் ஆகும்.  தமிழில் இணையத்தில் எழுத ஆரம்பித்த முன்னோடிகளில் அவரும் ஒருவர்.. ஆழ்ந்த வாசிப்பாளர். ஆனால் அந்த பந்தா எதுவும் இல்லாமல் பேசக்கூடியவர்

-_____________________________________________

எக்சைல் படித்து விட்டீர்களா.. உங்கள் பார்வை என்ன


படித்தது மட்டும் அல்ல ... பலர்க்கு வாங்கியும் கொடுத்தேன். இந்த நாவலில் பல வகை இலக்கிய வகைகளை கட்டவிழ்த்துள்ளார் சாரு. போர்னோ , ஆன்மீகம் என எதையும் உன்னதப்படுத்தாமல் அவற்றை கட்டவிழ்த்துள்ளார்.. மரம் பற்றிய காட்சி , போனில் பேசியபடி செக்சில் ஈடுபடும் காட்சி , ஆன்மீகம் என பல வகைமைகளை தொட்டுள்ளார்.

புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் ஒருவனுக்கு இந்த நாவல் மிகப்பெரிய திறப்பாக அமையும் என கருதுகிறேன். தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்களீல் ஒன்று என்பதை உறுதியாக சொல்வேன்.

 நல்ல வடிவமைப்பில் புத்தகம் வந்துள்ளது. தற்போது முன்னூறு பக்கம் கொண்ட நாவல் ஒன்றை படிக்கிறேன்.. ஆயிரம் பக்கங்கள் கொண்ட எக்சைல் இதை விட எடை குறைவு.. அந்த அளவுக்கு தரமான பேப்பர்.

ஆனால் சாருவின் பழைய நாவல்களை படித்தோருக்கு ஒருவேளை போரடிப்பது போல தோன்றலாம்.. இதுதான் மைனஸ்

ஆனால் எக்சைலை ஒரு பிரதியாக மதிப்பிட்டால் மிக மிக முக்கியமான படைப்பு என்பதில் ஐயம் இல்லை

இதைப்பற்றி விரிவாக நீங்கள் எழுதி இருக்கலாமே ...ஏன் எழுதவில்லை/?

சாருவின் நூல்கள் மிகவும் நுட்பமானவை.. ஒரு முறை படித்து விட்டெல்லாம் எழுதக்கூடாது ..  சீரோ டிகிரியெல்லாம் படிக்க படிக்கத்தான் அதன் நுட்பம் புலப்படும்.

ஒரு என்பதே வராமல் ( ஒரே ஓர் இடம் தவிர ) சீரோ டிகிரி எழுதி இருப்பார்.. அதைத்தவிர வேறு எத்தனையோ நுட்பங்கள் அதில் உண்டு. எண்கள் வரும்போது ஒன்பது என கூட்டுத்தொகை வருமாறு எழுதி இருப்பார். அதைப்பற்றி கேட்டால் அவர் ஒரு காரணம் சொல்வார்.

ஆனால் நாம் யோசிக்கும்போது அதில் பல அர்த்தங்கள் நமக்கு கிடைக்கும். ஒன்பது என்பதை நம்மில் சிலர் ஒதுக்கப்பட்ட எண்ணாக கருதுகிறோம். அப்படி ஒவ்வொரு துறையிலும்  ஒதுக்கப்பட்டோர் , நலிவடைந்தோர் , விளிம்பு நிலை மக்களின் வலியை ரெப்ரசண்ட் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

இப்படி சாருவின் எழுத்துகள் ஒவ்வொரு வரியாக கான்சியசாக பிரஞ்ஞைபூர்வமாக உருவாக்கப்படுகின்றன. அதை புரிந்து கொள்ள தேடல் தேவை.

எக்சைலில் மரத்தைப்பற்றி எழுதி இருப்பார். அப்படியே கதறி விடலாம்போல தோன்றும். அந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக இருக்கும்.  நாம் சின்ன வயதில்  நாய்களுடன் விளையாடி இருப்போம் . பேசி இருப்போம். ஆனால் காலப்போக்கில் அந்த சென்சிட்டிவிட்டியை இழந்து விடுவோம். ஆனால் சாரு இப்பவும் மரத்துடம் பேசுவது எல்லாம்...... என்னால் இதை எல்லாம் சொல்ல முடியவில்லை... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு


நீங்கள் இப்படி உருகுகிறீர்கள். ஆனால் சாருவின் எழுத்து ஒரே மாதிரியாக இருப்பதாக...

ஷட் அப்...இப்படி எல்லாம் பேசினால் இனி உங்களுடன் பேச மாட்டேன்

சாரி.. நான் அப்படி கருதவில்லை.. நானும் சாரு ரசிகன்தான்..சிலர் இப்படி கேட்கிறார்களே என்பதையே சொல்ல வந்தேன். சாரு வழக்கமான கதை வடிவில் கதை சொல்வதில்லை..அவருக்கு அந்த திறன் இல்லை என சிலர் சொல்கிறார்களே.

நான்சென்ஸ். சொல்பவன் ஆயிரம் சொல்லலாம்.. அதை எல்லாம் பெரிதாக பேசலாமா... சாருவின் கதைகளை முதலில் படிக்க சொல்லுங்கள். அவர் எல்லா வகையும் எழுதி இருக்கிறார். வழக்கமான நேர்க்கோட்டு பாணியில் ஆரம்பம் நடு முடிவு என்ற பாணியில் இலக்கணத்துக்கு உட்பட்ட கதைகள் பலவும் படைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கதை சொல்லி என ஓர் புகழ்பெற்ற இடது சாரி சிந்தனையாளரே ஒப்புக்கொண்டுள்ளார். என்ன ஒன்று. இப்போது அப்படி சொன்னதை மறுக்ககூடும். அதை சாருவேகூட மறந்து இருக்கலாம்

ஆனால் நீங்களேகூட சாருவை சில நேரங்களில் திட்டி இருக்கிறீர்களே.


ஆமாம்.. நெருக்கம் இருக்கும் இடத்தில்தானே உரிமையும் , சண்டையும் வரும். ஜெயமோகனிடம் பேசி இருக்கிறேன்.. வணக்கம் சார் என பேச ஆரம்பித்தேன். சாருவை அப்படி ஒரு போதும் அழைத்ததில்லை..எப்போதும் பேர் சொல்லியே அழைப்பேன். அவர் மீதான அன்பு எப்பவும் குறையாது

ஏன் அந்த அளவு நேசிக்கிறீர்கள்



எனக்கு ப்யூகோவ்ஸ்கியை அறிமுகம் செய்தது அவர்தான்.  எனக்குப் பிடித்த கவிஞர்களான நகுலன், விக்ரமாதித்யன் அளவிற்கு ப்யூக்கையும் பிடிக்கும்.  ப்யுக் மட்டுமல்ல, ழார் பத்தேலையும் அவர்தான் அறிமுகம் செய்தார். அவர் சொல்லித்தான்  எனக்கு நேக்கட் லஞ்ச் தெரியும்.என்னுடைய இலக்கிய ஆசான் என்று அவரையே சொல்ல இயலும்.
அந்த காலத்தில் திருவண்ணாமலையில் விழா நடத்தி ஒரு நூல் வெளியிட்டனர். அதில் பல எழுத்தாளர் கதைகள் வெளியாகின. ஆனால் அதில் விஞ்சி நின்றது சாரு மொழி பெயர்த்த  (ஆர்த்துரே பியேட்ரியின் ) மழை எனும் கதைதான். இந்த நிகழ்ச்சியை சாருவே மறந்திருப்பார் என்பதுதான் இதில் இருக்கும் சுவாரஸ்யம்.

தமிழ் உலகில் யாருக்கும் தெரியாத பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்தவர் சாரு. அவர் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள் பலரை நம்மால் படிக்க இயலாது.. அந்த அளவுக்கு கடினமாக இருக்கும்.. ஆனால் அவர்களின் அந்த சாரத்தை , கடினத்தன்மையை நீக்கி விட்டு நமக்கு அறிமுகம் செய்பவர் சாரு மட்டுமே..

அவரை விட எந்த சமகால எழுத்தாளராவது ஒரு சதவிகிதம் கூடுதல் சிறப்பாக எழுதுவதாக நிரூபித்தால் நான் வாசிப்பையே விட்டுவிட தயார். நானெல்லாம் பல ஆண்டுகளாக எல்லாவற்றையும் வாசித்து வருகிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். சாருவுக்கு நிகர் சாரு மட்டுமே.. ஆனால் சிலர் அவரை வேண்டுமென்றே மட்டம் தட்டுகின்றனர்.

சீரோ டிகிரி , ராசலீலா , எக்சைல் - ஒப்பிடுக


சீரோ டிகிரி சந்தேகம் இல்லாமல் ஆல் டைம் பெஸ்ட். அதை மிஞ்சிய படைப்பு இனி யாராலும் படைக்க முடியாது

ராசலீலா சுவையான நாவல்.. புதிதாக படிக்க வருவோர்க்கு நான் இதை கண்டிப்பாக பரிந்துரைப்பேன். முக்கியமான நாவல்

எக்சைல் சற்று கடினமான நாவல்.. நம் உழைப்பை கோரும் நாவல். படிக்க படிக்கத்தான் இதன் நுட்பங்கள் புலப்படும்

ஆனால் பழைய எக்சைலில் இந்த பிரச்சனை இல்லை.. சுவாரஸ்யத்தை நோக்கமாக கொண்டு படைக்கப்பட்டது அது.. ஆனால் புதிய எக்சைல் படிக்க முனைப்பு தேவை.

இதன் குறை என எதை சொல்வீர்கள்

ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாவலை ப்ரூஃப் பார்க்கிறோம் என்ற கவனத்தோடு பிழை திருத்துவோர் செயல்பட்டு இருக்கலாம் என கருதுகிறேன்..


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா