Wednesday, November 28, 2012

மிருகங்களுடன் “ உறவு” கொளவது தண்டனைக்குரியதா ? அயல் நாட்டு அக்கப்போர்


மிருகங்களுடன் பாலுறவு வைத்து கொள்வதை சட்ட விரோதம் என அறிவிக்க  ஜெர்மன் அரசு முடிவு செய்துள்ளது . இதற்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மிருகங்களுக்கும் , மனிதர்களுக்கும்  நிலவும் பந்தத்தை உடைக்க அரசுக்கு உரிமை இல்லை எனவும் , இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியில் , மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்பூர்வமாக ஏற்கப்பட்ட ஒன்று. 1969ல் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.  தாராளாமாக செய்து கொள்ளுங்கள். ஆனால் , வாயில்லா ஜீவன்கள்.. அதிகம் வலிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று சட்டம் கூறியது.  அத்து மீறி ரண களம் ஆகிவிட்டால் , ஃபைன் போட்டு விடுவார்கள்.


ஆனால்  மிருகங்களை கொடுமைப்படுத்துகிறார்களா , மிருகங்கள் இந்த உறவை ஏற்கின்றனவா என்பதில் எல்லாம் குழப்பம் நிலவியது. இந்த பிரச்சினையே வேண்டாம் என நினைத்த அரசு , இந்த உறவுக்கு முழுமையாக தடை விதிக்க இருக்கிறது. டிசம்பர் 14ந்தேதி , இதற்கான தீர்மானத்தில்ல் வோட்டெடுப்பு நடக்க இருக்கிறது.
சட்டம் கொண்டுவர மும்முரமாக இருக்கும் ஜெர்மன் மந்திரி 

மிருகங்கள் தமது துணையோடு இருப்பது இயல்பு. யாரேனும் அந்த துணையை விரட்டி விட்டு , தான் துணை சேர ஆசைப்பட்டு , கையும் களவுமாக பிடிபட்டால் 25,000 யூரோ அபராதம் விதிக்கப்படும்.

இதற்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசை எதிர்த்து , வழக்கு தொடர இருக்கிறார்கள் .

போராட்ட குழுவின் தலைவரான micheal kiok கூறுகையில்,  ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கஷ்டம். அவள் உறவை விரும்பாத நிலையிலும் கூட , அவள் அதை விரும்புவதாக நினைத்து கொண்டு , நாம் உறவில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. ஆனால் விலங்குகள் அப்படி அன்று. அவற்றுக்கு விருப்பம் இல்லாவிட்டால் , வெளிப்படையாக தெரிந்து விடும். எனவே அவற்றின் விருப்பம் இல்லாமல் உறவு என்ற பேச்சுக்கு இடம் இல்லை “ என லாஜிக்கலாக பேசுகிறார்.  மேஜராகி விட்ட ஆணும் , பெண்ணும் காதல் திருமணம் முடிப்பதை ஏற்பது போல , “ மனம் “ ஒத்து , ஒரு மிருகமும் மனிதனும் உறவு கொள்வது எப்படி தவறாகும் என்பது அவர் கேள்வி.

 மிருகம் அந்த உறவை விரும்பவில்லை என்பதை எப்படி நிரூபிக்க முடியும் , நிரூபிக்க முடியாத ஒன்றுக்கு எப்படி அபராதம் விதிக்க முடியும் என்ற கேள்வி , கோர்ட்டில் எடுபடும் என்றே தோன்றுகிறது.

அரசின் இந்த முடிவுக்கு மிருக நல சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திள்ளனர். ஆனால் , மிருக வதை தடுப்பு இந்த சட்டத்தினால் நின்று விடப்போவதில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.  காரணம் பல்வேறு வடிவங்களில் மிருக வதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு வகைதான் , உறவு சமாச்சாரம்.

ஆனால் இந்த உறவு சமாச்சாரம் மிருக வதை அல்ல என அழிச்சாட்டியம் செய்கிறார்கள்  சிலர். இது , மிருகங்களுக்கும் அவற்றின் காதலர்களுக்குமான தனிப்பட்ட விவகாரமாம். அதில் யாரும் தலையிடக் கூடாதாம்..

ம்ம்... என்ன சொல்ல ?


1 comment:

  1. Charuvukku nalla knot for his next Hindi/Malayalam novel. Pls rfr dis to him

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா