Showing posts with label அறிவியல் தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label அறிவியல் தொழில்நுட்பம். Show all posts

Wednesday, July 11, 2012

செர்னில் சிவன் சிலை- நண்பர் கோவி.கண்ணன் சந்தேகமும் , விளக்கமும்


கடவுள் அணுவும் சிவனின் நடனமும்- குருமூர்த்தி என்ற இடுகையை பார்த்து இருப்பீர்கள்.. பார்த்ததும் சிலருக்கு சந்தேகம்.. நண்பர் கோவி.கண்ணன் அவர்கள், உண்மையிலேயே சிலை அமைக்கப்பட்டதா அல்லது செவி வழி செய்தியா என கேட்டார்..

அந்த சிலை அமைக்கப்பட்டபோது மத சார்பின்மை என்றெல்லாம் பரபரப்பு ஏற்பட்டத்தை அவர் கவனிக்கவில்லை போலும். பரவாயில்லை... அவர் சந்தேகத்தை தீர்ப்பது நம் கடமை.. இதோ , அவர் கேட்ட ஆதாரங்கள்







SHIVA STATUE

The statue of the Indian deity Shiva at CERN was unveiled by His Excellency K M Chandrasekhar (seated), Anil Kakodkar (left) and Robert Aymar (centre).
On June 18, 2004, an unusual new landmark was unveiled at CERN, the European Center for Research in Particle Physics in Geneva — a 2m tall statue of the Indian deity Shiva Nataraja, the Lord of Dance. The statue, symbolizing Shiva's cosmic dance of creation and destruction, was given to CERN by the Indian government to celebrate the research center's long association with India.
In choosing the image of Shiva Nataraja, the Indian government acknowledged the profound significance of the metaphor of Shiva's dance for the cosmic dance of subatomic particles, which is observed and analyzed by CERN's physicists. The parallel between Shiva's dance and the dance of subatomic particles was first discussed by Fritjof Capra in an article titled "The Dance of Shiva: The Hindu View of Matter in the Light of Modern Physics," published in Main Currents in Modern Thought in 1972. Shiva's cosmic dance then became a central metaphor in Capra's international bestseller The Tao of Physics, first published in 1975 and still in print in over 40 editions around the world.
A special plaque next to the Shiva statue at CERN explains the significance of the metaphor of Shiva's cosmic dance with several quotations from The Tao of Physics.Here is the text of the plaque:
Ananda K. Coomaraswamy, seeing beyond the unsurpassed rhythm, beauty, power and grace of the Nataraja, once wrote of it "It is the clearest image of the activity of God which any art or religion can boast of."
More recently, Fritjof Capra explained that "Modern physics has shown that the rhythm of creation and destruction is not only manifest in the turn of the seasons and in the birth and death of all living creatures, but is also the very essence of inorganic matter," and that "For the modern physicists, then, Shiva's dance is the dance of subatomic matter."
It is indeed as Capra concluded: "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics."

கடவுள் அணுவும் சிவனின் நடனமும்- குருமூர்த்தி

கடவுள் அணு என அழைக்கப்படும் நுண்மையான அணுவைப்பற்றி செய்தி சென்ற வாரம் ஹாட் நியூசாக இருந்தது. ஸ்விஸ்- ஃப்ரான்ஸ் எல்லையில் இருக்கும் செர்ன் ஆய்வகத்தில் இந்த கண்டு பிடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இது குறித்து குருமூர்த்தி கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் இருந்து சில பகுதிகள் ..

*****************************************


  • இந்த கண்டுபிடிப்புக்கு பிள்ளியார் சுழி போட்டவர் நம் நாட்டு விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ் என்ற இளைஞர். 1924ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஆராய்ச்சி கட்டுரை அனுப்பினார். அப்போது அவருக்கு வயது 309. அவரும் ஐன்ஸ்டீனும் செய்த ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட் என்ற கண்டு பிடிப்புதான் , இந்த கடவுள் அணு ஆராய்ச்சியின் ஆரம்ப புள்ளி
  • அதனால்தான் இந்த அணுவை ஹிக்ஸ்-போசான் என அழைக்கிறார்கள்
  • இந்த அணுதான் பிரபஞ்சத்தில் இருக்கும் தோற்றம் , பரிமாணம் சம்பந்தப்பட்ட எல்லா ரகசியத்திற்கும் , கேள்விகளுக்கும் விடை அளிக்கும். எனவேதான் செல்லமாக கடவுள் அணு என்கிறார்கள்.
  • “ இந்தியாதான் கடவுள் அணு கண்டு பிடிக்கும் முயற்சிக்கு தாய் என செர்ன் விஞ்ஞானிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பாளர் பாவ்லோ குபிலோனோ 2011ல் வெளிப்படையாக அறிவித்தார். 
  • செர்ன் விஞ்ஞான கூடத்தில் 6 அடி உய்ரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை ( நடனமாடும் சிவன் சிலை ) அமைக்கப்பட்டுள்ளது. சிவனின் நடனத்துக்கும் , உப அணுக்களின் நடனத்துக்கும் இடையேயான தொடர்பை ப்ரிட்ஜாப் காப்ரா எனும் பௌதீக விஞ்ஞானிமுதன் முதலாக கண்டு பிடித்து எழுதினார். இதை விரிவாக The Tao of Physics என்ற தலைப்பில்   புத்தகமாக எழுதினார். இது விற்பனையில் சாதனை படைத்தது. இந்த நூலின் சில வரிகள் அந்த விஞ்ஞா கூடத்தில் இருக்கும் சிலைக்கு அருகே பொறிக்கப்பட்டுள்ளன
  • காப்ராவுக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலமே நடராஜர் நடனத்துக்கும் , அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார்.
  • இந்த அபார கண்டுபிடிப்புக்காக போஸுக்கு நோபல் பரிசு கிடைத்து இருக்க வேண்டும் . ஆனால் அந்த பரிசை இத்தாலியர் ஒருவருக்கு வழங்கினார்கள். இந்தியாவும் அவரை பெரிய அளவில் கவுரவிக்கவில்லை. போனால் போகிறது என ஒரு பத்மபூஷன் விருதை வழங்கினார்கள்.


******************************************************

Tuesday, October 25, 2011

அடிமை வெறியும், அபார கண்டு பிடிப்பும் - உயிர்காத்தவரை மறந்த ஊடகங்கள்

   ஐ பேட் , ஐ பாட் போன்றவற்றை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவை ஊடகங்கள் “ கொண்டாடியதை “ கவனித்து இருப்பீர்கள். ஆப்பிள் என்றால் முன்பெல்லாம் ஆதான் , ஏவாள் மற்றும் நியூட்டன் நினைவுக்கு வருவார்கள்.இனிமேல் இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் நினைவுக்கு வருவார் என உருகினார்கள் இவர்கள்..

அவர் திறமைசாலி என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால் இந்தியர்கள் என்ற முறையில் , தமிழன் என்ற முறையில் நம் வாழ்வை மேம்படுத்தும் கண்டுபிடிப்பு எதையும் அவர் நிகழ்த்தவில்லை.. ஒட்டு மொத்த மனித குலம் என்று பார்த்தாலும் , அவர் கண்டுபிடிப்பால் மனித வாழ்வுக்கு பெரிய மாற்றம் வந்து விடவில்லை..

பெரிய அளவிலான வியாபாரத்துக்கு உதவி இருக்கிறார் என்பதே அவர் பிரத்தியேக பலம். இந்த அடிப்படையில் , அயல்னாட்டு மீடியா செய்யும் அலப்பறையை பின் பற்றி நம் மீடியாக்களும் அலப்பறை செய்தன.. அடிமை புத்தி என்பதை தாண்டி அடிமை வெறிதான் இதில் தெரிந்தது..

அயல் நாட்டுக்காரர் செய்த நன்மைகளை பாராட்டக்கூடாது என்பதன்று நம் கருத்து. நன்மை செய்தால் மட்டுமே பாராட்ட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. ஆனால் நம் மீடியாக்கள் விளம்பர அடிப்படையில் ஒருவரை பாராட்டுகின்றவே அன்றி, அவர் செய்த நன்மைகள் அடிப்படையில் அல்ல.

 உண்மையிலேயே நல்லது செய்த ஒருவர் இதே கால கட்டத்தில் ( செப் 27ந்தேதி ) இறந்தார்..அவரை நம் மீடியாக்கள் கண்டு கொள்ளவில்லை.. மாற்று ஊடகமாக உருவெடுத்து வரும் பதிவுலகமாவது அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த இடுகை.

Friday, September 30, 2011

பிரபஞ்ச வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்தேகங்கள்

இது வரை நடந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் உச்சமாக , புதிய கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளதாக அறிவியல் உலகம் பெருமையில் மகிழ்ந்து போய் இருக்கிறது.. அறிவியலாளர்கள் பிரமித்து போய் இருக்கின்றனர்... ஒரு வேளை இந்த கண்டு பிடிப்பு உறுதி செய்யப்பட்டால், நாம் இது வரை படித்த அறிவியலின் அடிப்படையே தகர்ந்து போய் விடும்.. ஒரு செயல் என்றால் அதற்கு விளைவு இருக்க வேண்டும் என்பது நம் அடிப்படை நம்பிக்கை.. நிகழ்காலம் என்பது இறந்த காலத்தில் இருந்து , எதிர்காலம் நோக்கி செல்லும் பயணத்தில், ஒரு மைய இடம் என நினைக்கிறோம்... இது எல்லாம் தவறாகி விடும் , இந்த புதிய கண்டுபிடிப்பு நிரூபிக்கப்படும் பட்சத்தில்..

அப்படி என்ன பெரிய கண்டுபிடிப்பு?

ஒளியை விட விரைவாக பயணம் செல்லக்கூடிய பொருளை கண்டுபிடித்து இருக்கிறார்களாம். ஒளியை விட வேகமாக எதுவும் எல்ல முடியாது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கொள்கை தவறாகி விட்டதாம் ..
இதுதான் அந்த கண்டுபிடிப்பு.

எப்படி இதை செய்தார்கள்?

நியூட்ரினோக்கள் என்ற பொருட்களை ஜெனிவாவில் உருவாக்கினார்கள்.. இவற்றை இத்தாலியில் இருக்கும் ஒரு இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள்..இது அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரம், ஒளி அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரத்தை விட குறைவாக இருந்தது.

அதாவது ஒளியை விட விரைவான பொருள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது..

ஒளியை விட விரைவான பொருள் இருக்க முடிந்தால், கடந்த காலத்துக்கு செல்லுதல் போன்ற வினோதமான செயல்களும் சாத்தியம்தான் என்பது அறிவியல்... ( இது எப்படி என்பதற்கு , முந்தைய பதிவுகளை பார்க்கவும் )


நாங்கள் பல முறை ஆராய்ந்து இந்த முடிவை அறிவிக்கிறோம்... தவறாக அறிவித்து அசிங்கப்படக்கூடாது என்பதற்காக முயற்சி எடுத்து இதை செய்து இருக்கிறோம்... யார் வேண்டுமானாலும் சோதித்து பார்த்து கொள்ளுங்கள் என்கிரன்றனர் இதை நடத்திய விஞ்ஞானிகள்..

இதை தகுந்த சோத்னைக்கு உட்படுத்திய பின்பே அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்... அப்படி அதிகாரபூர்வமாக அறிவித்தால், நமது நம்பிக்கைகள், கருத்துக்கள், செயல்-விளைவு தத்துவம், என எல்லாமும் மாறிவிடும்..

இது ஒரு புறம் இருக்க, இது தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது...

எப்படி?

1 செல்லும் ஊடகத்தை பொறுத்து, ஒளியின் வேகம் லேசாக மாறுபடக்கூடும்.. ஆனால் நியூட்ரினோக்கள் சீரான வேகத்தில் செல்லும்... ஊடகம், ஒளியின் வேகத்தை குறைத்து இருக்க கூடும்..

2. சோதனை நடந்த அந்த இத்தாலி பிரதேசத்தில், சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.. எனவே அவர்களின் தூர கணக்கீடு தவறாக போய் இருக்கலாம்.. வேகம் = தூரம் / நேரம்.. தூரம் தவறு என்றால் வேகம் தவறாக கண்க்கில் வரும்..

3 எத்தனையோ நட்சத்திரங்களை ஆராய்கிறார்கள்..எரி நட்சதிரங்களை , தன் ஒளியை வைத்து அறிகிறர்கள்...ஒளியை விட சீக்கிரமா எதுவும் வந்து அடைந்ததாக சரித்திரம் இல்லை

4

இபப்டி பல சந்தேகங்களும் இருக்கின்றன...

என்னதான் நடக்க போகிறது என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்..

Saturday, July 23, 2011

உலகை படைத்தது கடவுளா? அறிவியலா?- 1

மனிதனுக்கும் ஏனைய உயிரிகளுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என யோசிக்கும் தன்மைதான்..
உலகின் , பிரப்ஞசத்தின் வயதோடு ஒப்பிடும்போது , நாம் வாழும் ஆண்டுகள் துகளினும் சிறிது. இருந்தாலும் இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ளும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அறிவியலை பொருத்தவரை முன்பு இருந்த நிலை இன்று இல்லை.. ஆப்பிள் விழுந்ததை பார்த்து , புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்த நிலை இன்று கிடையாது... அன்றாட வாழ்வில் காணும் சம்பவங்களை வைத்து அறிவியல் உண்மைகளை காண முடியாத நிலை இன்று.. லாஜிக் , பகுத்தறிவு , நடை முறை உண்மை என யதார்த்த உண்மைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அறிவியல் சென்று கொண்டு இருக்கிறது..

ஓர் உதாரணம் பார்க்கலாம்..

ஆஸ்திரிய விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர்..

கார்பன் மூலக்கூறுகளை இரண்டு குறுகலான பாதை வழியாக செலுத்தி அதன் விளைவுகள் என்ன என பார்ப்பது இந்த ஆய்வு..

இந்த ஆய்வை சற்று எளிமைப்படுத்தி பார்ப்போம்..

ஒரு சுவற்றில் இரு உடைப்புகள் இருப்பதாக கொள்வோம்....

இரண்டின் வழியாகவும், ஃபுட் பால்கள் தொடர்ச்சியாக  உதைக்கப்படுகின்றன..அதில் ஒரு உடைப்பு சற்று மூடப்பட்டு இருந்தால் என்ன ஆகும்? கரெக்ட்...

பிளவு இருக்கும் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து பந்துகள் பாய்ந்து செல்லும்...

சிறிது நேரம் கழித்து மூடப்பட்டு இருந்த பகுதியும் திறக்கப்பட்டால் என்ன ஆகும்?

இரண்டின் வழியாகவும் பந்துகள் பாய்ந்து செல்லும்...

இந்த அடிப்ப்டையில் அந்த ஆஸ்திரிய விஞ்ஞானிகள் கார்பம் மூலக்கூறுகளை வைத்து ஆய்ந்தனர். ஒரு பிளவில் மட்டும் அந்த மூலக்கூறுகள் அடுத்தடுத்து பாய்ந்து சென்றன.. அதன் அளவு பதிவு செய்யப்பட்டது.
பிறகு, இன்னொரு பிளவும் திறக்கப்பட்டு அதன் வழியாகவும் மூலக்கூறுகள் செலுத்தப்பட்டன..
ஆனால் அப்போது ஏற்பட்ட விளைவு, ஃபுட் பால் விளைவு போல இல்லை...
இரண்டாவது பிளவின் வழியாக செலுதப்பட்ட ஆரம்பித்த உடன், முதல் பிளவின் வழியாக செல்லும் மூலக்கூறுகளின் அளவில் மாறுதல் தென்பட்டது...

இதற்கான அறிவியல் விளக்க்த்தை பிறகு பார்க்கலாம்..  நடை முறை அறிவை வைத்து , அறிவியலை அணுக முடியாது ..அந்த காலம் முடிந்து விட்டது என்பதை மட்டும் இப்போதைக்கு புரிந்து கொண்டால் போதும்..

இதே போல பல வினோதங்கள் இருக்கின்றன.. தண்ணீரை கொதிக்க வைக்கிறோம்... அப்போது அதன் வெப்ப நிலையை சோதிது பார்த்தால் 100 டிகிரி செல்சியசாக இருக்கும்.. சோதித்து பார்க்காவிட்டாலும் 100 டிகிரி இருக்கும் . ஓ கே?
ஆனால் சில நுட்பமான ஆய்வுகளை செய்யும் போது, நாம் சோதிக்க ஆரம்பித்தால், அதுவே அந்த்ய பொருளின் தனமையை மாற்றி விடும். இந்த் காரணத்தால் , எலக்ட்ரானின் வேகத்தையும் , அதன் இருப்பையும் ஒரு சேர நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது.

இது போல பல வினோதங்கள் இருப்பதால், பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதறு அறிவியல் தரும் விடை , சாதாரண அறிவியல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது..

அறிவியல் என்பது சிறப்பனதுதான்.,.. ஆனால் அது முழு உண்மை என சொல்ல முடியாது என்று அடுத்த குண்டை தூக்கி போடுகிறது நவீன அறிவியல்.. எப்படி?

மீன் தொட்டியில் மீன் வளர்க்கிறீர்கள்.. அவற்றுக்கு சிந்திக்கும் திறமை வந்து அறிவியலை உருவாக்கினால் எப்படி இருக்கும்... ? உலகம் என்பது கண்ணாடி தொட்டி .. அதில் தேவையான உணவு கிடைக்கும்... அந்த இடத்தை விட்டு போவது இயலாத ஒன்று எனப்து போல அவற்றின் கண்டு பிடிப்பு இருக்கும்..

கண்ணாடி தொட்டி என்ற மாடலில் , அவற்றின் கண்டு பிடிப்பின் உண்மைதான்.. அந்த உண்மையை கண்ணாடி தொட்டிக்குள் அவற்றால் நிரூபிக்க முடியும்... ஆனால் நம் பார்வையில், அந்த மீன்களின் கண்டுபிடிப்பு முழு உண்மை அல்ல..

அதே போல , நமது கண்டு பிடிப்புகளும் , முழு உண்மை என சொல்ல முடியாது. நமக்கு கிடைத்த மாடலில், நம் கண்டு பிடிப்புகளை நிரூபிக்க முடிந்தால், இந்த மாடலுக்கான உண்மை என்று மட்டுமே சொல்லிக்கொள்ள முடியும்..


இந்த அடிப்படையில், பிரபஞ்ச தோற்றத்தை ஆய்ந்து வருகிறார்கள்.. ஒன்றும் இல்லாத நிலையில் இருந்துதான், இந்த பிரபஞ்சம் தோன்றி இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இதற்கு கடவுள் தேவை இல்லை.. அறிவியல் விதிகளே போதும் என்பது அவர்கள் கருத்து..

ஒரு வேளை கடவுள்தான் , பிரபஞ்சத்தை ஆரம்பித்து வைத்தார் என்று வைத்து கொண்டாலும், அதற்கு பின் நடப்பது அவர் கட்டுப்பாட்டில் இல்லை.,.. இயர்பியல் விதிகளின் படி அடுத்தடுத்து , நிகழ்ச்சிகள் நடக்கும்.. கடவுளுக்கு இதில் வேலை இல்லை என்கிறார்கள்..

அதாவது, சீட்டு கட்டில், பாலம் கட்டி விளையாடுகிறீர்கள்.. விளையாட்டாக முதல் சீட்டை தட்டி விட்டால், அடுத்தடுதுது எல்லா சீட்டுகளும் விழ ஆரம்பிக்கும்..  சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள்கள் விழுவது இப்படித்தான்..

  இது சரியா ?

தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றியும் தனி தனி துண்டு சீட்டில் எழுதி , ஒரு பானையில் போட்டு விட்டு, குத்து மதிப்பாக சில எழுத்துக்களை எடுத்து, ஒரு நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைக்குமாறு ஒரு குழந்தையிடம் சொல்லி விட்டு சென்று விடுகிறோம் என வைத்து கொள்ளுங்கள்..

சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கிறோம்.. அப்படி ஒட்டப்பட்ட எழுத்துக்கள் , திருக்குறள் விளக்க கட்டுரையாக இருந்தால் எப்படி இருக்கும்? சும்மா மனம்போன போக்கில் ஒட்டப்பட்ட எழுத்துக்கள் , ஒரு ஒழுங்கான கட்டுரையாக அமைய சாத்தியம் இருக்கிறதா?

ஆனால் கிட்டத்தட்ட இது  போன்ற பார்வையைத்தான் அறிவியல் முன் வைக்கிறது.. கடவுள் என்று யாரும் இல்லை..  அணுக்கள், எலக்ட்ரான்கள் போன்ரவை இணைவதன் தற்செயல் விளைவே பிரபஞ்சம் என்கிறாரகள்..
இப்போது நாம் காணும் கலைகள், திறமைகள், அன்பின் உருவமாக வாழும் மனிதர்கள், மகான்கள் எல்லாம் வெறும் தற்செயல்தான் என்பது சிலரால் ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது.. கடவுள் என ஒருவர் , அல்லது இறையாற்றல் ஒன்று இருந்தால்தான் இது சாத்தியம் என்கிறார்கள் இவர்கள்..

வரிசையாக நிர்கும் சைக்கிள் உதாரணத்தையே எடுத்து கொள்வோம்...  ஒரு சைக்கிள் விழுந்ததும், அடுத்தடுத்து சைக்கிள் விழுந்தால் அது சாதாரன நிக்ழ்ச்சி... ஆனால் அப்ப்டி விழும் போது எழும் ஓசை, ஏ அர் ரகுமான் இசையை உருவாக்கினால் , அது ஓர் அற்புதம் அல்லவா,, பிரபஞ்சம் என்பது அப்படிப்பட்ட விளக்க முடியாத அற்புத என்கிறார்கள் சிலர்...

 இதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் அலசலாம்... 

Monday, December 20, 2010

பெண் மூட்டை பூச்சிக்கு "அது " கிடையாது.. பிறகு எப்படி "அது" - வினோத ஜல்சா தகவல்கள் - படிக்க வேண்டாம் (அடல்ட்ஸ் ஒன்லி )

தினமும் இலக்கியம் பேசுகிறோம்.. நாட்டு நலனுக்காக கவலைப்படுகிறோம்..

ஒரு நாளாவது இப்படி இல்லாமல் கொஞ்சம் " வேறு " மாதிரி பேசலாமே என்பதற்காகத்தான் இந்த பகுதி...

வாரத்தின் ஒரு நாள் மட்டுமே இந்த பகுதி...
தலைப்பிலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும்...

Wednesday, December 8, 2010

பெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல் வினோதங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி )

  “அந்த “ விஷயம் , எப்படியெல்லாம் விதம் விதமாக உயிரினங்களில் நடக்கிறது என பார்த்து வருகிறோம்..
இயற்கையில் விந்தைகள் ஆயிரம்…
கற்க கற்க வியப்பு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது..
சரி..  மேலும் சிலவற்றை பார்ப்போம்..
1. காதலினால் துன்பம் தீரும்
சமீபத்தில் ஒரு சாமியார்- நடிகை வீடியோ ரிலீசாகி பரபரப்பு ஏற்பட்டது..

Tuesday, December 7, 2010

குஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத “சைஸ்”- இயற்கையின் குறும்புகள்- அடல்ட்ஸ் ஒன்லி

 நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்... அவர் பெயரையோ வேறு க்ளுவோ கொடுக்க விரும்பவில்லை..

ஆரோக்கியமான விவாதம் செய்து கொண்டு இருந்த போது அவர் எடுத்து வைத்த கருத்து ஒன்று என்னை திக்குமுக்காட செய்து விட்டது...

“ நமக்கு “ அந்த “ உறுப்பு அங்கு இல்லாமல் உள்ளங்கையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ” என்று சொல்லிவிட்டு , அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்..அப்படியே நடு ரோட்டில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போல இருந்தது...
பட் அந்த விளக்கம் எனக்கு பிடித்து இருந்தது

( பாஸ்... உங்க பெயரை சொல்லல... உங்க கருத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது என்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.. .சாரி.. ஹி ஹி )

Monday, December 6, 2010

உலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகிளு அறிவியல் ( வயது வந்தோருக்கு மட்டும்)

மனிதனுக்கு இருக்கும் ஒன்று பறவைக்கு இல்லை..
ஃபீலிங்ஸ் ?
அதை சொல்லவில்லை…
இன்னொன்று…
ஆம்.. நீங்கள் நினைப்பது சரிதான்..
”அது”தான்..
ஆனால் பறவைக்கும்  “ அது “ உண்டு என கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்…  இதில் உலக சாதனை செய்துள்ளது ஒரு பறவை.
அறிவியல் கண்டுபிடிப்பு என்ற வகையில் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..

Thursday, November 25, 2010

இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

சில அறிவியல் உண்மைகள் உங்கள் பார்வைக்கு,.
முதலில் அந்த உண்மைகளை பார்க்கலாம். அதற்கு பிறகு அதன் பின் இருக்கும் டெக்னிக்கல் விஷயங்களை பார்க்கலாம்..
1. காரில் தப்பி செல்லும் ஒருவனை உடனடியாக கொல்ல வேண்டுமானால் , சுலபமான வழி , அந்த காரின் பெட்ரோல் டேங்கை துப்பாக்கியில் சுடுவதுதான்.. இதனால் கார் தீப்பற்றி வெடித்து சிதறும்… ( பல சினிமாக்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர் )
2. மின்னல் ஒரே இடத்தை இரு முறை தாக்காது
3. எல்க்ட்ரிக்கல் கார் பயன்படுத்தினால் , சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்காது..
4  நிலவின் ஒரு பகுதியில் சூரிய ஒளி படுவதே இல்லை.. அது எப்போதும் இருட்டாக இருக்கும்.
5 பரிணாம வளர்ச்சி என்பது தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு செல்வதே ஆகும்.. அதுதான் உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் நடந்து வருகிறது..எல்லா உயிர்களும் சிறப்பான நிலையை நோக்கி செல்கின்றன..
இந்த உண்மைகளைப்பற்றி அலசுவதற்கு முன் ஒரு விஷயம்..

Saturday, November 13, 2010

பறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒரு தீர்வு

பறவைகளுக்குத்தான் எத்தனை எத்தனை ஆபத்துக்கள்?
செல்போன் டவரால் குருவிகளுக்கு ஆபத்து.. வறுத்து சாப்பிடும் ஆசாமிகளால் புறாவுக்கு ஆபத்து.. பூனைகளால் ஆபத்து.. சுற்று சூழல் சீர்கேடுகளால் ஆபத்து..
இது போன்று பறவைகளை அழிக்கும் பல விஷ்யங்கள் உங்களுக்கு தெரியும்..
ஆனால் பறவைகளை தினந்தோறும் கொன்று கொண்டு இருக்கும் ஒரு விஷ்யம் பரவ்லாக தெரிய வாய்ப்பில்லை..
பறவைகளை கொல்லும் அந்த எதிரி யார் தெரியுமா?

Sunday, November 7, 2010

யார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும் தொழில் நுட்பம்

 

மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் , அவர்கள் முன்பே நடமாட முடிந்தால் , அவ்ர்களை கண்காணிக்க முடிந்தால் , வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் !!!!

எதிரிகளை உளவு பார்க்கவும் முடியும்… நமக்கு பிடித்தவர்களை , அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல், அருகில் இருந்து ரசிக்கவும் முடியும்..

கதைகளில் மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த பண்பை அறிவியல் நடைமுறையில் சாத்தியமாக்க இருக்கிறது..

ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிந்து கொண்டால் , யார் கண்ணிலும் பட மாட்டீர்கள்.. கடன் கொடுத்தவர்கள் கண்ணில் பட மாட்டீர்கள் என்பது மட்டும் அனுகூலம் அல்ல..

நாம் காதலிக்கும் பெண்ணை அவள் வீட்ற்கு சென்று பேசி விட்டு , யார் கண்ணிலும் படமால் திரும்பி வந்து விடலாம் என்ற அனுகூலமும் இருக்கிறது..

மேலும் சில சீரியஸ் அனுகூலங்களும் இருக்கின்றன…

இப்படிப்பட்ட ஆடைக்கு தேவையான துணிக்கான ஆதார பொருளை கண்டு பிடித்துள்ளதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அறிவியல்ரீதியாக இது எப்படி சாத்தியமாகும் ?

இதை புரிந்து கொள்ள , ஒரு பொருளை நாம் பார்ப்பதற்கு பின் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒளி அதாவது வெளிச்சம் ஒரு பொருளின் மீது படும்போது என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே , தமன்னாவை சிவப்பாகவும் , கிளியை பச்சையாகவும் பார்க்கிறோம்..

ஏழு வண்ணங்கள் சேர்ந்ததுதான் எல்லா நிறமும் உண்டாகிறது..  400 நானோ மீட்டர் முதல் 700 நானோ மீட்டர் வரை அலை நீளம் கொண்ட வண்ணங்களையே நம் கண்களால் பார்க்க முடியும்..

வயலட் நிறம் குறைவான அலை நீளம் கொண்டது… சிவப்பு அதிக அலை நீளம் கொண்டது… மற்ற நிறங்கள் இதற்கு இடப்ப்பட்டவை..

ஒரு பொருள் எல்லா நிறத்தையும் விழுங்கிவிட்டு, சிவப்பை மட்டும் பிரத்திபலித்தால் , அந்த பொருள் சிவப்பாக இருக்கிறது என்கிறோம்… அதாவது ஒளி ஒரு பொருளின் மீது பட்டு எப்படி பிரதிபலிக்கிறது என்பதே அந்த பொருளின் நிறம்..

சரி, ஒளி இப்படி ஒரு பொருளின் மீது பட்டு பிரத்திபலிக்காமல், அதை சுற்றி சென்று விட்டால் என்ன ஆகும் ? அதாவது தன் ஓடு பாதையில் இருக்கும் கல்லின் மீது மோதி திரும்பாமால்,. அந்த கல்லை சுற்றி ஓடும் நீர் போல..

 

image

 

நடைமுறையில் அப்படி ஒளி செல்லாது… கண்ணாடி போன்ற பொருட்களை ஒளி ஊடுருவி செல்லும்.. மற்ற எல்லா பொருட்களும் ஒளியை கவர்ந்து விடும்… கொஞ்சம் பிரதிபலிக்கும்….

ஒளியை விலக செல்லும் பொருட்கள்தான் இந்த ஆராய்ச்சியின் இலக்கு…

இது போன்ற பொருட்களை முன்பே கூட சிலர் உருவாக்கி இருக்கின்றனர்,.,,,

ஆனால் அந்த பொருட்கள் ஆராய்ச்சி கூடங்களில் மட்டுமே பயன்படும்… அவற்றை நம் விருப்பதிற்கேற்ப வளைக்கவோ, மாற்ற்வோ முடியாது…

நெகிழ்வு தன்மை கொண்ட பொருளை இவர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என்பதால்தான் இந்த பதிவு,…

Andrea di Falco of the University of St. Andrews ஆண்ட்ரியா டி ஃபால்கோ தலைமையில் செயிண்ட் ஆண்ட்ரிவ்ஸ் பல்கலையில் இந்த பொருளை உருவாக்கி இருக்கின்றனர்..

சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் பாலிமர் மற்றும் சிலிக்கானை பயன்படுத்தி இதை தயாரித்துள்ள்னர்..

இதை பயன்படுத்தி செய்யப்பட்ட காண்டாக்ட் லென்ஸ் எதிர்பார்த்த ரிசல்ட்டை தந்தது..

இந்த பொருளை பயன்படுத்தி செய்யப்பட்ட கண்ணாடியை அணிந்தால், நாம் கண்ணாடி அணிந்து இருப்பது வெளியே தெரியாது…

  நாம் ஆடை அணிவது மற்றவர்கள் கண்களுக்கு சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.,..

ஆனால் மற்றவர் கண்களுக்கு தெரிய அவசியமில்லாத ஆடைகளும் உண்டு… இந்த பயன்பாட்டுக்கும் , இந்த தொழில் நுட்பம் பயன்படும்..

இந்த பொருளை பயன்படுத்தி நாம் முழுதுமே கூட யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடலாம்…  யார் கண்ணுக்கும் தெரியாமல் அழகிய பெண்களை சைட் அடிக்கலாம் என்பதும், அவர்கள் பின் சுற்றலாம் எனபதும் உண்மைதான்…

ஆனால், நாம் இந்த அளவுக்கு கஷ்டப்படுகிறோம் என்பது அந்த பெண்ணுக்கு தெரியாவிட்டால் பயனில்லாமல் போய் விடும்..

தவிர, இந்த ஆராய்ச்சியின் நோக்கம் இதுவல்ல..

Thursday, October 21, 2010

பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்கிங் , இல்லை முக்கியமானது - பீட்டர் டேவன்போர்ட் , அறிவியல் சர்ச்சை



கணவன் மனைவி சண்டையில், மனைவி கணவனை அடிப்பதும் , கணவனை மனைவி அடிப்பதும் தமிழ் நாட்டில் சர்வசாதரணமாக தினமும் நடக்கும் விஷயம்தான்.. சண்டையில் பாத்திரங்கள், கரண்டிகள் , தட்டுக்கள் எல்லாம் பறப்பதும் எல்லா வீட்டிலும் நடப்பதுதான்..
பறக்கும் தட்டுக்கள் நமக்கு பழகி போன சமாச்சாரம் ஆகி விட்டது.. ஆனால் வெளிநாட்டில் பறக்கும் தட்டுக்களை பற்றி ஆர்வமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்..
சண்டையில் பறக்கும் தட்டுக்களை பற்றி அல்ல.. வெளி கிரக வாசிகள் அவ்வபோது, வினோதமான பறக்கும் தட்டுகளில் பூமிக்கு விஸ்ட் அடித்து விட்டு மாயமாக மறைவதை பற்றித்தான் இந்த ஆராய்ச்சி..

பறக்கும் தட்டு என்றெல்லாம் எதுவும் இல்லை என சிலர் சொன்னாலும், மர்மமான ஒன்று வானில் பறப்பதை பார்தேன் என போட்டோ ஆதாரம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.. அந்த போட்டவை பார்த்தல், அவை விமானமோ அல்லது மனிதன் செய்த ஒரு பொருளாகவோ தோன்றவில்லை... தவிர, இது போன்ற பறக்கும் தட்டுக்களின் உடைந்த பாகங்களும் சில சமயம் கிடைத்துள்ளன...

எனவே இது குறித்த ஆராய்ச்சிக்கு தேவை இருக்கிறது..
ஒரு வேலை அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தால் அவர்களை பூமிக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிகள் நடக்கின்றன.. அப்படி நேரில் பார்க்கவிடாலும் , எதவது ஒரு வகையில் தகவல் தொடர்பு கொள்ள முடியுமா எனவும் ஆய்வுகள் நடக்கின்றன..

இந்நிலையில், பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் , தம்பி, இதெல்லாம் வேண்டாம்.. இந்த முயற்சி சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது போன்றது என எச்சரித்து இருக்கிறார்..
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததும், அங்குள்ள பஊர்வ குடிகள் வாழ்க்கை அழிந்தது..
அதே போல, வேற்று கிரக வாசிகள் பூமியை கண்டுபிடித்தால், நம் வாழ்க்கை அழிந்து விடும்.. அவர்கள் நம்மை விட கில்லாடிகளாக இருக்க கூடும்.. எனவே அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதோ, பூமிக்கு அழைப்பதோ வேண்டாம் என்கிறார் அவர்..

இது குறித்து, இந்த துறையில் ஆய்வு செய்து வருபவரும், தேசிய ,அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் ஆய்வு மையத்தின் இயக்குனருமான பீட்டர் தேவன் போர்ட் அளித்த பேட்டி..

*******************************************

பறக்கும் தட்டின் மேல் எப்போதிருந்து ஆர்வம் ஏற்பட்டது ?

முதன் முதலில் அதை பார்த்ததில் இருந்து ஆர்வம் ஏற்பட்டது :-)

ஆறு வயது சிறுவனாக இருக்கும்போது, குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்றோம்.. காரில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென சாலையில் பரபரப்பு.. மக்கள் ஓடிக்கொண்டும் கத்தி கொண்டும் இருந்தார்கள்.. சிவப்பு சூரியன் போல ஒன்று பறந்து கொண்டு இருந்தது.. அந்த சிவப்பு நிறத்தால் , பூமி ஒளிர்ந்தது.. திடீரன் அது வேறு திசையில் பறந்து , மறைந்து விட்டது..
தவிர , நான் ஒரு விஞ்ஞானி.. அறிவியல் வரலாற்றின் உக்கிய கேள்வியை ஆய்ந்து வருகிறேன்..
பூமியில் மட்டும்தான் உயிர் இருக்கிறதா?
இதற்கு திட்டவட்டமான , உறுதியான பதில் என நான் நினைப்பது..

இல்லை.. பூமியில் மட்டும் உயிர் இல்லை.. மற்ற கிரகங்களிலும் இருக்கிறது..


இப்படி சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா?

பல ஆதரங்களை காட்டி விட்டோம்.. நேரில் பார்த்த பலர் சாட்சியங்கள் இருகின்றன.. சரி, அதை கூட நம்ப வேண்டாம்,., சிலர் கற்பனையாக சொல்லி இருக்கலாம்.. அல்லது வேறு எதையாவது பார்த்து விட்டு தவறாக பறக்கும் தட்டு என சொல்லி இருக்கலாம்.. ஆனால் நேரடியான ஆதாரங்களும் உள்ளன.. பறக்கும் தட்டு இரங்கி சென்ற தடங்கள், அவை விட்டு சென்ற உலோக பொருட்கள், என பலதும் கண் முன் காட்ட முடியும்..
பிரிட்டன், ஒரு கோதுமை வயலில் உண்டான மர்ம வளையங்கள் பற்றி இன்னும் சரியான விளக்கம் தர நம்மால் முடியவிலையே?
( ஒரு கோதுமை வயலில் இந்த விசித்திர வடிவம் தோன்றியது.. இரவு தூங்க சென்றபோது இல்லை.. காலை யில் பார்த்த உழவர்கள் திகைத்தனர்.. குறுகிய நேரத்தில் வேறு யாரும் இதை செய்த்திருக்க முடியாது.. அந்த வடிவம் எதோ செய்தியை சொல்வது போல இருந்தது - பார்க்க்க படம்.. - பிச்சைக்காரன் )

பறக்கும்தட்டு குறித்த தகவல் வந்தால் அதை எப்படி கையாள்வீர்கள்..?

வானில் ஒளியை பார்த்த தகவல்தான் அதிகம் வரும்.. ஒருவேளை அது விமான ஒளியாகவோ, நட்சத்திரங்கலோகவோ, கோள் கலாகவோ இருக்கலாம்.. உண்மையான தகவல் என்பதை ஆய்ந்துதான் கண்டுபிகக் முடியும்.. பலரும் ஒரே தகவலை , ஒரே மாதிரியாக சொன்னால் , அது ஓரளவு நம்பகமாக இருக்கும்..,
அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதை விவரிப்பதும், உண்மையை கண்டு பிடிக்க உதவியாக இருக்கும்..

என்ன ஆதாரத்தை காட்டினால், பறக்கும் தட்டு உண்மையா பொய்யா என்ற விவாதம் முடிவுக்கு வரும் ?

ஒரு வேற்று கிரக வாசியை நேருக்கு நேர் சந்தித்து பேசினால் முடிவுக்கு வரும் :-)

அனால் அதற்காக காத்து இருக்காமல், ராடார் முறையை பயன்படுத்த வேண்டும் என்பது என் திட்டம்.. வானொலி, ஒளி அலைகளை விண்ணில் அனுப்பி, திரும்ப வரும் அலைகளை உணரும் ஆண்டேனாக்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.. யாரவது நம் அழைப்புக்கு பதில் அளித்தால் தெரிந்து விடும்...
இது இந்த பறக்கும் தட்டு சர்ச்சையை முடித்து வைக்கும்..

இது ஆபத்தான வேலை என்கிறாரே ஸ்டீவன் ஹாக்கிங் ?

அவர் சொல்வது தவறு.. கொலமபசுடன் வேற்று கிரக வாசிகளை ஒப்பிட கூடாது.. கொலம்பசுக்கு பொருளாதார நோக்கம் இருந்தது, அவர் குழுவினருக்கும் , பூர்வ குடிகளுக்கும் மோதல் ஏறபட்டது..
ஆனால் , இந்த விஷயத்தில் பறக்கும்தட்டில் வருபவர்களும் ஆராய்ச்சி நோக்கில் வருகிறார்கள்..நாமும் ஆய்வு நோக்கில் இருக்கிறோம்.. எனவே மோதல் இருக்காது..


******************************

அடுத்த முறை வானில் ஏதேனும் ஒளியை பார்த்தால் அது கடவுளாகவும் இருக்கலாம்.. அல்லது பறக்கும் தட்டாகவும் இருக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்..

Wednesday, October 20, 2010

பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களுக்கு உற்சாகமளிக்கும் தொழில் நுட்பம் விரைவில்

சிலருடன் போணில் பேசினால், மனதை ரீ சார்ஜ் செய்தது போல , புத்துணர்வு கிடைக்கும்..
ஆனால் பேசுவதன் மூலம் செல் போன் சார்ஜ் ஏறுமா ?

ஏறும் என்கிறார்கள் கொரிய விஞ்ஞானிகள்..

இவர்கள் சொல்வது போல நடந்தால், நம் செல்போனின் சார்ஜ் இறங்கி விட்டால் , யாருக்காகவது போன் செய்து எந்திரன் படம் பற்றியோ, அல்லது நகுலனின் கவிதைகளில் காணப்படும் தொன்மங்கள் பற்றியோ, ஒரு பத்து நிமிஷம் பேசினால் போதும்.. சார்ஜ் ஏறி விடும்..

" ஸ்பீக்கர் என்ன செய்கிறது? எலக்ட்ரிக் சிக்னலை , ஒலி அலையாக மாற்றுகிறது... எனவே ஒலி அலை , எலக்ட்ரிக் சிக்னலாக மாறுவதும் சாத்தியம்தான்" என்கிறார்கல் டாக்டர் யங் ஜூன் பார்க், ( சாமங் உயர் தொழில் நுட்ப கழகம் ) மற்றும் சாங் வூ கிம் ஆகியோர் .. அட்வான்ஸ் மேட்டிரியல்ஸ் என்ற பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் இவ்வாறு தெரிவித்து இருகின்றனர்..

" பேசுவதால் மட்டும் அல்ல.. சத்த அலைகளை எங்கு இருந்தும் பயன்படுத்தலாம்.. டிராபிக் மிகுந்த இடங்கள், வாகன இரைச்சல் என எதையும் பயன் படுத்தலாம் " என்கிறார்கள் இவர்கள்..

அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டுமானால், piezoelectricity என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
சில திட பொருட்களுக்கு பீசோ எலக்ட்ரிசிட்டி என்ற இந்த பண்பு இருக்கும்..
என்ன இந்த பண்பு ?
ஒரு பொருளை வளைக்கவோ, அழுத்தவோ செய்தால் அதில் மின்சாரம் உண்டாகும் என்பதே இந்த பண்பு.. உதாரனமாக ஒரு இடத்தில் எவ்வளவு சத்தம் இருக்கிறது என்பதை இதை பயன்படுத்தி அறியலாம்.. சத்த்சம் ஏற்படும்போது , அந்த பொருளில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது அல்லவோ.. அதற்கேற்றபடி மின்சாரம் உண்டாகும்.. அந்த மின்சாரப்பை அளப்பது எளிது..அதன் மூலம் சத்தம் எவ்வளவு கண்டு பிட்க்கலாம். இது போல பல பயன்பாடுகள் உள்ளன..
அதே போல, ரிவர்ஸ் பண்பும் இதற்கு உண்டு.. மின்சாரத்தை செலுத்தினால், அதன் வடிவ அமைப்பு மாறும்..
அதாவது, வடிவமைப்பை மாற்றினால் மின்சாரம், மின்சாரம் செலுத்தினால் வடிவ அமைப்பு மாற்றம்..

இந்த பண்புதான், மின் அலைகளை , ஒலி அலைகளாக மாற்ற பல இடங்களில் பயன் பட்டு வருகிறது..இத எதிர்பன்பில்தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்..
நடப்பது, ஓடுவது, ஹோட்டல்களில் நடனம், சாலை போக்குவரத்து மூலம் ஏற்படும் அதிர்வுகளால் மின்சாரம் உண்டாக்க முயன்று வருகிறார்கள்..
கொரிய விஞஞானிகள் சற்று வித்தியாசமாக யோசித்து செல் போனை சார்ஜ் செய்ய முயல்கிறார்கள்..

சின்க் ஆக்சைடை இரண்டு எலக்ராடுகள் மத்தியில் வைத்து , ஒலி எழுப்ப பட்டது.. நுறு டெசிபல் அளவில் ஒலி எழுந்த போது , மின்சாரம் உண்டானது..ஐம்பது மில்லி வோல்ட் மின்சாரம் கிடைத்து..

செல் போனுக்கு இதை விட பல மடங்கு அதிக மின்சாரம் தேவை ..
இன்னொரு பிரச்சினை ..
நாம் சாதாரமாக பேசும்போது .,ஐம்பது அல்லது அறுபது டெசிபல் அளவில்தான் ஒலி இருக்கும்... எனவே சார்ஜ் செய்ய வேண்டுமானால், காட்டு கத்து கத்தினால்தான் முடியும்..
இந்த பிரச்சினைகளை நீக்கி, சாதாரண பேச்சு சத்தத்தில் சார்ஜ் செய்யும் கருவியை கண்டு பிடிக்க முயன்று வருகிறார்கள்..

இது விரைவில் விற்பனைக்கு வரும்...

பைக் ஓட்டும்போது பேசினால் , போலீஸ்காரர் பிடித்தால், நான் பேசவில்லை, சும்மா சார்ஜ் செய்கிறேன் என சொல்லி தப்பிக்கலாம்..

வீட்டில், எத்தனை பேர் இது போல சார்ஜ் செய்கிறேன் என சொல்லி விட்டு கடலை வறுக்க போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்...

Monday, October 18, 2010

எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் விட்டு வைக்காத வினோத ஆய்வுகள் ( பார்ட் - 2 )



எரிசக்தி தயாரிக்கும் எக்குதப்பான முறைகளை பார்த்து வருகிறோம்... இவையெல்லாம் உடனடியாக , பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என சொல்ல முடியாது.. ஆனாலும் ஆங்காங்கு பயன்பட்டு வருகின்றன ... காற்றாலைகள் எல்லாம் முதலில் வேடிக்கையாகத்தான் பார்க்க பட்டன,,, இன்று அது ஒரு பெரிய தொழிலாக இருக்கிறது ( நான் சில காலம் அதில் வேலை பார்த்தேன் என்பது இங்கு தேவை இல்லாத சுய தம்பட்டம்.. ஹி ஹி )சரி..மேலும் சில ஏடாகூடா தொழில் நுட்ப ஆய்வுகள்..

6 பெரிய கட்டடம் கட்டும்போது மண்ணை தோண்டுகிறார்கள்... அதெல்லாம் சகதியாகி வீணாகிறது...அதே போல , சுரங்கம் அமைக்கும் பணியிலும், நிலக்கரி போன்றவை எடுக்கும் இடத்திலும் , நிலத்தடி நீருடன் கலந்து சக்தியாகி வீணாகிறது..அல்லது சரசாரி பயன்பாட்டில் செலவாகிறது..
கலிபோர்னியாவில் மட்டும் 7 லட்சம் திட வடிவ சகதி , ஆண்டொன்றுக்கு கிடைக்கிறது.. இதன மூலம் பத்து ௦ மில்லியன் kvh மின்சாரம் தயாரிக்க முடியும் ( நாள் ஒன்றுக்கு )
ஆய்வு நிலையில் இருக்கும் இந்த முறை அமுலுக்கு வந்தால், தொழிற்சாலைகளும் பொது நிறுவனங்களும் பயன் பெறும்.
செலவு செய்து சக்தியை அப்புறபடுத்தும் நிலை மாறி , வருவாய் பெறும் நிலை ஏற்படும்..

7 ஜெல்லி பிஷ்... இருளில் ஒளிரும் தன்மை கொண்டது... அதில் இருக்கும் ஒளிரும் தனமை கொண்ட பச்சை ப்ரோட்டின்தான் இந்த ஒளிரும் தன்மைக்கு காரணம்..
இந்த ப்ரோட்டீனை வைத்து ஸ்வீடனில் ஆய்வு செய்ய பட்டது.. ஒரு அலுமினியம் கம்பியில் ஒரு சொட்டு ப்ரோட்டின் விடப்பட்டது.. பிறகு அதன் மீது , புற ஊதா கதிர்களை பாய செய்யும்போது , எலக்ட்ரான் வெளியேறியது... இதன் சர்க்யூட் வழியே செல்லும்போது , மின்சாரம் உண்டானது..
உயிரியல் பேட்டரி செய்யும் சாத்தியம் , பல மருத்துவ பயன்பாடுகளுக்கு ஏற்றது.. சில நுண் கருவிகளை நம் உடலுக்குள் பொறுத்த வேண்டிய நிலை வரும்போது, அந்த கருவிகளில் பயன்படும் பேட்டரிகலாக இந்த உயிரியல் பேட்டரிகள் பயன்படும்..( சூரிய பேட்டரி , இங்கு வேலைக்கு ஆகாது என்பது தெளிவு )
மின்மினி பூச்சி உள்ளிட்ட பல உயிரின்களில் ஆய்வு நடந்து வருகிறது

8 இப்போது காண இருக்கும் முறை எல்லா இடத்துக்கும் பொருந்தாது..

சில பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு அடிப்புற மண் இடுக்களில். மீதேன் வாயுவும் , கார்பன் டை ஆக்சைடும் அடைபட்டு இருக்கும்...
வெப்பநிலை மாறும்போது, சோடா பாட்டிலில் இருந்து கேஸ் வெளியேறுவது போல, குபீர் என இவை வெளியேறும்.. ஏரி பெரிய சத்துடன் வெடித்து சிதறுவது போல இது இருக்கும்...பல நேரங்களில் உயிர் சேதமும் ஏற்படலாம்... காமரூன் நாட்டில் இதுபோன்ற சம்பவத்தில் பலர் உயிர் இழந்தனர்..
ர்வாண்டா நாட்டில் , இந்த வாயுக்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்கின்றனர்...

ஏரியில் இருந்து உறிஞ்சப்படும் வாயுக்கள் மூலம் 3 .7 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.. அடுத்த சில ஆண்டுகளில், நாட்டின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்..
உடனே இது போல புழல் ஏரியில் அமல் படுத்த முடியுமா என அவசரப்பட கூடாது... இயற்கையாக அமைந்தால்தான் உண்டு...
9 பாக்டீரியா என்றால் படையும் நடுங்கும்.. பாக்டீரியா இல்லாத இடமே இல்லி என்பதால் , அதை வைத்து மின்சாரம் தயாரித்தல் பெரிய வெற்றி கிடைக்கும்..
ஒவ்வொரு உயிருக்கும் தற்காப்பு முறை ஒன்று இருக்கும்... பெக்டீரியவுக்கும் அது உண்டு.. உணவு கிடைக்காத போது , சமாளிப்பதற்காக, பக்டீரியா தன சக்தியை கொழுப்பு அமிலமாக மாற்றி சேகரித்து வைத்து கொள்ளும்... இந்த அமிலம்தாம் பயோ டீசல் தயாரிக்கவும் பயன் படுகிறது.. இந்த இரண்டு தனமியும் சேர்த்து பார்த்த விஞ்ஞானிகள், பேக்டீரியா மூலம் மின் உற்பத்தி சாத்தியத்தை உணர்ந்தனர்,,
பாக்டீரியாவில் இருக்கும் என்சைம்களை செயற்கை முறையில் நீக்கி , அது அமிலம் சுரப்பதை அதிகப்படுத்துதல்.. அதன் பின், அதில் ஆக்சிஜனை நீக்கி விட்டு , பயோ டிசல் உருவாக்குதல் என்பதே இந்த முறை..

பேக்டீரியா நிரப்பி வண்டி ஓட்டும் காலமும் வரலாம்... ஆனால் இப்போதைக்கு முடியாது... செலவு அதிகம் ஆகிறது... போக போக குறைந்த செலவில் தயாரிக்க முடியலாம்

10 கார்பன் பைப்புகள் மிகவும் உறுதி தன்மை வாய்ந்தவை... அதிக எடையை தாங்க வேண்டிய இடங்களில் இவை பயன்படுகின்றன..
இவற்றின் இன்னொரு பண்பு சமிபத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளது.. சஊரிய சக்தியை உறிஞ்சும் ஆற்றல் இதற்கு அதிகம் என்பதே அந்த கண்டு பிடிப்பு..
இப்போது இருக்கும் முறையில், கூரை முழுதும், ஒரு தகடு போல ஒன்றை பொருத்தி , சூரிய சக்தியை உறிஞ்சுவதை பார்த்து இருப்பிர்கள்
கார்பன் பைப்புகளை பயன் படுத்தினால், குறைந்த இடத்தில் அதிக சக்தியை உறிஞ்சலாம்.. மின்சாரமும் தயாரிக்கலாம்...

********************************************************************

இது போல பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.. அவை நடைமுறைக்கு வரும் வரையாவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது..

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா