Showing posts with label திரைப்படம். சினிமா. Show all posts
Showing posts with label திரைப்படம். சினிமா. Show all posts

Tuesday, December 24, 2024

உயர் மனிதனை உருவாக்கும் குணம் எம் ஜி ஆர் பற்றி சரோஜா தேவி

எம்.ஜி ஆரிடம் இருந்து பல விஷயங்களை க ற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, யார் வந்தாலும் முதலில் தன்னை அறிமுகப் கொண்டு தான், தானே பேச ஆரம்பிப்பார் இந்த பண்பு இன்று பலரிடம் இல்லை. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் முதலில் நாம் அறிமுகம் செய்து கொண்டால், எதிர் இருப்பவர் மகிழ்ந்து சகஜமாக பேசுவதற்குத் தயாராகிவிடுவார். இதை சின்னவர் இன்று வரை அவரை நான் இப்படித்தான் அழைப் பேன். (பெரியவர் எங்கள் எல்லோருக்கும் சக்ரபாணி அண்ணன் தான்) பலமுறை செய்து நான் பார்த்துள் ளேன்.


என்னுடைய பிறந்த நாள் ஜனவரி 7. அவருடைய பிறந்த நாள் 17. அவர் என்றுமே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட மாட்டார். அவரது ரசிகர்கள் தா ன் கொண்டாடுவார்கள். பலமுறை அவரது பிறந்த நா ளில் அவர் படப் பிடிப்பில் இருந்துள்ளார்.


என்னுடைய பிறந்த நாள் அன்று காலையில் எனக்கு வரும் முதல் தொலைபேசி வாழ்த்து எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வரும். என் வீட்டில் எனது தாயார் சத்யநாராயணா பூஜை செய்வார். ஒரு முறை என் பிறந்த நாளில் நேராக மனைவி ஜானகி அம்மாவுடன் காலையிலேயே வந்துவிட்டார். எனக்கு கையும் ஓட வில்லை; காலும் ஓடவில்லை. என் அம்மா சத்யநாராயணா பூஜை செய்து கொண் டிருந்தார். ராமச்சந்திரனும் சத்யநாராயணனும் ஒன் றுதான் என்று என் அம்மா சொன்னவுடன் ஒன்றும் சொல்லாமல் என்னை வாழ்த்தி விட்டு சென்றார்.


நான் என் அம்மா சொன்னால் என்றுமே தட்ட மாட்டேன். ஒரு முறை 'நான் ஆணையிட்டால்' படம் என்று நினைக்கிறேன். நான் நைட் ஷூட்டிங் கில் பிரேக் விட்டதும், அசதியாக வந்து உட்கார்ந் தேன். எனக்கு அசைவ பிரியாணியை அளித்தார் எம்.ஜி.ஆர். ‘இன்று சனிக்கிழமை அதனால் நான் அசைவம் சாப்பிட மாட்டேன். இது அம்மா சொன் னது' என்று கூறினேன்.


'ஷூட்டிங் பன்னிரண்டு மணியை தாண்டிவிட் டது. இப்பொழுது சாப்பிடலாமே!' என்றார். 'எங் களைப் பொருத்தவரை சூரியோதயமானால்தான் அடுத்த நாள். காலையில் 6 மணிக்குத்தான் அடுத்த நாளே பிறக்கும். இதுவும் என் அம்மாதான் சொல் லியுள்ளார்கள்' என்றேன். தன்னுடன் அமர்ந்திருந்த பலரிடம், 'இந்த சின்ன வயசிலே இந்த பொண்ணு அம்மா பேச்சை தட்டாமல் கேக்குறா பாரு!' என்று சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண் டிருக்கிறது.


அவர் எப்பொழுதுமே நமது கலாசாரம், பண்பாடு இவைகளைப் பின்பற்றினால் பெருமைப்படுவார். அவரிடம் எந்த ஒரு தீய குணத்தையும் நான் பார்த்த தில்லை. அதேபோல் மற்றவர்களை தவறாக பேசியதும் இல்லை 

நடிகர்கள் வெளியே போனால் கூட்டம் கூ டிவிடுகிறது சாலைகளிலோ கடை தெருவிலோ ந டந்து போக முடியவில்லை' என்று நாங்கள் அவரிடம் குறை பட்டோம். இதை மனதில் கொண்டு ஒருநாள் முழுவதும் பல்வேறு கடைகளை கோல்டன் ஸ்டுடியோவில் அமைத்தார். அவர்களும் சந்தோஷ மாக வர நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே சென்றோம்.


ஒரு நகைக்கடையையும், அதில் உள்ள ஒரு நெக்லஸையும் (Necklace) பார்த்து ஆசைப்பட்டு நான் வாங்க விரும்பினேன். கடைக்காரர் 'இந்த நெக்லஸை சாவித்திரி அம்மா முதலிலேயே வாங்கி விட்டார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டார்' என்றார். இதைக் கேட்ட என் முகம் சுருங்கி விட்டது. எனக்கு அந்த நெக்லஸை வாங்க முடியாததில் ரொம்ப வருத்தம்.


அதற்குப் பிறகு நாங்கள் நடித்த படம் 'தாயை காத்த தனயன்'. படத்தை தயாரித்தது தேவர் பிலிம்ஸ். ஆனால் அதை வாங்கி வெளியிட்டது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ். அதன் வெற்றி விழாவில் எனக்கு முன் மேடைக்குச் சென்ற அசோகன் ஒரு சின்ன பெட்டி யுடன் இறங்கி வந்தார். என் பெயர் அழைத்தபோது நான் சென்று மேடையில் நின்றேன். ஒரு பெரிய பெட்டி என் கையில் கொடுக்க நான் வாங்கி வந் தேன். கீழே வந்து உட்கார்ந்தவுடன் மெல்ல திறந்து பார்த்தேன். என் கண் பார்ப்பதை என்னாலே நம்ப முடியவில்லை. எந்த நெக்லஸை நான் வாங்க முடிய வில்லை என்று வருத்தப்பட்டேனோ, அந்த நெக்லஸ் எனக்குப் பரிசாக மேடையில் தரப்பட்டவுடன் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.


என்னைப் பொருத்தவரையில் சொந்த தாயை விட ஒரு படி மேலே சென்று அன்பை பொழிபவர் எம்.ஜி.ஆர். அவர் முதலமைச்சரான பிறகும் கூட நான் அழைத்தால் உடனேயே என்னை தொடர்பு கொண்டு பேசும் அன்பாளர், கடைசி வரை என்னை தனது கட்சியில் சேரவேண்டும் என்று அவர் சொன் னதே இல்லை. எம்.ஜி.ஆர். இன்று அல்ல என்றுமே வாழ வைக்கும் தெய்வம் 




Saturday, August 29, 2020

மனுதர்ம அடிப்படையில் இந்திய சட்டம் உருவாக்கப்பட்டதா ? விஜயகாந்த் பரபரப்பு

 மனுதர்மம் என்பது எப்போதுமே

 சர்ச்சைக்குரிய ஒன்று


ஏதாவது ஒரு குக்கிராமத்தில் ஏதாவது ஒரு ஆணவக் கொலை நடந்தால் அதற்கு மனுநீதி மேல் பழியைப்போடுவோர் உண்டு. உண்மையில் அந்த கிராமத்தில் யாரும் மனுதர்மம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்


சாதி என்பது பிறப்பால் வராது. குணிதிசயங்கள்தான் மனிதனின் உயர்வை தீர்மானிக்கிறதென அது சொல்வதாக சிலர் சொல்கின்றனர்


அது சாதிய நூல் என்போரும்

உண்டு


கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் இப்படி பேசுகிறார்


வேதம் கற்ற அந்தணன் தவறு செய்தால் அவனுக்கு கூடுதல் தண்டனை விதிக்கிறது மனுதர்மம்.  அந்த மனிததர்ம அடிப்படையில்தான் இந்திய அரசல் சட்டம்  அமைந்துள்ளது என அனல் பறக்க"பேசுகிறார்


அதாவது படித்தவர்கள்  அதிகாரத்தில் இருப்போருக்கு கூடுதல் தண்டனை என மனு சொல்வது நல்லது என்கிறார்;


 மனுதர்ம ஆதரவாக ஒரு சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் பேசியது ஆச்சர்யம்









Wednesday, October 9, 2013

தமிழின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படம்-பார்த்து சிலிர்த்து பரவசப்பட்ட அனுபவம்


ஒரு பெண் அரசரை மயக்கி அவர் மனதில் இடம் பிடித்து விடுகிறாள். சதி செய்து அவரையும் அவர் வாரிசுகளையும் கொன்று ஆட்சியை பிடிக்கிறாள்.
திடீர் திருப்பமாக அவள் கூட்டாளியையுமே தீர்த்து கட்டி விடுகிறாள்..

தட்டிக்கேட்க ஆள் இல்லாத அரசியாகி காட்டாட்சி நடத்துகிறாள்...

கரிகாலன் என்பவன் தலைமையில் மக்கள் அணி திரள்கிறார்கள்... புரட்சிக்கு திட்டம் இடுகிறார்கள்... கரிகாலன் வெல்ல முடியாதவனாக இருக்கிறான். அவனுக்கு அவ்வப்போது தெய்வம் ரகசிய கட்டளைகள் வழங்கி வழி காட்டுகிறது...

அரசிக்கு விசுவாசமான தளபதி அவளுக்கு உறுதுணையாக இருக்கிறான். கரிகாலனை வெல்ல முடியாத நிலையில் , அவனை மயக்கி வீழ்த்தும் பொருட்டு அரசியின் தரப்பில் இருந்து கலாவதி என்ற பெண் தந்திரம் செய்து கரிகாலன் இருப்பிடத்தை அடைகிறாள்.
ஒரு யோகி மர்மமான சில வேலைகள் செய்கிறார்... அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது புதிராக இருக்கிறது...

அரசி யாருக்கும் அடங்காமல் இருந்தாலும் , அவளை ஒரு பேய் அடிக்கடி வந்து மிரட்டி செல்கிறது... அதற்கு மட்டும் அஞ்சுகிறாள்..

இதற்கிடையில் காலாவது மனம் மாறி கரிகாலனை நேசிக்க தொடங்குகிறாள்.. அவனும் நேசிக்கிறான், ஆனால் இதை அவனது கூட்டம் விரும்பாததால் , அவன் தலைமை பதவியை துறந்து வெளியேறுகிறான்.

தலைமை இல்லாத அந்த கூட்டத்தினரை அரசி படையினர் வென்று ஜெயிலில் அடைக்கின்றனர். கலாவதியும் ஜெயிலில் அடைக்கப்படுகிறாள்...

அவர்களை காப்பாற்ற கரிகாலன் வந்து சண்டையிடுகிறான்...அவனுக்கு தெய்வ கட்டளை மூலம் வழிகாட்டுவது தன் தந்தையான் என்பதை தளபதி கண்டுபிடிக்கிறான்.

அவர் ஏன் அப்படி செய்தார். அவர் மர்மமான நடவடிக்கைகளின் காரணம் என்ன என்பது கடைசியில் தெரிகிறது...

அவர் யார் என என்பது தெரிய வரும்போது அனைவரும் அதிர்கின்றனர்..

பழைய படங்களை நாம் புதிய படங்களை பார்க்கும் மதிப்பீடுகளோடு பார்க்க முடியாது... அந்த கால தொழில் நுட்பம் , திரை மொழி போன்றவை ஆரம்ப கட்டத்தில் இருகின்றன என்பதால் ஒரு சலுகை கொடுத்து விட்டுத்தான் பழைய படங்கள் பார்ப்போம்..

ஆனால் மர்ம யோகி என்ற இந்த சினிமா , இப்போது பார்த்தாலும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் , பழைய படம் எனும் சலுகையை கோராமலும் இருக்கிறது..

எம் ஜி ஆருக்கு மிகப்பெரிய வெற்று தந்து அவருக்கு திருப்பு முனை ஏற்படுத்திய படம் இது..

இந்த வெற்றியை எம் ஜி ஆர் எவ்வளவு அடக்கத்துடன் ஏற்று கொண்டார் என்பதில்தான் அவர் நிற்கிறார்.

எம் ஜி ஆர் கூறுகிறார்.

ஒரு முறை நாடக மற்றும் சினிமா நடிகரான கே பி கேயுடன் அவர் கதா நாயகனாக நடித்த படம் ஒன்றுக்கு போய் இருந்தோம். அதில் நானும் சிறிய வேடத்தில் நடித்து இருந்தேன்.. எல்லோரும் கே பி கே, கே பி கே என அவரை சூழ்ந்து கொண்டார்கள்.. அவரை காப்பாற்றி அழைத்தி செல்வது பெரும்பாடாக இருந்தது..என்னை யாருக்கும் தெரியவில்லை... அவர் புகழை நினைத்து வியந்தேன்.

சில ஆண்டுகள் கழித்து ,  நான் நடித்த மர்மயோகி மாபெரும் வெற்றி கண்டது..திரையரங்குக்கு நான் சென்ற போது கரிகாலன் கரிகாலன் என வாழ்த்தொலி  எழுப்பி மக்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக கே பி கே இருந்தார் , டைகர் ஆஃப் இந்தியன் ஸ்டேஜ் என கவர்னரால் புகழப்பட்ட அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை...

சில ஆண்டுகள் முன்பு என்னால் ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்த அவரை இன்று யாருக்கும் தெரியவில்லை என்றால் , புகழ் என்பதை நிலையான ஒன்று என நினைக்கும் ஆணவம் எனக்கு எப்படி வரும்...

இந்த வரலாற்று சிறப்பு மிக்க படம் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ( அரசியாக ) அஞ்சலிதேவி நடித்தார்.

மர்ம யோகியாக நடித்தவர் செருகளத்தூர் சாமா,

சமூக ரீதியான புரட்சிகரமான கதையை திகில் , கடவுள் போன்ற சமாச்சாரங்கள் கலந்து கொடுத்த புத்தி சாலித்தனம்தான் படத்தை இன்றும் நினைக்க வைக்கிறது..

அரசி பேயைக்கண்டு நடுங்கும் காட்சியில் அவளது நிழல் அவளைவிட பெரிய உருவமாக காட்சி அளிப்பதை பதிவு செய்து இருக்கும் நேர்த்தி, கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான், தவறினால் குறி வைக்க மாட்டான் என்பது போன்ற பஞ்ச் டயலாக்குகள் ,

அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்

வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்


பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்

என்பது போன்ற இனிய பாடல் வரிகள் , நேர்த்தியான நடிப்பு என படம் பார்ப்பது ஓர் இனிய அனுபவமாக இருக்கிறது..   நம்பியாரின் நடிப்பை மறக்க முடியாது...

இந்த படம்தான் தமிழின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி படம் என்பது குறிப்பிடத்தக்கது...   பேய் வரும் திகில் காட்சிகளுக்குக்காக இதற்கு ஏ சர்ட்டிஃபிகேட் வழங்கினார்கள்..

இன்று எத்தனையோ ஏ படங்கள் வந்து விட்டன,,, ஆனால் இந்த படம் போன்ற நேர்த்தியுடன் வந்ததில்லை...

இந்த படத்தை தமிழ் ஸ்டுடீயோ நடத்தும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான திரையிடலில் பார்த்தேன். அவர்களுக்கு நன்றி...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா