Sunday, January 8, 2017

கொண்டாட்டப்பட வேண்டிய குமரகுருபரன் - நூல் வெளியீட்டு விழா

இலக்கியம் என்றாலே தோல்வியாளர்களின் துக்கமாக வாழ்பவர்களின் புகலிடம் என்றொரு எண்ணம் சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது... தமிழை இலக்கியத்தை காதலை நட்பை கொண்டாட்டமாக நினைப்பவர்கள் சிலர்தான்.. அவர்களில் முக்கியமானவர் கவிஞர் குமரகுருபரன்...

அவரது புத்தக வெளியீட்டு விழா நடந்தபோது , இதை வெறும் புத்தக விழாவாக அல்லாமல் ஒரு நல்ல அனுபவத்தை அனைவருக்கும் வழங்குவதே முக்கியம் என நினைத்தார்.. நூலகங்கள் , அரங்குகள் என இதுபோன்ற விழாக்கள் நடக்கும்... அப்படி வேண்டாம் என நினைத்து , ரேஸ் கிளப்பில் கார்ப்பரேட் மீட் போல நடத்த ஏற்பாடு செய்தார்... வந்தவர்கள் அனைவருக்கும் விலை உயர்ந்த உயர் தரமான டின்னர் என இலக்கியத்துக்கு என இருந்த முகத்தை மாற்றி அமைத்தார்...

அது பொது நிகழ்ச்சி அல்ல... அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்... அன்று செம மழை.. பொது நிகழ்ச்சி என்றாலே இந்த மழையில் கூட்டம் வராது.... அழைக்கப்ப்பட்டவர்கள் சிலர்தான்..அவர்களில் எத்தனைபேர் வரப்போகிறார்களோ என சந்தேகமாக போய்ப்பார்த்தால் , அரங்கு நிறைந்த கூட்டம்.. குமார் மீதும் தமிழ் மீதும் ஆர்வம் கொண்ட அத்தனை பேரை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது... இலக்கியமும் கவிதையும் கொண்டாடப்பட்டது அந்த இரவில்...


நூல் வெளியாகி சில நாட்களிலேயே விற்றுத்தீர்ந்த நிலையில் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்ப்பட்டது...

முதல் நிகழ்ச்சியை விட சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது..

சென்னை எக்மோரில் இருக்கும் ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றில் வெகு சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது...

அனைவருமே குமாரை நேசிப்பவர்கள் என்பதால் ஈடுபாட்டுடன் அனைவரும் கலந்து கொண்டனர்


சாரு பேசுகையில் , குமரகுருபரன் மீதான தன் நட்பை பகிர்ந்து கொண்டார்..

குமரகுருபரன் இறந்த போது நான் அஞ்சலி செலுத்த அவர் இல்லம் செல்லவில்லை... சென்றிருந்தால் , நீங்கள் இரண்டு உடல்களை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும் என்றார்


அனைத்து விளக்குகளுன் அணைக்கப்பட்டு , மேடை மீது சிறு ஒளி மட்டும் பாய, பீத்தோவன் இசை பின்னணியில் குமரகுருபரன் கவிதை ஒன்றை சாரு வாசித்தபோது அந்த இடமே இன்னொரு பிரபஞ்சத்தில் சஞ்சரித்த்து....குமார் ஒரு மிகப்பெரிய இசை ரசிகர்...

உரை , அறிவுரைகள் , இலக்கிய விளக்கங்கள் என்று இல்லாமல் குமாரின் கவிதை வாசிப்பு மட்டுமே முழுக்க முழுக்க நிகழ்ந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது

பலரும் அவருடனான தம் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்...

குமார் ஒரு கவிஞர் மட்டும் அல்ல... திரைப்படத்துறை மீது பெருங்காதலும் மேதமையும் கொண்டவரும்கூட... இந்த அம்சம் குறித்தும் விவாதிக்கப்பட்டது...


நட்பாகவும் அன்பாவாகவும் கொண்டாட்டமாகவும் காதலாகவும் தமிழாகவுமே அன்றி வேறு எப்படியும் குமாரை பார்க்க இயலாது....

அந்த வகையில் குமாருடன் கை குலுக்கி , உரையாடி , அவருடன் சேர்ந்து டின்னர் சாப்பிட்ட மகிழ்ச்சியை தந்த்து விழா

ஞானம் நுரைக்கும் போத்தல் - டிஸ்கவரி வெளியீடு

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா