Saturday, February 5, 2011

யுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா ?

ஒரு படம் நல்ல படமா இல்லையா என எப்படி மதிப்பிடுவது?


தொழில் நுட்ப காரணங்களுகாகவோ,  காட்சி அமைப்புகளுக்காகவோ படத்தை பாராட்ட முடியாது..

படம் பாத்த பின், பார்ப்பவனுக்கு அது என்ன பாதிப்பு ஏற்படுத்தியது ,,அவனை என்ன யோசிக்க வைத்தது என்பதே முக்கியம்..

அந்த வகையில், மிஷ்கினின் அஞ்சாதே பெண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ என்பது போன்ற காட்சி அமைப்பால் முகம் சுழிக்க  வைத்தது...



அடுத்த படமான நந்தலாலாவை பார்த்து அசந்து விட்டோம்..

இவர் நல்ல இயக்குனர்.. நாம்தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைத்தோம்..

ஆனால், அது அவர் சிந்தனை அல்ல ,, காபி படம் என்று குட்டு உடைந்தது..

இந்த நிலையில், மிஷ்கினை பற்றி மதிப்பிட எதுவாக , வந்துள்ள படம்தான் யுத்தம் செய்...

பெயரை பார்த்ததும், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் கதை, சேரன் நடித்து இருக்கிறார்,, எனவே நாகரிமான முறையில் காட்சி அமைப்புகள் இருக்கும் என நினைப்பீர்கள்..

அதுதான் கிடையாது..



அந்த காலத்தில், விடியோ யுகம் நிலவியது... விடியோ ப்ளேயரும், கேசட்டும் வாங்கி ப்ளூ பிலிம் பார்ப்பார்கள் சிலர்.. ஆனால் அது சிறிது நேரத்திலேயே
அலுத்து விடும்...

அப்படி இல்லாமல் , படம் முழுதும் பார்க்கும் படி, விறு விருப்பாக அமைக்கப்பட்ட ப்ளூ பில்ம்தான் , யுத்தம் செய் என சொல்ல நினத்த்தாலும், அப்படி சொல்ல முடியாது..

ஆனால், அவருக்கு இதைதவிர வேறு கதை கருவே கிடைக்காதா என்று என்ன தோன்றுகிறது...

நல்ல கதை என்பது ஜப்பான் படத்தில் இருந்துதான்  சுட வேண்டும் என்பதில்லை .

நம்மை சுற்றியே ஆயிரம் கதைகள் உள்ளன...

சரி, வக்கிரமான கதைதான் வியாபாரம் ஆகும் என நினைத்தாலும், அதை பார்க்கும் படி எடுக்காமல், அதிர்ச்சியூட்டும் வகையில் எடுப்பது , தார்மீக உணர்ச்சி இல்லை என்பதையே காட்டுகிறது..

ஆனால் , இதை பலரும் ரசித்து பார்ப்பதை பார்த்தால், பாவமாக இருக்கிறது.. பயமாகவும் இருக்கிறது...

திறமையான படைப்புதான்..

ஆனால் குடும்பத்துடன் பார்க்க முடியாது..

யுத்தம் செய்- அனைவருக்கும் ஏற்றதல்ல

27 comments:

  1. சில விஷயாங்களில் உடன்பட முடியவில்லை!

    //மிஷ்கினின் அஞ்சாதே பெண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ என்பது போன்ற காட்சி அமைப்பால் முகம் சுழிக்க வைத்தது..//
    அப்படி யூஸ் பண்ணுங்கன்னு சொல்லலயே!
    கதையில் அப்படி வருகிறது. ஏனைய இயக்குனர்கள் படங்களில் பெண்களை (ஹீரோயின் உட்பட) அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள் (பாடல்களிலும், நிஜத்திலும்)
    அஞ்சாதே படம் தான் ஒரு போலீஸ்காரனின் உண்மையான வாழ்வை முதன்முதலில் கூறிய தமிழ்படம் என்று நான் நினைக்கிறேன் (பிறகு மைனா)

    //நம்மை சுற்றியே ஆயிரம் கதைகள் உள்ளன..//
    நம்மைச் சுற்றி இப்படியான கதைகளும் இருக்கக் கூடும்!வெளிச்சத்துக்கு வராமல்!

    'யுத்தம் செய்' படமும், 'வேட்டையாடு விளையாடு' படமும் ஒரே படத்தின் தழுவல் என்கிறார்கள்! அப்படிப் பார்க்கும்போது அதைச் சொன்ன, காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில்தான் நல்ல படமா இல்லையா என முடிவு செய்ய முடியும்!

    //திறமையான படைப்புதான்..
    ஆனால் குடும்பத்துடன் பார்க்க முடியாது//
    இது நியாயமான பேச்சு! :-)
    நான் இன்னும் பார்க்கல பாஸ்!

    ReplyDelete
  2. //மிஷ்கினின் அஞ்சாதே பெண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ என்பது போன்ற காட்சி அமைப்பால் முகம் சுழிக்க வைத்தது..//

    அப்படியா ? ஒரு காரணம் இல்லாமலே பெண்களை அரைகுறை ஆடையில் ஆடவிட்டும், ரேப் சீன் வைப்பவர்கள் மத்தியில் அவள் கன்னத்தை ஒரு சைகோ அறைவதை கூட blur செய்து காட்டினவர் மிஷ்கின். யூஸ் அண்ட் த்ரோ செய்யும் சைக்கோவுக்கு ஆண்குறியில் தோட்டா பாய்ந்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது. எப்படிங்க இப்படி தப்பு தப்பா ஒரு படைப்பாளி பத்தி எழுதுறீங்க.

    ReplyDelete
  3. அதிர்ச்சியான விஷயத்தை. அதிர்ச்சியா தான் படமாக்க முடியும்.

    ReplyDelete
  4. அன்பின் பார்வையாளன்,

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால் அதைப் பற்றி என்னால் விமர்சிக்க இயலாது. ஆனால் நீங்கள் நடு நிலையிலிருந்து விமர்சிக்கவில்லை என்பது என் எண்ணம். அப்படி மிஸ்கின் மேல் என்ன பாஸ் கோபம் உங்களுக்கு?

    ReplyDelete
  5. உங்களைத்தான் நான் வாசிக்காத நாளில்லையே மிஷ்கின் அடுத்த படத்தையும் நீங்கள் சரியில்லை என்றுதான் சொல்வீர்கள் அதே போல் கமல் படத்தையும் சரியா?
    நீங்கள் நல்ல தேடலும் விஷயமும் உள்ளவர் பாஸ். அதே போல் வெகு சுவாரசியமாய் எழுதும் பாங்கும் கைவரப்பெற்றவர். எதற்கு நடுவுநிலைமையை மட்டும் விட்டுக் கொடுப்பானேன். நான் தொடர்ந்து படிக்கும் வெகு சிலரில் ஒருவர் என்பதாலேயே மேற்கண்ட பின்னூட்டம் தப்பிருந்தால் சாரி.

    ReplyDelete
  6. >>> படம் பார்க்கவில்லை. ஆனால், காப்பி அடிச்சா தப்பு. அதுல சந்தேகமே இல்ல.

    ReplyDelete
  7. /நான் ”ஜல்சா” பதிவுகள் எழுதலாமா? /

    Boss chinan kulanthai kuda theriyunyum neenga padapai vimarsanam paoninathu comedy piece nu nirubichitnga amma Jalsa pathivugal eltuthalama nu voting naduathura un blue film blog vida avaru anjathae padam evalavo mel unga vitula nadantha than vali theriyanum nu illai enga nadathul valikum boss avaru heroine thopula pambarama vitaru ... nalla padam eduthu thappu seiyaravanum ellam oru bayatha yerpaduthina intha mansuanoda nalla padatha anjathave parthu eppadi pesura nee un puthi un arivu ellam nalla theriyuthu un blog la oru post pathi thappa pesinalae pothukitu varuthula avan nalla padapai koduthu irukan nee etho kathai pesikitu iruku matha padathula glamour nu katikitu aatttikitu item song nu vachi idupa masala patta edukura vanga mathiyala jalsa blog podatuma nu voting vaikira nee eppadi than parpa eluthura vitutu kadaiya vai

    ReplyDelete
  8. i think u r going too bad... மிஷ்கினின் படத்தை வக்கிரம் என்று சொல்கிறீர்கள்... சாருவின் தேகத்தை மட்டும் கட்டிப்பிடித்துக்கொள்கிறீர்கள்... உண்மையை சொல்லுங்க, சாரு சரக்கு வாங்கிக் கொடுத்தார் தானே... (இந்த பின்னூட்டத்தை மட்டறுத்தால் போன் பண்ணி திட்டுவேன்...)

    ReplyDelete
  9. ” சாரு சரக்கு வாங்கிக் கொடுத்தார் தானே"

    தமிழ் எனும் சாறை பிழிந்து கொடுத்து இலக்கிய போதையை அளித்தவர் அவர் என்ற உண்மையை ஒப்பு கொள்கிறேன்

    ReplyDelete
  10. மிஷ்கின் அடுத்த படத்தையும் நீங்கள் சரியில்லை என்றுதான் சொல்வீர்கள் அதே போல் கமல் படத்தையும் சரியா?”

    மிஷ்கினையும் , கமலையும் ஒரே தட்டில் வைத்தற்கு நன்றி

    ReplyDelete
  11. அப்படி மிஸ்கின் மேல் என்ன பாஸ் கோபம் உங்களுக்கு”

    ஏன் காப்பி அடித்து படம் எடுக்கிறார் என்ற வருத்தம்தான்...

    ReplyDelete
  12. நான் இன்னும் பார்க்கல பாஸ்!

    இனியும் பார்க்காதீங்க

    ReplyDelete
  13. அவள் கன்னத்தை ஒரு சைகோ அறைவதை கூட blur செய்து காட்டினவர் மிஷ்கின்”

    பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாக பயன்படுதுவதாக வில்லன் சொல்லுவான் , அஞ்சாதே படத்தில். இது ஐடியா கொடுப்பது போல இருக்கிறதே

    ReplyDelete
  14. அதிர்ச்சியான விஷயத்தை. அதிர்ச்சியா தான் படமாக்க முடியும்.”

    அதனால்தான் , உள்ளதை உள்ளபடி காட்டும் ப்ளூ ஃபில்முடன் இதை ஒப்பிட்டேன்

    ReplyDelete
  15. this review is nothing but a revenge....

    ReplyDelete
  16. எல்லாரும் உங்களுக்கு எதிர்ப்பே தெரிவித்திருக்கிறார்கள் ,ஆனால் நான் தெரிவிக்க மாட்டேன் ஏன்னா நா இன்னும் படம்லாம் பார்க்கவில்லை ஹி ஹி ஹி

    ReplyDelete
  17. யுத்தம் செய் ப்ளூ பிலிம் என்றால் தேகம் சரோஜா தேவி புத்தகம் என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. தேகத்தை பாராட்டும் உங்களுக்கு யுத்தம் செய் ப்ளூ பில்மாக தோன்றுவதால் நீங்கள் தேகத்தையும் ஒழுங்காக படிக்கவில்லை யுத்தம் செய் படத்தையும் பார்கவில்லை என்பது அப்பட்டாமாக தெரிகிறது. சாருவை குஷி படுத்த மட்டுமே பதிவு போடுகிறீர்கள் என்பதும் நிரூபணம் ஆகிறது.

    ReplyDelete
  18. மிஸ்டர் பிச்சைக்காரன். ஒரு படத்துல ரொம்ப புத்திசாலித்தனமா ஒரு வங்கியை கொள்ளை அடிக்க திட்டம் போடுவாங்க. அப்புறம் சில பல மசாலாவுக்கு அப்புறம் கதாநாயகன் சண்டை போட்டு வில்லனிடம் இருந்து பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பான். இதை ரெண்டு விதமா பார்க்கலாம்.
    1) இப்படியும் கொள்ளையடிக்கலாம். கெளம்புடா நாமளும் கொள்ளை அடிப்போம்.
    2) இப்படியெல்லாம் கொள்ளை அடிக்குறாங்க. உஷாரா நாம இருக்கணும்.

    உங்களுடைய சமீபத்திய பதிவில் நீங்கள் கூறியது
    /* படம் பார்த்து முடித்ததும் நம் மனதில் அந்த வக்கிரமான காட்சிகள் நிற்குமே தவிர நன்மை ஒன்றும் இருக்காது…*/
    இது உங்களுடைய பலவீனத்தையே காட்டுகிறது. உங்களால் எதிலும் நல்லதையே பார்க்க முடியாது. அவ்வளவுதான்.
    சினிமாவுல எது வியாபாரம் ஆகுதோ அதை தான் எடுப்பாங்க. அதை எவ்வளவு பொறுப்பா எடுக்குறான் ஒருத்தன் ? அது தான் முக்கியம்.

    /* தமிழ் எனும் சாறை பிழிந்து கொடுத்து இலக்கிய போதையை அளித்தவர் அவர் என்ற உண்மையை ஒப்பு கொள்கிறேன் */
    சாரு பண்ணினா சூப்பர். மிஷ்கின் செய்தா ப்ளூ பில்மா ? என்னய்யா உங்கள் ஞாயம் ?
    இவ்விடத்தில் ஒன்று கூறுகிறேன். அவன் அவன் மழை வரவில்லையே. குடிக்கவும் விவசாயத்திற்கும் தண்ணி இல்லையென்று புலம்பும்போது. என் பிரண்டு குடுக்கற treat சென்று சரக்கடிக்க விடாம மழை பெய்யுது என்று மழையை திட்டிய மகா மெகா இலக்கியவாதி உங்கள் சாரு.

    ReplyDelete
  19. தம்பி பிரபாகரா , சிறிது காலம் கழித்து இதே படத்தை பார்த்தால் , இந்த படத்தின் ஆபாசம் உங்களுக்கு புரியும்

    ReplyDelete
  20. ரொம்பவும் controversial ஆக இருக்கிறது நீங்கள் விமர்சித்த விதம்.

    //சரி, வக்கிரமான கதைதான் வியாபாரம் ஆகும் என நினைத்தாலும், அதை பார்க்கும் படி எடுக்காமல், அதிர்ச்சியூட்டும் வகையில் எடுப்பது , தார்மீக உணர்ச்சி இல்லை என்பதையே காட்டுகிறது..//

    வக்கிரமான கதைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா? தெளிவுபடுத்தவும்...

    //திறமையான படைப்புதான்..//

    என்ன சார் , ப்ளூ பிலிம் என்றீர்கள், இப்போது திறமையான படைப்பு என்கிறீர்கள்.. ஒருவேளை திறமையாக எடுக்கப்பட்ட ப்ளூ பிலிமோ??அல்லது திறமையாக எடுக்கப்பட்ட ப்ளூ பிலிம் தான் உங்களுக்கு பிடிக்கிமோ?? தெளிவு இல்லை ..

    ReplyDelete
  21. @ பார்வையாளன்
    // தம்பி பிரபாகரா , சிறிது காலம் கழித்து இதே படத்தை பார்த்தால் , இந்த படத்தின் ஆபாசம் உங்களுக்கு புரியும் //

    இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன் நானா...? பதிலளிக்கவும்...

    ReplyDelete
  22. @பிலாசபி பிரபாகரன்
    ஆம் தம்பி . யுத்தம் செய் படத்தை நான் மட்டுமல்ல . மெட்ராஸ்பவன் சிவகுமாரும் எதிர்க்கிறார் . காரணம் மிஷ்கினின் கோணல் புத்தி அவருக்கு தெரிந்திருக்கிறது . உங்களுக்கும் காலப்போக்கில் உண்மை புரியும் .

    ReplyDelete
  23. அலோ பாஸ்... அனானி பெயரில் கமென்ட் போடவேண்டிய அவசியம் எனக்கில்லை...

    ReplyDelete
  24. I watched this film ,for me this film is not a family watchable one ,only for adults.Reason is its hosting lot of gore scenes and also rape scenes .some of the scenes are from takeshi mikes film (last rape scenes,bondage.,),the film concept is some what similar to LAST HOUSE ON THE LEFT.But I am not saying its a bad film,its a watchable one thats it.

    ReplyDelete
  25. Philosophy Prabhakaran said...
    அலோ பாஸ்... அனானி பெயரில் கமென்ட் போடவேண்டிய அவசியம் எனக்கில்லை

    ஓ.. சாரி..

    அனானி பின்னூட்டத்த்க்கு அடுத்து உங்களுக்கான என் மேசேஜ் வந்து விட்டது. அதனால் நீங்கள்தான் அந்த அனானி என நான் நினைத்து விட்டதாக நீங்கள் நினைத்து விட்டீர்கள்...

    நா அப்படி நினைக்கவில்லை... சொல்வதை னேரடியாக சொல்பவர் நீங்கள் என எனக்கு தெரியும்...

    வருத்தம் ஏற்பட்டு இருப்பின் வருந்துகிறேன்

    ReplyDelete
  26. totally biased

    silrathanama irukku review

    idukku nee poy pichai edukkalam

    ReplyDelete
  27. நீங்கள் இப்படித்தான் சப்பைக்கட்டு கட்டுவீர்கள் என்று நானும் எதிர்பார்த்தேன்... நான் இந்த இடுகையில் 8வது ஆளாக பின்னூட்டமிட்டிருக்கிறேன்... அதற்கு நீங்கள் 9வது பின்னூட்டத்திலேயே பதில் சொல்லிவிட்டீர்கள்... அதன்பிறகு சம்பந்தமே இல்லாமல் 19வது பின்னூட்டத்தில் மறுபடி எனக்கு ஏன் பதில் சொல்லியிருக்கிறீர்கள்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா