Wednesday, November 10, 2010

ஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது

estuary

எங்கிருந்தோ ஓடி வரும் ஆறு கடலில் கலந்து தன் பயனத்தை முடிவு செய்கிறது…

சுத்தமான ஆற்று நீர் கடலில் கலந்ததும் , கடலின் உப்பு சுவையை பெறுகிறது,,,

இதை எல்லாம் பார்க்கும்போது கவிதை தோன்றலாம்., வாழ்வியல் தத்துவம் தோன்றலாம்…

சிலருக்கு அறிவியல் கண்டுபிடிப்பு தோன்றி இருக்கிரது..

இப்படி ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார்கள் நெதர்லாந்து விஞ்ஞானிகள்..

சுற்றுசூழல் கெடாது, உயிரின்ங்களுக்கு ஆபத்தும் இல்லை…  ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் மின்சாரம் தயாரிக்கும் கலக்கலான முறை ரெடி என்கிறார்கள் இவர்கள்..

 

காற்றாலை மூலம் மின்சாரம் கிடைப்பது காற்று வீசுவதை பொறுத்தது.. சில சமயங்களில் காற்று வீசாமல் மின்சாரம் தடைப்படலாம்.. ஆனால் இந்த புதிய முறை மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்..

University of Groningen and the University of Twente ஆகிய பல்கலை விஞ்ஞானிகள் இந்த முறையை ஆராய்ந்து வருகின்றனர்..

 

ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் முறையில் மின்சாரம் தயாரிப்பதுதான் திட்டம்..

அது என்ன ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ்  ?

எலக்ட்ரோடயலிஸ் என்பதன் எதிர் தொழில் நுட்பம்தான் ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் .

எலக்ட்ரோடயலிஸ் என்றால் என்ன ?

அது ஒன்றும் இல்லை… கடல் நீரை குடி நீரை மாற்றுவதாக அவ்வப்போது படம் காட்டுகிறார்கள் அல்லவா ? அதுதான் இது…

கடல் நீரில் மின்சாரத்தை பாய்ச்சும்போது , அதில் இருக்கும் உப்புத்தனமை வெளியேறி நல்ல நீர் கிடைக்கும்… இந்த முறைதான்  எலக்ட்ரோடயலிஸ் ..

இதை மாற்றி செய்தால் ? அதாவது நல்ல நீரையும் , உப்பு நீரையும் கலந்தால் ?

எஸ்.. நீங்கள் நினைப்பது சரிதான்.. மின்சாரம் உண்டாகும்…

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்…

உப்பு நீர் + மின்சாரம் = நல்ல நீர்

உப்பு நீர்+ நல்ல நீர் = மின்சாரம்…

ஒரு செல்லில் இருந்து 50 மில்லி வோல்ட் மின்சாரம் கிடைக்கும்,,, இது மிகவும் குறைவுதான்..

இது போல பல செல் அமைத்தால் , போதுமான மின்சாரம் கிடைக்கும்…

இந்த முறை மூலம் , 2012க்குள் 200 கிலோவாட் மின்சாரம் மின்சாரம் தயாரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க ஹாலந்து விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்..

ஆரம்ப காலத்தில் இதற்கான செலவு அதிகமாக இருக்கும்.. போக போக குறைந்து விடும் என்கிறார்கள்..

காலம் காலமாக , கடலில் கலந்து கொண்டு இருக்கும் ஆற்று நீர் இனிமேல் புதிய பணி ஒன்றையும் செய்யப்போகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம்..

இந்த முறை மூலம் சுற்று சூழல் கெடுதி அறவே இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி

Tuesday, November 9, 2010

அடுத்தவர் வேதனை,வெறும் செய்திதானா?- என்கவ்ன்டரும் அறிவுஜீவி பதிவர்களும்

நான் சென்னைக்கு வந்த புதிது...
மவுன்ட் ரோடின் ஒரு இடத்தில் பயங்கர கும்பல்...
என்னவென பார்த்தால், ஒரு இளம் பெண் ரத்த வெள்ளத்தில் கிடைக்கிறார்...
மோதிய லாரி டிரைவர் எஸ்கேப்...
அரைமணி நேரம் உயிருக்கு போராடிய பின் அந்த பெண் இறந்து இருக்கிறார் என தெரிய வந்தது..

அது வரை அனைவரும்,பொறுமையாக நின்று அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குவதை பார்த்து கொண்டு நின்று இருந்து இருக்கிறார்கள்..
அதை சீன் பை சீனாக விவரிக்க வேறு செய்தார்கள்...
கவருமண்டு சரியில்லைசார், வெளி நாட்டில் ippadi நடக்காது என்றெல்லாம் தர்க்கம் செய்து கொண்டு இருந்தார்கள்..
எனக்கு மாபெரும அதிர்ச்சியாக இருந்ததது...
கிராமங்களிலோ,. மதுரை,கோவை,திருச்சி போன்ற நகரங்களிலோ இப்படி நடக்காது.. எதாவது உதவி செய்ய முயல்வார்கள்...

நகர வாழ்க்கையும் ,படிப்பும் நம்மை வெறும் யோசிப்பு எந்திரங்களாக மாற்றி விட்டன....

கோவையில் சிறார்கள் கொடுன்செயல்லுக்கு ஆளானதும் கோவை நகரமே துக்கம் அடைந்தது..
நமது பதிவுலக அறிவு ஜீவிகளுக்கு அது வெறும் இன்டர்நெட் செய்தி மட்டுமே...
குளிரூட்டாப்பட்ட அறையில் கோக் சாப்பிட்டபடி , அந்த செய்தியை படித்தனர்... அவர்கள் டேஸ்ட்டுக்கு செய்தி இல்லாததால் அதை மறந்தும் போனார்கள்..
ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்த கோவை மக்களுக்கு அதை மறக்கமுடியவில்லை...
எப்படியும் கொலையாளி ஒரு அற்பமான தனடைனுயுடன் வெளி வந்து விடுவான் என அனைவருக்கும் தெரிந்தே இருந்தது..
இந்த நிலையில் கொலையாளி இறந்து விட்டான் என தெரிந்ததும், கடவுல்தனடனை கொடுத்து விட்டன என சிலரும்,இயற்கையின் பொயட்டிக் ஜஸ்டிஸ் என சிலரும் ஆறுதல் பட்டு கொண்டனர்...
அவன் என்கவுண்டரில் செத்தாநா , விபத்தில் செத்தானா என்பது அவர்களுக்கு முக்கியாமாக இல்லை..

ஆனால் இந்த எ சி அரை அறிவு ஜீவிகளுக்கு , இந்த பிரச்சினையில் எந்த லவும் உணர்வு பூர்வ தொடர்பு இல்லாத அறிவாளிகளுக்கு , சட்டம பற்றிய கவலை வந்து விட்டடது...

நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம், சட்டம் எதுக்கு இருக்கு..எதுவும் பிரசிஜர் படிதான் செய்யணும்,, சட்டத்தின் மாட்சி என்ன ஆவது என்றெல்லாம், கண்ணிருடன் , சற்று ஆறுதல் அடைந்தவர்களை கிண்டல்செய்ய தொடங்கினர்..
பேசாமல் எல்லோரையும் என்கவுண்டர் செய்து விட்டால் கோர்ட் செலவு மிஞ்சுமே என இடக்கு பேசினார்...

அய்யா அறிவு ஜீவிகளே... என்கவுண்டர் செய்ய வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோர் நோக்கம் இல்லை...

சட்டப்படி நீதி வேண்டும் என்பதுதான்..

அதற்கு முன் ஒரு விபத்தில் குற்றவாலி இறந்து விட்டால்,அனைவரையும் விபத்துக்கு உள்ளாக வேண்டும் என்பது அல்ல...
ஒரு மனித மிருகம் ஒழிந்தது என்ற ஆறுதல் ஏற்படும்... அவ்வளவுதான்..
இதை புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்வது,படிப்பு என்பது மனதினை பக்குவபடுதுவது அல்ல.. பதர் ஆக்குவது என்றே எண்ண வைக்கிறது...

இது உணர்ச்சி பூர்வமான நிலைதான்...

இதை அனுபவித்தவ்ர்களுத்தன் அந்த வலி தெரியும்ம்...
வழியை உணராதவர்கள்,எ சி அறையிலமர்ந்து சமஊக சீர்திருத்தம்,குர்ரவளிகளுக்கு அளிக்க வேண்டிய சலுகை என்றெல்லாம் பேசி கொண்டு இருக்க வேண்டியதுதான்...

என்னை பொறுத்தவரை,பெண்களுக்கு , சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வேண்டும் ...
குற்றமே நடக்காத சமுதாயம் வேண்டும்ம்..
அதை நிகழ்த்தாவரை, வான் முறைக்கு ஆதரவு பெருகத்தான் செய்யும்.,.. போலிஸ் என்கவுண்டர் செய்துதான் பிரச்சினை முடிய வேண்டும் என நினைக்காமல், வன்முறை குழுக்க்களுக்கு ,மக்கள் இந்த அதிகாரத்தை கொடுக்கும்நிலை வந்தால் ஆச்சரிபடுவதற்கு இல்லை...

அப்படி ஒரு நிலை வர கூடாது...
விரைவான விசாரணை,தீர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்..

அந்த நிலை இன்று இல்லை.. எனவே பாதிக்கப்பட்டோர் இப்படி ஆருதலடைகின்றன்ர்...
இதை கிண்டல் செய்வது மனித நேயம் அல்ல...

நம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருந்தால், நமக்கும் இந்த நிகழ்வு ஆறுதலளித்து இருக்கும்...
தம்குழந்தைகள் பாதிக்கப்படாத நிலையிலேயே, பிறர் குழந்தையை தம் குழந்தையாக நினைத்த கோவை மக்களின் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியாதுதான்..

உணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , பரிதாப பதிவுலகம்.

கூட்டமான பேருந்தில் செல்கிறோம்..

யாராவது நம் பத்து பைசா பர்சை அடித்து விட்டு தப்ப முயன்றால் என்ன செய்வோம்… ?

தர்ம அடி கொடுக்க முயல்வோமா இல்லையா?

திருடியவனின் கஷ்டம், சமூக அவலம், அவனை இப்படி ஆக்கிய சூழ் நிலை எல்லாவற்றையும் ஆராய வேண்டும் என கோருவோமா?

அப்படியே அவன் தப்பி விட்டாலும், அந்த நாயை பிடித்து கொல்ல வேண்டும் என துடிப்போமோ இல்லையா..

ஒரு பத்து பைசா பர்சுக்கு இந்த ஆர்ப்பாட்டம்..

இதுவே , இன்னொருவருக்கு இழப்பு என்றால் நம் பார்வை எப்படி இருக்கும்..

ஏன் அவனை போட்டு அடிக்கிறீங்க? அடிப்பதுதான் இதற்கு தீர்வா? பிடிபட்டதால் இவனை அடிக்கிறோம்.. பிடிபடாத திருடர்களை என்ன செய்ய போகிறோம்…

சமூகத்தை சீர்திருத்துவதுதான் இதற்கு தீர்வு..

இப்படி எல்லாம் டீ கடை பானியில் வெட்டி நியாயம் பேசுவோம், பர்ஸை பறி கொடுத்தவன் அடுத்தவன் என்றால்..

இதே பாணி கருத்து வெள்ளம்தான் இப்போது பதிவுலகில் பாய்ந்து வருகிறது..

கோவை மக்கள் அன்பாக பழக கூடியவர்கள்.. சண்டை போட்டால் கூட கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த கூடியவர்கள்..

ஒரு சிறுவனும், சிறுமியும் கொடும் செயலுக்கு உள்ளான போது , தம் குடும்பத்திலேயே இழப்பு ஏற்பட்டது போல துடித்து விட்டனர்…

சென்னை போன்ற பெரு நகரங்களில் இது ஜஸ்ட் ஒரு பரபரப்பு செய்தி மட்டுமே…ஆனால் கோவையில் அப்படி இல்லை..

இந்த நிலையில் , கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.,,,,

அவர்களை கொலையாளிகள் என சொல்ல கூடாது.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என் பதிவுலக அறிவு ஜீவிகள் சட்ட நுணுக்கத்தை ஆராய்ந்த நிலையில், படிக்காதோர், சாதாரண மக்கள் , போன்றோர் , இந்த குழந்தைகளை எப்படி கொல்ல மனம் வந்தது என கதறினர்.. கொலையாளிகள் முகத்தில் காறி துப்பினர்..

புழல் சிறையில் அங்கு இருந்த கைதிகளே இவர்களை தாக்க முயன்றனர்..

அவர்களுக்கெல்லாம் பதிவுலகமோ, அறிவு பூர்வ தர்க்கங்களோ தெரி்யாது…

இந்த நிலையில் கொலையாளி ஒருவர் இறந்தது, இவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது…

இதற்கு காரணம் இருக்கிறது..

நம் ஊரில் ஒரு குற்றத்திற்கு தண்டனை வாங்கி தருவது அவ்வளவு எளிதல்ல…

டில்லியில் , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்னின் வழக்கு நடந்து ஓர் அற்பமான தண்டனை வழங்கப்பட்டது..

இன்னொரு பெண் பாதிக்கப்பட்டு, சுய நினைவு இன்றி வாழ்கிறார்.. வழக்கு முடியவில்லை..

தமிழ்னாட்டில், நாவரசு என்ற மாணவர் கண்ட துண்டமாக வெட்டி கொல்லப்பட்டார்.. யாருக்கும் தண்டனை இல்லை ….

ஆலடி அருணா கொலை உள்ளிட்ட பல கொலை வழக்குகளும் இப்படித்தான்..

இந்த பின்னனியில், ஏதோ ஒரு வகையில் குற்றவாளி இறந்தது, இந்த கையலாகாத சமூகத்தில் வாழும் மக்களுக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்தது,,

 

அவ்வலவுதான்.. பொங்கி எழுந்தனர் பதிவுலக மஹாத்மாக்கள்…

கொலையை கொண்டாடும் மக்கள், உணர்ச்சி வசப்பட்ட பரிதாப ஜீவன்கள் , கொலையாளியின் பரிதாபம் என கொட்டி தீர்த்து விட்டனர்..

அட ஆண்டவா,,, பாவம்,, குழந்தையை இழந்தவர்களுக்கு ஒரு அப்பாவித்தனமான ஓர் ஆறுதல்…. மீண்ட உயிர் வர போவதில்லை.. ஆனால் சிறிது காலம் கழித்து கொலையாளி சுதந்திரமாக வருவதை பார்க்கும் அவலம் இல்லாமல் , உடனே இறப்பதை பார்த்ததும், சிறிய ஆறுதல்..

இதை கொண்டாட்டம் என கொச்சைப்படுதுவது, நம் இதயம் எவ்வளவு தூரம் இறுகி இருக்கிறது என்பதை காட்டுகிறது…

இது ஒரு தீர்வு என யாரும் சொல்லவில்லை.. என்கவுண்டர் இல்லாமல் வேறு வகையில் முடிவு வந்து இருந்தாலும், இய்றகையின் நீதி என்றுதான் எடுத்து கொண்டு இருப்பார்கள்..

அதை புரிந்து கொள்ளாமல், எல்லா குற்றங்கலுக்கும் என்கவுண்டர்தான் தீர்வா என குதர்க்கம் பேசுகின்றனர்.

அய்யா, அறிவு ஜீ்விகளே… சாதாரன மனிதன் நிரந்தர தீர்வை பற்றி யோசிக்கவில்லை…

நம் குடும்பதில் ஒரு இழப்பு.. அந்த பாதிப்பை ஏற்படுதியவன் இறந்தது ஒரு வித ஆறுதலை தருகிறது ..அவ்வளவுதான்..

யாரோ ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த துக்கத்தை , தம் குடும்ப துக்கமாக நினைத்த அந்த அன்பு உள்ளங்களின், கோவை மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ..

வெட்டி நியாயம் பேசும் பதிவுலகை நினைத்து பரிதாப படுகிறேன்…

Sunday, November 7, 2010

யார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும் தொழில் நுட்பம்

 

மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் , அவர்கள் முன்பே நடமாட முடிந்தால் , அவ்ர்களை கண்காணிக்க முடிந்தால் , வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் !!!!

எதிரிகளை உளவு பார்க்கவும் முடியும்… நமக்கு பிடித்தவர்களை , அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல், அருகில் இருந்து ரசிக்கவும் முடியும்..

கதைகளில் மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த பண்பை அறிவியல் நடைமுறையில் சாத்தியமாக்க இருக்கிறது..

ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிந்து கொண்டால் , யார் கண்ணிலும் பட மாட்டீர்கள்.. கடன் கொடுத்தவர்கள் கண்ணில் பட மாட்டீர்கள் என்பது மட்டும் அனுகூலம் அல்ல..

நாம் காதலிக்கும் பெண்ணை அவள் வீட்ற்கு சென்று பேசி விட்டு , யார் கண்ணிலும் படமால் திரும்பி வந்து விடலாம் என்ற அனுகூலமும் இருக்கிறது..

மேலும் சில சீரியஸ் அனுகூலங்களும் இருக்கின்றன…

இப்படிப்பட்ட ஆடைக்கு தேவையான துணிக்கான ஆதார பொருளை கண்டு பிடித்துள்ளதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அறிவியல்ரீதியாக இது எப்படி சாத்தியமாகும் ?

இதை புரிந்து கொள்ள , ஒரு பொருளை நாம் பார்ப்பதற்கு பின் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒளி அதாவது வெளிச்சம் ஒரு பொருளின் மீது படும்போது என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே , தமன்னாவை சிவப்பாகவும் , கிளியை பச்சையாகவும் பார்க்கிறோம்..

ஏழு வண்ணங்கள் சேர்ந்ததுதான் எல்லா நிறமும் உண்டாகிறது..  400 நானோ மீட்டர் முதல் 700 நானோ மீட்டர் வரை அலை நீளம் கொண்ட வண்ணங்களையே நம் கண்களால் பார்க்க முடியும்..

வயலட் நிறம் குறைவான அலை நீளம் கொண்டது… சிவப்பு அதிக அலை நீளம் கொண்டது… மற்ற நிறங்கள் இதற்கு இடப்ப்பட்டவை..

ஒரு பொருள் எல்லா நிறத்தையும் விழுங்கிவிட்டு, சிவப்பை மட்டும் பிரத்திபலித்தால் , அந்த பொருள் சிவப்பாக இருக்கிறது என்கிறோம்… அதாவது ஒளி ஒரு பொருளின் மீது பட்டு எப்படி பிரதிபலிக்கிறது என்பதே அந்த பொருளின் நிறம்..

சரி, ஒளி இப்படி ஒரு பொருளின் மீது பட்டு பிரத்திபலிக்காமல், அதை சுற்றி சென்று விட்டால் என்ன ஆகும் ? அதாவது தன் ஓடு பாதையில் இருக்கும் கல்லின் மீது மோதி திரும்பாமால்,. அந்த கல்லை சுற்றி ஓடும் நீர் போல..

 

image

 

நடைமுறையில் அப்படி ஒளி செல்லாது… கண்ணாடி போன்ற பொருட்களை ஒளி ஊடுருவி செல்லும்.. மற்ற எல்லா பொருட்களும் ஒளியை கவர்ந்து விடும்… கொஞ்சம் பிரதிபலிக்கும்….

ஒளியை விலக செல்லும் பொருட்கள்தான் இந்த ஆராய்ச்சியின் இலக்கு…

இது போன்ற பொருட்களை முன்பே கூட சிலர் உருவாக்கி இருக்கின்றனர்,.,,,

ஆனால் அந்த பொருட்கள் ஆராய்ச்சி கூடங்களில் மட்டுமே பயன்படும்… அவற்றை நம் விருப்பதிற்கேற்ப வளைக்கவோ, மாற்ற்வோ முடியாது…

நெகிழ்வு தன்மை கொண்ட பொருளை இவர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என்பதால்தான் இந்த பதிவு,…

Andrea di Falco of the University of St. Andrews ஆண்ட்ரியா டி ஃபால்கோ தலைமையில் செயிண்ட் ஆண்ட்ரிவ்ஸ் பல்கலையில் இந்த பொருளை உருவாக்கி இருக்கின்றனர்..

சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் பாலிமர் மற்றும் சிலிக்கானை பயன்படுத்தி இதை தயாரித்துள்ள்னர்..

இதை பயன்படுத்தி செய்யப்பட்ட காண்டாக்ட் லென்ஸ் எதிர்பார்த்த ரிசல்ட்டை தந்தது..

இந்த பொருளை பயன்படுத்தி செய்யப்பட்ட கண்ணாடியை அணிந்தால், நாம் கண்ணாடி அணிந்து இருப்பது வெளியே தெரியாது…

  நாம் ஆடை அணிவது மற்றவர்கள் கண்களுக்கு சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.,..

ஆனால் மற்றவர் கண்களுக்கு தெரிய அவசியமில்லாத ஆடைகளும் உண்டு… இந்த பயன்பாட்டுக்கும் , இந்த தொழில் நுட்பம் பயன்படும்..

இந்த பொருளை பயன்படுத்தி நாம் முழுதுமே கூட யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடலாம்…  யார் கண்ணுக்கும் தெரியாமல் அழகிய பெண்களை சைட் அடிக்கலாம் என்பதும், அவர்கள் பின் சுற்றலாம் எனபதும் உண்மைதான்…

ஆனால், நாம் இந்த அளவுக்கு கஷ்டப்படுகிறோம் என்பது அந்த பெண்ணுக்கு தெரியாவிட்டால் பயனில்லாமல் போய் விடும்..

தவிர, இந்த ஆராய்ச்சியின் நோக்கம் இதுவல்ல..

Monday, November 1, 2010

அடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்

 

  சின்ன வயதில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என ஆசையாக இருக்கும்.. கஷ்டப்பட்டு , பெரியவர்களை கெஞ்சியோ, அழுதோ வாங்கி விடுவோம்..

கொஞ்ச நாள் பெருமையாக ஓட்டுவோம். அதன்  பின் அலுத்து விடும்.. எல்லோரும்தான் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.. இதில் என்ன பெருமை என தோன்றும்..

இந்த மன நிலை , எப்போதும் மாறுவதில்லை… 

ஒரு கார் வாங்க வேண்டும் என ஏங்குபவர்களுக்கு கார் வாங்கும் வரைதான் ஏக்கம்.. வாங்கி கொஞ்ச நாளிலேயே, எல்லோரும்தான் கார் வைத்து இருக்கிறார்கள் என தோன்றி விடும்..

செல்போன் வந்த ஆரம்ப காலத்தில், அது ஒரு ஆடம்பர அடையாளமாக கருதப்பட்டது..

அந்த கால கட்டத்தில், ஒரு இண்டர்வியூ சென்று இருந்தேன்.. காண்டாக்ட் நம்பர் கேட்டார்கள்… என் செல்போன் நம்பர் கொடுத்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள்.. அந்த நிறுவனத்தின் மேலாளரிடமே அப்போது செல்போன் இல்லை… செல்போன் வைத்து இருப்பவன், வேலைக்கு ஏன் வருகிறான் என நினைத்து இருக்க கூடும்..

அப்போது சாதாரண, எந்த வசதியும் இல்லாத, மெசேஜ் கூட அனுப்ப வசதி இல்லாத, சும்மா பேச மட்டுமே வசதியுள்ள போனின் விலையே மிக அதிகம்.,  எடையும் அதிகம்.

தவிர , இன்கமிங் காலுக்கும் அப்போது கட்டணம் உண்டு.. நாம் பேசினாலும் பயங்கர கட்டணம்..

இப்போது நிலை தலைகீழாகி விட்டது..

இந்தியாவில் , எல்லோரிடமும் இருக்கும் ஒரே பொருள் செல்போன் தான் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது அல்லவா ?

இல்லை….

செல்போன் வாங்க முடியாத பலர்  நம்மிடையே இருக்கின்றனர்.. முன்பு பார்த்த கார் உதாரணம்தான்..

நாம் கார்  வாங்கி விட்டால், இப்ப கார் எல்லாம் சாதாரணமாயிடுச்சுப்பா..  எல்லோரிடமும் கார் இருக்கிறது என நினைப்பதைப்போல, செல்போன் எல்லோரிடமும் இருக்கிறது என நினைக்கிறோம்..

ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை.. பலரால் செல்போன் வாங்க முடியாது…

இவர்கள் தகவல் தொடர்புக்கு என்ன செய்வது?

வேலை தேடுதல், கிராம புற தகவல் தொடர்பு போன்றவற்ருக்கு செல்போன் இருந்தால் நல்லது…

இந்த தேவைகளுக்காக அடுத்து வரப்போகும் தொழில் நுட்பம்தான், இ-போன்.. பிரிட்டன் நிறுவனம் ஒன்று இதை அறிமுகப்படுத்த உள்ளது,,,

என்ன இது?

நாம் எல்லாம் இ-மெயில் பயன்படுத்துகிறோம்.. சொந்தமாக கம்ப்யூட்டர் வைத்து இருந்தால்தான் , இ-மெயில் பயன்படுத்த முடியும் என்பது இல்லை..

ஹாட் மெயில், ஜி மெயில் என யாரிடமாவது அக்கவுண்ட் இருக்க வேண்டும்..  பிரவுசிங் செண்டரிலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் வீட்டிலோ கம்ப்யூட்டர் இருந்தால், பத்து நிமிடத்தில் நம் மெயிலை செக் செய்து கொள்ளலாம். யார்ருக்காவது மெயில் அனுப்ப வேண்டும் என்றால், அனுப்பி கொள்ளலாம்.

இதே போன்றதுதான் இ-போன்…

ஒரு அக்கவுண்ட் உருவாக்கி கொள்ள வேண்டும்..   ஜி மெயில், ஹாட் மெயில் போன்றவை இ மெயில் சேவையை வழங்குவதுபோல ,  இந்த இ போன் சேவையை வழ்ங்குவதுதான் பிரிட்டன் நிறுவனத்தின் திட்டம்..

இந்த அக்கவுண்ட் மூலம் பயனாளர் பெயர் , கடவு சொல்லை பயன்படுத்தி எந்த போன் மூலமும் , நம் கணக்கை பார்வை இடலாம்.. நமக்கு வந்து இருக்கும் , வாய்ஸ் மெயில், எஸ் எம் எஸ் , மிஸ்டு கால் போன்றவற்றை பார்வை இடலாம்..

கால் செய்தும் கூட பேசலாம்… மெயில் அனுப்புவதுபோல… மெயில் அனுப்ப காசு இல்லை என்பது போல , கால் செய்து பேச காசு இருக்காது.. ஆனால் , ப்ரவுசிங் செண்டரில் , வொர்க் செய்யும் நேரத்திற்கு ஏற்ப காசு கொடுப்பது போல, போன் செண்டரில் காசு கொடுக்க வேண்டும்..

இந்த காசு , கால் செய்து பேசுவதை விட குறைவாகவே இருக்கும்… 

ஆகவே ஒரு தெருவுக்கு ஒரு போன் இருந்தால் கூட அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்..

இது டெலிபோன் பூத் போன்றது அல்ல என்பதை மறந்து விட கூடாது..இந்த முறையில், ஒவ்வொருவருக்கும் தனி தனி எண் இருக்கும் .. யாருக்கு வேண்டுமானாலும் தன் எண்ணை கொடுத்து விட்டு, அதன் பின் வேறு எந்த போனில் இருந்து வேண்டுமானாலும், தனக்கு வந்த தகவலை பெற்று கொள்ளலாம்..

பூத்தில் இது முடியாது..

 

சரி, இது ஏழைகளுக்கு மட்டும்தான் பயன்படுமா?

இல்லை… வசதியானவர்களுக்கும் பயன்படும்..

சிலர் இரண்டு , மூன்று போன் வைத்து இருப்பார்கள்… ஒரே போன் மூலம் மூன்று போன்களின் தகவலை ஒருங்கிணைக்க இந்த சேவையை பயன்படுத்தலாம்..

செல்போன் தொலைவது , பழுதாவது, சாதாரணமாகி விட்டன.. செல்போன் தொலைந்தாலும், தொடர்ந்து தொடர்பில் இருக்க இந்த சேவை பயன்படும்…

பேஜர்கள் போல இது பிளாப் ஆகுமா அல்லது செல் போன் போல புயலை கிளப்புமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா