Sunday, January 8, 2017

சாரு எனும் பல்கலைக்கழகம்

அன்புள்ள சாரு,,,,,,

charu school of thought என்கிறீர்களே ...அப்படி என்றால் என்ன என ஒருவர் அராத்து புத்தக விழாவில் என்னைக் கேட்டார்...

இலக்கியக் கூறுகள் , இசங்கள் என்பதையெல்லாம் பேச்சில் காட்டாமல் தன் வாழ்க்கையே தன் செய்தி என கொண்டாட்டமாக , யாருக்கும் தொந்தரவளிக்காத , அன்பை பரப்புகிற ஒரு வித வாழ்க்கை முறை...

விழாவில் சாருவை கவனியுங்கள்...உங்களுக்கே புரியும் என்றேன்..

இலக்கிய உச்ச கணம் என்றால் என்ன என உரை நிகழ்த்தாமல் , சிலிர்ப்பான குரலில் , மெல்லிய இசைப் பின்னண்யில் கவிதை வாசித்து - மன்னிக்கவும் கவிக்கணத்தில் வாழ்ந்து - அந்த பரவ்ச கணத்தில் அனைவரையும் சில நிமிடங்கள் வாழ வைத்தீர்களே... அப்போது புரிந்து கொண்டார்  அவர் சாரு என்றால் அனுபவம்... வெறும் பேச்சு அல்ல என்று..


உங்களைப் பேச அழைத்தபோது , வேண்டாம்... நண்பர் ஜெயமோகன் பேசட்டும் என விட்டுக்கொடுத்தீர்களே... அப்போது புரிந்து கொண்டார் , அக்ரெஸ்சிவ்னெஸ் இல்லாத தன்மையே ஆன்மீகம் என ஜேகே போன்றோர் சொல்வதை வாழ்ந்து காட்டும் ஆன்மிக வாழ்க்கை என்றால் என்ன என்பதை


பிரேக் அப் கதைகளைப்பற்றி விரிவாக பேச தயார் நிலையில் வந்து இருந்தீர்கள்...அதற்காக எவ்வளவு உழைப்பை - பல வேலைப்பளுகளுக்கிடையே - நல்கினீர்கள் என எங்களுக்கு தெரியும்.. ஆனால் விருந்தினரை எதிர்த்துப்பேசுவது போல ஆகி விடுமே என நினைத்து அந்த அற்புதமான உரையையே தவிர்த்தீர்களே... அங்கு புரிந்து கொண்டார் சென்சிப்லிட்டி என்றால் என்னவென்பதை////கன்சிடெரேஷன் எனும் உயரிய தன்மையை


அவ்வளவு பிசியிலும் ஆட்டோகிராப் கேட்போருக்கு பொறுமையாக , தேதி பெயர் உட்பட அனைத்தையும் விசாரித்து அக்கறையுடன் ஓர் ஓவியம் தீட்டுவது போல கை எழுத்துப்போடுவீர்களே..அங்கு புரிந்து கொண்டார் , அன்பும் அக்கறையும்தான் உண்மையான அறம் என்பதை வாழ்ந்து காட்டுகிறீர்கள் என்பதை


ஜெய்மோகனை உரிமை எடுத்துக்கொண்டு கலாய்த்தது ( நான் பெண்ணாக மாறினால் யோக்கியர்களை காதலித்து காலி செய்வேன்.. முதல் நபர் ஜெயமோகன் என்றபோது அவரே வாய் விட்டு சிரித்து விட்டார் ) ஜாலியான கேள்விகள் பதில்கள் , ஆடை நேர்த்தி என எனர்ஜெட்டிக்காக இருந்தீர்களே...அங்கு புரிந்து கொண்டார் .. Life is a celebration... Celebrate it என்பதை...


சிலரது வாசிப்புகள் அவர்கள் மூளையில் ஒரு மடிப்பாக மாறுவதோடு சரி... ஆனால் சாரு படித்து குவித்த புத்தகங்கள் அவரை அன்பு மயமாக்கி வருகிறது... வாழ்ககையை மென் மேலும் கொண்டாட செய்கிறது... இந்த ரசவாதமே சாரு எனும் பல்கலைக்கழகத்தின்  அடி நாதம் என புரிந்து கொண்டேன்....என்ன நான் சொல்வது சரியாக என கேட்டார் அந்த நண்பர்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா