நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை மிலாடி நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம். நபியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்த மற்ற மதத்தினரும் இந்த நாளை கொண்டாடுவது வழக்கம்.
இந்த அடிப்படையில் ஓர் இஸ்லாமிய நண்பருக்கு மிலாடி நபி வாழ்த்துகள் சொன்னேன். அவர் டென்ஷனாகி என்னை முறைத்தார்.. நீங்கள் இப்படி சொல்வது எங்கள் மதத்துக்கு எதிரானது.. நாங்கள் அல்லாவை மட்டும்தான் வணங்குவோம். நபியே ஆனாலும் , அவரை கொண்டாட ஒரு பண்டிகை தேவை இல்லை.. அவர் பிறந்த நாளை கொண்டாடுவது இஸ்லாமிற்கு எதிரானது.. இனி யாருக்கும் வாழ்த்து சொல்லாதீர்கள் என சொல்லி சென்றார்.
எனக்கு அதிர்ச்சி... எனக்கு தெரிந்து இதை பல இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிரார்கள்.. வாழ்த்து சொல்கிறார்கள்.. இவர் என்ன புதிதாக சொல்கிறாரே என நினைத்தேன்,, இணைய நண்பர்கள் சிலரும் அவர் கருத்தை பிரதிபலித்தனர்.. இவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான்.. உண்மையான இஸ்லாமியர்கள்தான் பிறகு ஏன் இப்படி சொல்கிறார்கள் என சிலருடன் பேசிய போதுதான் , உண்மை தெரிந்தது...
இணை வைப்பு என்பதில் ஏற்படும் குழப்பமே இது..
இஸ்லாமிய விதிகளின்படி , அல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை..பகுத்தறிவின்படியும் இது ஏற்கத்தக்கதே..
மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்சென்று பார்த்தாலும், இதில் இருக்கும் லாஜிக் புரியும்..
ஒருவர் என்னதான் சிறந்தவராக இருந்தாலும் , உலகைப்படைத்த ஏதோ ஒரு பிரமாண்டமான சக்திக்கு இணையாக அவர் ஆகி விட முடியாது..
ஆனால் சிறந்த ஒருவரை காணும்போது நம் மனதில் ஒரு மரியாதை ஏற்படும், அதை ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு பாணியில் வெளிப்படுத்துவார்கள்..
இப்படி மரியாதை செய்வதை இஸ்லாம் தடுத்தது கிடையாது,,,
இதோ ஆதாரங்கள்...
1 “உர்வா அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களுக்கும், சஹாபா (ரலி) பெரு மக்களுக்கும் இருந்த தொடர்பை ஆராய்ந்த பிறகு, தங்களுடைய மக்களிடம் திரும்பி வந்த பிறகு, மக்களே ரோமின் மன்னர் சீசர்க்கும், மற்றும் மன்னர் நெகுஸ் (NEGUS) க்கும், ரோமன் மக்கள் மிகுந்த மரியாதையை, முஹம்மது (ஸல்) நபிக்கு அவர்களுடைய தோழர்கள் மரியாதை கொடுத்ததை போன்று, கொடுக்க வில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் தண்ணீரை கொண்டு கழுவும் பொழுது, அந்த தண்ணீரை சஹாபா (ரலி) பெரு மக்கள் கையில் ஏந்தி நிலத்தில் சிந்த விடாமல் தங்கள் கைஹளில் ஏந்தி கொண்டார்கள், பிறகு தங்கள் முகத்திலும், உடலிலும், தலையிலும் தடவி கொண்டார்கள். மேலும் முஹம்மது (ஸல்) நபி அவர்கள் உத்தரவு ப்ரபித்தால் அதை தலையாய கடமையாக ஏற்று செய்கிறார்கள். முஹம்மது (ஸல்) நபி அவர்கள் பேசும் போது, வாய் மூடி மெளனமாக கேட்கிறார்கள். மரியாதைக்காக,சஹாபா (ரலி) பெரு மக்கள் ரசூல் (ஸல்) அவர்களை நேருக்கு நேராக பாக்காமல் மரியாதை செய்தார்கள். (ஆதாரம் – AR RAHEEQUL MAKHTOOM PAGE 40 -MAKTABA SALAFIA, LAHORE
2 ரசூல் (ஸல்) அவர்கள் சிலவற்றின் மீது கோபமாக இருந்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் எழும்பி நின்று குனிந்து ரசூல் (ஸல்) அவர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பாதங்களை முத்தம் இடுகிறார்கள். பிறகு உமர் (ரலி) கூறுகிறார்கள், யா ரசூலுல்லாஹ் (ஸல்), நாங்கள் அல்லாஹ்வை எங்களுடைய இறைவனாகவும், உங்களை அல்லாஹ் உடைய ரசூலாகவும் (ஸல்), இஸ்லாம் ஐ எங்களுடைய தீனாகவும், அல் குரானை எங்களுடைய வழிகாட்டியாகவும், தலைவராகவும் சந்தோஷத்துடன் பொருந்தி கொண்டோம். அல்லாஹ் மேலும் உங்களுடன் (ஸல்) நன்மை பாராட்டுவானாக என்று உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் சந்தோசம் அடையும் வரை சொல்லி கொண்டே சென்றார்கள்.
(தப்சீர் இப்ன் கதீர்) மற்ற விளக்க உரையாளர்களும் மேலே சொன்ன நிகழ்வை சொல்லி காட்டு கிறார்கள்.
இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் பாதத்தை முத்தமிட்டதை ரசூல் (ஸல்) அவர்கள் தடுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு விஷ்யத்தை சொல்ல வேண்டும். தொழுகையில் கை கட்டி தொழுவது வேறு. பெரியவர்கள் முன் மரியாதை நிமித்தம் கை கட்டுவது வேறு,.
இரண்டையும் குழப்புவது கூடாது..
நல்லவர்களை மதிப்பது , நினைவு கூர்வதால் அந்த நல்ல பண்புகள் நம்மிடமும் தோன்றும்.
அந்த அடிப்படையில், மத வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு, நபிகள் பிறந்த நாளை கொண்டாடுவது நம் கடமை..
அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துகள்...
