Friday, May 18, 2012

சினிமா வாய்ப்புக்காக காம்ரமைஸ் செய்யாத சாருவின் நச் விமர்சனம் - வழக்கு எண் 18/9

பெண்மையையும் , வறுமையையும் கேவலப்படுத்தி வழக்கு எண் 18/9 என்று ஒரு படம் வந்தது.  காசு செலவழித்து படம் எடுக்கிறார்கள் , எப்படி எடுப்பது என்பது அவர்கள் விருப்பம்.
ஆனால் அதையாவது ஒழுங்காக எடுத்தார்களா என்றால் பல படங்களை காப்பி அடித்து எடுத்து இருந்தார்கள்.

 நடைமுறையில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே போல விளிம்பு நிலை மக்களும் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் எல்லாம் இந்த படத்தின் சினிமாட்டிக் கிளைமேக்சை பார்த்து எரிச்சல்தான் அடைந்தனர். இந்த படத்தில் வரும் கடைசி காட்சிகள் எல்லாம் சாத்தியமே இல்லை.

சாதாரண சினிமா ரசிகனின் வீக் பாயிண்டை குறி வைத்து படம் எடுக்கப்பட்டாலும் , வறுமையால் நேரடியாக பாதிக்கப்பட்ட, கஷ்டப்படும் மக்களால் இந்த படத்தை ஏற்க முடியவில்லை .

 நான் முதன் முதலில் பார்த்தபோதே கூட்டம் இல்லை.

ஆனால் ஊடகங்களிலோ மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. படம் முடிந்ததும் மக்கள் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள் என்றெல்லாம் கதை அளந்து கொண்டு இருந்தன.


உண்மை நிலை அறிய , படம் வெளிவந்த இரண்டாவது  ஞாயிறு அன்று வட சென்னையில் உள்ள அகஸ்தியா திரை அரங்கு சென்று இருந்தேன்.  மதிய காட்சிக்கு கூட்டமே இல்லை. விடுமுறை நாளிலேயெ இந்த நிலை. ஊடகங்கள் செயற்கையாக வெற்றி வெற்றி என்கின்றன.









இந்தியாவின் வறுமையை காட்டி படம் எடுத்தால் , வெளி நாட்டினர் ரசித்து பார்ப்பார்கள். அதே போல இந்த படம் சில மேட்டுக்குடியினருக்கும் , அறிவு ஜீவியினருக்கும் பிடித்து இருக்க கூடும்.

படம் பிடிக்கா விட்டால் கூட, சினிமா வாய்ப்பை மனதில் கொண்டு படத்தை பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் உண்மை நிலையை தண்டோரா மணிஜி போன்ற வெகு சிலர் மட்டுமே எழுதினார்கள் . ஆனாலும் ஊடகங்களின் வீச்சு பெரிது. அவை இந்த படத்தை உலக படம் என்ற ரீதியில் எழுதுவதால், எதிர் விமர்சனங்கள் செய்வோர் மீது கண்டனங்கள் பாய்ந்தன. “ அதுதான் ஊடகங்களே பாராட்டுகின்றனவே. அவற்றை விட நீ விபரம் தெரிந்த ஆளா “ என்று பாய்ந்தனர்.



தமிழ் நாடே கோமாளித்தனத்தில் சிக்கி தடுமாறியது.

இந்த நிலையில், சாரு நிவேதிதா நச் என ஒரே வார்த்தையில் படத்தை விமர்சித்தார் .


Oh, shit…


இதுதான் அவர் விமர்சனம்.

****************************************************

வழக்கு எண் 18/9 என்ற படத்துக்கு நானும் கணேஷ் அன்புவும் இன்று சென்றோம்.  என்னால் பத்து நிமிடம் கூட படத்தைப் பார்க்க முடியவில்லை.  எழுந்து வெளியே ஓடி விடலாம் என்றால் நான் கடைசி சீட்டில் அமர்ந்திருந்தேன்.  அரங்கம் ஒரே இருட்டாக இருந்தது.  என் மொபைல் போனில் டார்ச் இல்லை.  இருட்டில் விழுந்து கிழுந்து வைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்.  பக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் சங்கடப் படுத்தி வெளியேற வேண்டுமே என்ற தயக்கம்.  பல்லைக் கடித்துக் கொண்டு இடைவேளை வரை அமர்ந்திருந்தேன்.  இடைவேளை என்ற எழுத்து வந்ததுமே கணேஷிடம் சொல்லிக் கொண்டு ஓடியே வந்து விட்டேன்.  மலத்தை மிதித்து விட்டது போல் இருந்தது.  ஒஸ்தி போன்ற குப்பைகள் ஆயிரம் மடங்கு தேவலாம்.  இந்த சீரியஸ் சினிமா பண்ணுபவர்களின் லொள்ளு தான் தாங்க முடியவில்லை.  தமிழிலேயே நான் பார்த்த ஆக மட்டமான படங்களில் இது ஒன்று.  உவ்வே… குமட்டிக் கொண்டு வருகிறது…



*******************************************************


சாரு என ஒருவர் இல்லாவிட்டால் , இந்த படத்தை உலகப்படம் என்றே முடிவு செய்திருப்பார்கள். விபரம் தெரிந்தவர்கள் மத்தியில் தமிழ் சினிமா ரசனை கேவலப்பட்டு போய் இருக்கும்.

நேர்மையான, விஷ்யம் தெரிந்தவர்களும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆறுதலை தந்த சாருவுக்கு நம் தலைமுறை கடமைப்பட்டு இருக்கிறது..

__________________________________________________________-

5 comments:

  1. where is your review post, i am unable to see here

    ReplyDelete
  2. நல்லாத்தான்யா பேரு வச்சிருக்காங்க....பிச்சைக்காரன்னு?
    ஒரு நல்லப்படத்த நல்லபடம்னு உனக்கு சொல்றதுக்கு ஏன் இந்த தயக்கம்? எல்லோரும் பாராட்டி எழுதும் போது எதிர்த்து எழுதினா தனியா கவனிக்கப்படுவோம்னு கீழ்த்தரமான எண்ணமா? வறுமையை ஏழைகளின் வாழ்க்கையையும் சத்யஜித்ரே காட்டும் போது அது உலகப்படமாகிறது. ஆனால் பாலாஜி காட்டும் போது உனக்கு கசக்குது. சும்மா போலித்தனமாவே எத்தனை நாள்தான் நடிக்கிறது. தமிழர்களுடைய வாழ்க்கை இதைவிட கீழ்த்தரமா இருக்கு. ஆனா நாங்க வசதியா இருக்கோம்ங்கிற ஈகோ மட்டும் உன்ன விடமாட்டேங்குது. ஒஸ்தி, வேட்டை,கலகலப்பு மாதிரி படங்களுக்கு மட்டும் இனிமே விமர்சனம் எழுது. இந்த மாதிரி படங்கள் பக்கம் இனிமே நீ திரும்பி கூட பார்க்காத.....

    ReplyDelete
  3. ching cha ching ching cha nalla jalraaaaaa......

    ReplyDelete
  4. ஒரு சமயம் இந்தப் படம் flop ஆயிருந்தால்... சாருவும், இவரும் இந்தப் படத்தை புகழ்ந்து தள்ளியிருப்பர்கள்

    ReplyDelete
  5. எக்சைலை 40 பக்கம் படித்து விட்டு மாமல்லன் இந்தப் புத்தகத்தை இதற்கு மேல் படிக்க முடியாதென்று விமர்சனம் எழுதிய போது அதற்கு என்னென்ன எழுதினீர்களென்று நினைவிருக்கிறதா?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா