Wednesday, February 16, 2011

எழுத்து சித்தரை சீண்டுவதா? – களங்கப்பட்டுவிட்டதா ஜெமோ எழுத்து?- இலக்கிய பரபரப்பு

 

 

அறம் பற்றியும் அறச்சீற்றம் பற்றியும் துல்லியமாக எழுத்தில் பதிவு செய்பவர் ஜெயமோகன்..

அவர் எழுத்துக்களை அவர் தமிழுக்காக ரசித்து படிப்பவர்கள் பலர்…

அல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் ரசிகர்கள்கூட  ஜெமோவின் எழுத்தை படிக்க தவறுவதில்லை…

இந்த நிலையில் ஜெயமோகனின்  நான்காவது கொலை என்ற கதை பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது… ஜெயமோகனின் எழுத்து களங்கப்பட்டுவிட்டதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது..

என்ன மேட்டர்?

அது ஒரு நகைச்சுவை கதை …

நானும் படித்தேன்

ஆனால் எனக்கு சிரிப்பு வரவில்லை.. வேதனையே ஏற்பட்டது..

எழுத்து சித்தர் பாலகுமாரனை வரம்பு மீறி கிண்டல் செய்து இருந்தது மனதை காயப்படுத்தியது…

இலக்கிய அக்கப்போருக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஞானியாக வாழ்பவர் எழுத்து சித்தர் பாலகுமாரன்…யாரும் அடைய முடியாத புகழை அடைந்து , வாய்ப்ப்புகள் கதவை தட்டும்போதே சற்று ஒதுங்கி கொண்டவர் அவர்..

எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை தொட்டவர்.. அவ்ரால் சிறந்த சிந்தனையை பெற்றவர் அனேகம்…

அவரை போய் அவதூறாக பேசுவது நியாயமா..?

 

இதில் எழுத்தாளர் எஸ் ராவையும் கிண்டல் செய்கிறார்..

உபபாண்டவம் நாவல் என்பது விஷ்ணுபுரத்தின் காப்பி என சற்றும் பொருத்தம் இல்லாமல் சொல்கிறார் ஜெ..

விஷ்ணுபுரம் சிறந்த நாவல்..அதில் சந்தேகம் இல்லை… ஆனால் உபபாண்டவமும் சிறந்த நாவல்தான்..  அதை மட்டம் தட்டுவதில் என்ன பயன்?

உபபாண்டவம் முற்றிலும் வேறு..

ஆனால் அதை கூட இலக்கிய அக்கப்போர் என விட்டுவிடலாம்.. ஆனால் இலக்கியத்தை விட உயர்ந்த இடத்தில் இருக்கும் எழுத்து சித்தரை சீண்டியதில் எந்த அறமும் இல்லை….

ஜெயமோகனின் எழுத்தில் இது ஒரு களங்கமாகவே கருதப்படும்…. 

அவர் எழுத்தை நீங்களே பாருங்கள்….

******************************************************************

நான்காவது கொலை – ஜெயமோகன்

இது விஷ்ணு  புரம் . இரண்டாம் பதிப்பு ...."
திடீரென்று ஒரு பெரும் ஒலி எழுந்தது .
"அதென்ன போர்க்கூச்சலா ?"
"
"ஸ்ஸ் ஆ!"
"பார்த்து . ஆங்காங்கே அலங்காரத்துக்காக சம்ஸ்கிருதம் பதித்திருக்கிறது
, கிழித்துவிடும்.....இதுதான் பின்வாசல்.இந்த வழியாக போனால் தப்பி
விடலாம்.ஆனால் கவனம் அங்கங்கே சில முயல்வளை சுரங்கங்கள்
உண்டு .
கால் வைத்தால் உள்ளே இழுத்துவிடும் நேராக இங்கிருந்து
கிழக்காக உள்ள உபபாண்டவபுரம் என்ற ஊருக்கு போய்விடுவீர்கள் .
இதைபார்த்து கட்டியதுதான். கொஞ்சம் இத்தாலி கட்டடக்கலையும்
உண்டு . கால்வினோ என்று ஒரு கைவினையாளர் உதவினார்
. "
"அது இன்னும் பயங்கரமான இடமா?"
"கொடூரமான ஊர் . அங்கே எல்லாமே அலைந்துகொண்டோ
மிதந்துகொண்டோதான் இருக்கும் .உள்ளே எல்லாமே விசித்திரமாக
இருக்கும் . கேவில் , கொபூராம், இரண்மனை இந்தமாதிரி....."
"கடவுளே இதெல்லாம் என்ன?"
"அச்சுப்பிழை .ஏழெட்டு இடத்தில் தடுக்கி எழுந்துபார்த்தால்
நீங்களேகூட ஹேம்ஸி , வட்டாசீன் என்று மாறியிருப்பீர்கள்.."
"வாட்சன் என்ன இது கொஞ்சம் தைரியமாக இருங்கள் ..."
"இங்கேயிருந்து போன ஒரு ஆசாமி பரம ஆபாசமாக மாறிவிட்டார் ,
இங்கே சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் .
காட்டிலே அலைகிறார் ..

 

*******

"ஆமா இல்ல ? என்ன பண்ரதுன்னே தெரியலையே ... ஆரம்பத்திலே
தலைப்பை குடுத்து தொலைச்சிட்டேன். எல்லாம் இந்த க.சீ.சிவக்குமார்
செஞ்ச வேலைங்க ."
"யார் அவன் ,முக்கிய வில்லனா? நாசகார விஞ்ஞானி ? "
"கோணங்கி மாதிரி ஐதீகமா ஆறதுக்கு இப்ப அப்ரண்டீஸ்ஷிப்
எடுத்துக்கிட்டிருக்கான். பெரிய விண்ணன். அவன்தான் சொன்னான்,
தொடர்கதை எழுதறது சல்லிஸான விஷயம்னு .என்ன கதைன்னு
தெரியாமலே தலைப்பு குடுத்திடுவான். 'கல்கில நான் தொடர்கதை
எழுதறதா விளம்பரம் வந்திருக்கு , நல்ல தீமா ஒண்μ சொல்லு
தலைவான்'றான் ஒரு நாளைக்கு . அப்டியே எழுதி எல்லாரும் ஆகா
ஓகோன்னு சொல்ற மாதிரி பேரும் வாங்கிடறான் . இன்னொரு
பத்திரிகையாள நண்பர் சொன்னார்
பாலகுமாரனுக்கெல்லாம்
அத்தியாயத்தை கேட்டு வாங்கிறப்ப கதைச்சுருக்கத்தை நாமதான்
சொல்லி குடுக்eμn‘னு. அதையெல்லாம் நம்பி எறங்கிட்டேன்
."

4 comments:

  1. ஆஹா அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டீங்களா...

    ReplyDelete
  2. இதுக்கும் ஏனோ ஓட்டு போட மனம் வரவில்லை...

    ReplyDelete
  3. But why you are referring Charu name in every post?

    I dont understand his relevence to this topic.

    i also like balakumaran. But reference of Charu name in this post make this post as regular "Charu Vs J" topic.

    ReplyDelete
  4. இதுக்கும் ஏனோ ஓட்டு போட மனம் வரவில்லை."

    :-(

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா