Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Sunday, December 23, 2018

ராயல்ட்டி யாருக்கு... வைரமுத்து காமெடி

இப்போதெல்லாம் அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை.. பிரியாணி கொடுத்தும் காசு கொடுத்தும்தான் கூட்டம் திரட்டுகின்றனர்.

இதற்கு மாறாக இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது...

இது ஆரோக்கியமான போக்காகும்

இலக்கிய முன்னோடிகளை அறிமுகம் செய்யும் தமிழாற்றுப்படை எனும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கபிலர் குறித்து வைரமுத்து பேசினார்.

நல்ல கூட்டம்.. குடும்ப தலைவிகள் பலரும்கூட , தனியாகவும் குடும்பத்துடனும் வந்திருந்தனர்... மகிழ்ச்சி..

வைரமுத்துவுக்கு பேசியவர்கள் சிறப்பான ஆழமான உரை வழங்கினர்..
(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமை உரை. முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை)

வைரமுத்து மிக உன்னிப்பாக இந்த உரைகளை கவனித்து தன் பேச்சில் மேற்கோள் காட்டினார்... இது நல்லதொரு பண்பாகும்.. பலர் மற்றவர் உரைகளை கவனிப்பதில்லை


இருவர் படத்தில் தான் எழுதிய நறுமுகையே பாடலில் வரும் அற்றைத்திங்கள் என்ற வரிக்கு ராயல்ட்டி கொடுப்பதென்றால் , கபிலருக்குதான் கொடுக்க வேண்டும் என யாரையோ மறைமுகமாக கேலி செய்து நகைச்சுவையாக பேசினார்


புலிக்கும் யானைக்கும் சண்டை வந்தால் புலிதான் வெல்லும் என்கிறார் வள்ளுவர்... புலி தற்காலிகமாக தோற்றிருக்கலாம்.. யானையின் சூழ்ச்சியால் தோல்வி.. ஆனால் புலிதான் வெல்லும் என்று வைரமுத்து பஞ்ச் ஆக பேசினார்... ஆனால் சூழ்ச்சியால் புலியை வீழ்த்திய யானையுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த பஞ்ச் வசனம் சரியாக எடுபடவில்லை


அவரது பேச்சு முன்பு தினமணியில் வந்தது... பிறகு தமிழ் ஹிந்துவில் வந்தது... இந்த பேச்சு நக்கீரனில் வருகிறது..

இது வளர்ச்சியா வீழ்ச்சியா என தெரியவில்லை

ஆனால் ஒரு நல்ல தமிழ் விருந்து... எந்த பந்தியில் பரிமாறப்பட்டாலும் நல்லதுதான்..


 

Friday, June 15, 2018

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து - அச்சில் வராத சுவாரஸ்யங்கள்

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து கட்டுரை  வாசித்ததை  அறிவீர்கள்..  அதன் சுருக்கப்பட்ட வடிவத்தை தமிழ் இநதுவில் வாசித்திருப்பீர்கள்..   அதில் இடம்பெறாத சில  சுவாரஸ்யங்கள் உங்களுக்காக  நம் வலைத்தளத்தில்...  படியுங்கள்...ரசியுங்கள்

-----
♥ஜெயகாந்தனை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தேன்..  சாப்பிடுவது இரண்டாம் பட்சம்..  அவருடன் சற்றுபேசுவதே விருந்தின்  நே ாக்கம்..   ரெமி மார்ட்டின் உட்பட எல்லாம் உள்ளன.. என்ன வேண்டும் என்றேன்..  நீங்கள் மது அருந்துவீர்களா என்றார்..  ஒருோதும் இல்லை என பதில் அளித்தேன்..  அப்படியானால் எனக்கும வேண்டாம் என்றார்... டேபிள் நாகரிகம் என்பதை காட்டினார்


♥ அவர் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டார்..   நான் அணிவித்த தங்க மே ாதிரதை ஏற்றுக்கெ ாண்டார்...  அவர் ஏற்றது எனக்குப் பெருமை

♥ஜெயகாந்தன் எழுத்தில் அவர் குரல் அதிகம் ஒலிப்பதாக சிலர் விமர்சிப்பதுண்டு..  இதை மறுக்கிறார் ஜெயமே ாகன்..  அவர் எழுதுகிறார்  :
ஆசிரியன் குரல் கதாபாத்திரத்தில் ஒருபோதும் வெளிப்படகூடாது என்று கருதும் நம் விமரிசகர்கள்  தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளைப்பற்றி என்ன சொல்கிறார்கள் ? கதேயின் ஆக்கங்களின்மீது அந்த அளவுகோலை போடுவார்களா ? இப்பேரிலக்கிய ஆசிரியர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் முகமாகவே கதாபாத்திரங்களைப் படைப்பவர்கள். 

♥ ஜெய காந்தன் என் மீதுபேரன்பு கெ ாண்டவர்..   நிறைய பேசுவே ாம்..   ஒரு  முறை  அவரிடம் கேட்டேன்...  நீங்கள்செய்த ஏதாவது ஒன்றுக்காக பிற்காலத்தில் வருந்தியதுண்டா.. ?  அவர் பதிலளிக்க  மூன்று நிமிடங்கள எடுத்து கெ  ாண்டார்...மேதைகள்  எதையும் யே ாசித்தே பேசுவார்கள்

என்  நூல்   வெ ளியீட்டுக்காக வெ ளிநாடு  பே ாயிருந்தேன்... அந்த  நாட்டு கல்வி அமைச்சர்  கலந்து  கெ ாண்டார்

- தாங்கள்  இந்தியா வந்ததுண்டா என கேட்டேன்..
ஆம்  அல்லது இல்லை  என எளிதாக பதில்செ ால்லவேண்டியகேள்விக்கு  மூன்று நிமிடங்கள்  யே ாசித்து அற்புதமான ஒரு பதில் செ ான்னார்

( அடுத்த பதிவில் அந்த பதிலை  காண்பே ாம்)

Sunday, May 13, 2012

”கவிஞர் “ வைரமுத்துவும் நானும்

என் கல்லூரி காலத்தில் அடிக்கடி நடக்கும் பஞ்சாயத்து கவிஞர்களில் சிறந்தவர் வாலியா , வைரமுத்துவா ?

அதில் வைரமுத்துவை ஆதரித்து பேசுவதில் முன்னணியில் இருந்தவன் நான். வைரமுத்து என்றால் எங்களுக்கெல்லாம் அந்த அளவு ஈர்ப்பு.
சின்ன வயதில் சினிமா பாடல் என்றால் நடிகர்களை வைத்துதான் வகைப்படுத்துவோம். இசை அமைப்பாளர் , பாடலாசியர் எல்லாம் தெரியாது..ரஜினி பாட்டு, கமல் பாட்டு , எம் ஜி ஆர் , சிவாஜி பாடல்கள் என்றுதான் தெரியும்.

கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த பின்புதான் பாடல் வ்ரிகளை கவனிக்க ஆரம்பித்தேன், அப்படி கவனிக்க ஆரம்பித்த புதிதில் , எனக்கு படித்த பெரும்பாலான வரிகளை வைரமுத்துதான் எழுதி இருந்தார்..

“ வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கொரு சேதி தரும் “
“ மெத்தை வாங்கினேன்.. சுகத்தை வாங்கல “  “  கடவுள் மனிதனை படைத்தானா , மனிதன் கடவுளை படைத்தானா.. ரெண்டு பேரும் இல்லையே “

என அந்த வயதில் சுவையான வரிகள் மனதை கவர்ந்தன. இப்படிப்பட்ட நல்ல கவிஞரை இளையராஜா பகைத்து கொண்டாரே என இளைய்ராஜா மேல் வருத்தமும் இருந்தது..

அந்த காலத்தில் இளையராஜா பணியாற்றாமல் பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் வராது.. ஓரிரெண்டு படங்கள் இளையராஜா இல்லாமல் வரும். அவற்றில் வைரமுத்து கண்டிப்பாக இருப்பார்.

சந்திரபோஸ் , அம்சலேகா போல பலர் இளையராஜாவுக்கு மாற்றாக பயன்படுத்தி கொள்ளப்பட்டனர். அவற்றில் வைரமுத்து இருப்பார்.

வானமே எல்லை, ரோஜா, அண்ணாமலை என்ற மூன்று படங்களை பாலசந்தர் தயாரித்தார்.. மூன்றிலும் இயக்குனர்கள் வெவ்வேறு. நடிகர்கள் வெவ்வேறு.. ஆனால் பாடலாசியர்கள் ஒருவரே... வைரமுத்து.

அந்த அளவுக்கு இளையராஜாவுக்கு எதிராக தன் கொடியை பறக்க விட்டு கொண்டு இருந்தார் வைரமுத்து.
புத்தகங்கள் வாங்கும் பழக்கம் அப்போதுதான் ஆரம்பித்து இருந்தது,  நான் வாங்கிய முதல் புத்தகங்களில் அதிகம் வைரமுத்து புத்தகங்களே.

அவரையே உலகில் மிகப் பெரும் கவிஞராக நினைத்து வந்தேன்.
ஆனால் இலக்கிய வாசிப்பு அதிகரிக்க அதிகரிக்க, கவிதை என்ற விஷயம் புரிய ஆரம்பித்தது.

கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.. அது ஓர் உணர்வு. அதில் பல உயரங்களை தொட முடியும் . தொட்டு இருக்கிறார்கள் என்பது புரிய ஆரம்பித்தது..

கவிதைகளில் எத்தனை எத்தனை வடிவங்கள்.. எத்தனை எத்தனை உணர்வுகள். பிரமித்து போனேன்..

ஆயிரம் பக்க புத்தகம் தரும் உணர்வை மூன்று வரிகளில் சொன்ன ஜப்பானிய ஹைக்கூ ஒன்றை படித்து கண்ணீர் விட்டு அழுததும் ஒருமுறை நடந்தது..

திரைப்படத்தில் பாடல் எழுதுவ்து சாதாரண விஷ்யம் அல்ல.. அதற்கு கடும் உழைப்பு தேவை. திறமை தேவை.

இந்த இரண்டும் கொண்டவர் வைரமுத்து. திரைப்பாடலாசியர்களில் முக்கியமானவர் அவர்.

ஆனால் சிறந்த கவிஞரா . சிறந்த நாவலாசிரியா என்று யோசித்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நல்ல எழுத்தாளர் , உழைப்பாளி என சொல்லலாமே தவிர , உரைனடை கவிதை போன்றவற்றில் பெஸ்ட் என சொல்ல இயலாது..

ஒருவர் நன்றாக நடிக்கிறார் என்பதால் அவர் சிறந்த தலைவராகவும் இருப்பார் என நினைப்பது தவறு.. அதே போல ஒருவர் சிறந்த பாடலாசியர் என்பதால், அவர் சிறந்த இலக்கியவாதி என நினப்பதும் தவறு என்பதே என் கருத்து


அதே நேரத்தில் வைரமுத்துவின் திரைப்பாடல்களுக்கு நான் என்றும் ரசிகன்


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா